ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

Top posting users this month
ayyasamy ram
பஞ்சாபி இலக்கியத்தின் ராணி Poll_c10பஞ்சாபி இலக்கியத்தின் ராணி Poll_m10பஞ்சாபி இலக்கியத்தின் ராணி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சாபி இலக்கியத்தின் ராணி

Go down

பஞ்சாபி இலக்கியத்தின் ராணி Empty பஞ்சாபி இலக்கியத்தின் ராணி

Post by ayyasamy ram Tue 24 Sep 2019 - 22:30


தொன்மையான பஞ்சாபி இலக்கியத்தின் ராணியாகவும்
கருப்பு ரோஜாவாகவும் இருந்தவர் அம்ரிதா ப்ரிதம்.

சோதனைகளே நிறைந்திருந்த அம்ரிதா ப்ரிதம்
வாழ்க்கையில் பல விநோதமான, சோக சம்பவங்களும்,
துணிச்சலான முடிவுகளும் பரந்து கிடக்கின்றன.

பஞ்சாபி இலக்கிய உலகிற்குத் தனது அதிகபட்ச பங்களிப்பை
கொடுத்து வந்து புகழாலும் விருதுகளாலும் , இறுதிவரை
தளும்பாமல் இருந்தார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்
பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள்,
ஆனால் அம்ரிதா ப்ரிதம் வாழ்க்கையில் ஒவ்வொரு
வெற்றிக்குப் பின்னால் ஒரு மெல்லிய சோகம் இழையோடிக்
கொண்டே இருக்கும்.

1919-ஆம் ஆண்டு பிரிக்கப்படாத இந்தியாவின் மேற்கு
பஞ்சாபின் குஜ்ரன்வாலா என்ற இடத்தில் கர்தார் சிங் -
ராஜ் கெüர் என்ற சீக்கிய தம்பதியின் மகளாகப் பிறந்தார்.
தந்தை பள்ளிக்கூட வாத்தியார்.

அதிகம் படிக்காத அம்ரிதம் 1935-இல் "தண்டியன் கிரனன்"
.என்ற தலைப்பில் தன்னுடைய புத்தகத்தை வெளியிட்டார்.
அந்தச் சிறிய வயதில் அவருடைய எழுத்துக்களில் தெளிவு,
கற்பனைகள், பயமின்மை இருந்தது.

இவருக்கு முன் பஞ்சாபி இலக்கியத்தில் மதங்களைப் பற்றி
எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.
முதல் புத்தகத்தை வெளியிட்ட ஒரு சில வருடங்களில்
அவரது தாயார் காலமானார்.

ஆரம்பத்தில் சீக்கிய குருமார்களைப் பற்றியும், அவர்கள்
எந்தக் கொள்கைக்காக வாழ்ந்தார்களோ அதைப்பற்றியும்
கவிதைகள் எழுதியதற்காகப் பலரிடமிருந்து பாராட்டுகள்
குவிந்தன.

பாராட்டியவர்களுள் அனார்கலி பஜாரில் ரெடிமேட் ஆடை
கடை வைத்திருந்த ஜகத் சிங் க்வத்ராவும் ஒருவர். அவர் தன்
மகன் ப்ரிதம் சிங்கை திருமணம் செய்து கொள்ளுமாறு
கேட்டார், எவ்வித மறுப்பும் சொல்லாமல், ப்ரிதம் சிங்கை
திருமணம் செய்து கொண்ட பிறகு தன் பெயருக்குப் பின்னால்
ப்ரிதம் என்ற கணவர் பெயரை இணைத்துக்கொண்டு
அம்ரிதா கெüர் அம்ரிதா ப்ரிதம் ஆனார்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு லாகூரில் இதர
பஞ்சாபி எழுத்தாளர்கள் அம்ரிதா ப்ரிதம் மீது அதிக மோகம்
கொண்டிருந்ததால், பஞ்சாபி எழுத்தாளர்கள் அனைவரும்
அம்ரிதா ப்ரிதமைச் சுற்றியே வலம் வருவார்கள்.

அவர்களுள் அந்தக்காலக் கட்டத்தில் சிறந்த இளம் கவிஞராகப்
போற்றப்பட்ட கவிஞர் மோகன் சிங் மகிர். இவர் அம்ரிதா ப்ரிதம்
மீது மோகம் மட்டும் கொள்ளாமல் காதல் கொண்டார்.
ஆனால் அம்ரிதா அதை ஏற்கவில்லை.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு டெல்லி வந்த
ப்ரிதம் அகில இந்திய வானொலியின் பஞ்சாபி சேவையில்
தினப்படி ரூ.5 }க்கு பணியில் சேருகிறார். "இரண்டு குழந்தைகளை
நானே வளர்க்கிறேன்', என்றும் தன்னை விவாகரத்துச்
செய்யுமாறு தன்னுடைய கணவரை வற்புறுத்துகிறார்.

விவாகரத்தும் கிடைக்கிறது. தொலைக்காட்சியிலும்
நிகழ்ச்சிகளை வழங்கத் தொடங்கினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பஞ்சாபி இலக்கியத்தின் ராணி Empty Re: பஞ்சாபி இலக்கியத்தின் ராணி

Post by ayyasamy ram Tue 24 Sep 2019 - 22:33



பஞ்சாபி இலக்கியத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற
நோக்கத்தில் 1966-ஆம் ஆண்டு ஆரம்பித்த "நாக்மணி"
எனும் பஞ்சாபி இலக்கியப் பத்திரிகையை மிகவும் நேசித்தார்.

வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த பஞ்சாபி இலக்கிய
எழுத்தாளர்களுக்கு "நாக்மணி' பத்திரிகையில் எழுத
வாய்ப்புக் கொடுத்தார். இதனால் பஞ்சாபி இலக்கியம்
வேகமாக வளரத் தொடங்கியது. இதனால் காலச்சக்கரம்
சுழலச் சுழல டில்லி வீட்டில் தினமும் பஞ்சாபி எழுத்தாளர்கள்
அம்ரிதம் ப்ரிதாவைப் பார்க்க படையெடுத்தார்கள்.

பெரிய எழுத்தாளராகவும் கவிஞராக இருந்த போதும்
ஒரு நாளும் அரசியலைப் பற்றி கவலை கொண்டது
கிடையாது. சீக்கிய மதத்தில் பிறந்த அம்ரிதா சீக்கிய
மதத்திற்கு எதிராக எழுதியதால், நேரில் ஆஜராகி விளக்கம்
தருமாறு அமிர்தசரஸ் நீதிமன்றம் வாரண்ட் அனுப்பியது.

எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கை தன்னோடு அழைத்துக்
கொண்டு அமிர்தசரஸ் நீதிமன்றம் சென்றார். இப்படிப்
பலவிதமான வழக்குகளை அம்ரிதா சந்திக்க நேரிட்டது.

அம்ரிதாவின் இலக்கியப் பயணத்தில் மண்ணெண்ணெயின்
துர்நாற்றம் (Stench of Kerosene) என்ற சிறுகதை
அதிகம் பேசப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையில் ஏற்பட்ட
வன்முறையில் ஏராளமான இந்து, முஸ்லிம் மற்றும்
சீக்கியர்கள் இறந்தனர். பலர் காயமுற்றனர், இதை நேரில்
பார்த்து அனுபவித்த அம்ரிதா "பிஞ்ச்ர்" (Pinjar) என்ற
தலைப்பில் நாவலாக எழுதினார். இது பிற்பாடு இந்தியில்
திரைப்படமாகவும் வந்தது.

பிரிவினைக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட அம்ரிதா, 2002-ஆம்
ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தைப் பற்றி
மனிதர்களாகிய நாம் ஏன் சண்டையிட்டுக் கொள்கிறோம்
பல்வேறு வண்ணங்களில் அழகாகப் பூக்கும் மலர்களிடையே
பொறாமை ஏற்படுவதில்லை, இதை நாம் மலர்களிடமிருந்து
கற்றுக்கொள்ளலாமே என்று அறிவுறுத்தினார்.

அம்ரிதாவைப் போல் லாகூரிலிருந்து இந்தியா வந்த
மற்றுமொரு சீக்கிய எழுத்தாளர் குஷ்வந்த் சிங், பிஞ்சர் நாவலை
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர், அம்ரிதாவின் வாழ்க்கை
வரலாற்றை எழுதுவதற்காக இருவரும் பல முறை
விவாதித்துள்ளனர்.

இறுதியில் அம்ரிதாவிடம், உன்னுடைய வாழ்க்கை வரலாற்றை
ரெவின்யூ ஸ்டாம்ப் பின்புறம் எழுதிவிடலாம் என்று
குஷ்வ்ந்த் சிங் சொல்ல "ரெவின்யூ ஸ்டாம்ப்' என்ற கிண்டலாகச்
சொன்ன தலைப்பையே வைத்து தன் சுயசரிதையை எழுதினார்.

1956- ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது, 1969-ஆம்
ஆண்டு பத்மஸ்ரீ, 2004-ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதுகளைப்
பெற்றார் அம்ரிதம் ப்ரிதா.

அம்ரிதாவின் இலக்கிய எழுத்தில் மயங்கி மனதை பறிகொடுத்த
அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி, அம்ரிதாவை
மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்தார்.

இந்திரா காந்திக்கு பிடித்த எழுத்தாளர் என்பதால் என்னவோ
இந்திரா காந்தி மறைந்த அதே அக்டோபர் 31- ஆம் தேதி,
2005-ஆம் ஆண்டு தன்னுடைய 86-ஆவது வயதில் மறைந்தார்.
-
---------------------------
- ரா. சுந்தர்ராமன்
நன்றி- தினமணி கொண்டாட்டம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum