Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொர்க்க வாசல் திறக்குது; சுபயோகம் மலருது !
2 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சொர்க்க வாசல் திறக்குது; சுபயோகம் மலருது !
![சொர்க்க வாசல் திறக்குது; சுபயோகம் மலருது ! WBxNj3GoRo2U5rQWp68I+Tamil_News_large_2451130](https://www.filepicker.io/api/file/wBxNj3GoRo2U5rQWp68I+Tamil_News_large_2451130.jpg)
முரன் என்ற அரக்கன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கொடுமைகள் செய்தான். அவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். அரக்கனை அழிக்க திருமால் சக்கராயுதத்துடன் புறப்பட்டார். கடும்போர் நடந்தது. சக்கராயுதத்தின் முன் அரக்கன் சக்தியற்றுப் போனான். இருந்தாலும் பல மாய வடிவங்களில் போர் புரிந்து வந்தான். தினமும் காலையில் சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் ஆகும்வரை போர் நடக்கும். போர் முடிந்ததும் திருமால் பத்திரிகாசிரமத்தில் உள்ள ஒரு குகைக்கு சென்று இளைப்பாறுவார். பொழுது விடிந்ததும், அரக்கனுடன் போர் புரிய போர்களத்திற்கு செல்வார்.
தொடரும்...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சொர்க்க வாசல் திறக்குது; சுபயோகம் மலருது !
யார் இந்த ஏகாதசி?
ஒருநாள், போர் விதிமுறைக்கு மாறாக, ஆஸ்ரமத்திற்கு வந்த முரன், அங்கு படுத்திருந்த திருமாலைத் தாக்கினான். அப்போது பெருமாளின் உடலில் இருந்து ஒரு மகத்தான சக்தி, பெண் வடிவில் எழுந்து அரக்கன் முன் வந்து நின்றாள். அவளது அழகில் அரக்கன் மயங்கினான். ஆனால் படைக்கலங்களுடன் விஸ்வரூபத்துடன் தோற்றமளித்த அந்தப் பெண் ஆங்காரத்துடன் அரக்கனை அழித்தாள். திருமால் மனம் மகிழ்ந்தார். ""சக்தியே, அசுரனை அழித்த உனக்கு, ஏகாதசி என்று திருநாமம் சூட்டுகிறேன். திதிகளில் ஒன்றாக ஆக்குகிறேன். அரக்கன் முரனை அழித்த இந்த மார்கழி மாதத்தில், உன்னை விரதம் இருந்து வழிபடுவோருக்கு, வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வேன்.'' என்று கூறினார்.
தொடரும் ...
ஒருநாள், போர் விதிமுறைக்கு மாறாக, ஆஸ்ரமத்திற்கு வந்த முரன், அங்கு படுத்திருந்த திருமாலைத் தாக்கினான். அப்போது பெருமாளின் உடலில் இருந்து ஒரு மகத்தான சக்தி, பெண் வடிவில் எழுந்து அரக்கன் முன் வந்து நின்றாள். அவளது அழகில் அரக்கன் மயங்கினான். ஆனால் படைக்கலங்களுடன் விஸ்வரூபத்துடன் தோற்றமளித்த அந்தப் பெண் ஆங்காரத்துடன் அரக்கனை அழித்தாள். திருமால் மனம் மகிழ்ந்தார். ""சக்தியே, அசுரனை அழித்த உனக்கு, ஏகாதசி என்று திருநாமம் சூட்டுகிறேன். திதிகளில் ஒன்றாக ஆக்குகிறேன். அரக்கன் முரனை அழித்த இந்த மார்கழி மாதத்தில், உன்னை விரதம் இருந்து வழிபடுவோருக்கு, வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வேன்.'' என்று கூறினார்.
தொடரும் ...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சொர்க்க வாசல் திறக்குது; சுபயோகம் மலருது !
ஏகாதசி விரத மகிமை
வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. ''மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வேன்'' என்பது திருமால் வாக்கு. இதனால் இவ்விரதம் மகிமை வாய்ந்ததாகிறது. ஆண், பெண் அனைவரும் பின்பற்ற வேண்டிய பெருமைமிக்க விரதமானது வைகுண்ட ஏகாதசி விரதம். பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை பட்சம் என்கிறோம். கிருஷ்ண பட்சம் (தேய்பிறை), சுக்லபட்சம் (வளர்பிறை) ஆகிய இவற்றின் 11வது நாள் (திதி) வருவது ஏகாதசி.
இதில் மார்கழி வளர்பிறை ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. பல வகையிலும் நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் தீவினைகள், ஏகாதசி விரதம் இருந்தால் அழியும்.. காயத்ரியை காட்டிலும் சிறந்த மந்திரம் இல்லை. தாயை மிஞ்சிய தெய்வம் இல்லை. காசியை விஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை. ஏகாதசியை விஞ்சிய விரதம் இல்லை என்பர். அந்தளவிற்கு ஏகாதசி மகத்துவம் வாய்ந்தது.
