ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..

Go down

அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்.. Empty அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..

Post by ayyasamy ram Sat Jun 15, 2019 2:16 pm

அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்.. Shriathivaragar
-
40 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதரின் தரிசனம் தொடர்பான செய்திகள் வெளிவந்தபோது இது குறித்துத் தெரியாத பலருக்கும் அவரைத் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. இதனால் வரும் ஜூலை முதல் தேதியில் இருந்து ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை அனைவரின் சிந்தனைகளும் அத்திவரதரை நோக்கியே இருக்கும். அனைத்துச் சாலைகளும் காஞ்சிபுரம் நோக்கியே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

சென்னை: உலக நாடுகளில் இந்தியாவுக்கென உள்ள மிகப் பெரிய பெருமை ஆன்மிகம்தான். அந்த வகையில் நமது நாட்டின் வட, தென் திசைகளில் நடைபெறும் கும்பமேளாக்கள் அனைவரின் கவனத்தையும் கவருகின்றன. ஒவ்வொரு முறையும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் இவ்விழாக்களில் பங்கேற்கின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தின் தனிப்பெரும் சிறப்புக் கொண்ட ஆன்மிகத் தலமான காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதரை தரிசிப்பதற்கான வாய்ப்பு ஆன்மிக அன்பர்களுக்கு இந்த ஆண்டு கிடைக்க உள்ளது.

காஞ்சிபுரத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலின் ராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவராக வரதராஜப்பெருமாளும் பெருந்தேவி தாயாரும் உள்ளனர். கோயில் தீர்த்தங்களாக வேகவதி ஆறு, அனந்தசரஸ் குளம் ஆகியவை விளங்குகின்றன. காஞ்சிபுரத்தின் தெற்கே அமைந்துள்ள இக்கோயிலில் ஐராவதம் யானையே மலைவடிவம் கொண்டு நாராயணனைத் தாங்கி நின்றதால் இத்தலம் அத்திகிரி என்றும் அழைக்கப்படுகிறது. தங்கப்பல்லி, வெள்ளிப் பல்லி தரிசனம் இக்கோயிலின் மற்றொரு சிறப்பு.

இக்கோயிலின் மிகச்சிறப்பாகப் போற்றப்படுவது அனந்தசரஸ் திருக்குளத்தின் உள்ளே வீற்றிருக்கும் ஆதி அத்தி வரதர். இவரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க முடியும். திருக்குளத்தின் உள்ளே தன்னை மறைத்துக் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஆதி அத்திவரதர் 40 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.

இந்த அற்புத நிகழ்வுக்காகக் கடந்த இரு மாதங்களாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் ஆன்மிக அமைப்புகளும், தன்னார்வ அமைப்புகளும் இணைந்து தீவிர ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகின்றன.

அனந்த சரஸ் குளத்தில் உள்ள நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு அருகே உள்ள பொற்றாமரைக்குளத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. குளத்தில் துள்ளிக் கொண்டிருந்த மீன்களும் பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டு பொற்றாமரைக்குளத்தில் விடப்பட்டுள்ளன.

40 ஆண்டுகளுக்குப் பின் பக்தர்களுக்குக் காட்சியளிக்க உள்ள அத்தி வரதர், வரும் ஜூலை முதல் தேதியில் இருந்து ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை சயனக்கோலம் மற்றும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க உள்ளார்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காட்சிதரும் இந்த நிகழ்வுக்காக உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் காஞ்சிபுரத்தை நோக்கிப் படையெடுக்கத் தயாராகி வருகின்றனர்.

இதற்கு முன் கடந்த 1979-இல் இந்நிகழ்ச்சி நடைபெற்றபோது சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. அப்போதைய சூழ்நிலையை விட இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்பாடு பலமடங்கு அதிகரித்திருந்தாலும் பக்தர்கள் கூட்டமும் பல மடங்கு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்.. Empty Re: அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..

Post by ayyasamy ram Sat Jun 15, 2019 2:18 pm

அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்.. Shriathivaragarperumal
-
தங்கும் விடுதிகள்

காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகளில் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆக. 17-ஆம் தேதி வரை முன்பதிவு நிறைவடைந்துள்ளதாகத் தெரிகிறது. அத்திவரதரை நீருக்குள் இருந்து எடுக்கும் நிகழ்ச்சியிலும் அவரைத் தரிசிக்கும் நாள்களிலும் பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் வெளியூர் பக்தர்கள் பலர் முன்கூட்டியே முன்பதிவு செய்துவிட்டனர். தேவை அதிகரித்துவிட்டதால் கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

பஜனை கோஷ்டியினர்


பெருமாள் என்றவுடன் நம் அனைவருக்குமே நினைவுக்கு வருவது பஜனைக் குழுவினர்தான். பக்தர்களைக் கவர்ந்திழுக்கும் ராகம், தாளம் மற்றும் இசைக்கருவிகளுடன் ஒவ்வொரு நாளும் 100-க்கும் மேற்பட்ட பஜனைக்குழுவினர் பெருமாளின் பாடல்களை பாடத் தயாராகி வருகின்றனர்.

தற்காலிக பேருந்து நிலையங்கள்


பக்தர்களின் வசதிக்காக 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். ஒவ்வொரு பஸ் நிலையத்தில் இருந்தும் நகருக்குள் வந்து அத்திவரதரைத் தரிசனம் செய்யும் பக்தர்கள் மீண்டும் சிரமமின்றிச் செல்வதற்காக நகருக்குள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் பேருந்துகளை இயக்குவதற்காக சிறப்பு ஏற்பாடுகளை போக்குவரத்துத் துறையினருடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

இது தவிர குறிப்பிட்ட இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு ஆட்டோக்கள் மற்றும் வாடகைக் கார்களுக்கும் கட்டணம் நிர்ணயிக்கவும் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது.


தீவிர ஏற்பாடுகள்


40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் வைபவம் என்பதால் பல லட்சம் பக்தர்கள்   காஞ்சிபுரத்துக்கு வந்து செல்வார்கள் என்று மாவட்ட நிர்வாகம் கருதுகிறது. இதனால் பக்தர்கள் சிரமமின்றி அத்தி வரதரைத் தரிசித்துச் செல்லத் தேவையான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தீவிரமாகச் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை,  குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தேவையான பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருமண மண்டபங்கள்


காஞ்சிபுரம் நகரத்தில் சிறியதும் பெரியதுமாக சுமார் 75 திருமண மண்டபங்கள் உள்ளன. இதில் 55 மண்டபங்கள், உரிமையாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இம்மண்டபங்களில் சிலவற்றில் மட்டும் ஆனி மாதத்தில் திருமணங்கள் ஒரு சில நாள்கள் நடக்க உள்ளன. அவற்றைத் தவிர அனைத்து மண்டபங்களுமே அத்தி வரதர் உற்சவத்துக்காக பல்வேறு தரப்பினரால் 48 நாள்களுக்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக காஞ்சிபுரம் நகர திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கச் செயலர் எல்.கிஷோர் குமார் கூறுகையில், இதற்கு முன் 1979-இல் நடைபெற்ற அத்திவரதர் உற்சவத்தை நேரில் கண்டேன். இரண்டாவது முறையாகவும் இந்த ஆண்டு காண உள்ளேன். இது மிகப் பெரிய வரம்.

காஞ்சிபுரத்தைப் பொருத்தவரையில் எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 55 மண்டபங்களும் அத்திவரதர் விழாவுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதிலும் ஒரு சில மண்டபங்களில் ஏற்கெனவே முன்பதிவு செய்தபடி திருமணங்கள் நடைபெற உள்ளன.  ஜூலை 1 -ஆம் தேதி முதல் ஆக. 17-ஆம் தேதி வரை 48 நாள்களும் அனைத்து மண்டபங்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விமானங்களிலும்…


அனந்தசரஸ் குளத்து நீரில் தன்னை மறைத்துக் கொண்டுள்ள அத்திவரதரைக் காண்பதற்கு வெளிநாடுகளில் இருந்து வருவதற்காக பல ஆயிரக்கணக்கானவர்கள் விமானங்களில் முன்பதிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஜூலை 1 முதல் ஆக. 17-ஆம் தேதி வரை சென்னைக்கு வரும் விமானங்களில் பெரும்பாலும் அத்தி வரதரைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனராம்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum