ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு !

Go down

பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! Empty பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு !

Post by ayyasamy ram Sat Jan 04, 2020 5:28 am

பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு ! Sk14

”ஒரு விபத்து, எத்தனை பேருடைய ஆசைகளை, கனவுகளை கலைத்துப் போடுகிறது என்பதுதான் ஒன்லைன். இது, சமூக விழிப்புணர்வு மிக்க திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த, நமக்கு மிகவும் சலிப்பைத் தரக்கூடிய செய்தியான “அதிவேகம் ஆபத்து’ என்ற செய்திதான் இந்த படமே.

விபத்தில் பலியாவது உயிர்கள் மட்டுமல்ல, பல கனவுகளும் ஆசைகளும்தான். ஓர் உயிரின் இழப்பு பல உயிர்களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடுகிறது. ஒரு சில நிமிட அவசரத்தால் ஏற்படும் விபத்து சிலரின் உயிரைக் குடித்து பலரை வாழ்நாள் முழுதும் பாதிக்கிறது என்பதை இயல்பான கதைகளுடன் சொல்ல வருகிறேன்.” அக்கறையாக பேசுகிறார் டாக்டர் மாறன்.

வி.ஐ.டி.யில் எம்.டெக், எஸ்.ஆர்.எம். பல்கலையில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து கடந்த ஆண்டு முனைவர் பட்டம் பெற்றவர். திரைப்படக் கல்லூரி மாணவரான இவர் தற்போது இயக்கி வரும் படம் “பச்சை விளக்கு’.

ஒவ்வொரு நிமிடமும் சாலை விபத்தை தடுப்பது எப்படி? என்ற சிந்தனையை மையப்படுத்தியே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார் மாறன். துபாயில் உள்ள அமெரிக்கன் பல்கலையில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து குறித்து ஆய்வறிக்கையை தாக்கல் செய்தவர், அது குறித்த விழிப்புணர்வாக இந்தப் படத்தை எடுத்து வருகிறார்.

இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். 4 லட்சம் பேர் படுகாயம் அடைகின்றனர், இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக் கொண்டே போகிறது

இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். 4 லட்சம் பேர் படுகாயம் அடைகின்றனர், இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக் கொண்டே போகிறது. இந்தியாவில் 2009-இல் 4,21,600 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன, அதில் பலியானவர்கள் 1,26,896 பேர். காயம் அடைந்தவர்கள் 4,66,600 பேர். அதுவே 2013-இல் விபத்துகளின் எண்ணிக்கை 4,43,000 ஆக அதிகரித்து இறந்தவர்கள் எண்ணிக்கையும் 1,37,423 ஆக கூடிப் போயுள்ளது.

காயமுற்றோர் எண்ணிக்கை 4,69,900 ஆக அதுவும் அதிகரித்திருக்கிறது. 2014-இல் தமிழகத்தில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 67,250 வாகன விபத்துக்களாக நடந்திருக்கின்றன. அதில் 14,165 பேர் இறந்திருக்கிறார்கள். 77,725 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். 34 சதவீத விபத்துகள் டூவீலர் ஓட்டுநர்களால் நிகழ்ந்திருக்கிறது. கார், ஜீப், டாக்சி, டெம்போ போன்ற வாகன விபத்துக்கள் 28 சதவீதமும், லாரிகளால் 14 சதவீதம். பஸ்களால் 11 சதவீத விபத்துகளும் நடந்திருக்கின்றன.

விபத்து நடப்பதற்கு வாகன ஓட்டிகளே முக்கிய காரணமாக (96 சதவீதம்) இருக்கிறார்கள். சிக்னலை மதிக்காமல் செல்வது, குறுக்கே தவறுதலாகச் சென்று விட்டு திரும்புவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது போன்றவை விபத்துக்கான முக்கிய காரணமாக இருக்கின்றன என்று மேலும் அதிர வைக்கிறார் மாறன்.

என்னதான் இதற்கு தீர்வு, உங்கள் பார்வையில் சொல்லுங்களேன்…


இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சாலை விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்தால்தான் விபத்துக்களைக் கட்டுப்படுத்த முடியும். பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலை பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வைப் பாடமாகப் பயிற்றுவித்து வந்தால் விபத்துக்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து
விடலாம்.

முழுக்கவே இதுதான் களமா….


காதலும் முக்கியமாக இருக்கிறது. விதி மீறிய பயணமும், வரம்பு மீறிய காதலும் வாழ்க்கையில் வந்து சேராது என்பதுதான் கரு. எல்லா மனித சிக்கல்களிலும் காதல் எப்படி ஒரு பங்கு வகிக்கிறதோ, அப்படி இந்த கதை ஓட்டத்திலும், மையப் புள்ளியிலும் ஒரு காதல் உண்டு.

கடந்த 15 ஆண்டுகளில், காதலால் மாண்டவர்களின் எண்ணிக்கை 38,585. இதே காலகட்டத்தில் தீவிரவாதச் செயல்களால் இறந்தவர்கள் 20,000. இதே வருடங்களில்தான் காதலுக்காக, காதலின் பெயரால் கடத்தப்பட்டவர்கள் 2.6 லட்சம் பேர்.

காதல் தற்கொலைகளில், மூழ்கித் தவிக்கும் முதன்மையான ஏழு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த 15 ஆண்டு காலகட்டத்தில் மட்டும் 9,405 தற்கொலைகள் தமிழகத்தில் அரங்கேறி இருக்கின்றன என்கிறது அந்தப் புள்ளிவிபரம்.

இந்த ரத்தக்கறையை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் பிறமாநிலங்கள் ஆந்திரா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, அசாம்.

காதலும்தான் அவசியம் என இந்த மானிடர்கள் புரிந்துக் கொள்ளவேயில்லை. அதை இந்தக் கதையில் கடந்து போகிற சிலருக்கான அனுபவங்களும், துயரங்களும்தான் கதை. இதை இரண்டையும் இணைத்து ஒரே புள்ளியில் கொண்டு வந்திருக்கிறேன்.

நானே முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். ஏற்கெனவே இயக்கிய குறும்பட அனுபவம் இதில் எனக்கு கைக் கொடுத்தது.

அம்மணி, சூறையாடல் படங்களில் நடித்த ஸ்ரீமகேஷ், தாரா, மனோபாலா, இமான் அண்ணாச்சி என எல்லோரும் பரிச்சயமானவர்கள். உலகத்தில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் சாலையை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அப்படி சாலையை பயன்படுத்தும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே கதை.

By -ஜி.அசோக்
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum