ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். Poll_c10ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். Poll_m10ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில்.

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். Empty ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில்.

Post by Guest Thu Nov 07, 2019 8:29 pm


ஈகரைப் பதிவு……………………
https://eegarai.darkbb.com/t155978-topic#1306933
பார்க்கவும்.

இத கேட்டா அடிக்க வர்றாங்க, என நகைச்சுவையாக சொன்னாலும் ஒரு கேள்வியை தவிர மற்றவை அறிவியல் சம்பந்தமானவை. பொதுப் பரீட்சைக்கு படித்த பொதுஅறிவை வைத்து பதில்………………..

1.நீரின் அடியில் அழ முடியுமா?

நீரின் அடியில் அழ முடியும்.சத்தமிட்டு அழ முடியாவிட்டாலும்,கண்ணீர் வர முடியும்.கண்ணீர் உப்பு,லிபிட்ஸ்,ப்ரொடீன்கள் கலந்த நீராக இருக்கும்.லக்கிரிமல் கிலாண்ட் மேற்பகுதியில் இருக்கும்.இந்த சுரப்பியில் இருந்து சுரக்கும் கண்ணீரை நீருக்கு அடியில் தடுக்க முடியாது.ஆனால் கண்ணீர் நீராக இருப்பதால்,உடனே நீருடன் கலந்து விடும் என்பதால் பார்ப்பது சிரமம்.அதேசமயம் நீரின் அடியில் அழுவதால் ஆபத்தும் உண்டு.அழுகை உணர்ச்சி சம்பந்தமானதால்,மூச்சை விடும் அளவு அதிகரித்து மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன் வாய்க்குள் நீர் போய் மூழ்கும் நிலையும் ஏற்படும்..நீரின் அடியில் அழும் சோதனை முயற்சி ஆபத்து என்பதால் முயற்சிக்காமல் இருப்பது சிறப்பு.

(மற்ற கேள்விகளுக்கான பதில் நாளை)
avatar
Guest
Guest


Back to top Go down

ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். Empty Re: ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில்.

Post by ayyasamy ram Thu Nov 07, 2019 8:33 pm

ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். 103459460 ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். Empty Re: ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில்.

Post by T.N.Balasubramanian Thu Nov 07, 2019 8:41 pm

தொடருங்கள் சக்தி.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். Empty Re: ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில்.

Post by krishnaamma Thu Nov 07, 2019 9:26 pm

ம்ம்... நல்லா இருக்கு உங்கள் ஆராய்ச்சியும் பதிலும் புன்னகை .........மற்றவைகளை ஆர்வமுடன் எதிர்ப்பார்க்கிறேன் சக்தி.............
.
.
.
எனக்கு பிடித்தது கடைசி கேள்வி (?) .... கேள்வியே இல்லாத ஒரு கேள்வி ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். Empty Re: ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில்.

Post by Guest Fri Nov 08, 2019 5:45 pm

2.மீன்களுக்கு தாகம் எடுக்குமா?

எடுக்காது. மனிதனின் (mammals) உடற்கூற்றில் உப்பையும் நீரையும் சமநிலைபடுத்த தாகம் ஏற்பட்டு தண்ணீரை குடிக்கிறான்.தரைவாழ் உயிரினங்கள் வாழும் சூழல் அப்படி இருக்கிறது.மீன்களைப் பொறுத்தளவில் நன்நீர்/கடல்நீர் வாழ் மீன்கள் என பிரிக்கப்படுகிறது.அதற்கேற்ப அதன் செயற்பாடு இருக்கும்.

நல்ல தண்ணீரில் வாழும் மீன்களை சுற்றியுள்ள நீரில் உப்பு இருக்காது. இந்த நிலையில் நன்நீர் மீன்கள் வாய் மூலம் உட்புகும் நீரை விட தோல் செவுள் வழியாக நீரை அதிகமாக உறிஞ்சி, வெளியேற்றும் போது சம நிலையை சரிசெய்ய உப்பை வடிகட்டி மீண்டும் உடலுக்குள் அனுப்புகிறது.இதனால் அது வெளியேற்றும் சிறுநீர் உப்பில்லாது நீர்த்த நிலையில் (dilute) அதிகமாக சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.

கடல் வாழ் மீன்களை சுற்றியுள்ள நீரின் உப்புத் தன்மை அதிகமாக இருக்கிறது. இந் நிலையில் வாய் வழியே நீர் உட்புகுந்து செவுள் வழியே வெளியேறும் போது சம நிலையை சரிசெய்ய மேலதிக உப்பை வெளியேற்றி நீரை உள்வாங்கிக் கொள்கிறது.இதன் சிறுநீரில் உப்பு அதிகமாக செறிவுற்று சிறிதளவு சிறுநீரே வெளியேற்றப்படுகிறது.கடல்வாழ் மீன்களுக்கு உப்பு தேவையில்லாமல் நல்ல நீர் தேவைப்படுகிறது.இதற்கு மாறாக நன்நீர் மீன்களுக்கு உப்பு தேவையாகவும் நீர் தேவையற்றும் இருக்கிறது.

நிலத்தில் வாழும் உயிரினங்கள் உடல் வரட்சியை (dehydration ) தடுக்க நீரை எடுக்கிறது.நீர் தேவைப்படும் போது உடல் பசியைப் போல் தாக உணர்வை வெளிக்காட்டுகிறது.ஆனால் நீர் வாழ் உயிரினங்களை சுற்றி நீர் இருப்பதால்,இரத்தத்தில் உள்ள உப்பு-நீர் அளவை சம நிலைப்படுத்தி வரட்சியை தடுக்க, கிடைக்கும் நீரை பயன்படுத்திக் கொள்கிறது.

தாக உணர்வை ஏற்படுத்துமா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.நீர் இல்லாத போது மனிதன் நீரை தாக உணர்வு மூலம் தேடுகிறான்.மீன்கள் நீரிலேயே வாழ்வதால் தண்ணீரை தேட வேண்டிய அவசியம் அதற்குக் கிடையாது.கிடைக்கும் நீரை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர தாக உணர்வு ஏற்பட வாய்ப்பில்லை.

உப்பு எனும் சோடியம் தண்ணீரை சம நிலைப்படுத்தி சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவுகிறது.உடல்வரட்சி ஏற்படாமல் தடுக்கிறது.குறைவாக/அதிகமாக இருக்கும் போது உடல்வரட்சி,இரத்த அழுத்தம் ஏற்படுவதுடன் சிறுநீரக செயல்பாட்டிலும் எதிர்விளைவை ஏற்படுத்தும்.அவ்வளவுதான் எனக்கு தெரியும்.
avatar
Guest
Guest


Back to top Go down

ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். Empty Re: ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில்.

Post by Guest Fri Nov 08, 2019 5:49 pm

ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். NaFyXEcgR8mEsPuFKGnf+fish

3.பறவைகள் ஏன் தூங்கும் போது மரத்தில் இருந்து விழுவதில்லை?

பறவைகளின் கால்களின் அமைப்பு தசைகளின் பிடிப்பாக ( pulley system of tendons) இயங்குகிறது. பறவைகள் மரத்தில் பொதுவாக நின்று கொண்டு தூங்குவதில்லை.அமர்ந்திருக்கும்.விரல்கள் மரத்தை இறுக பிடித்திருக்கும்.அமரும் போது கால்கள் மடித்திருக்கும் நிலையில், மரத்தை பிடித்திருக்கும் விரல்களின் பிடிப்பை அவற்றால் எடுக்க முடியாது.பறவை எழுந்து நிற்கும் போது கால்களின் பிடிப்பு ரிலீஸ் ஆக மரத்தில் இருந்து விரல்கள் பிடிப்பை இழக்கின்றன.கால்களை நேராக செய்யாமல் அவற்றால் பிடிப்பை எடுக்க முடியாது. அதனால்தான் தூங்கி முடிந்ததும் கால்களை நேராக்கி பின் பறக்க தொடங்குகின்றன.இது நாம் 7/8 வகுப்பில் படித்ததுதான்.

ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். 2ff3ee3ff
(படம்-arsanatomica science)

இதே தொழில்நுட்பம் மாறி வௌவாலில் செயல்படுகிறது.மரத்தில் தொங்கும் போது, கால் மடிப்பு குதிக்கால்( talons) மூடப்படுகிறது.நம்மைப் போலல்லாது வௌவாலின் தசை நாண்கள் மேல் உடலுடன் இணைக்கப்பட்டிருக்கும். மரத்தில் விரல்களின் பிடிப்பு இறுக்கமடையும் போது எந்தவித சக்தியும் பயன்படுத்தப்படுவதில்லை.அதன் எடை கீழ் நோக்கி தசை நாண்களை இழுக்கும் போது,கால் விரல்களின் பிடிப்பு இறுக்கமடைகிறது.

பறக்க விரும்பும் போது மட்டும் சிறிது சக்தியை பயன்படுத்தி, ஒருமுறை தன் எடையை மேல் நோக்கி நகர்த்தி பிடிப்பை தளர்த்தி பறக்கத் தொடங்குகிறது.மரத்தில் பிடித்திருக்கும் போது இறந்தாலும் கீழே விழ முடிவதில்லை.யாராவது உடலை அசைத்தால் மட்டுமே மரத்தில் இருந்து பிரிக்க முடியும்.(இயற்கையின் படைப்பின் ஆச்சரியங்கள்)
avatar
Guest
Guest


Back to top Go down

ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். Empty Re: ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில்.

Post by krishnaamma Fri Nov 08, 2019 8:12 pm

சக்தி18 wrote:2.மீன்களுக்கு தாகம் எடுக்குமா?

எடுக்காது. மனிதனின் (mammals) உடற்கூற்றில்  உப்பையும் நீரையும் சமநிலைபடுத்த தாகம் ஏற்பட்டு தண்ணீரை குடிக்கிறான்.தரைவாழ் உயிரினங்கள் வாழும் சூழல் அப்படி இருக்கிறது.மீன்களைப் பொறுத்தளவில் நன்நீர்/கடல்நீர் வாழ் மீன்கள் என பிரிக்கப்படுகிறது.அதற்கேற்ப அதன் செயற்பாடு இருக்கும்.

நல்ல தண்ணீரில் வாழும் மீன்களை சுற்றியுள்ள நீரில் உப்பு இருக்காது. இந்த நிலையில் நன்நீர் மீன்கள் வாய் மூலம் உட்புகும் நீரை விட தோல் செவுள் வழியாக நீரை அதிகமாக உறிஞ்சி, வெளியேற்றும் போது சம நிலையை சரிசெய்ய உப்பை வடிகட்டி மீண்டும் உடலுக்குள் அனுப்புகிறது.இதனால் அது வெளியேற்றும் சிறுநீர் உப்பில்லாது நீர்த்த நிலையில் (dilute) அதிகமாக சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.

கடல் வாழ் மீன்களை சுற்றியுள்ள நீரின் உப்புத் தன்மை அதிகமாக இருக்கிறது.  இந் நிலையில் வாய் வழியே நீர் உட்புகுந்து செவுள் வழியே வெளியேறும் போது சம நிலையை சரிசெய்ய  மேலதிக உப்பை வெளியேற்றி நீரை உள்வாங்கிக் கொள்கிறது.இதன் சிறுநீரில் உப்பு அதிகமாக செறிவுற்று சிறிதளவு சிறுநீரே வெளியேற்றப்படுகிறது.கடல்வாழ் மீன்களுக்கு உப்பு தேவையில்லாமல் நல்ல நீர் தேவைப்படுகிறது.இதற்கு மாறாக நன்நீர் மீன்களுக்கு உப்பு தேவையாகவும் நீர் தேவையற்றும் இருக்கிறது.

நிலத்தில் வாழும் உயிரினங்கள் உடல் வரட்சியை (dehydration ) தடுக்க நீரை எடுக்கிறது.நீர் தேவைப்படும் போது உடல் பசியைப் போல் தாக உணர்வை வெளிக்காட்டுகிறது.ஆனால் நீர் வாழ் உயிரினங்களை சுற்றி நீர் இருப்பதால்,இரத்தத்தில் உள்ள உப்பு-நீர் அளவை சம நிலைப்படுத்தி வரட்சியை தடுக்க, கிடைக்கும் நீரை பயன்படுத்திக் கொள்கிறது.

தாக உணர்வை ஏற்படுத்துமா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.நீர் இல்லாத போது மனிதன் நீரை தாக உணர்வு மூலம் தேடுகிறான்.மீன்கள் நீரிலேயே வாழ்வதால் தண்ணீரை தேட வேண்டிய அவசியம் அதற்குக் கிடையாது.கிடைக்கும் நீரை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர தாக உணர்வு ஏற்பட வாய்ப்பில்லை.

உப்பு எனும் சோடியம் தண்ணீரை சம நிலைப்படுத்தி சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவுகிறது.உடல்வரட்சி ஏற்படாமல் தடுக்கிறது.குறைவாக/அதிகமாக இருக்கும் போது உடல்வரட்சி,இரத்த அழுத்தம் ஏற்படுவதுடன் சிறுநீரக செயல்பாட்டிலும் எதிர்விளைவை ஏற்படுத்தும்.அவ்வளவுதான் எனக்கு தெரியும்.

நல்ல விளக்கம் சக்தி....மிக்க நன்றி ! .... அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். Empty Re: ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில்.

Post by krishnaamma Fri Nov 08, 2019 8:13 pm

சக்தி18 wrote:
3.பறவைகள் ஏன் தூங்கும் போது மரத்தில் இருந்து விழுவதில்லை?

பறவைகளின் கால்களின் அமைப்பு தசைகளின் பிடிப்பாக ( pulley system of tendons) இயங்குகிறது. பறவைகள் மரத்தில் பொதுவாக நின்று கொண்டு தூங்குவதில்லை.அமர்ந்திருக்கும்.விரல்கள் மரத்தை இறுக பிடித்திருக்கும்.அமரும் போது கால்கள் மடித்திருக்கும் நிலையில், மரத்தை பிடித்திருக்கும் விரல்களின் பிடிப்பை அவற்றால் எடுக்க முடியாது.பறவை எழுந்து நிற்கும் போது கால்களின் பிடிப்பு ரிலீஸ் ஆக மரத்தில் இருந்து விரல்கள் பிடிப்பை இழக்கின்றன.கால்களை நேராக செய்யாமல் அவற்றால் பிடிப்பை எடுக்க முடியாது. அதனால்தான் தூங்கி முடிந்ததும் கால்களை நேராக்கி பின் பறக்க தொடங்குகின்றன.இது நாம் 7/8 வகுப்பில் படித்ததுதான்.

ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். 2ff3ee3ff
(படம்-arsanatomica science)

இதே தொழில்நுட்பம் மாறி வௌவாலில் செயல்படுகிறது.மரத்தில் தொங்கும் போது, கால் மடிப்பு குதிக்கால்( talons) மூடப்படுகிறது.நம்மைப் போலல்லாது வௌவாலின் தசை நாண்கள் மேல் உடலுடன் இணைக்கப்பட்டிருக்கும். மரத்தில் விரல்களின் பிடிப்பு இறுக்கமடையும் போது எந்தவித சக்தியும் பயன்படுத்தப்படுவதில்லை.அதன் எடை கீழ் நோக்கி தசை நாண்களை இழுக்கும் போது,கால் விரல்களின் பிடிப்பு இறுக்கமடைகிறது.

பறக்க விரும்பும் போது மட்டும் சிறிது சக்தியை பயன்படுத்தி, ஒருமுறை தன் எடையை மேல் நோக்கி நகர்த்தி பிடிப்பை தளர்த்தி பறக்கத் தொடங்குகிறது.மரத்தில் பிடித்திருக்கும் போது இறந்தாலும் கீழே விழ முடிவதில்லை.யாராவது உடலை அசைத்தால் மட்டுமே மரத்தில் இருந்து பிரிக்க முடியும்.(இயற்கையின் படைப்பின் ஆச்சரியங்கள்)
மேற்கோள் செய்த பதிவு: 1307101

அவைகள் பாவம் , நல்லா படுத்து தூங்குவதில்லையே என்று எனக்கு எப்பொழுதும் தோன்றும். புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். Empty Re: ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில்.

Post by Guest Sat Nov 09, 2019 12:17 pm

4.பணம் மரத்தில் இருந்து வருவதில்லை. பின் ஏன் வங்கிகள் எங்களுக்கு கிளைகள் உள்ளன என்கிறார்கள்?

வங்கியில் மட்டும் கிளைகள் என்று சொல்வதில்லை.கிளைகள் எல்லா இடங்களிலும் பயன்படுகிறது.அடி மரத்தில் இருந்து கிளைகள் வருவது போல்,நிறுவனங்களில் இருந்து பிரிவுகள்-கிளைகள் உருவாகின்றன. பணம் வங்கியில் இருந்து வருவது போல் மரத்தில் இருந்து இலைகள் வருகின்றன. பணத்தை விட இலைகள் பெறுமதி அதிகம்.மரத்திற்கு இலைகள் உணவுற்பத்திக்கு அவசியமாகிறது. அதுபோல் வங்கிக்கு பணம் அவசியமாகிறது.முதலில் வங்கியில் நோட்டுக்குப் பதில் Sakks (ஈரான்) adesha  (இந்தியா) என வினியோகம் செய்தார்கள்.அதில் ஒரு தாளை லீவ் (Leaf) என்றார்கள். அதுவே இன்று check (cheque) எனப்படுகிறது.(விக்கிபீடியா)
இதிலிருந்து கிளைகள்-Branch-வந்திருக்கலாம்.(சாரி தெரியாது)

5.பசை ஏன் பாட்டிலுக்குள் ஒட்டிக் கொள்வதில்லை?

பசையில்-glue-வெவ்வேறு வகைகள் உண்டு.பாட்டிலில் ( tube/bottle/container ) ஒட்டிக் கொள்ளாததற்குக் காரணம்,பசை இன்னொன்றுடன் ஒட்டிக்கொள்ள காற்று அல்லது நீர்த்தன்மை வேண்டும்.சில பசைகள் ஒட்டிக் கொள்ள வேதியியல் எதிர்வினை ஏற்பட வேண்டும்.இதற்காக பசைகளில் வேதிப் பொருளை சேர்ப்பார்கள்.அப்போது எதிர்விளைவு ஏற்பட்டு ஒட்டிக் கொள்கிறது.பாட்டிலில் சிறிய அளவு காற்று இருக்கும் போது எதிர்விளைவு ஏற்பட்டு ஒட்டிக் கொள்ள வாய்ப்பில்லை.பாட்டிலின் உள்பகுதியில் ஒட்டாமல் இருக்க கரைப்பான்களை (solvents-air/water vapor/chemical ) சேர்த்து எப்போதும் திரவ நிலையில் இருக்க செய்வார்கள்.பசை வெளியே வரும் போது காற்றுடன் சேர்ந்து கரைப்பான் (polystyrene / acetone ) திரவத்தை கடினமாக்கி ஒட்ட செய்கிறது.உடனடி பசையில் (super glue) சேர்க்கப்பட்டிருக்கும் cyanoacrylate வெளியே வரும் போது காற்றில் இருக்கும் நீராவியுடன் (water vapor ) சேர்ந்து கடினமாகி ஒட்ட செய்கிறது.

பாட்டிலின் உள்ளே பசை ஒட்டிக் கொள்ள வேண்டுமாயின்,அதை இறுக்கமாக்கிக் கொள்ள காற்று/நீராவி/கரைப்பான்/வேதிப்பொருள் ஒன்று தேவைப்படுகிறது.அவற்றில் ஒன்று பாட்டிலுக்குள் இல்லாமல் இருப்பதால் உட்பகுதியில் ஒட்டிக்கொள்வதில்லை.பசை வெளியே வந்தால் மட்டுமே ஒட்டிக் கொள்ள முடியும். (University of California -science lab )
avatar
Guest
Guest


Back to top Go down

ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். Empty Re: ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில்.

Post by Guest Sat Nov 09, 2019 12:19 pm

6.வட்ட வடிவ பீட்சா ஏன் சதுரப் பெட்டியில் வருகிறது?

பிட்சா தயாரிப்பவர்கள் கடைகளில் பெட்டிகள் எப்படி அடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை பார்த்தால்,ஒரு தனியான அட்டைகளாக அவை இருக்கும். பெட்டிகளாக அடுக்கப்பட்டிருப்பதில்லை.நூற்றுக் கணக்கில் பெட்டிகளாக வைத்தால் அதிக இடம் தேவைப்படும். பிட்சா வினியோகம் செய்தற்கு தயாரானதும் அட்டையை மடித்து பெட்டியாக்கி அதில் வைக்கிறார்கள்..வட்டமாக பெட்டி செய்வதில் சிரமம்,அதை மடித்து பெட்டியாக செய்வதிலும் சிரமம் உண்டு.

சதுர பெட்டியில் பிட்சா வைத்தால்,நான்கு மூலையில் இருக்கும் சிறிய இடைவெளி மூலம் பிட்சாவை எடுப்பதும் சுலபம்.வட்டப் பெட்டியில் முடியாது.

7.ஐ லவ் யூ என்பது கேள்வியே அல்ல.பின் ஏன் அனைவரும் அதற்கு பதில் எதிர்பார்க்கிறார்கள்?

ஐ லவ் யூ என்பது கேள்வி அல்ல ஒரு கூற்று,obligating statement (expression/ statement /proposal) என சொல்லலாம். சிலசமயம் ஒரு கூற்று பதிலை எதிர்பார்த்திருக்கும்.

தொலைபேசியில்,நான் (பெயர்)……….பேசுகிறேன்..என்று சொன்னால் மறுபக்கத்தில் உள்ளவர் தன் பெயரை சொல்வார். பெயரை சொல்லாமல் என்ன விசயம் ஏன் எடுத்தீர்கள்? என்று உடனே யாரும் கேட்பதில்லை. நம் பெயரை சொல்லி விட்டு மறுபக்கத்தில் உள்ளவர் பெயரை எதிர்பார்போம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என கேட்கும் போது, மற்றவர் நான் நல்லா இருக்கிறேன் என்று சொல்லி முடித்துக்கொள்வதில்லை.அவரும் பதிலுக்கு நீங்கள்? என்பார்.நான் நன்றாக இருக்கிறேன்,நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று அதன் பொருள்.

அது போன்ற ஒரு கூற்று தான் ஐ லவ் யூ ஆகும். நாம் ஒருவருக்கு சொன்னால், அவரிடம் இருந்து ஒரு பதிலை எதிர்பார்ப்பதாகும்.அதாவது ஐ லவ் யூ, டு யூ லவ் மீ என்பதின் முழு வடிவம் என்று சொல்லலாம். ஒரு கொடுக்கல் வாங்கல்.( reciprocation),ரியல் வேர்ல்டில் அது ஒரு மருட்சி (delusional.) என சொல்லலாம்.

(நோ சொன்னாலோ,செருப்பை கழற்றினாலோ,பதில் சொல்லாவிட்டாலோ…..நம் விதி என நினைத்து விலக வேண்டும்.அருவாளோ,ஆசிட்டோ எடுக்கக் கூடாது.ஆது அவரவர் சுதந்திரம் தனி உரிமை என விலகிக் கொள்ள வேண்டும்)

இப்போது ஒரு கேள்வி.ஐ லவ் யூ என்றால் என்ன? நாம் தான் உடனே காதலை நினைத்துக் கொள்கிறோம். ஐ லவ் யூ என்பது ஆங்கிலம்.ஆங்கிலத்தில் நாம் சொல்லும் போது அதன் பொருள், நாம் நினைக்கும் காதல் மட்டுமல்ல,அன்பு எனவும் பொருள் கொள்ளலாம். யார் மேலும் அன்பை செலுத்தலாம்.ஐ லவ் யூ டாட்,ஐ லவ் யூ மாம் எனவும்,கணவன்/மனைவிக்கும் சொல்லலாம்.அதை ஏன் கேள்வியாக எடுத்து பதிலுக்கு காத்திருக்க வேண்டும்.பெண்ணிடம் காதலை சொல்ல வேண்டுமானால் காதலை தமிழிலேயே சொல்லலாமே! ஏன் இந்த அப்பாடக்கர் ஆங்கிலம்? (இது என் கருத்து மட்டுமே.)

நன்றி.

ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். I-dont-love-you-i-love-you-waiter-bring-separate-55851233

(அனைத்து தகவல்களும் பள்ளியில் படித்தது,பொதுப்பரீட்சைக்கு GK தயாரித்தது,இணையத்தில் பெற்றது.)
avatar
Guest
Guest


Back to top Go down

ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில். Empty Re: ரொம்ப நாள் டவுட்…...அறிவியல் பதில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum