ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி)

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Empty ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி)

Post by ayyasamy ram Fri Jul 05, 2019 7:26 pm

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Photo-1524024973431-2ad916746881
-


வீட்டில் இருக்கும் குட்டி ஆடு ஒரு
சுட்டி ஆடாகவே இருக்கும் !
மழையில் அது நனைந்தாலும்
சிலிர்த்து குதிக்கும் மகிழ்ச்சியில் !

ஆட்டுக்கு தெரியும் மழை அதை
நனைக்குமே தவிர சிதைக்காது ஒருபோதும்
என்று ...! மழை ஒரு ஓநாயும் அல்ல
ஆட்டுக் குட்டியை தனக்கு இரையாக்க !

ஆனால் எத்தனை எத்தனை ஓநாய்கள்
மனித வடிவில் நம் வீட்டு செல்லக்
குட்டிகளை ,பச்சிளம் பிஞ்சுகளை ,
குறி வைத்துக் குதற !

எத்தனை நாளைக்கு நாம் பொறுத்துக்
கொள்வது இந்த குரூர செயலை ?
நம் வீட்டு ஆட்டுக்குட்டிக்குத் தெரியும்
நாய் எது ஓநாய் எது என்று !

நம்ம வீட்டு செல்லக்குட்டிக்கு மட்டும்
அல்ல ...நமக்கே தெரிவதில்லையே
மனித வடிவில் மிருகம் யார் நம்
அருகில் என்று ?
-
-------------------------

- K .நடராஜன்
கவிதைமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Empty Re: ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி)

Post by ayyasamy ram Fri Jul 05, 2019 7:27 pm

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Lamb-in-the-rain-tracy-saunders
---
பதுங்கு குழிகளா..? சவக்குழிகளா...? என்கிற அளவில்
அளவில்லாமல் அள்ளப்பட்டிருந்த மணல் ஆற்றினைப்
பக்குவமாய் கடந்து ஆடுகளை மேய்த்திருந்தேன் -
அக்கறையில் உள்ள மேய்ச்சல் நிலத்தினில்......

உச்சி வெயில்தனில் - இளைப்பாரவும் உணவருந்தவும்
இருந்த மரங்கள்யாவும்  ஏழ்மைக்கு விலைபோயிருந்தன -
வரவேண்டிய மழையும் - புதுவாகன ஓட்டிப்போல்
இடக்கரம் கைபோட்டு வலக்கரம் திரும்பிவிடுகிறது...

மாலையில் - தீடீரென மேகங்கள் சூழ்ந்ததால் -
மேய்த்த ஆடுகளோடு இல்லம் திரும்பினேன் -
இல்லமடைந்த பிறகு - ஆட்டுக்குட்டி ஒன்றுக்காணாமல் -
வந்தவழியிலும் - மணலெடுத்த குழிகளிலும் தேடிச்சென்றேன்...

அப்பொழுதுவந்த தீடீர்மழையானது  -ஆற்றினை நனைக்காமல்
'ஆட்டிக்குட்டியை நனைத்த மழை'யாகவே இருந்தது...
குழியிலகப்பட்ட ஆட்டினை மீட்டெடுத்துவிட்டேன் - ஆனால்
இன்றுவரையிலும் மீட்கமுடியவில்லை  என் ஆற்றினை...!!!

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை


Last edited by ayyasamy ram on Fri Jul 05, 2019 7:34 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Empty Re: ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி)

Post by ayyasamy ram Fri Jul 05, 2019 7:27 pm


**
"மழையே" என் "மழையே"
ஒவ்வொரு துளிகளும் என் "உயிரே"
நனைந்தேன் நான் நனைந்தேன்!
மழை வரும் போதெல்லாம் நான் நனைந்தேன்!

மழையே என் மழையே
ஏன் நனைத்தாய் என் ஆட்டுக்குட்டியை -
எங்களின் வறுமை வாசலைத் திறக்கிறாயா!
ஆட்டுக் கொட்டகை ஓட்டை என்று!!

வாடினேன்! நான் வாடினேன்!
என் ஆட்டுக்குட்டி வாடுகையில்!
இச்சிறு மழையிலே உணர்ந்தேன் மழையால்
ஒரு ஜீவன் நடு நடுங்கயைிலே!
இறைவா கொடுத்திடு நீ கொடுத்திடு
உலக ஜீவன்களுக்கு
எதையும் அளவாய்.......

- செந்தில் குமார்.மு. ஓமன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Empty Re: ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி)

Post by ayyasamy ram Fri Jul 05, 2019 7:28 pm


மரகத புற்பரப்பில்
மணிக்கழுத்தை கவிழ்த்தபடி
ஆழ்ந்த மேய்ச்சலில்
மூழ்கிய அச்செம்மறியை!

நீல் வானின்
நிரமற்ற நீர்த்துளிகள்
ஆட்டுக்குட்டியின்
ரோம வயல்களில்
தூங்கி வழிந்த
வெண்ணிற மயிர்களை
சொட்டு சொட்டாய்
தட்டித் தட்டி எழுப்புகின்றன !

தூக்கம் களைந்த
வெள்ளை மயிர்கள்
சிங்கப் பிடரியாய்
சிலிர்த்தபடி,
கூதைக் காற்றில்
கூண்குருகி
நிச்சலமாய் நிற்கும்
அக்குட்டிக்கு
பாவமென்று போர்வைதனை
போத்திவிட்டுச் சென்ற
அந்த பேகன் யாரோ ?

அந்த அழகு செம்மறியை
நனைக்காத ஒவ்வொரு
மழைத்துளிகளும்
சபிக்கப்பட்டவைகள் !

-அம்பேத் ஜோசப்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Empty Re: ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி)

Post by ayyasamy ram Fri Jul 05, 2019 7:28 pm


வாடும் பயிர்கள்
நாடி நிற்கும் பருவமழைக்காக
நாளும் தாகம் தணிக்க
தேடி அலையும் விலங்குகள்
நாடுவதோ தண்ணீர்!

மாட்டுக் கொட்டிலில்
மயங்கி சோர்ந்து நின்றது
வெயிலின் கொடுமையில்
வெள்ளை ஆட்டுக்குட்டி!

அது விரும்பியது குளுமை
அங்கு வீசியது வெம்மை
ஆட்டுக்குட்டி ஏங்கியது
சொட்டுபோடும் மழைக்காக!

இடிமுழக்கம் காணும்
கோடைமழை கண்டு
ஆட்டுக்குட்டி துள்ளி ஓடி
மழைநீரில் நனைந்தது!

குடத்துடன் அலையும் மக்கள்
தாகம் தணிக்கும்
கோடைமழை கண்டு
குதுகூலம் கொள்வர்!

மழைத்துளிகள் கண்டபின்
குளுமை தேடி
கொடைக்கானல் ஊட்டி
மக்கள் அலையமாட்டார் !

குமுறும் கோடைமழை
வியர்வைத்துளிகளை
விரைவில் நலமுடன்
துடைக்கும் மழைத்துளிகள்!

- கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Empty Re: ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி)

Post by ayyasamy ram Fri Jul 05, 2019 7:29 pm


**

விரைந்தோடும் கருவுற்ற கார்முகில்கள்
காதலி(மரங்கள்) இல்லா வெற்றிடம் கண்டு
நெஞ்சம் குமுறி சிந்திய கண்ணீர்த் துளிகளே
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை !!

மழை பொய்த்து போக - மண் வறண்டு
சோலைவனங்களும் பாலைவனங்களாக
வெப்ப சலனத்தால் பெய்த மழை
ஆட்டுக்குட்டியை மட்டுமே நனைத்து சென்றதே !

வஞ்சகமாய் வீசிய வலையில் சிக்குண்ட நாம்
நஞ்சென தெரிந்தும் பெப்சி கோக்குக்கு அடிமையாக,
ஆழ்துளைக் கேணிகள் தரணியை ஆட்கொள்ள
நிலத்தடி நீர் வற்றி போனதே !

மண் குளிர் பொழியவும் மறந்ததே மழை !
பொய்த்த மழையும் தூவானமாக,
ஆட்டுக்குட்டியை நனைத்த மழையானதே !

- தனலட்சுமி பரமசிவம்

**
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Empty Re: ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி)

Post by ayyasamy ram Fri Jul 05, 2019 7:30 pm



கருவறையில் தண்ணீர் குடத்தில்
என்னை பொத்தி வைத்தாள்,
பின்பு மார்பிலே கட்டி அணைத்தாள் ,

வளரும் பொழுது தன் கட்டுப்பாட்டுக்குள்
ஒரு ஆட்டுக்குட்டியாய் அணைத்து வைத்தாள்!

பருவ வயதில் என்னை என் போக்கில் விடு
நான் துள்ளி ஓடியபொழுது ,
வாழ்க்கையின் சுக துக்கம், நல்லது கேட்டது
என்னை தாக்கியது!

உணர்ந்தேன்,
இந்த ஆட்டுக்குட்டியையும் நனைத்தது மழை என!
அம்மாவின் ஆரவணைப்புக்கு ஏங்கினேன், மீண்டும்!!
-
------------------
- ப்ரியா ஸ்ரீதர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Empty Re: ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி)

Post by ayyasamy ram Fri Jul 05, 2019 7:30 pm



வாட்டும் வெயிலில் வதைந்தாலும் வரிந்தே புல்லைத் தான்மேயும் !
கூட்டும் கொடுமை என்றாலும் கூட்டுக் குள்ளே அடங்காது !
நோட்டம் விட்டே ஓடோடும் நொடியும் எங்கும் தங்காது !
ஆட்டுக் கூட்டம் அதனோடே அழகுக் குட்டி பலஓடும் !

அங்கும் இங்கும் கூட்டத்தில் அழகாய் ஓடி முந்திவரும் !
தொங்கும் மரத்தில் செடிகொடியில் துணிவாய் நின்றே தழைதின்னும் !
எங்கே பசுமை என்றேதான் எங்கும் ஓடி ஏமாறும் !
தங்க நிழலும் இல்லாமல் தவித்தே கத்தித் தடுமாறும் !

தண்ணீர் இன்றி ஊரெல்லாம் தவியாய்த் தானே தவிக்கிறது !
கண்ணீர் விட்டு மக்களுமே கலங்கி வானம் பார்க்கின்றார் !
கண்ணில் காணும் குளம்குட்டை காண வில்லை காய்ந்தெங்கும் !
மண்ணில் தண்ணீர் இல்லாமல் மாயும் உயிர்கள் கணக்கில்லை !

மண்ணில் உயிர்கள் படும்பாட்டை மனதில் எண்ணித் தான்வதைந்தே
கண்ணீர் விட்டு வானம்தான் கதறி மழையாய்ப் பெருகிற்றே !
அன்பு ஆட்டுக் குட்டியதும் அடடா மழையில் நனைந்தோடி
இன்பத் தோடு குதிக்கிறதே இனிதே குளித்து சிலிர்க்கிறதே !

- ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Empty Re: ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி)

Post by ayyasamy ram Fri Jul 05, 2019 7:31 pm


**

பூக்களின் கீழிருந்த காம்பினையும்,
மீசைக்குக் கீழிருந்த உதடுகளையும்,
கைகளால் குடைபிடிக்கப்பட்ட நெற்றியையும்,
சேலை முந்தானையால் மறைக்கப்பட்ட குழந்தையையும்,

நெகிழிப்பையால் மூடப்பட்ட இட்லிகளையும்,
குடைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த குண்டுமல்லியையும்,
மாடத்தில் எரிந்து கொண்டிருந்த நெய் விளக்கையும்,
தொப்பையின் நிழலில் ஒளிந்திருந்த கட்டை விரலையும்,

நனைக்காமலே போய் விட்டது
வா, வா, என்றழைத்த ஏழை
விவசாயியின் வேண்டுகோளை விலக்கியும்
வராதே, வராதே என்று வேண்டிக்கொண்ட
தெரு வியாபாரிகளின் வேண்டுதலை ஏற்றும்
வராமலே நின்று விட்டது
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை

- மகாலிங்கம் இரெத்தினவேலு, அவனியாபுரம்

**
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Empty Re: ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி)

Post by ayyasamy ram Fri Jul 05, 2019 7:31 pm

**

வெண்ணிற மயிர் சிலுப்பி
வெளிவந்த செம்மறிக்குட்டி
பச்சை வனாந்தரத்தில்
அங்குமிங்கும் திரிந்து மேய்கையில்!

செவ்வரக்கு வானம்
மெல்ல களைந்தோடி
கார்குழலின் இருளைவாங்கி
மேனி முழுதும் தடவிக்கொண்டன
நீர்க் கொப்பளங்கள் !

கொப்பளங்களுக்குள் இருக்கும்
நீர் மூட்டைகளின் முடிச்சு
மெல்ல அவிழ்கையில்
நுனிப்புல்லை கீறிமேயும்
அக்குட்டியும்,
புற்களை போத்திய
அந்த பச்சைக்காணியும்
தலை குளிக்கையில் !

அங்கே ! விழுந்து விழுந்து
உயிர் விடும், ஒவ்வொரு
மழைத்துளியையும் கண்டு
மெல்ல மெல்ல வெளிவருகின்றன
ஆட்டுக்குள் ஒளிந்திருந்த குளிரும் !
காட்டுக்குள் ஒளிந்திருந்த தளிரும் !

- அம்பேத் ஜோசப்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Empty Re: ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum