ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்

Go down

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Empty இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்

Post by ayyasamy ram Mon Sep 09, 2019 7:58 pm

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Dkn_Tamil_News_2019_Sep_03__653454005718232
-
உலக புதின எழுத்தாளர்களுள் மிகச் சிறந்தவரும்,
ரஷ்ய எழுத்தாளருமான லியோ டால்ஸ்டாய் பிறந்தநாள்
இன்று.

மத்திய ரஷ்யாவில் உள்ள யஸ்யானா போல்யானாவில்
1828ம் ஆண்டு செப்.9ம் தேதி டால்ஸ்டாய் பிறந்தார்.
வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் ஒரு போக்கிரியாக,
சூதாடியாக திரிந்த டால்ஸ்டாய் ஒருநாள் வேட்டைக்கு
போனார்.

கரடி ஒன்றை வேட்டையாட துரத்தி, அதன் ரத்தம் சிந்திய
ஜீவ மரண போராட்டத்தை பார்த்ததும் அவருக்குள்
கருணை சுரந்தது. சக உயிர்களின், மனிதர்களின் மீதான
அன்பு அவரை எழுத்தாளனாக மாற்றியது.
அவரது எழுத்தில் அன்பு கசிந்து கொண்டே இருந்தது.

அவரது படைப்புகளான போரும் அமைதியும்,
அன்னா கரீனா, இவான் இலிச்சின் மரணம் போன்றவை
காலம் கடந்தும் போற்றப்படுகின்றன. போரும் அமைதியும்
நாவல் பரந்த கதைக்களம் கொண்டது.
580 கதாபாத்திரங்களை உள்ளடக்கியது. பல வரலாற்று
நிகழ்வுகளுடன் கற்பனையும் கலந்துள்ளது.

19ம் நூற்றாண்டு மக்களின் வாழ்வை கண்முன் நிறுத்துகிறது.
என்றைக்கும் எழுத்தை பொருளீட்டும் ஒரு மூலதனமாக அவர்
பார்த்ததில்லை. இவருடைய புத்தகங்கள் ஏற்படுத்திய
தாக்கத்தால் மகாத்மா காந்தி தன்னுடைய தென்ஆப்ரிக்க
ஆசிரமத்துக்கு ‘டால்ஸ்டாய் பண்ணை’ என்று பெயரிட்டார்.

ஒரு கட்டத்தில் டால்ஸ்டாய் தீவிர எழுத்து வாழ்க்கையை
விட்டு விலகினார். அதன்பிறகு 20 வருடங்கள் கழித்து
திடீரென ‘புத்துயிர்ப்பு’ எனும் நாவலை எழுதப்போவதாக
அறிவித்தார். அதற்கு யார் வேண்டுமானாலும் பணம் கட்டி
விற்பனை உரிமையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு
வேறு செய்தார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Empty Re: இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்

Post by ayyasamy ram Mon Sep 09, 2019 7:58 pm



பணத்திற்காக ஆசைப்படாத அவர் அப்படி சொன்னதன்
நோக்கம் டுகொபார்ஸ் எனும் 47,000 அப்பாவி மக்கள்.
ரஷ்யாவில் உள்ள டுகொபார்ஸ் இனமக்கள் அன்றைய மத
வழிபாட்டு முறைகளை ஏற்காமல் வாழ்ந்தனர். வன்முறையை
விரும்பாதவர்கள். அடித்தாலும் திருப்பி தாக்கமாட்டார்கள்.
ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற மாட்டார்கள்.

ஆனால் அன்று ரஷ்யாவில் கட்டாய ராணுவ சேவை அமலில்
இருந்தது. இவர்கள் ராணுவத்தில் சேர மறுத்ததால் நாட்டை
விட்டு கிளம்புங்கள் என்று அழுத்தமாக சொல்லி விட்டது அரசு.

இதனால் நிர்க்கதியாக நின்ற அந்த மக்களை கனடா அரசு
ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. ஆனாலும் அதற்கான பயணச்
செலவு மற்றும் அங்கு நிலம் வாங்க பணம் இல்லாமல் அந்த
மக்கள் வாடினர். இதை பார்த்து கலங்கிய டால்ஸ்டாய்,
அவர்களுக்கு உதவவே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

‘புத்துயிர்ப்பு’ நாவல் பலமுறை திருத்தப்பட்டு, பல்வேறு
குளறுபடிகளோடு வெளிவந்தது. டால்ஸ்டாயின் ‘டச்’ இதில்
இல்லை என்று எல்ேலாரும் புலம்பினர்.

ஆனால் இதில் கிடைத்த ராயல்டி தொகை டுகொபார்ஸ்
மக்களின் வாழ்வில் ஒளியேற்றியது. டால்ஸ்டாயின் நோக்கம்
நிறைவேறியது. அந்த மக்கள் வெற்றிகரமாக கனடாவில்
குடியேறினர்.

இதற்கு நன்றிக்கடனாக அவர்கள் தங்களை
‘டால்ஸ்டாய் டுகொபார்ஸ்’ என்றே இன்றும் அழைத்து
கொள்கின்றனர். அவருக்கு ஊரெங்கும் சிலை எழுப்பி போற்றி
வருகின்றனர்.


இவ்வாறு சிறந்த மனிதர், சிறந்த படைப்பாளி என உன்னத
வாழ்க்கை வாழ்ந்த டால்ஸ்டாய் 1910ம் ஆண்டு நவம்பர்
20ல் தனது 82வது வயதில் காலமானார்.

அவரது மரணம் ரகசியம் நிறைந்ததாக கருதப்படுகிறது.
இருக்கும் பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு வாரி வழங்கியதை
அவரது மனைவி கண்டித்ததாகவும், இதனால் ஏற்பட்ட
பிரச்சனையில் டால்ஸ்டாய் வீட்டைவிட்டு வெளியேறி உடல்
நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர் எப்படி இறந்திருந்தாலும் அவரது எழுத்து உலகம்
உள்ளவரை வாழும் என்பதே நிதர்சனம். அடுத்தவர் மீது நாம்
செலுத்தும் அன்பே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக
இருக்கும்.
-
----------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Empty Re: இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்

Post by Guest Mon Sep 09, 2019 8:24 pm

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் 1571444738

யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ, மதிப்பு மிக்கவர் என்றோ, அறிவானவர் என்றோ, அழகானவர் என்றோ உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம். இந்த பூமியில் ஒவ்வொரு மனுஷனுமே சிறப்புக்கு உரியவர் தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே. வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வேர்வை சொட்ட நிலத்தில் உழைத்து களைப்பவர்கள் (ஆண் பெண்) யாவருக்கும், எல்லோருக்கும் உள்ளதைப் போல், சுயமரியாதை,கோபம், வலி, மகிழ்ச்சி, பசி, உறக்கம், இழிசொல்லின் வலி, புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு.மேற்குறிப்பிட்ட இவர்களை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை., சொல்லால் , பார்வையால், செயலால், புறக்கணிப்பால் நம்பிக்கை துரோகத்தால், ஏளனச் சிரிப்பால் நெட்டித் தள்ளி வதை செய்து விடாதீர்கள்.

உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள். டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா..? என்று கேட்டாள். அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார். மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறி விட்டுக் கிளம்பினாள். அதைக் கேட்ட டால்ஸ்டாய்,
'உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று’ என்றார். அதற்கு அந்தச் சிறுமி, நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் மேரியுடன் விளையாடினேன் என்று’ என்றாள். உலகப் புகழ் பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்கு அவர் வெட்கப்பட்டார்.. ஆம்.,நண்பர்களே... மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம் தான். உயர்ந்தவர், தாழ்ந்தவர்,படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற நிலை மாற வேண்டும்.. சமத்துவம் நிலவ வேண்டும் என்றால் மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதை நம்மிடம் இருந்து தொடங்குவோம். இனி ஒரு உலகம் அமைப்போம். சக மனிதர்களை மதிப்போம். மனிதனாக வாழ்வோம்!

(இணையம்)
avatar
Guest
Guest


Back to top Go down

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Empty Re: இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum