Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்)
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்)
கேள்வியும் பதிலும்....................தெரிந்தவைதான்............
David Feldman என்பவர் தொகுத்து வெளியிட்ட புத்தகத்தில் இருந்து ,
இந்த மாதிரி நெருடலான கேள்விகளை அவர் Imponderable, Improbables என்று அழைத்திருக்கிறார்.
கேள்வி 1
இந்த உலகத்திலேயே பயங்கரமான விலங்கு எது?
ஆச்சரியம்! ஆனால் உண்மை.நமக்கெல்லாம் ரொம்ப ரொம்பப் பரிச்சயமான நபர்தான் அவர், sorry,அவள்.ஆம். பெண் கொசுதான் உலகத்திலேயே பயங்கரமான விலங்கு.
இதுவரை இறந்த மனிதர்களில் பாதிக்கு மேல் பெண் கொசுவினால் தங்கள் மரணத்தை சந்தித்திருக்கிறார்கள்.
(ஆண் கொசு பாவம் - சாது.)
Fatal diseases (மரண வியாதிகள்) என்று சொல்லப்படும் மலேரியா, மஞ்சள் காமாலை, டெங்கு காய்ச்சல், யானைக்கால் வியாதி, இப்படி .......................
பெண் கொசுவின் கைங்கர்யம்.
ஒரு கணக்குப்படி பெண் கொசுவினால் 12 விநாடிகளுக்கு ஒரு நபர் இறக்கிறார். பெண் கொசு தான் உறிஞ்சிய ரத்தத்தை, தண்ணீரில், தான் இட்ட முட்டைகள் வளர்ச்சிபெற, உபயோகிக்கிறது.
பெண் கொசுக்களை ஈர்ப்பது -ஈரப்பசை, கார்பன் டை ஆக்ஸைடு, உடம்பில் உள்ள சூடு. வியர்வையுடன் உள்ள நபர்களையும் பிரசவ நிலையில் உள்ள பெண்களையும் பெண் கொசுக்கள் அதிகமாகவே விரும்புகின்றன.
இவ்வளவு ஆபத்தான பெண் கொசுக்களைப் பற்றி இன்னும் இரண்டு கேள்விகள்.
கேள்வி 2
அரிப்பு வந்த பிறகுதான் நாம் கொசுக்கடியை உணர்கிறோம், ஏன்?
கொசு கடிக்கும்போது நமக்கு அது தெரியாததற்குக் காரணம் இயற்கை கொடுத்த வரப்பிரசாதம். பெண் கொசுவிற்கு அவசரமாக
"வந்தோம் கவிழ்த்தோம்" என்ற பாலிஸி கிடையாது. மனிதனுடைய தோலில், தன் 6 கால்களையும் வைத்து ஒரு நிமிடம் உட்கார்ந்து கொள்ளும். கொசுக்கள் ரொம்ப light. அவற்றின் கடிக்கும் டெக்னிக் ரொம்ப தேர்ச்சி பெற்றது. 5 நிமிடம் உட்கார்ந்தாலும் மனிதனால் உணரப்படுவதில்லை.
கொசு தன் "கடி வேலையை" ஆரம்பிக்க நினைக்கும் போது தன்னுடைய கூர்மையான நகங்களை (lancets) தோலில் அழுத்தி ஒரு நிமிடம்
மனித ரத்தத்தை உறிஞ்சுகிறது. அதன் வாய்க்கு lubrication அதனுடைய எச்சில்தான். 3 நிமிடம் ரத்தத்தை உறிஞ்சுகிறது-அதன் வயிறு வெடிக்கும்வரை.
அந்த வேலை முடிந்தவுடன் முட்டைகள் இடும் பணியைச் செவ்வன செய்யப் பறந்துவிடுகிறது. உலகத்தார் பெருமூச்சு விடலாம் "கொசுக்கள் ,endangered species ஆகாது" என்ற நினைப்பில்.
கொசு போன பிறகு வெகு நேரத்திற்கு அப்புறம்தான் நமக்கு ஒரு உணர்வு ஏற்படும். அது கொசுக்கடியினால் அல்ல. அது விட்டுச் சென்ற எச்சிலினால். அதில் anticoagulant compounds இருக்கின்றன. அதுதான் சின்னக் கொப்புளங்களையும் அரிப்பையும் உண்டுபண்ணுகின்றன.
கேள்வி 3
ஏன் பெண் கொசுக்கள் மனித ரத்தத்தைக் குடிக்கிறது?ஆண் கொசுக்களின் ஆகாரம் என்ன?
கொசு இனத்திற்கு முக்கியமான உணவு பூக்களிலிருக்கும் nectar (தேன்).
இந்தத் தேன், glycogen என்ற சக்தியாக மாற்றப்படுகிறது.இதன் சக்தி கொசுக்கள் உடனடியாகப் பறக்க உதவிசெய்கிறது. கொசுக்கள் உடலில் fat-body என்ற அவயவம் இருக்கிறது. இது சக்கரையை தேக்கிவைக்க உதவுகிறது.
ஆண் கொசுக்களுக்கு ஒரு திருப்தியான மனசு. தேன் கிடைத்தால் அவைகளுக்குப் போதும். மேலும்,ஆண் கொசுக்களுக்கு மனிதத் தோலை ஊடுருவச் செய்யும் biting mouth part கிடையாது.
பெண் கொசுக்களுக்குக் கடிப்பதற்கான வாய் உறுப்புகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. அவற்றின் முக்கியமானவேலை, முட்டை இடுவது. சில பெண் கொசுக்களின் வர்க்கத்திற்கு நல்ல ருசியுள்ள fresh blood supplement சாப்பிடாவிட்டால் முட்டை இடும் சக்தி கிடைப்பதில்லை.
கொசுக்களின் அவயவங்கள் ரத்தத்தில் இருக்கும் lipids என்ற பொருளை
இரும்புச் சத்தாகவும், புரதச் சத்தாகவும் மாற்றுகிறது.
ரத்தம் சாப்பிடாத கொசு 5லிருந்து 10 வரை முட்டைகள்
இடும். கொஞ்சம் blood group O கிடைத்தால் பெண் கொசு 200 முட்டைகள் வரை இடும்.
நமக்கு இந்த ரத்த இழப்பு ஒரு "கொசுக்கடி". ஆனால் அவற்றுக்கு
இது ஒரு விருந்து நாள் முழுவதும் கொசு வேலை செய்வதில்லை. சாயந்திரம் 1லிருந்து 2 மணி நேரம்வரைதான் வேலை.
கேள்வி 4
பழைய கேள்வி.எது முதலில் வந்தது? முட்டையா? கோழியா? ..
David Feldman என்பவர் தொகுத்து வெளியிட்ட புத்தகத்தில் இருந்து ,
இந்த மாதிரி நெருடலான கேள்விகளை அவர் Imponderable, Improbables என்று அழைத்திருக்கிறார்.
கேள்வி 1
இந்த உலகத்திலேயே பயங்கரமான விலங்கு எது?
ஆச்சரியம்! ஆனால் உண்மை.நமக்கெல்லாம் ரொம்ப ரொம்பப் பரிச்சயமான நபர்தான் அவர், sorry,அவள்.ஆம். பெண் கொசுதான் உலகத்திலேயே பயங்கரமான விலங்கு.
இதுவரை இறந்த மனிதர்களில் பாதிக்கு மேல் பெண் கொசுவினால் தங்கள் மரணத்தை சந்தித்திருக்கிறார்கள்.
(ஆண் கொசு பாவம் - சாது.)
Fatal diseases (மரண வியாதிகள்) என்று சொல்லப்படும் மலேரியா, மஞ்சள் காமாலை, டெங்கு காய்ச்சல், யானைக்கால் வியாதி, இப்படி .......................
பெண் கொசுவின் கைங்கர்யம்.
ஒரு கணக்குப்படி பெண் கொசுவினால் 12 விநாடிகளுக்கு ஒரு நபர் இறக்கிறார். பெண் கொசு தான் உறிஞ்சிய ரத்தத்தை, தண்ணீரில், தான் இட்ட முட்டைகள் வளர்ச்சிபெற, உபயோகிக்கிறது.
பெண் கொசுக்களை ஈர்ப்பது -ஈரப்பசை, கார்பன் டை ஆக்ஸைடு, உடம்பில் உள்ள சூடு. வியர்வையுடன் உள்ள நபர்களையும் பிரசவ நிலையில் உள்ள பெண்களையும் பெண் கொசுக்கள் அதிகமாகவே விரும்புகின்றன.
இவ்வளவு ஆபத்தான பெண் கொசுக்களைப் பற்றி இன்னும் இரண்டு கேள்விகள்.
கேள்வி 2
அரிப்பு வந்த பிறகுதான் நாம் கொசுக்கடியை உணர்கிறோம், ஏன்?
கொசு கடிக்கும்போது நமக்கு அது தெரியாததற்குக் காரணம் இயற்கை கொடுத்த வரப்பிரசாதம். பெண் கொசுவிற்கு அவசரமாக
"வந்தோம் கவிழ்த்தோம்" என்ற பாலிஸி கிடையாது. மனிதனுடைய தோலில், தன் 6 கால்களையும் வைத்து ஒரு நிமிடம் உட்கார்ந்து கொள்ளும். கொசுக்கள் ரொம்ப light. அவற்றின் கடிக்கும் டெக்னிக் ரொம்ப தேர்ச்சி பெற்றது. 5 நிமிடம் உட்கார்ந்தாலும் மனிதனால் உணரப்படுவதில்லை.
கொசு தன் "கடி வேலையை" ஆரம்பிக்க நினைக்கும் போது தன்னுடைய கூர்மையான நகங்களை (lancets) தோலில் அழுத்தி ஒரு நிமிடம்
மனித ரத்தத்தை உறிஞ்சுகிறது. அதன் வாய்க்கு lubrication அதனுடைய எச்சில்தான். 3 நிமிடம் ரத்தத்தை உறிஞ்சுகிறது-அதன் வயிறு வெடிக்கும்வரை.
அந்த வேலை முடிந்தவுடன் முட்டைகள் இடும் பணியைச் செவ்வன செய்யப் பறந்துவிடுகிறது. உலகத்தார் பெருமூச்சு விடலாம் "கொசுக்கள் ,endangered species ஆகாது" என்ற நினைப்பில்.
கொசு போன பிறகு வெகு நேரத்திற்கு அப்புறம்தான் நமக்கு ஒரு உணர்வு ஏற்படும். அது கொசுக்கடியினால் அல்ல. அது விட்டுச் சென்ற எச்சிலினால். அதில் anticoagulant compounds இருக்கின்றன. அதுதான் சின்னக் கொப்புளங்களையும் அரிப்பையும் உண்டுபண்ணுகின்றன.
கேள்வி 3
ஏன் பெண் கொசுக்கள் மனித ரத்தத்தைக் குடிக்கிறது?ஆண் கொசுக்களின் ஆகாரம் என்ன?
கொசு இனத்திற்கு முக்கியமான உணவு பூக்களிலிருக்கும் nectar (தேன்).
இந்தத் தேன், glycogen என்ற சக்தியாக மாற்றப்படுகிறது.இதன் சக்தி கொசுக்கள் உடனடியாகப் பறக்க உதவிசெய்கிறது. கொசுக்கள் உடலில் fat-body என்ற அவயவம் இருக்கிறது. இது சக்கரையை தேக்கிவைக்க உதவுகிறது.
ஆண் கொசுக்களுக்கு ஒரு திருப்தியான மனசு. தேன் கிடைத்தால் அவைகளுக்குப் போதும். மேலும்,ஆண் கொசுக்களுக்கு மனிதத் தோலை ஊடுருவச் செய்யும் biting mouth part கிடையாது.
பெண் கொசுக்களுக்குக் கடிப்பதற்கான வாய் உறுப்புகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. அவற்றின் முக்கியமானவேலை, முட்டை இடுவது. சில பெண் கொசுக்களின் வர்க்கத்திற்கு நல்ல ருசியுள்ள fresh blood supplement சாப்பிடாவிட்டால் முட்டை இடும் சக்தி கிடைப்பதில்லை.
கொசுக்களின் அவயவங்கள் ரத்தத்தில் இருக்கும் lipids என்ற பொருளை
இரும்புச் சத்தாகவும், புரதச் சத்தாகவும் மாற்றுகிறது.
ரத்தம் சாப்பிடாத கொசு 5லிருந்து 10 வரை முட்டைகள்
இடும். கொஞ்சம் blood group O கிடைத்தால் பெண் கொசு 200 முட்டைகள் வரை இடும்.
நமக்கு இந்த ரத்த இழப்பு ஒரு "கொசுக்கடி". ஆனால் அவற்றுக்கு
இது ஒரு விருந்து நாள் முழுவதும் கொசு வேலை செய்வதில்லை. சாயந்திரம் 1லிருந்து 2 மணி நேரம்வரைதான் வேலை.
கேள்வி 4
பழைய கேள்வி.எது முதலில் வந்தது? முட்டையா? கோழியா? ..
Guest- Guest
Re: கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்)
தொடருங்கள்................வந்து ஒவ்வொருகேள்விக்கும் பதில் போடுகிறேன் சக்தி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்)
கேள்வி 4
பழைய கேள்வி.எது முதலில் வந்தது? முட்டையா? கோழியா?
இதற்கு 2 விடைகள் - நீங்கள் யாரென்று பொறுத்து.
நீங்கள் ஒரு creationist என்றால் கடவுள்தான் இந்த உலகத்தில் உள்ள
சகல ஜீவராசிகளையும் படைத்திருக்கிறார் என்று நீங்கள் திடமாக நம்புகிறீர்கள். கடவுள் முட்டையை மாத்திரம் படைப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை. அதனால் கோழிதான் முதலில் வந்திருக்க வேண்டும்.அப்படியே முட்டையை முதலில் படைத்திருந்தால் அதை பொரிக்கவும் கோழிக் குஞ்சைப் பாதுகாக்கவும் கோழி இருக்காதே?
நீங்கள் ஒரு Evolutionist என்றால் நீங்கள் நம்புவது "எல்லா மிருகங்களும் காலப் போக்கில் evolvஆகியிருக்கும். கோழியும் கோழி மாதிரி ஒரு உருவத்திலிருந்து evolve ஆகியிருக்கும். ஏதோ ஒரு சமயத்தில் இந்த ஜந்து
ஒரு முட்டையை இட்டிருக்கும். அதிலிருந்து கோழி வந்திருக்கும்.
ஆனால் அது கோழி முட்டையாக இருந்திருக்காது. ஏனெனில் கோழி என்று
ஒன்று இல்லாததால். அதனால் முதல் கோழி முட்டை முதல் கோழியினால் தான் உருவாக்கப்பட்டிருக்கும்.
எந்த வழி நோக்கினாலும் கோழிதான் முதலில் வந்தது. முட்டை அப்புறம்தான்.
தற்போதய அறிவியல் பார்வையில்,....……………..
முட்டையில் உள்ள protein கள் ovocleidin-17 எனப்படுகிறது. இந்த OC-17 கோழியின் Ovary இல் இருப்பதால்,கோழி இல்லாமல் இந்த OC-17 உருவாகி இருக்க முடியாது.அதனால் கோழியே முதலில் வந்திருக்க முடியும்.
…………………………………….
போனஸ்:-
நிறைய பேர் இதை அறிந்திருக்க கூடும். உண்மையான விளக்கமும் தெரிந்திருக்கலாம். அதாவது சாதாரணமாய் படிக்கையில் போக்கிடம் இல்லாதவன் அல்லது வெட்டித்தனமாய் சுற்றுபவன் காவல் துறை அதிகாரிக்கும், எந்தவித பின்புலமும், செல்வமும் இல்லாதவன் வாத்தியார் வேலைக்கும் ஏற்றவர்கள் என்று அர்த்தம் கொள்ளும்படி ஆகி விட்டது. ஆனால் இது உண்மை விளக்கம் அல்ல.
வார்த்தைகளை சற்று பிரித்து பொருள் கொண்டோமேயானால் இந்த உட்பொருள் சொல்ல வந்த விளக்கத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம். போக்கத்தவன் - போக்கு + கற்றவன், அதாவது ஒழுங்குகளை கற்றுக் கொண்ட மனிதன் போலீஸ் வேலைக்கு தகுதியானவன். வாக்கத்தவன் -வாக்கு + கற்றவன், வாக்கு என்பது சத்தியம், அறிவு என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது. மொத்தத்தில் படித்தவன், அறிவு பெற்றவன் போன்ற தகுதிகளை கொண்டவன் கற்பித்தல் பணிக்கு தகுதியானவன். இதைக் கொண்டே சொல்லப்பட்ட பழமொழி மருகி திரிந்து மேற்கண்ட முறையில் வந்துவிட்டது.
(இணையம்)
கேள்வி 5 - யானை,சுண்டெலிக்குப் பயப்படுமா?
பழைய கேள்வி.எது முதலில் வந்தது? முட்டையா? கோழியா?
இதற்கு 2 விடைகள் - நீங்கள் யாரென்று பொறுத்து.
நீங்கள் ஒரு creationist என்றால் கடவுள்தான் இந்த உலகத்தில் உள்ள
சகல ஜீவராசிகளையும் படைத்திருக்கிறார் என்று நீங்கள் திடமாக நம்புகிறீர்கள். கடவுள் முட்டையை மாத்திரம் படைப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை. அதனால் கோழிதான் முதலில் வந்திருக்க வேண்டும்.அப்படியே முட்டையை முதலில் படைத்திருந்தால் அதை பொரிக்கவும் கோழிக் குஞ்சைப் பாதுகாக்கவும் கோழி இருக்காதே?
நீங்கள் ஒரு Evolutionist என்றால் நீங்கள் நம்புவது "எல்லா மிருகங்களும் காலப் போக்கில் evolvஆகியிருக்கும். கோழியும் கோழி மாதிரி ஒரு உருவத்திலிருந்து evolve ஆகியிருக்கும். ஏதோ ஒரு சமயத்தில் இந்த ஜந்து
ஒரு முட்டையை இட்டிருக்கும். அதிலிருந்து கோழி வந்திருக்கும்.
ஆனால் அது கோழி முட்டையாக இருந்திருக்காது. ஏனெனில் கோழி என்று
ஒன்று இல்லாததால். அதனால் முதல் கோழி முட்டை முதல் கோழியினால் தான் உருவாக்கப்பட்டிருக்கும்.
எந்த வழி நோக்கினாலும் கோழிதான் முதலில் வந்தது. முட்டை அப்புறம்தான்.
தற்போதய அறிவியல் பார்வையில்,....……………..
முட்டையில் உள்ள protein கள் ovocleidin-17 எனப்படுகிறது. இந்த OC-17 கோழியின் Ovary இல் இருப்பதால்,கோழி இல்லாமல் இந்த OC-17 உருவாகி இருக்க முடியாது.அதனால் கோழியே முதலில் வந்திருக்க முடியும்.
…………………………………….
போனஸ்:-
நிறைய பேர் இதை அறிந்திருக்க கூடும். உண்மையான விளக்கமும் தெரிந்திருக்கலாம். அதாவது சாதாரணமாய் படிக்கையில் போக்கிடம் இல்லாதவன் அல்லது வெட்டித்தனமாய் சுற்றுபவன் காவல் துறை அதிகாரிக்கும், எந்தவித பின்புலமும், செல்வமும் இல்லாதவன் வாத்தியார் வேலைக்கும் ஏற்றவர்கள் என்று அர்த்தம் கொள்ளும்படி ஆகி விட்டது. ஆனால் இது உண்மை விளக்கம் அல்ல.
வார்த்தைகளை சற்று பிரித்து பொருள் கொண்டோமேயானால் இந்த உட்பொருள் சொல்ல வந்த விளக்கத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம். போக்கத்தவன் - போக்கு + கற்றவன், அதாவது ஒழுங்குகளை கற்றுக் கொண்ட மனிதன் போலீஸ் வேலைக்கு தகுதியானவன். வாக்கத்தவன் -வாக்கு + கற்றவன், வாக்கு என்பது சத்தியம், அறிவு என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது. மொத்தத்தில் படித்தவன், அறிவு பெற்றவன் போன்ற தகுதிகளை கொண்டவன் கற்பித்தல் பணிக்கு தகுதியானவன். இதைக் கொண்டே சொல்லப்பட்ட பழமொழி மருகி திரிந்து மேற்கண்ட முறையில் வந்துவிட்டது.
(இணையம்)
கேள்வி 5 - யானை,சுண்டெலிக்குப் பயப்படுமா?
Guest- Guest
Re: கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்)
கேள்வி 1 இன் பதில்:
--பயங்கரமான விலங்கு பெண் கொசுவா? சரி கொசு .....விலங்கு இனத்தில் சேருமா?
: ஆண் கொசு சாது (ஆஹா அங்கேயும் ஆண் சாதுதானா?)
O+ ரத்தம் உள்ளவர்களை கண்டால் மிகவும் பிடிக்குமாமே ! உண்மையா?
ரமணியன்
--பயங்கரமான விலங்கு பெண் கொசுவா? சரி கொசு .....விலங்கு இனத்தில் சேருமா?
: ஆண் கொசு சாது (ஆஹா அங்கேயும் ஆண் சாதுதானா?)
O+ ரத்தம் உள்ளவர்களை கண்டால் மிகவும் பிடிக்குமாமே ! உண்மையா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்)
கேள்வி 1 கொசு விலங்கினத்தை சேருமா?
தமிழில் ஊர்வன,பறப்பன,பூச்சி என வகைப்படுத்தி சொல்லப்பட்டாலும்,கொசு (Mosquito) ஒரு Culicidae வகையை சேர்ந்தது. கொசு பூச்சி (insect) இனத்தை சேர்ந்த அதேசமயம் விலங்கியல்-அறிவியல் கூற்றுப்படி பூச்சி-insect- phylum Anthrpodia குடும்பத்துக்குள் வருகிறது.அதன்படி Animalia ராச்சியத்துக்குள் (metazoa) வரும் கொசு (animal) விலங்காகிறது. (தப்பானால் பாடம் சொல்லித்தந்த வாத்தியார் தலையில்-ணங்க்- வைக்கவும்.) தமிழில் பூச்சி-insect-விலங்கியல்படி விலங்கு- animal.
கொசு இரத்த ஓ+ பிரிவை விரும்புகிறதா?
கர்ப்பமாக இருக்கும் பெண்களை (வெளியிடும் மூச்சுக் காற்றில் அதிக CO2 இருப்பதால்),அதிக வியர்வை வெளியேறும் ஆட்கள் (அதில் உள்ள வேதிப் பொருட்கள் காரணமாக) , O பிரிவுள்ளவர்களை (fro-yo flavors அதிகம் இருப்பதால்) ,சிலரின் உடம்பில் தோலில் உள்ள பக்டீரியாக்கள் காரணமாக , விரும்பி காதலித்து இரத்தத்தை எடுக்கிறதாம்.இதில் O+ அதிகமாக ஈர்க்கப்படுவதும்,A வகையை வெறுப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
(Journal of Medical Entomology /Researchers at the Institute of Pest Control Technology of Chiba, Japan)
தமிழில் ஊர்வன,பறப்பன,பூச்சி என வகைப்படுத்தி சொல்லப்பட்டாலும்,கொசு (Mosquito) ஒரு Culicidae வகையை சேர்ந்தது. கொசு பூச்சி (insect) இனத்தை சேர்ந்த அதேசமயம் விலங்கியல்-அறிவியல் கூற்றுப்படி பூச்சி-insect- phylum Anthrpodia குடும்பத்துக்குள் வருகிறது.அதன்படி Animalia ராச்சியத்துக்குள் (metazoa) வரும் கொசு (animal) விலங்காகிறது. (தப்பானால் பாடம் சொல்லித்தந்த வாத்தியார் தலையில்-ணங்க்- வைக்கவும்.) தமிழில் பூச்சி-insect-விலங்கியல்படி விலங்கு- animal.
கொசு இரத்த ஓ+ பிரிவை விரும்புகிறதா?
கர்ப்பமாக இருக்கும் பெண்களை (வெளியிடும் மூச்சுக் காற்றில் அதிக CO2 இருப்பதால்),அதிக வியர்வை வெளியேறும் ஆட்கள் (அதில் உள்ள வேதிப் பொருட்கள் காரணமாக) , O பிரிவுள்ளவர்களை (fro-yo flavors அதிகம் இருப்பதால்) ,சிலரின் உடம்பில் தோலில் உள்ள பக்டீரியாக்கள் காரணமாக , விரும்பி காதலித்து இரத்தத்தை எடுக்கிறதாம்.இதில் O+ அதிகமாக ஈர்க்கப்படுவதும்,A வகையை வெறுப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
(Journal of Medical Entomology /Researchers at the Institute of Pest Control Technology of Chiba, Japan)
Guest- Guest
Re: கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்)
O அப்பிடியா?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்)
ஐ நா சபையின் அறிக்கையின் படி பயங்கரமான உயிரினம் ஈ . வியாதிகளை பரப்புவதால் . முதலில் அதை ஒழிப்போம் .
shruthi- புதியவர்
- பதிவுகள் : 49
இணைந்தது : 15/05/2018
Re: கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்)
கேள்வி 5 - யானை,சுண்டெலிக்குப் பயப்படுமா?
இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. யானைகள் எலி போன்ற சிறு விலங்குகளை அலட்சியப்படுத்திவிடும். ஏனெனில் யானைகளுக்குக்
கண் பார்வை மந்தம். சாதாரணமாக யானைகள் மோப்பத்தினால்தான் மற்ற மிருகங்களைப் பற்றி உணர்ந்துகொள்ளும். எலிகளின் "நறுமணம்" "யானைகளை ஈர்க்கும் அளவுக்குஇல்லை.பொதுவாக பெரிய விலங்குகள் மிகச் சிறிய உயிரினத்தைப் பார்த்து பயப்படுகிறது. நாம் பயப்படுவது போல.
யானைகள் பயப்படுவது - மனிதர்கள், புலிகள்."யானை சுண்டெலிக்குப் பயப்படுகிறது" என்பது கிரேக்கர்கள் கட்டிவிட்ட ஒரு கதை.
கடைசியாக யானை பற்றி சில தகவல்கள்:
யானைகளுக்கு "Pachyderm" என்று பெயர்.அதாவது கடுமையான தோல் — எருமை கொஞ்சம் மூச்சுவிடலாம். ஏனெனில் இதுவரை கடுந்தோள்-thick skinned என்று ஒருவரைத் திட்ட எருமை மாட்டுத் தோல் என்றுதான்
சொல்லி வந்திருக்கிறோம்.
யானை ஒரு நாளைக்கு 300லிருந்து 500 பவுண்டுவரை சாப்பிடுகிறது.
ஒரு யானையின் எடை 5000 - 14000 பவுண்டுகள். யானையின் தும்பிக்கையில் 40,000 தசைகள் இருக்கின்றன. ஒரு சின்ன நாணயத்தைக்கூட அது எடுக்க முடியும். உலகில் உள்ள எல்லா விலங்குகளிலும் யானையின் மூளைதான் பெரியது.
மனித மூளையைவிட 4 மடங்கு பெரியது.
யானை ஒருபோதும் மறக்காது என்பதும் யானைக்கு எதிரி- மனிதன்தான் என்பதும் கட்டுக்கதையாகும்.(myth)
எல்லாப் பாலூட்டிகளைப் போல் அவசியம் ஏற்பட்டால் யானை
நன்றாகவே நீந்தும்.ஆனால் யானையால் குதிக்க முடியாது.
யானையைப் போலவே தாவர உணவை எடுத்துக் கொள்ளும் காண்டாமிருகம் (மூக்குக் கொம்பன் Rhinoceros ) வேகமாக ஓடவும்,குதிக்கவும் முடியும்.
போனஸ்:
சமூகத்தின் அனுபவ பிழிவாக திகழ்ந்த இப்பழமொழிகள், ஒரு கால கட்டத்திலிருந்து, இன்னொரு கால கட்ட மக்களுக்கு செவி வழி இலக்கியங்களாகவே பரிமாறப்பட்டிருக்கிறது. அப்போது சில சொற்கள் திரிந்தோ, உருமாறியோ, வேறு பொருள் தருமாறு புரிந்தோ, பாதை மாறி பயணம் செய்ய தொடங்கியிருக்கின்றன.
சைவர்கள், சமணர்களை வாதத்திற்கு அழைத்து தோல்வியுறச்செய்து, எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிய செய்தியை எட்டாயிரம் சமணர்கள் என்று தவறாக பொருள் கொண்டவர்களே அதிகம். விழுப்புரம் அருகே உள்ள "எண்ணாயிரம்” என்ற ஊரை சேர்ந்த சமணர்களை கழுவில் ஏற்றப்பட்டதே உண்மை நிகழ்வு.
இலங்கை வேந்தன் ராவணன் பத்து கலைகளில் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கியதால், அவனை 'பத்து கலை ராவணன்' என்று அழைத்திருக்கிறார்கள். அது திரிந்து பத்து தலை ராவணனாக மாறியிருக்கிறது. (தினமலர்)
(நன்றி: David Fedman/நாகராஜன் நியு ஜேர்சி/சிமித்சோனியன்/ஹெல்த் மகசின்/Journal of Medical Entomology /Researchers at the Institute of Pest Control Technology of Chiba, Japan)
கேள்வி 6 -நமக்கு எத்தனை உணர்வுகள்(senses) உண்டு?
இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. யானைகள் எலி போன்ற சிறு விலங்குகளை அலட்சியப்படுத்திவிடும். ஏனெனில் யானைகளுக்குக்
கண் பார்வை மந்தம். சாதாரணமாக யானைகள் மோப்பத்தினால்தான் மற்ற மிருகங்களைப் பற்றி உணர்ந்துகொள்ளும். எலிகளின் "நறுமணம்" "யானைகளை ஈர்க்கும் அளவுக்குஇல்லை.பொதுவாக பெரிய விலங்குகள் மிகச் சிறிய உயிரினத்தைப் பார்த்து பயப்படுகிறது. நாம் பயப்படுவது போல.
யானைகள் பயப்படுவது - மனிதர்கள், புலிகள்."யானை சுண்டெலிக்குப் பயப்படுகிறது" என்பது கிரேக்கர்கள் கட்டிவிட்ட ஒரு கதை.
கடைசியாக யானை பற்றி சில தகவல்கள்:
யானைகளுக்கு "Pachyderm" என்று பெயர்.அதாவது கடுமையான தோல் — எருமை கொஞ்சம் மூச்சுவிடலாம். ஏனெனில் இதுவரை கடுந்தோள்-thick skinned என்று ஒருவரைத் திட்ட எருமை மாட்டுத் தோல் என்றுதான்
சொல்லி வந்திருக்கிறோம்.
யானை ஒரு நாளைக்கு 300லிருந்து 500 பவுண்டுவரை சாப்பிடுகிறது.
ஒரு யானையின் எடை 5000 - 14000 பவுண்டுகள். யானையின் தும்பிக்கையில் 40,000 தசைகள் இருக்கின்றன. ஒரு சின்ன நாணயத்தைக்கூட அது எடுக்க முடியும். உலகில் உள்ள எல்லா விலங்குகளிலும் யானையின் மூளைதான் பெரியது.
மனித மூளையைவிட 4 மடங்கு பெரியது.
யானை ஒருபோதும் மறக்காது என்பதும் யானைக்கு எதிரி- மனிதன்தான் என்பதும் கட்டுக்கதையாகும்.(myth)
எல்லாப் பாலூட்டிகளைப் போல் அவசியம் ஏற்பட்டால் யானை
நன்றாகவே நீந்தும்.ஆனால் யானையால் குதிக்க முடியாது.
யானையைப் போலவே தாவர உணவை எடுத்துக் கொள்ளும் காண்டாமிருகம் (மூக்குக் கொம்பன் Rhinoceros ) வேகமாக ஓடவும்,குதிக்கவும் முடியும்.
போனஸ்:
சமூகத்தின் அனுபவ பிழிவாக திகழ்ந்த இப்பழமொழிகள், ஒரு கால கட்டத்திலிருந்து, இன்னொரு கால கட்ட மக்களுக்கு செவி வழி இலக்கியங்களாகவே பரிமாறப்பட்டிருக்கிறது. அப்போது சில சொற்கள் திரிந்தோ, உருமாறியோ, வேறு பொருள் தருமாறு புரிந்தோ, பாதை மாறி பயணம் செய்ய தொடங்கியிருக்கின்றன.
சைவர்கள், சமணர்களை வாதத்திற்கு அழைத்து தோல்வியுறச்செய்து, எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிய செய்தியை எட்டாயிரம் சமணர்கள் என்று தவறாக பொருள் கொண்டவர்களே அதிகம். விழுப்புரம் அருகே உள்ள "எண்ணாயிரம்” என்ற ஊரை சேர்ந்த சமணர்களை கழுவில் ஏற்றப்பட்டதே உண்மை நிகழ்வு.
இலங்கை வேந்தன் ராவணன் பத்து கலைகளில் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கியதால், அவனை 'பத்து கலை ராவணன்' என்று அழைத்திருக்கிறார்கள். அது திரிந்து பத்து தலை ராவணனாக மாறியிருக்கிறது. (தினமலர்)
(நன்றி: David Fedman/நாகராஜன் நியு ஜேர்சி/சிமித்சோனியன்/ஹெல்த் மகசின்/Journal of Medical Entomology /Researchers at the Institute of Pest Control Technology of Chiba, Japan)
கேள்வி 6 -நமக்கு எத்தனை உணர்வுகள்(senses) உண்டு?
Guest- Guest
Re: கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்)
ஆம்,இரண்டுமே ஆபத்தானவைதான்.
Housefly (Musca domestica) 65 விதமான பொதுவான நோய்களை பரப்புகிறது.கழிவுகளை உணவாக்குவதால் அதன் மூலம் நோய்களை பரப்புகிறது.அந்த நோய்களையும் ஒரு மனிதனிடம் இருந்து மற்றவர்களுக்கும் கொசு நேரடியாக நோய்களை பரப்புவதன் மூலம் வருடத்தில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.
WHO Report 2019 , Page 302/303 அறிக்கையின்படி ஆபத்தானவையாக நீரில்.சுற்றுப்புற சூழல்,வானம்,தொழில் நுட்பம் என பிரித்து வகைப்படுத்துகிறது.இதன்படி அதிக ஆபத்தை மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் கொடுப்பதில் கொசு முதலிடத்தை பெறுகிறது. ஆச்சரியம், அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதில் கொசுவை அடுத்து மனிதன் வருகிறான் என்பதுதான்.மனிதனால் ஏற்படும் உயிரிழப்புகள் (580 ,000 ) மனிதனை என்ன செய்யலாம்? விலங்கினத்தில் சேர்த்து விடலாமா?
2019 வருடத்தின்படி கொசு முதலிடத்தையும்,ஈ (எல்லாவித) நான்காம் இடத்தையும் பெறுகிறது.(ஓருவேளை மோதியின் வீட்டுக்கு ஒரு கழிவறை திட்டத்தினால் ஈக்கள் அழிந்து வருவதாக இருக்கலாம்.)
Housefly (Musca domestica) 65 விதமான பொதுவான நோய்களை பரப்புகிறது.கழிவுகளை உணவாக்குவதால் அதன் மூலம் நோய்களை பரப்புகிறது.அந்த நோய்களையும் ஒரு மனிதனிடம் இருந்து மற்றவர்களுக்கும் கொசு நேரடியாக நோய்களை பரப்புவதன் மூலம் வருடத்தில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.
WHO Report 2019 , Page 302/303 அறிக்கையின்படி ஆபத்தானவையாக நீரில்.சுற்றுப்புற சூழல்,வானம்,தொழில் நுட்பம் என பிரித்து வகைப்படுத்துகிறது.இதன்படி அதிக ஆபத்தை மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் கொடுப்பதில் கொசு முதலிடத்தை பெறுகிறது. ஆச்சரியம், அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதில் கொசுவை அடுத்து மனிதன் வருகிறான் என்பதுதான்.மனிதனால் ஏற்படும் உயிரிழப்புகள் (580 ,000 ) மனிதனை என்ன செய்யலாம்? விலங்கினத்தில் சேர்த்து விடலாமா?
2019 வருடத்தின்படி கொசு முதலிடத்தையும்,ஈ (எல்லாவித) நான்காம் இடத்தையும் பெறுகிறது.(ஓருவேளை மோதியின் வீட்டுக்கு ஒரு கழிவறை திட்டத்தினால் ஈக்கள் அழிந்து வருவதாக இருக்கலாம்.)
Guest- Guest
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» என் கேள்விக்கென்ன பதில்
» இணைய கலாட்டா
» இந்த கேள்விக்கென்ன பதில்?
» என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த்
» என் கேள்விக்கென்ன பதில்
» இணைய கலாட்டா
» இந்த கேள்விக்கென்ன பதில்?
» என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|