ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம்

2 posters

Go down

 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Empty ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம்

Post by ayyasamy ram Thu May 09, 2019 1:54 pm


புது தில்லி:
ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்பதால் அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

குடியுரிமை விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் வரையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும்படி, தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து இந்த விவகாரத்தில் முடிவெடுக்க முடியாது என்று கருத்துக் கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், குடியுரிமை தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தது.

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ராகுல் காந்தி தொடர்பாக புகார் தெரிவித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், பிரிட்டனில் செயல்படும் பேக்காப்ஸ் நிறுவனத்தின் 3 இயக்குநர்களில் ராகுல் காந்தியும் ஒருவர். கடந்த 2003ம் ஆண்டு இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த 2005, 2006ம் ஆண்டுகளில் தாக்கல் செய்துள்ள வரவு செலவு அறிக்கைகளில், ராகுல் காந்தி 1970ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி பிறந்தார் என்றும், அவர் பிரிட்டன் பிரஜை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டிருந்தார்.

இதை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகம், குடியுரிமை விவகாரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள புகார் குறித்து 15 நாள்களுக்குள் பதிலளிக்கும்படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், குடியுரிமை விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் வரையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட ராகுலுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெய் பகவான் கோயல், சி.பி. தியாகி, வழக்குரைஞர் வருண் குமார் சின்ஹா ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புகார் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். ஆனால் பல ஆண்டுகள் ஆன பின்னரும், பிரிட்டன் குடியுரிமையை தாமாக முன்வந்து வாங்கிய ராகுல் காந்தி விவகாரம் மீது தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிருப்தியளிக்கிறது.

குடியுரிமை விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடமும், தேர்தல் ஆணையத்திடமும் அடிப்படை ஆதாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட ராகுலுக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும்.

பிரிட்டன் குடியுரிமை விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் வரையில், இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்தும் ராகுலின் பெயரை நீக்க வேண்டும் என்று அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது ஏதோ ஒரு காகிதத்தில் ராகுலின் பெயர் இருக்கிறது என்பதற்காக, இந்த விவகாரத்தில் முடிவெடுக்க முடியாது என்று கூறி, மனுக்களை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Empty Re: ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 10, 2019 11:34 am

சாதாரண குடிமகனுக்கு இதை எல்லாம் பார்ப்பார்கள்
இவருக்கு இது பொருந்தாது சரி தானே?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum