Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் எடையைக் குறைக்க குளிர்ந்த நீரில் குளிக்கிறேன்’ என்பார் தேவிகா!” – விஜயகுமாரி
Page 1 of 1
உடல் எடையைக் குறைக்க குளிர்ந்த நீரில் குளிக்கிறேன்’ என்பார் தேவிகா!” – விஜயகுமாரி
-
‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ பட வாய்ப்பை நான் தவறவிட்டதால்,
தேவிகா அதில் நாயகியாக நடித்தார். படம் பெரிய ஹிட்டானது.
தேவிகாவின் அற்புதமான நடிப்பைப் பார்த்து, `இந்த வாய்ப்பை
இழந்துவிட்டோமே’ என வருத்தப்பட்டிருக்கிறேன்.”
-
அழகும் நடிப்பும் ஒருங்கே அமைந்த நடிகை தேவிகா, கிளாஸிக்
கால ரசிகர்களை தன் நடிப்பால் மகிழ்வித்தவர்.
இவரின் நினைவு தினம் நேற்று
(மே 2). தேவிகாவின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்,
நடிகை விஜயகுமாரி.
“தமிழ் சினிமாவில் எங்கள் காலத்தில் நடித்த நடிகைகள்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அப்படித்தான்
தேவிகாவும். ஆந்திராவைச் சேர்ந்த தேவிகாவின் பெயர்
பிரமிளா.
நாங்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில்தான் சினிமாவில்
அறிமுகமானோம். தேவிகா அறிமுகமான முதல் தமிழ்ப் படம் `
முதலாளி’. அதில், என் கணவருக்கு (எஸ்.எஸ்.ராஜேந்திரன்)
ஜோடியாக நடித்திருப்பார். அப்போதுதான் எங்கள் நட்பும்
தொடங்கியது.
தேவிகா எல்லோருடனும் சகஜமாகப் பேசுவார்; பழகுவார்.
அவர் ஷூட்டிங் வரும்போது அவர் அம்மா அல்லது அக்கா
உடன் வருவார்கள். நாங்கள் இருவரும் `சாந்தி’ என்ற படத்தில்
மட்டும்தான் இணைந்து நடித்தோம்.
அப்போது ஷூட்டிங்கில், `நீங்கள் அருகில் இருந்தால் எனக்கு
நடிக்கக் கூச்சமாக இருக்கிறது’ என தேவிகா என்னிடம் சொன்னார்.
எனவே, அவர் கேட்டுக்கொண்டதுபோலவே, நான் தேவிகாவின்
நடிப்பைப் பார்க்காமல், திரும்பி உட்கார்ந்துகொண்டேன்.
Last edited by ayyasamy ram on Sat May 04, 2019 12:53 pm; edited 1 time in total
Re: உடல் எடையைக் குறைக்க குளிர்ந்த நீரில் குளிக்கிறேன்’ என்பார் தேவிகா!” – விஜயகுமாரி
-
நானும் என் கணவரும் மதிய உணவை, எங்கள் வீட்டிலிருந்து
வரவழைப்பதுதான் வழக்கம். அதுவும் எங்களுக்கு மட்டுமன்றி,
10 – 15 பேருக்குச் சேர்த்தேதான் உணவை வரவழைப்போம்.
அப்படி எங்கள் வீட்டுச் சாப்பாட்டை என்னுடன் தேவிகாவும்
இணைந்து சாப்பிடுவார். அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு
வருவார். நானும் தேவிகாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன்.
எங்கள் காலத்தில், சி.வி.ஸ்ரீதர் மிகப் பெரிய இயக்குநர்.
அவர் படங்களில் நடிக்க, பெரிய நடிகர்கள் பலரும் வாய்ப்புக்
கேட்டதுண்டு. அவர் இயக்கிய `நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில்
என்னைத்தான் நாயகியாக நடிக்க மிகவும் வலியுறுத்திக்
கேட்டார்.
அதற்கு என் கணவர் மறுத்துவிட்டார். அதற்கான காரணத்தை
என் கணவர் என்னிடம் சொல்லவில்லை. அப்போது என்
கணவர்தான் என் கால்ஷீட் விஷயங்களைக் கவனித்துக்
கொள்வார்.
நானும் என் கணவரிடம் காரணத்தைக் கேட்கவில்லை.
பிறகு, அப்படத்தில் நாயகியாக நடித்தார் தேவிகா.
படம் பெரிய ஹிட்டானது.
தேவிகா நடித்த அந்த அற்புதமான கதாபாத்திரத்தைப்
பார்த்து, `இந்த வாய்ப்பை இழந்துவிட்டோமே’ என
வருத்தப்பட்டிருக்கிறேன்.
------------
Re: உடல் எடையைக் குறைக்க குளிர்ந்த நீரில் குளிக்கிறேன்’ என்பார் தேவிகா!” – விஜயகுமாரி
-
என் கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, நான் எங்கள் மகனுடன் தனியாக வாழ்ந்துவந்த காலகட்டம். அப்போதும் எனக்கு மிகச் சிறப்பான கதாபாத்திரங்கள் வந்தன.
ஆனால், சில நிகழ்வுகளால் அந்த வாய்ப்புகளெல்லாம் என்னைவிட்டுப் போயின. அதற்கான காரணங்களைச் சொல்லி நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை.
அப்படி நான் நடிக்க வேண்டிய பெரும்பாலான படங்களில், தேவிகாதான் நாயகியாக மிகச் சிறப்பாக நடித்தார்” என்கிறார் விஜயகுமாரி.
தேவிகாவிடம் பார்த்து வியந்த அழகுக்கலை திறமை குறித்துப் பேசியவர், ”தேவிகா மிகவும் அழகாகயிருப்பார். அவருக்கு அழகுக் கலை மற்றும் சிகை அலங்காரத்தில் இயல்பாகவே அதிக ஆர்வமும் திறமையும் இருந்தன.
எங்கள் காலத்தில் ஒவ்வொரு நடிகருக்கும் தனிப்பட்ட முறையில் மேக்கப் ஆர்டிஸ்ட் இருக்க மாட்டார்கள். சினிமா கம்பெனிக்கு என மேக்கப் ஆர்டிஸ்ட் இருந்தாலும், எங்களுக்கான மேக்கப் விஷயத்தைப் பெரும்பாலும் நாங்களேதான் பார்த்துக்கொள்வோம்.
அப்படி தேவிகா மிகச் சிறப்பாகத் தன்னை அழகுபடுத்திக்கொள்வார். அதைப் பார்த்து, சக நடிகர்களே ஆச்சர்யப்படுவோம். தேவிகா சிறப்பாக நடித்து, தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார்.
நிறைய படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். ஆனால், ஷூட்டிங்குக்கு மட்டும் தாமதமாக வருவார். அதை அவர் சரிசெய்துகொண்டிருந்தால், இன்னும் அதிக புகழ் பெற்றிருப்பார்.
Re: உடல் எடையைக் குறைக்க குளிர்ந்த நீரில் குளிக்கிறேன்’ என்பார் தேவிகா!” – விஜயகுமாரி
-
நாங்கள் இருவரும் சினிமாவில் புகழுடன் இருந்தபோது அவ்வப்போது சந்தித்துக்கொள்வோம். அப்போதெல்லாம் அழகு, டயட் உள்ளிட்ட விஷயங்களைத்தான் அதிகம் பேசுவோம். அப்போது உடல் பருமன் பிரச்னையில் இருந்த தேவிகா, அது குறித்து என்னிடம் பேசுவார். ‘உடல் எடையைக் குறைக்க, குளிர்ச்சியான நீரில் குளிக்கிறேன்’ என்பார்.
நான் சிரித்தபடியே, `குளிர்ச்சியான நீரில் குளிப்பதால் உடல் எடை குறையாது, உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்’ என்பேன். நான் எல்லா கலைஞர்களுடனும் ஒரே மாதிரிதான் பழகுவேன்.
பிறரின் பர்சனல் விஷயத்தில் தலையிட மாட்டேன். அதனால் அவரின் குடும்ப வாழ்க்கை பற்றி எனக்குப் பெரிதாகத் தெரியாது.
1970-களின் இறுதியில் தேவிகா சினிமாவில் நடிக்காமலிருந்தார். பிறகு, அவர் மகள் கனகா நடிக்க ஆரம்பித்து, புகழ்பெற்றார். அப்போது ஒரு கல்யாண நிகழ்ச்சியில் தேவிகாவைச் சந்தித்தேன். அருகிலிருந்த கனகாவை எனக்கு அறிமுகப்படுத்தினார் தேவிகா. கனகா என்னிடம் ஆசீர்வாதம் வாங்கினார்.
அப்போதிலிருந்து கனகாவுடனும் எனக்கு நட்பு இருந்தது. தேவிகா இறந்த சமயத்தில் நான் வெளியூரிலிருந்தேன். அவரின் திடீர் மறைவால் மிகவும் வருந்தினேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை கனகாவைச் சந்தித்தேன்.
அப்போது மிகவும் அன்புடன் பேசிய கனகா, அவர் அம்மா தேவிகாவைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசினார்” என்று நினைவுகளை அசைபோடுகிறார் விஜயகுமாரி.
கு.ஆனந்தராஜ்—–நன்றி-விகடன்
Similar topics
» உடல் எடையைக் குறைக்க டிப்ஸ்
» உடல் எடையைக் குறைக்க டிப்ஸ்
» உடல் எடையைக் குறைக்க…! - மருத்துவ குறிப்புகள்
» உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்
» உடல் எடையைக் குறைக்க பச்சை பயறு
» உடல் எடையைக் குறைக்க டிப்ஸ்
» உடல் எடையைக் குறைக்க…! - மருத்துவ குறிப்புகள்
» உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்
» உடல் எடையைக் குறைக்க பச்சை பயறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|