ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது

Go down

காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது Empty காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது

Post by ayyasamy ram Wed Oct 02, 2019 6:04 am

காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது 201910020358498280_Which-was-in-the-hands-of-Congress-The-post-of-mayor-was_SECVPF
-
பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தல் பெங்களூரு மாநகராட்சி
அலுவலகத்தில் உள்ள கவுன்சில் கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
தேர்தலை மண்டல கமிஷனர் ஹர்ஷகுப்தா முன்னின்று நடத்தினார்.

மேயர் பதவிக்கு பா.ஜனதா சார்பில் கவுதம்குமார் (ஜோகுபாளையா வார்டு), பத்மநாபரெட்டி (காசரக்கனஹள்ளி) ஆகியோரும், காங்கிரஸ் சார்பில்
சத்யநாராயணா (தத்தாத்ரேயா கோவில்) வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதில் பத்மநாபரெட்டி கடைசி நேரத்தில் தனது மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து களத்தில் பா.ஜனதா சார்பில் கவுதம் குமாரும், காங்கிரஸ் சார்பில் சத்யநாராயணாவும் இருந்தனர். கவுன்சிலர்கள் கைகளை உயர்த்தியும், கையெழுத்திட்டும் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

அதன்படி மேயர் பதவிக்கு கவுதம்குமாருக்கு 129 ஓட்டுகளும், சத்யநாராயணாவுக்கு 112 வாக்குகளும் கிடைத்தன. பா.ஜனதா வேட்பாளரான கவுதம்குமார், 17 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதே போல் துணை மேயர் பதவிக்கு பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ராம்மோகன்ராஜ் (பொம்மனஹள்ளி) 127 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் களம் கண்ட கங்கம்மா ராஜண்ணா(சக்திகணபதிநகர்) 116 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.

காலை 11.30 மணிக்கு தொடங்கிய தேர்தல் 1.30 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்தல் 2 மணி நேரம் நடைபெற்றது. இந்த தேர்தலில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, மந்திரிகள் சுரேஷ்குமார், சோமண்ணா, ஆர்.அசோக், எம்.பி.க்கள் பி.கே.ஹரிபிரசாத், பி.சி.மோகன், ராஜூகவுடா, ஹனுமந்தய்யா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் பெங்களூருவை சேர்ந்த எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

மொத்தம் உள்ள 257 வாக்காளர்களில் 249 பேர் இந்த தேர்தலில் பங்கேற்றனர். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், ஜெய்ராம் ரமேஷ் எம்.பி., டி.கே.சுரேஷ் எம்.பி. உள்பட 8 பேர் வரவில்லை. தேர்தல் பணி தொடங்கிய பிறகு ஜனதா தளம்(எஸ்) கவுன்சிலர்கள் மஞ்சுளா, வாசுதேவ் ஆகியோர் தேர்தலை புறக்கணித்து அங்கிருந்து வெளியேறினர்.

மேயர் தேர்வானது குறித்து அறிவிக்கப்பட்ட பிறகு முன்னாள் மேயர் கங்காம்பிகே, வெள்ளி சாவியை புதிய மேயர் கவுதம்குமாரிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். கவுதம்குமார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வளர்ந்து பா.ஜனதாவுக்கு வந்தவர். ஜெயின் மதத்தை சேர்ந்த அவர் அடிப்படையில் வட இந்தியாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜனதா மேயர் பதவிக்கு பத்மநாபரெட்டி, சீனிவாஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் கவுதம்குமாரின் பெயரை பா.ஜனதா தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் உத்தரவுப்படி மேயர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கவுதம்குமார் பெங்களூரு மாநகராட்சியின் 53-வது மேயர் ஆவார். 4 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரு மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியுள்ளது. 43 வயதாகும் புதிய மேயர் கவுதம்குமார் பி.காம் படித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளாக மாநகராட்சி கவுன்சிலராக இருந்து வரும் மேயர் கவுதம்குமார், 2013-14-ம் ஆண்டு பெங்களூரு மாநகராட்சி கணக்கு குழு நிலைக்குழு தலைவராக பணியாற்றினார். 47 வயதாகும் துணை மேயர் ராம்மோகன்ராஜ் சிவில் என்ஜினீயர் ஆவார்.

பெங்களூரு மாநகராட்சி மன்றத்திற்கு அடுத்த ஆண்டு (2020) செப்டம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு சபை கூடியதும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் எம்.எல்.சி. “கர்நாடக நகர-மாநகராட்சிகள் சட்டப்படி மேயர் பதவி காலம் முடிவடையும் மாதத்திலேயே தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

அதன்படி இந்த தேர்தலை கடந்த மாதம்(செப்டம்பர்) நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்த தேர்தல் அக்டோபர் மாதத்தில் நடத்தப்படுகிறது. இதற்கு தேர்தல் அதிகாரி பதிலளிக்க வேண்டும்“ என்றார்.

அதற்கு பதிலளித்த தேர்தல் அதிகாரி ஹர்ஷகுப்தா, “இந்த தேர்தல் நடத்துவது குறித்த அனைத்து விவரங்களும் உங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. சட்டத்திற்கு உட்பட்டே தேர்தல் நடத்தப்படுகிறது. இங்கு விவாதத்திற்கு இடமில்லை. தேர்தல் மட்டுமே நடைபெற அனுமதிக்கப்படுகிறது. உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் அதை நீங்கள் உரிய இடத்தில் முறையிடலாம்“ என்றார்.

அப்போது மீண்டும் பேசிய ரமேஷ்குமார், “மேயர் தேர்தல் நடைபெறுவது சட்டவிரோதம். இதை ஏற்க முடியாது“ என்று கூறினார். அதற்கு முன்பு தேர்தல் அதிகாரி, 4 நிலைக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கு யாரும் மனு தாக்கல் செய்யாததால், அவற்றுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது“ என்று அறிவித்தார். 8 நிலைக்குழு உறுப்பினர் தேர்தலை நடத்த கர்நாடக ஐகோர்ட்டு ஏற்கனவே தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது Empty Re: காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது

Post by Guest Wed Oct 02, 2019 2:11 pm

காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது 1571444738
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்றால் ,மக்களுக்கு ஒரு சமயம் வெறுப்பு வந்துவிடும்.அதேபோல் பதவியில் இருப்போர் பக்கம் உறுப்பினர்கள் மாறுவதும் தாவுவதும் சாதாரணம்.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» எடியூரப்பாவுக்கு வழங்கிய உலர்பழ கூடையில் பிளாஸ்டிக் சுற்றப்பட்டு இருந்தது:ரூ.500 அபராதம் செலுத்திய பெங்களூரு மாநகராட்சி மேயர்
» உ.பி. உள்ளாட்சி தேர்தலில் 16-ல் 14 மேயர் - பா.ஜ.க கைப்பற்றியது.
» காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை நகராட்சிகளில் துணைத்தலைவர்கள் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது
» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
» ‘மாண்புமிகு’ மேயர் என்றழைக்க தொடங்கிய சென்னை மாநகராட்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum