ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமலை திருப்பதி ஏழுமலையான் பற்றிய வியப்பூட்டும் விந்தைச் செய்திகள் !

Go down

திருமலை திருப்பதி ஏழுமலையான் பற்றிய வியப்பூட்டும் விந்தைச் செய்திகள் ! Empty திருமலை திருப்பதி ஏழுமலையான் பற்றிய வியப்பூட்டும் விந்தைச் செய்திகள் !

Post by ayyasamy ram Sun 30 Jun 2019 - 13:30

திருமலை திருப்பதி ஏழுமலையான் பற்றிய வியப்பூட்டும் விந்தைச் செய்திகள் ! 227_13081
-
தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்
பட்டிருக்கும். எங்காவது ஓரிடத்திலாவது சிற்பியின் உளி
பட்ட இடம் தெரியும்.

ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும்
வெங்கடாசலபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல!
சிலையில் வடிக்கப்பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள்,
புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட
நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இதை
வகுளாதேவியின் (கிருஷ்ணாவதாரத்தில் வரும் யசோதாதான்
அவர்) மேற்பார்வையிலேயே பெருமாளுக்குரிய நைவேத்தியங்கள்
தயாராவதாக ஐதீகம்.

இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், வடை, முறுக்கு,
ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயசம், தோசை, ரவாகேசரி,
பாதாம் கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும்
தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று, திருப்பதி
என்றாலே லட்டு, லட்டு என்றாலே திருப்பதி என்றாகி விட்டது.

ஏழுமலையானுக்கு நைவேத்தியமாக பல விதமான உணவு
வகைகள் தயாரிக்கப்பட்டாலும் ஒருபுதிய மண்சட்டியிலே
தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்துக்கு
முன்னுள்ள குலசேகரப்படியைத் தாண்டுவதில்லை.

இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை
வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.
-
--------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82810
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருமலை திருப்பதி ஏழுமலையான் பற்றிய வியப்பூட்டும் விந்தைச் செய்திகள் ! Empty Re: திருமலை திருப்பதி ஏழுமலையான் பற்றிய வியப்பூட்டும் விந்தைச் செய்திகள் !

Post by ayyasamy ram Sun 30 Jun 2019 - 13:32

திருமலை திருப்பதி ஏழுமலையான் பற்றிய வியப்பூட்டும் விந்தைச் செய்திகள் ! 224_13249
-
திருமலை திருப்பதி ஏழுமலையான் பற்றிய வியப்பூட்டும் விந்தைச் செய்திகள் ! 204_13020
---
பெருமாள் அணிந்துகொள்ளும் உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத்
தயாரிக்கப்படுகிறது. பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய
ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த தேவஸ்தான
அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் செலுத்த
வேண்டும்.

இந்த ஆடைக்கு 'மேல்சாத்து வஸ்திரம்' என்று பெயர்.
வெள்ளிக்கிழமை மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம்
செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த சில வேளைகளில் ஆண்டுக்
கணக்கில்கூட காத்திருப்பார்கள்.

பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம்
சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை
பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

திருப்பதி ஆலயத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில்
'சிலாதோரணம்' என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே
இந்தப் பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன.இந்தப் பாறைகளின்
வயது 250 கோடி வருடம் என்று சொல்கிறார்கள்.

ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே
விதமானவை.

ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம்
சாத்துகின்றார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு ரசாயனம்.
அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த ரசாயனத்தை
சாதாரணக் கருங்கல்லில் தடவினால், கருங்கல் வெடித்துவிடும்.

ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால்
அந்தப்பறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான் திருவுருவச்
சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்
வெடிப்பு ஏற்படுவதில்லை.

அபிஷேகத்துக்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ,
நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சீனாவிலிருந்து புனுகு, பாரிஸ்
நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விலை
உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில்
சந்தனத்தோடு கரைக்கப்பட்டு பால் அபிஷேகம் செய்யப்படும்.

பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும். ஐரோப்பாவில் உள்ள
ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள்,
திருப்பதிக்கு விமானத்தில் வருகின்றன.


Last edited by ayyasamy ram on Sun 30 Jun 2019 - 13:35; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82810
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருமலை திருப்பதி ஏழுமலையான் பற்றிய வியப்பூட்டும் விந்தைச் செய்திகள் ! Empty Re: திருமலை திருப்பதி ஏழுமலையான் பற்றிய வியப்பூட்டும் விந்தைச் செய்திகள் !

Post by ayyasamy ram Sun 30 Jun 2019 - 13:34

திருமலை திருப்பதி ஏழுமலையான் பற்றிய வியப்பூட்டும் விந்தைச் செய்திகள் ! 15_13381

ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை.
இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை.
சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ.
கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும்
கிடையாது.

திருமலையில் வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜென்மாஷ்டமி
போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் ரதசப்தமி
(மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா மிகவும் விசேஷமானது.

இந்த சமயத்தில் 7 வாகனங்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு
நான்கு மாடவீதிகளில் தேரில் எடுத்துச் செல்லப்படுகிறார்.
பக்தர்களுக்கு காண கிடைக்காத காட்சியாகும்

எல்லாவற்றையும் விட ஆண்டுதோறும் நடைபெறும்
பிரம்மோத்ஸவ விழா மிகவும் முக்கியமான விழாவாகக்
கருதப்படுகின்றது. பிரம்மனே இங்கு வந்து முன்னின்று இந்த
உற்சவத்தை நடத்துவதாக ஐதீகம்.

இந்த உற்சவத்தின் போது திருமலை வண்ண வண்ண
விளக்குகளால் அலங்காரத்துடன் சுவாமி சேவை சாதிக்கிறார்.
இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் 10 முதல் 15 லட்சம் பக்தர்கள்
திருமலைக்கு வந்து குவிகின்றனர். இங்கு புரட்டாசி மாதம்
நடைபெறும் பிரம்மோத்ஸவம் காணக்கிடைப்பதரிது.

இந்த விழாவில் கலந்துகொண்டு வேங்கடவனைச்
சேவிப்பவர்களின் சகல பாவங்களும் தொலைகின்றன என்பது
பக்தர்களின் நம்பிக்கை.
-
--------------------------------

-எஸ்.கதிரேசன்.
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82810
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருமலை திருப்பதி ஏழுமலையான் பற்றிய வியப்பூட்டும் விந்தைச் செய்திகள் ! Empty Re: திருமலை திருப்பதி ஏழுமலையான் பற்றிய வியப்பூட்டும் விந்தைச் செய்திகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருமலை திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?
» யானைகளை பற்றிய சில வியப்பூட்டும் செய்திகள்
» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
» குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு?
»  திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலை - சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum