Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு
Page 1 of 1
மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு
-
தேனி,
தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம்
ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள
அம்பரப்பர் மலையில் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ
ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்திய அணுசக்தி
ஆணையமும், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்
துறையும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது.
நியூட்ரினோ ஆய்வில் வெற்றி பெற்றால் பிரபஞ்சம் எப்படி
உருவானது? என்பதை கண்டறிய வாய்ப்பு இருப்பதாகவும்,
எக்ஸ்ரேயை விட ஆயிரம் மடங்கு பயனை பெற முடியும்
என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமி அதிர்ச்சி,
எரிமலை உருவாதல், சுனாமி போன்ற நிகழ்வுகளை
முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அதற்கு இந்த ஆராய்ச்சி பலன் அளிக்கும் என்பதும்
விஞ்ஞானிகளின் கருத்து.
எதிர்ப்பு
அதே நேரத்தில் இந்த திட்டத்துக்கு விவசாயிகள், இயற்கை
ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் போது சுற்றுச்சூழல்
பாதிப்பு ஏற்படும் என்றும், விளை நிலங்கள் பாதிக்கப்படும்
என்றெல்லாம் கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர்.
பசுமைத் தீர்ப்பாயம் இந்த திட்டத்துக்கு மத்திய வனம் மற்றும்
சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்து
2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த
ஆய்வு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் உறுதி
அளித்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு
மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,
‘நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
அளித்துள்ளது. இந்த ஆய்வகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த
பாதிப்பும் ஏற்படாது. எந்த கதிர்வீச்சு அபாயமும் ஏற்படாது’
என்று கூறியுள்ளார்.
போராட்டம்
இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாயிகள்
வலியுறுத்தி வரும் நிலையில், இதை செயல்படுத்த மத்திய
அரசு உறுதியாக உள்ளது. இது விவசாயிகள் மத்தியில்
கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில்
ஈடுபட போவதாக தேனி மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள்
அறிவித்துள்ளனர்.
-
-----------------------------
தினத்தந்தி
Re: மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு
மாநில அரசுடன் கலந்து பேசாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு
மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது; நாராயணசாமி குற்றச்சாட்டு
-
-
புதுச்சேரி,
புதுவை-காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வருகிற 16-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார பயணம் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சி சோனாம்பாளையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பிரசார பயணத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்து புதுவை மாநில அரசுடன் கலந்து பேசாமல் புதுவை, காரைக்காலில் 112 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அகழ்வாராய்ச்சி நடத்த வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக புதுவை அரசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து நான் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கும் புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளேன்.
ஆனால் மத்திய அரசிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த விதமான பதிலும் வரவில்லை. புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கடல் பகுதியின் செயல்படுத்தும்போது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். நிலப்பகுதியில் செயல்படுத்தும் போது விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே இந்த திட்டத்தை கைவிடக்கோரி மாநில மக்களின் எதிர்ப்பை காட்டும் வகையில் வருகிற 16-ந் தேதி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பிரச்சினை எழுப்பினர். அப்போது புதுவை மாநிலத்தில் மக்கள் நலனை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் மாநில அரசு அனுமதி வழங்காது என்று நான் உறுதி அளித்தேன். ஆனால் தற்போது அந்த திட்டத்தை மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த திட்டத்திற்கு எதிராக எந்த விதமான போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தயாராக உள்ளோம். எனவே மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். நான் டெல்லி சென்றபோது மத்திய பெட்ரோலிய துறை மந்திரியை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். ஆனால் நேரம் ஒதுக்கி தரவில்லை. எனவே அவரை சந்திக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தினத்தந்தி
மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது; நாராயணசாமி குற்றச்சாட்டு
-
-
புதுச்சேரி,
புதுவை-காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வருகிற 16-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார பயணம் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சி சோனாம்பாளையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பிரசார பயணத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்து புதுவை மாநில அரசுடன் கலந்து பேசாமல் புதுவை, காரைக்காலில் 112 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அகழ்வாராய்ச்சி நடத்த வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக புதுவை அரசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து நான் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கும் புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளேன்.
ஆனால் மத்திய அரசிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த விதமான பதிலும் வரவில்லை. புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கடல் பகுதியின் செயல்படுத்தும்போது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். நிலப்பகுதியில் செயல்படுத்தும் போது விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே இந்த திட்டத்தை கைவிடக்கோரி மாநில மக்களின் எதிர்ப்பை காட்டும் வகையில் வருகிற 16-ந் தேதி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பிரச்சினை எழுப்பினர். அப்போது புதுவை மாநிலத்தில் மக்கள் நலனை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் மாநில அரசு அனுமதி வழங்காது என்று நான் உறுதி அளித்தேன். ஆனால் தற்போது அந்த திட்டத்தை மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த திட்டத்திற்கு எதிராக எந்த விதமான போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தயாராக உள்ளோம். எனவே மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். நான் டெல்லி சென்றபோது மத்திய பெட்ரோலிய துறை மந்திரியை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். ஆனால் நேரம் ஒதுக்கி தரவில்லை. எனவே அவரை சந்திக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தினத்தந்தி
Re: மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு
எதிர்ப்பது மட்டும் எதிர்க்கட்சி அல்ல.நல்லதை ஆதரிக்க வேண்டும்.
ஆனால்...............
ஹைட்ரொகார்பன், ஆயில் கழிவுகளால் பாழடைந்த நைஜீரிய டெல்டா ஆற்றுப் படுக்கைகளை/பகுதிகளை துப்பரவு செய்ய 30-40 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள் மீண்டும் பயன்படும் நிலமாக மாறுமா என ஐயம் தெரிவிக்கிறார்கள்.ஆயில் ஆய்வுகளை நடத்தி முடித்துவிட்டு சத்தமில்லாமல் வெளியேறிய Shell நிறுவனம்.
(UN/ Amnesty)
ஒவ்வொரு வினாடியும் நமது உடலை கோடிக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் முத்தமிட்டு செல்கின்றன. அவற்றால் பாதிப்போ அல்லது ரேடியோ ஆக்டிவோ கிடையாது.
ஆனால் நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இயற்கை வளங்கள் அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
Guest- Guest
Similar topics
» இலவச லேப்டாப் திட்டத்துக்கு மத்திய அரசு 1 ரூவா கூட தரலை: ஜெ
» தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..!
» சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் தகவல்
» அன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு
» 'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி?
» தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..!
» சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் தகவல்
» அன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு
» 'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|