தொடரும்...
வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. ''மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வேன்'' என்பது திருமால் வாக்கு. இதனால் இவ்விரதம் மகிமை வாய்ந்ததாகிறது. ஆண், பெண் அனைவரும் பின்பற்ற வேண்டிய பெருமைமிக்க விரதமானது வைகுண்ட ஏகாதசி விரதம். பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை பட்சம் என்கிறோம். கிருஷ்ண பட்சம் (தேய்பிறை), சுக்லபட்சம் (வளர்பிறை) ஆகிய இவற்றின் 11வது நாள் (திதி) வருவது ஏகாதசி.
இதில் மார்கழி வளர்பிறை ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. பல வகையிலும் நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் தீவினைகள், ஏகாதசி விரதம் இருந்தால் அழியும்.. காயத்ரியை காட்டிலும் சிறந்த மந்திரம் இல்லை. தாயை மிஞ்சிய தெய்வம் இல்லை. காசியை விஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை. ஏகாதசியை விஞ்சிய விரதம் இல்லை என்பர். அந்தளவிற்கு ஏகாதசி மகத்துவம் வாய்ந்தது.
தொடரும்...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சொர்க்க வாசல் திறக்குது; சுபயோகம் மலருது !
இரண்டையும் மறந்துடாதீங்க!
ஏகாதசியில் எல்லோரும் செய்ய வேண்டிய செயல்கள் இரண்டு. ஒன்று உபவாசம் என்னும் விரதம். மற்றொன்று ஹரிகதை(பக்திக்கதை) கேட்பது. 'உபவாசம்' என்றால் 'பட்டினியாக இருத்தல்' என்பது மட்டுமல்ல. “கூட வசிப்பது” என்றும் ஒரு பொருள் உண்டு. கடவுளுடன் வசிப்பது..அதாவது அவனுடன் ஒட்டிக் கொண்டு அவனோடு வசிப்பது தான் நிஜமான உபவாசம். 15 நாட்களுக்கு ஒருமுறை முழுமையாக நம் வயிற்றுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற ஆரோக்கிய விதியைப் பின்பற்றவும் ஏகாதசி விரதத்தை பின்பற்றினர். உயிர் வாழ உணவு அவசியம் என்றாலும், அளவுக்கு மீறி சாப்பிடும் போது அதுவே வயிற்றுக்கு எதிரியாகி விடுகிறது.
பல வியாதிகளுக்கு உணவு காரணமாக இருப்பதைக் காணலாம். இன்று டாக்டர்கள் உணவு கட்டுப் பாட்டை மருத்துவ ரீதியாக கடைபிடிக்கச் சொல்வதன் காரணம் இதுவே. மற்றொரு செயல் பக்திக்கதைகளைக் கேட்பதாகும். தாயின் வயிற்றில் இருக்கும்போதே நாராயணனின் கதையைப் பிரகலாதன் கேட்டதால் பக்தியில் சிறந்து விளங்கினான். பக்திகதைகளைக் கேட்பது, திருமாலின் நாமங்களை பாடுவது, தோத்திரங்களைப் பாராயணம் செய்வது புண்ணிய பலன் தரும்.
தொடரும்...
ஏகாதசியில் எல்லோரும் செய்ய வேண்டிய செயல்கள் இரண்டு. ஒன்று உபவாசம் என்னும் விரதம். மற்றொன்று ஹரிகதை(பக்திக்கதை) கேட்பது. 'உபவாசம்' என்றால் 'பட்டினியாக இருத்தல்' என்பது மட்டுமல்ல. “கூட வசிப்பது” என்றும் ஒரு பொருள் உண்டு. கடவுளுடன் வசிப்பது..அதாவது அவனுடன் ஒட்டிக் கொண்டு அவனோடு வசிப்பது தான் நிஜமான உபவாசம். 15 நாட்களுக்கு ஒருமுறை முழுமையாக நம் வயிற்றுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற ஆரோக்கிய விதியைப் பின்பற்றவும் ஏகாதசி விரதத்தை பின்பற்றினர். உயிர் வாழ உணவு அவசியம் என்றாலும், அளவுக்கு மீறி சாப்பிடும் போது அதுவே வயிற்றுக்கு எதிரியாகி விடுகிறது.
பல வியாதிகளுக்கு உணவு காரணமாக இருப்பதைக் காணலாம். இன்று டாக்டர்கள் உணவு கட்டுப் பாட்டை மருத்துவ ரீதியாக கடைபிடிக்கச் சொல்வதன் காரணம் இதுவே. மற்றொரு செயல் பக்திக்கதைகளைக் கேட்பதாகும். தாயின் வயிற்றில் இருக்கும்போதே நாராயணனின் கதையைப் பிரகலாதன் கேட்டதால் பக்தியில் சிறந்து விளங்கினான். பக்திகதைகளைக் கேட்பது, திருமாலின் நாமங்களை பாடுவது, தோத்திரங்களைப் பாராயணம் செய்வது புண்ணிய பலன் தரும்.
தொடரும்...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சொர்க்க வாசல் திறக்குது; சுபயோகம் மலருது !
விரதம் இருப்பது எப்படி
ஏகாதசியன்று அதிகாலையில் பூஜை செய்து விரதத்தை தொடங்க வேண்டும். அன்று இரவு முழுவதும் கண்விழித்து புராண நுால்களை படிப்பதும், திருமாலின் பெயர்களைச் சொல்வதுமாக இருக்க வேண்டும். ஏகாதசிக்கு மறுதினம் துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு இல்லாத சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை சேர்த்து ""கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!!'' என்று மூன்று முறை கூறி, இலையில் உணவிட்டு, தானம் அளிக்க வேண்டும்.
எஞ்சிய உணவை சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். அன்று பகலில் துாங்கக்கூடாது. எட்டு வயதிற்கு உட்பட்டவர்களும், 80 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களும் விரதம் மேற்கொள்ளத் தேவையில்லை. நோயால் சிரமப்படுபவர்கள் ளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.
தொடரும்...
ஏகாதசியன்று அதிகாலையில் பூஜை செய்து விரதத்தை தொடங்க வேண்டும். அன்று இரவு முழுவதும் கண்விழித்து புராண நுால்களை படிப்பதும், திருமாலின் பெயர்களைச் சொல்வதுமாக இருக்க வேண்டும். ஏகாதசிக்கு மறுதினம் துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு இல்லாத சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை சேர்த்து ""கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!!'' என்று மூன்று முறை கூறி, இலையில் உணவிட்டு, தானம் அளிக்க வேண்டும்.
எஞ்சிய உணவை சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். அன்று பகலில் துாங்கக்கூடாது. எட்டு வயதிற்கு உட்பட்டவர்களும், 80 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களும் விரதம் மேற்கொள்ளத் தேவையில்லை. நோயால் சிரமப்படுபவர்கள் ளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.
தொடரும்...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சொர்க்க வாசல் திறக்குது; சுபயோகம் மலருது !
தண்ணீர் இல்லா விரதம்
தர்மரி்ன் தம்பி பீமன், வியாசரின் அறிவுரைப்படி ஏகாதசி விரதமிருக்க ஆசைப்பட்டான். ஏகாதசியன்று சாப்பிட முடியாது. பீமனோ சாப்பாட்டு ராமன். அவனது வயிற்றில் 'விருகம்' என்னும் அக்னி இருந்ததால் பசி தாங்க முடியாது. எனவே ஒரு ஆண்டில் வரும் 24 ஏகாதசிகளில், ஒருநாள் மட்டும் விரதமிருக்க வழிகாட்டும்படி வேண்டினான். ஆனி வளர்பிறை ஏகாதசியில் நீர் அருந்தாமல் விரதமிருந்தால், சகல ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் கிடைக்கும் என்று அவர் கூறினார். பீமனும் விரதமிருந்து பலன் பெற்றான். இதை நிர்ஜலா ஏகாதசி, பீம ஏகாதசி என்று அழைப்பர். நிர்ஜலா என்றால் தண்ணீர் குடிக்காமல் இருப்பது என பொருள்.
தொடரும்...
தர்மரி்ன் தம்பி பீமன், வியாசரின் அறிவுரைப்படி ஏகாதசி விரதமிருக்க ஆசைப்பட்டான். ஏகாதசியன்று சாப்பிட முடியாது. பீமனோ சாப்பாட்டு ராமன். அவனது வயிற்றில் 'விருகம்' என்னும் அக்னி இருந்ததால் பசி தாங்க முடியாது. எனவே ஒரு ஆண்டில் வரும் 24 ஏகாதசிகளில், ஒருநாள் மட்டும் விரதமிருக்க வழிகாட்டும்படி வேண்டினான். ஆனி வளர்பிறை ஏகாதசியில் நீர் அருந்தாமல் விரதமிருந்தால், சகல ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் கிடைக்கும் என்று அவர் கூறினார். பீமனும் விரதமிருந்து பலன் பெற்றான். இதை நிர்ஜலா ஏகாதசி, பீம ஏகாதசி என்று அழைப்பர். நிர்ஜலா என்றால் தண்ணீர் குடிக்காமல் இருப்பது என பொருள்.
தொடரும்...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சொர்க்க வாசல் திறக்குது; சுபயோகம் மலருது !
22 குடம் அபிேஷகம்
ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய தினம், உற்ஸவர் பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் வழியே வருபவர்) அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் கவசம் அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்தை காவிரித்தாயே செய்வதாகச் சொல்வர்.
தொடரும்....
ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய தினம், உற்ஸவர் பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் வழியே வருபவர்) அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் கவசம் அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்தை காவிரித்தாயே செய்வதாகச் சொல்வர்.
தொடரும்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சொர்க்க வாசல் திறக்குது; சுபயோகம் மலருது !
இவருக்கும் கொழுக்கட்டை
ரங்கநாதர் சன்னதியின் எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூபமாக காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், பெருமாள் எப்போது அழைத்தாலும், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். கஜேந்திரன் என்னும் யானை, கூகு என்னும் முதலையிடம் சிக்கித் தவித்து 'ஆதிமூலமே' என கதறிய போது, உடனடியாக பெருமாளைத் தோளில் தாங்கி வந்தவர் இவரே.
பக்தர்களுக்காக பெருமாளை அழைத்து வரும் இந்த கருடாழ்வாருக்கு, 30 மீட்டர் நீள வேட்டி அணிவிக்கின்றனர். இவரைத் தரிசிக்க வியாழக்கிழமை விசேஷ நாள். அன்று கொழுக்கட்டை நைவேத்யமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதியின் முன் சுக்ரீவனும், வாலியின் மகனான அங்கதனும் துவார பாலகர்களாக உள்ளனர்.
நன்றி தினமலர் !
ரங்கநாதர் சன்னதியின் எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூபமாக காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், பெருமாள் எப்போது அழைத்தாலும், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். கஜேந்திரன் என்னும் யானை, கூகு என்னும் முதலையிடம் சிக்கித் தவித்து 'ஆதிமூலமே' என கதறிய போது, உடனடியாக பெருமாளைத் தோளில் தாங்கி வந்தவர் இவரே.
பக்தர்களுக்காக பெருமாளை அழைத்து வரும் இந்த கருடாழ்வாருக்கு, 30 மீட்டர் நீள வேட்டி அணிவிக்கின்றனர். இவரைத் தரிசிக்க வியாழக்கிழமை விசேஷ நாள். அன்று கொழுக்கட்டை நைவேத்யமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதியின் முன் சுக்ரீவனும், வாலியின் மகனான அங்கதனும் துவார பாலகர்களாக உள்ளனர்.
நன்றி தினமலர் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சொர்க்க வாசல் திறக்குது; சுபயோகம் மலருது !
krishnaamma wrote:இவருக்கும் கொழுக்கட்டை
ரங்கநாதர் சன்னதியின் எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூபமாக காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், பெருமாள் எப்போது அழைத்தாலும், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். கஜேந்திரன் என்னும் யானை, கூகு என்னும் முதலையிடம் சிக்கித் தவித்து 'ஆதிமூலமே' என கதறிய போது, உடனடியாக பெருமாளைத் தோளில் தாங்கி வந்தவர் இவரே.
பக்தர்களுக்காக பெருமாளை அழைத்து வரும் இந்த கருடாழ்வாருக்கு, 30 மீட்டர் நீள வேட்டி அணிவிக்கின்றனர். இவரைத் தரிசிக்க வியாழக்கிழமை விசேஷ நாள். அன்று கொழுக்கட்டை நைவேத்யமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதியின் முன் சுக்ரீவனும், வாலியின் மகனான அங்கதனும் துவார பாலகர்களாக உள்ளனர்.
நன்றி தினமலர் !
அதன்பெயர் கொழுக்கட்டை இல்லாய், "அம்ருதகலசம்"....அதன் உள்ளே கிராம்பு, வெல்லம் இன்னும் நிறைய மருந்து பொருட்கள் சேர்ந்து இருக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சொர்க்க வாசல் திறக்குது; சுபயோகம் மலருது !
அருமையான தகவல்கள் .
இன்றிரவு கண் விழிக்கவேண்டுமோ?
ரமணியன்
இன்றிரவு கண் விழிக்கவேண்டுமோ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சொர்க்க வாசல்
» வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு
» வைகுண்ட ஏகாதசி.., சொர்க்க வாசல் திறப்பு விழா...
» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
» உடலுக்கு 9 வாசல் !பெண்களுக்கு 10 வாசல்
» வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு
» வைகுண்ட ஏகாதசி.., சொர்க்க வாசல் திறப்பு விழா...
» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
» உடலுக்கு 9 வாசல் !பெண்களுக்கு 10 வாசல்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|