ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு

Go down

 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Empty தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Nov 28, 2019 8:34 pm


திரைகடல் ஓடினோம் திரவியம் தேடவே
உறைவிடம் மாறிய பறவைகள் போலவே
பொருளது வேண்டுமே புவியிதில் வாழவே
பணமது இல்லையேல் இல்லையோர் வாழ்க்கையே

உறவுகள் நினைவது உயிரென இணைவது
தொலைவினில் இருப்பினும் விழியிமை போன்றது
பொழுதது தான்வரும் பிரிந்தவர் சேர்ந்திட
நிலையிதை நினைத்திட உறவுகள் வசப்படும்!!

- கு. இரா, வடக்கு அயர்லாந்து.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Empty Re: தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Nov 28, 2019 8:34 pm


உலகந்தான் உள்ளங்கை உறவாய்ப் போச்சே
உட்கார்ந்த இடத்திருந்து தொடர்பா யாச்சே
அலகில்லாத் தரவுகளால் செல்பே சிக்குள்
அவ்வப்போ துரையாடும் அளவி லாச்சே
புலனங்கள் வழியாலே பொழுதுக் கும்கண்
புலப்படாத தொலைவுகளி னுறவும் கூடப்
பலமணிநே ரத்திற்குப் பேசு கின்ற
பயனுள்ள பேச்சுகளால் சுருங்கிப் போச்சே.

முகநூலில் முகமறியா உறவும் மோதும்
முகமற்ற எதிரிகளும் உறவு கொள்ள
அகமறியா நிலையினிலும் தொடரும் பேசும்
ஆர்ப்பாட்ட உறவுகளும் கூடும் சொந்த
நகலுறவோ அசலுறவோ தெரியா வண்ணம்
நாளுந்தான் வளருதிங்கு வுறவாய் என்றும்
பகலுமென இரவுமென வுரையா டல்கள்
பல்கிவளர் நிலையாச்சு பெருகிப் போச்சு.

தூரந்தான் சுருங்கிற்று, மனதின் தூரம்
தொலைவாச்சு உறவுகளும் சுருங்கிப் போச்சு
ஈரந்தான் மனதிற்குள் வற்றிப் போச்சு
இதயத்தால் விலகித்தான் போக லாச்சு
நேரந்தான் பரபரப்பாய் ஓட லாச்சு
நெருங்கியதோ தூரத்தோ உறவி னர்கள்
பாரந்தான் சுயநலத்தால் பதுங்க லாச்சு
பாருக்குள் மனிதமனம் சிறுத்துப் போச்சே

- கவிமாமணி " இளவல் " ஹரிஹரன், மதுரை.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Empty Re: தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Nov 28, 2019 8:34 pm


குடும்பம் என்னும் கூட்டினில்
....கூடிவாழும் அழகான பறவைகள்
நெடுந்தொலைவு விலகி இருந்தாலும்
....நெஞ்சினில் இனிக்கும் உறவுகள்
தூரநிலவாய் இருக்கும் நினைவுகள்
....துள்ளும் அலையாய் நீந்துமே
தீராஅன்பை வாழ்வும் சுமந்தால்
....தீமைகளும் நம்மைவிலகி நிற்குமே
செல்வங்கள் பார்த்து தேடிவரும்
....சொந்தங்கள் எல்லாம் நம்பாவங்கள்
சொல்லாமல் வந்துநமக்கு உதவும்
....சொந்தங்களை அன்பால் வெல்லுங்கள்
தூரத்துஉறவுகள் எல்லாம் எப்போதும்
....தூண்போல் பாசத்திற்கு வலுசேர்க்கும்
பிரிவுகளை நம்மிடம் புரியவைத்து
....பூக்களாய் எந்நாளும் மணம்சேர்க்கும்

- கவிஞர் நா.நடராஜ், கோயமுத்தூர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Empty Re: தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Nov 28, 2019 8:34 pm

*

உறவுகள் என்பது இயற்கை வரம் - அதில்
தூரத்து உறவு நிலவு போல வரும்.
தொடும் தூரத்தில் இருப்பதாய் தெரியும்,
வெகு தொலைவில் உள்ளதுபின் புரியும்.

வாரம் ஒருமுறை ‘ஸ்கைபில்’ வருவார்கள்;
அங்கு வந்ததை போனதை சொல்வார்கள்;
‘வாட்ஸப்’ மூலம் வாழ்த்தை பொழிவார்கள்;
‘பேஸ்புக்’கிலும் புகைப்படசெய்தி தருவார்கள்!

இதெல்லாம் சில காலம் நடந்துவரும்,
பிறகெல்லா பழக்கமும் மறந்துவிடும்,
பெற்ற பிள்ளைகள் என்றாலும் பேரன்பு
பிரியங்கள் தேய்ந்து முடங்கி விடும்!

பாசத்தால் என்னதான் வளர்த்தாலும்
நேசத்தால் உண்மையாய் இணைந்தாலும்
இன்னல் உறுகின்ற நேரத்திலே துணைக்கு
தூரத்து சொந்தங்கள் வரப்போவதில்லை!

அருகில் இருக்கும் உறவுகளை நெருங்காமல்
அளவாய் பேணி தள்ளி வைப்போம்; ஆனால்
அல்லல் உறுகின்ற நேரத்தில் பாசத்தை
அள்ளி கொடுப்பது ஓரத்து சொந்தங்களே !

- முத்து இராசேந்திரன் , சென்னை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Empty Re: தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Nov 28, 2019 8:34 pm

*

தமிழ்மொழியின் தனிச்சிறப்பென
தனிப் பெருமிதத்துடன் கூறவே
பரன் பரை எனும் பரம்பரையாம்
ஏழாம் தலைமுறையில் தொடங்கி
சேயோன் சேயோள் என்றும்
ஓட்டன் ஓட்டி என்றும்
பூட்டன் பூட்டி என்றும்
பாட்டன் பாட்டி என்றும்
தந்தை தாய் என்றும்.....
தலைமுறைக்கு ஒரு பெயரை
அர்த்தமாக அமைத்து வைத்து
அத்தனை உறவுகளையும்
அழகான கூட்டுக்குடும்பமாக
அற்புதமாக இணைத்தே வைத்து மகிழ்ந்திருந்த காலமதில்.........
போரின் வடிவில் வந்த பேரிடியால்
திசைக்கொருவராய் நம்மை சிதறித்தெறிக்க வைத்து
உறவுகளும் சொந்தங்களும் பிரிந்து....
பாசமும் பந்தமும் தொலைந்து....
தொடர்புகள் தொடர்பற்று அறுந்து....
பார்க்கும் வேளைகளில் மட்டும்
பாசாங்குடன் ஒப்புக்கு நலம் விசாரித்து....
இரத்த சொந்தங்களைக் கூட
தூரத்து உறவுகளாக மாற்றி
வேடிக்கை பார்த்துச் சிரிக்கிறது
இன்றைய இயந்திர உலகம்!!!

- உமா, நோர்வே
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Empty Re: தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Nov 28, 2019 8:35 pm



தூரத்து உறவென்று இல்லாதப் போதும்
துயர்தனைத் துடைத்திட ஓடோடி வருவோர்
யாராக இருந்தாலும் உறவென்றே ஆவார்
இவர்களே உறவினும் மேலோரென் றாவார்!
மாறாக நாம்துயரைக் குண்கின்றப் போதில்
மறந்தும்நம் அருகினில் வாராதார் தம்மை
யாராக இருந்தாலும் விலக்கவேத் தகுமாம்
இரத்தவுற வென்றாலும் விலக்கவே தகுமாம்!

பாரதத்தாய் பெற்றெடுத்த மக்கள் என்றே
பலர்போற்ற ஒன்றிணைந்து வாழ்ந்தோம் அன்று!
தாரகநல் மந்திரமாம் ஒற்றுமையை மறந்தே
தனியாகப் போகின்ற எண்ணமதைக் கொண்டார்!
கோரமுகம் தனைகொண்டு எல்லையிலே
தினமும்
குண்டுமழை பொழிகின்ற கொடியமனங் கொண்டார்!
தூரத்து உறவுகளே என்றாகிப் போனார்
துலக்கமதைக் காணாமல் துயர்தனையே கண்டார்!

அண்டைநாடு என்றான பாக்கிஸ்தான் தன்னில்
அடிமைகளாய் வாழ்ந்திட்டார் வங்கதேச மக்கள்!
கண்டகொடுமை இந்திராவின் மனமதனைத் தாக்க
காளியென்றே ஆகிட்டு போர்தன்னைத் தொடுத்தார்!
எண்ணிபத்து நாட்களுக்குள் போர்தனை முடித்தார்
இனியவங்க தேசமதைத் தோற்று வித்தார்!
உண்மையான இந்திராவின் தீர்க்கத்தின் பலனால்
உறவென்றே வங்கநாட்டு மக்களும் ஆனார்!

- அழகூர். அருண். ஞானசேகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Empty Re: தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum