ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாத நோய்

Go down

வாத நோய் Empty வாத நோய்

Post by சிவா Tue Mar 24, 2009 12:48 am

வாத நோய் என்றால் என்ன?

மனிதனுக்கு உடலில் பொதுவாக வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடிகள் உண்டு. நாடி பிடித்துப் பார்க் கும்போது வாத நாடி தன்னளவில் மிகுந்து காணப் பட்டால் அந்த நபருக்கு வாத நோய்கள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. இதை ஆங்கிலத்தில் ஆர்த்தரைடிஸ் என்பார்கள்.

வாத நோயில் பலவகை உண்டா? இதில் முக்கிய மானவை பற்றிக் கூறுங்களேன்?

வாத நோயில் 80 வகைகள் இருப்பதாக யூகி என்ற சித்தர் கூறியுள்ளார். இதில் முக்கியமானவை வாதகீல் வாயு, பித்த கீல் வாயு மற்றும்; பக்கவாதம். இதில் வாதக்கீல் வாயுவை ஆங்கிலத்தில் ருமாட்டிக் காய்ச்சல் என்பார்கள். இதன் அறிகுறிகள் தொண்டையில் வலி, மார்பு இரண்டு மூட்டுப் பொருத்து களில் வலி, கை, கால்கள் சிவந்து வீங்குதல், உடம்பில் ஒரு வகையான குடைச்சல், கை, கால்களை நீட்டவும், மடக்கவும், அசைக்கவும் முடியாத நிலை போன்ற அறிகுறிகள் தோன்றலாம். வீக்கத்திற்கேற்ப காய்ச்சல் கூட வரலாம். குத்தல், குடைச்சலினால் நோயாளி இரவில் தூக்கமின்றி தவிப்பார். இதில் பெரும்பான்மையான பாதிப்புகள் முழங்கால் மூட்டுக்கள், இடுப்புப் பொருத்துகள், மணிக்கட்டு மற்றும் முழங்கைகளில் உண்டாகலாம்.

வாத கீல் வாயு நோய்க்கு காரணம் என்ன?

இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களினால் இது வரலாம். குறிப்பாக 5 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களில் ஒரு வகையான கிருமிகள் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த வயதிற்குள் இதற்குத் தேவையான சிகிச்சை எடுத்துக் குணப்படுத்த வேண்டும். இல்லை யென்றால் இது வாழ்நாள் முழுவதும் தொடரும். 15 வயதிற்கு மேலும் இந்த பாதிப்பு இருந்தால் இதயத் தின் நிலையே மாறிப்போகும். சரியான இரத்த ஓட்டம் இருக்காது. படபடப்பு இருக்கும். படபடவென மார்பு துடிக்கும். பெருமூச்சு அடிக்கடி தன்னையும் அறியாமல் வியர்வை பெருக் கெடுக்கும். தவிர நாடி தளர்தல், அடிக்கடி மயக்கம், உடல்சோர்வு போன்ற அறிகுறிகளை தோன்றச் செய்யும். நேரங்களில் மலச்சிக்கல் இருக்கும். சிறுநீர் சரியாகப் பிரியாது. அப்படி சிறுநீர்ப்பிரிந்தாலும் மிகக் குறைந்த அளவில் சிவப்பு நிறத்தில் காணப்படும்.

ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் எனப்படும் பித்த கீல் வாயு எந்த வயதினரைப் பாதிக்கும்? இதற்கு காரணம் என்ன?

வயது ஆக ஆகத்தான் இந்த நோய்க்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. பொதுவாக ஆண், பெண் இரு பாலருக்கும் கால், மூட்டுகளில் சைனோவியல் என்ற திரவம் சுரக்கிறது. சைனோவியல் என்ற சவ்விற்குள் இந்த திரவம் இருக்கும். இந்த திரவம் வயது ஆக ஆக அளவில் குறைய ஆரம்பிக்கும். இதனால் இரண்டு முட்டுகளும் சந்திக்கிற இடத்தில் ஒன்றோடு ஒன்று உராயத் தொடங்கும். இதுவே பித்த கீல்வாயு எனப்படு கிறது. குறிப்பாக கடல் மற்றும் கடல் சார்ந்த நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்த வகை வாத நோய் வருவதற்கான வாய்ப்புள்ளது. உப்புச்சத்து அதிகம் கொண்ட அந்த மண்ணின் இயல்புக்கு ஏற்றபடி வாத நோய் அதிகரிக்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாத நோய் Empty Re: வாத நோய்

Post by சிவா Tue Mar 24, 2009 12:48 am

இது எந்த விதமான அறிகுறிகளை தோற்றுவிக்கும்?

மூட்டுகளில் வலி, வீக்கம் இருக்கும். உட்கார்ந்திருந்து எழுந்திருக்க முடியாமை, மலச்சிக்கல், நடக்கும்போது எலும்பு முறிந்தது போன்ற சடக், சடக் என்ற ஒருவகை யான ஒலி. சில சமயங்களில் காய்ச்சல், காலை நீட்டி மடக்க முடியாமை போன்ற அறிகுறிகள் தோன் றும். இந்த வகை நோய் பெரும்பாலும் பெண்களையே பாதிக்கிறது. சில பெண்களுக்கு பேறுகாலத்திற்குப் பின்னர் இந்த நோய் பாதிக்கலாம்.

ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் எனப்படும் வாத, பித்த கீழ்வாயு நோய் வைரஸ், பாக்டீரியாக்களால் உண்டாக லாம் என்பது உண்மையா? இதுபற்றிக் கூறுங்கள்?

வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுக் கிருமிகளால் இந்த நோய் வரலாம். தவிர ரத்தத்தில் ருமட்டாய்டு என்ற காரணி பாசிட்டிவ்வாக இருக்கிறவர்களுக்கு இந்த நோய் இருக்கிறது என அர்த்தம். கை விரல் பொருத்துகளில் வலி, வீக்கம் இருக்கும். விரல்களை நீட்டி மடக்க முடியாமை இருக்கும். பெரும்பாலும் அதிகாலையில்தான் இதுபோல ஆகும். குளிர்ச்சியான சூழலில் இந்த நோயின் அறிகுறிகள் தீவிரமாகும். எரிச்சல், வலி உண்டாகும். தூக்கமின்மை, காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும் இது வெளிப்படுத்தும்.

இன்றைய நிலையில் பக்கவாத நோயால் பெரும் பாலோர் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் என்ன?

மூளையில் இரத்தக் குழாய் அடைப்பு, இரத்த நாளங் களில் சிதைவு ஏற்பட்டாலே இந்த நோய் வரலாம். வலது பக்க மூளைப்பகுதி பாதித்தால் உடலின் இடதுபக்கம் முழுவதும், இடதுபக்க மூளை பாதித்தால் உடலின் வலதுபக்கம் முழுவதும் பாதிப்பு உண்டாக்கு வதே இந்த நோயின் தன்மை. இந்த பாதிப்பு பெரும் பாலும் அதிகாலையில்தான் தெரியும். அதிகமான கொழுப்புப் பதார்த்தங்கள் உண்பது, குடிப்பழக்கம், அதிகமான டென்சன் ஆவது, அதிக இரத்த அழுத்தம் இன்னும் பல பால்வினை நோய்களுக்கு ஆளானால் கூட இந்நோய் உண்டாகலாம். இதன் கொடூரத்தன்மை என்னவென்றால் நோயாளிக்குத் தெரியாமலேயே அதி காலையில் மூளையில் இரத்தக் கசிவை ஏற்படுத்தும். சிறு குழந்தைகளுக்கு இது பாதித்தால் கை, கால், வாய், நாக்கு பாதிக்கப்படும்.

பக்கவாதத்தை தவிர்ப்பது எப்படி?

உட்கொள்ளும் உணவில் அதிகமான அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உருளைக்கிழங்கு, வாழைக்காய், பழைய சாதத்தை தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து அதிகம் கொண்ட மாவுப் பொருள்களை யும் குறைத்துக் கொள்ள வேண்டும். இரத்த அழுத்த நோயை வராமல் தவிர்ப்பது நல்லது. நேரத்திற்கு உணவு உட்கொள்ளுதல், தூக்கம் போன்றவற்றை வயதிற்கு ஏற்றவாறு கடை பிடிக்க வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum