Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
“பழம் வாங்கலியோ.... பழம்’
Page 1 of 1
“பழம் வாங்கலியோ.... பழம்’
![“பழம் வாங்கலியோ.... பழம்’ E_1347364192](https://img.dinamalar.com/data/uploads/E_1347364192.jpeg)
வயதான மலைஜாதி கிழவி ஒருத்தி மதுராவின் அருகில்
தன் இனத்தோடு வாழ்ந்தாள். காடுகளுக்குச் சென்று,
மூலிகை, பழங்களைப் பறித்து வந்து, மதுராவில் விற்பாள்.
பழத்தைப் பார்த்தாலே ருசியைக் கண்டுபிடித்துவிடும்
திறமைசாலி அவள்.
உக்ரசேனர் மதுராவை ஆண்ட பொழுது பழம் விற்பனையால்
நல்ல வருமானம் வந்தது இவளுக்கு. கம்சன் ஆட்சிக்கு
வந்தவுடன் வீரர்கள் மற்றும் காவலர்கள் இவளிடம் பழத்தை
வாங்குவார்கள்.
ஆனால் பணம் கொடுக்க மாட்டார்கள். காலப்போக்கில்
வருமைக்கு மேல் வருமை இவளை வாட்டியது. வேறு தொழிலும்
தெரியாது. இறக்கவும் விரும்பவில்லை.
கோகுலத்தையும், இடையர்களையும் நந்த மகாராஜாவையும்
பற்றி அறிந்திருந்தாள் அவள். எனவே மிகச் சிறந்த பழங்களைச்
சிரமப்பட்டுச் சேகரித்துக் கொண்டு கோகுலத்தில் பழம் விற்கும்
எண்ணத்தில் மகா வனம் வழியே சென்று கொண்டு இருந்தாள்.
மகாவனத்தில் பழுத்துக் கிடந்த பழங்களை பார்த்து
ஆச்சரியப்பட்டாள்.
தன் பழங்களை விட ருசியானவை இந்தப் பழங்கள் அல்லவா.
கோகுலத்தில் என் பழத்தை யார் வாங்கப் போகிறார்கள் என்று
எண்ணித் தயங்கி, மதுரா நோக்கித் திரும்பினாள்.
ஆனால் அதற்குள் ஒரு முனிவர் “நந்தகோபர் வீட்டிற்குச் செல்;
நல்லதே நடக்கும்’ என்று ஊக்கப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.
கோகுலத்தை அடைந்தாள். வீ
தி வீதியாக வெயிலில் கத்தி கத்தி பழம் விற்றாள்.
ஒருவரும் ஒரு பழம் கூட வாங்கவில்லை. வெறுப்பின் எல்லைக்கே
வந்துவிட்டாள்.
பிற்பகல் ஆகிவிட்டது. நல்ல வெயில் தொண்டை உலர்ந்தது.
நெஞ்சு எரிந்தது, பசிதாகம் வேறு. மதுரா திரும்பும் முன் கடைசி
முயற்சியாக முனிவரின் சொல்படி நந்தகோபர் வீடு சென்று
பார்த்துவிடலாம் என்று எண்ணி
மாளிகையை விசாரித்து, அங்கே சென்றாள்.
-
வாசலில் “பழம் வாங்கலியோ’ “பழம் வாங்கலியோ’ என்று
சிரமத்துடன் கூவினாள்.
ஆனால் அவளைக் கவனிப்பார் யாரும் இல்லை. அழுகை
முட்டிக் கொண்டு வந்தது. தரையில் முட்டி முட்டி அழவேண்டும்
போல் இருந்தது. அடக்கிக் கொண்டு வெறுப்புடன் மதுரா நோக்கி
திரும்பினாள்.
Re: “பழம் வாங்கலியோ.... பழம்’
திடீரென்று “பழக்காரி! ஏய் பழம்’ உயிரை உருக்கிடுவது
போன்ற கண்ணனின் குரல் கூப்பிட்டது.
பசியால் பார்வை மங்கிய அவளால் குரலின் திசையை மட்டுமே
பார்க்க முடிந்தது. நாள் முழுவதும் அலைந்ததற்கு ஒருவராவது
கூப்பிட்டார்களே என்று நினைத்துக் கூடையை இறக்கி,
அப்படியே சோர்வுடன் அமர்ந்துவிட்டாள்.
கூடையின் அருகில் வந்தான் கண்ணன். மிக அருகில் கண்ணனைப்
பார்த்தாள். ஆடையின்றி ஒன்றரை வயது உடைய குழந்தை,
அழகு தேஜஸ், மென்மை, ஆனந்தம் இவைகளை அந்தக்
குழந்தையிடம் கண்டாள் கிழவி. சுருள் முடி நெற்றியில் மையினால்
பொட்டு, மையினால் கன்னத்தில் விரல் அளவு பொட்டு, மையிட்ட
கண்கள், உடலில் முன்புறம் பெரும்பாலும் மண் அப்பியே இருந்தது.
கிழவியின் அருகே கண்ணன் வந்தான். கூடையைக் குனிந்து
பார்த்தான். பழங்களைப் பார்த்து சந்தோஷத்தோடு கைகளைத்
தட்டித் தட்டிச் சிரித்தான். இரண்டு உள்ளங் கைகளையும் சேர்த்து
வைத்துக் கொண்டு “பழம் கொடு’ என்று அதட்டினான்.
கிழவி: “பழத்திற்கு விலை கொடு’
கண்ணன்: “விலையா அது என்ன, எங்கேயிருக்கிறது’ ஒன்றும்
புரியாமல் தன் வலது, இடது, பின் பக்கங்களையும் பார்த்தான்.
ஏதோ தன் பக்கத்தில் இருப்பதை கேட்கிறாள் என்று நினைப்பது
போல....,
பின்பு “எதுவுமே இல்லையே... விலையை நீயே பிடித்துக் கொள்’
என்றான். விலை என்றால் பசு அல்லது கன்றின் பெயர் என்று
அர்த்தம் புரிந்து கொண்டவன்போல....
கிழவி: “என் கண்ணே! எதாவது ஒன்றை வாங்கினால் அதற்குச்
சமமான ஒன்றைப் பதிலுக்குக் கொடுத்தால் அதுதான் விலை’
என்றாள்.
கண்ணன்: “புரியாமல் பேசுகிறாய் பாட்டி, என் அம்மா, எனக்கு
வெண்ணெய், பால், ரொட்டி தருகிறாள். பதிலுக்கு எதுவும்
வாங்குவதில்லை. என்னை ஏமாற்றாமல் பழத்தை கொடு’ என்று
மீண்டும் மிரட்டினான்.
-
------------------------
Re: “பழம் வாங்கலியோ.... பழம்’
கிழவி: சிரித்துக் கொண்டே ஏக்கத்துடன்
“ம்... அவள் உன் அம்மா ஆயிற்றே...’
கண்ணன்: “உனக்கு இன்னும் புரியவில்லையே நிறைய
அம்மாக்கள் எனக்கு ரொட்டி, வெண்ணை தருகின்றார்கள்.
ஆனால் அவர்கள் எதுவும் என்னிடம் வாங்குவதில்லையே!
ம் கொடு பழத்தை’ மீண்டும் பலமாக மிரட்டினான்.
கிழவி: “நீ அவர்களை அம்மா என்கிறாய் அல்லவா!’
கண்ணன்: “பிடிவாதம் செய்கிறாய், சரி உனக்கு என்ன வேண்டும்’.
முற்றத்தில் நெல் காயப்போட்டு இருப்பதை பார்த்த கிழவி
“எனக்கு அது வேண்டும்’ என்று நெல்லைச் சுட்டிக்காட்டினாள்.
வேகமாகச் சென்றான். இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து
வைக்கத் தெரியாமல் சேர்த்து நெல்லை அள்ளினான்.
பழக்காரியைப் பார்த்துக் கொண்டே மிகவும் மெதுவாக வந்தான்.
நெல் இரு உள்ளங்கைகளின் இடையில் ஒழுகிக் கொண்டே வந்தது.
கூடையின் அருகில் வந்து கூடைக்குள் “இந்தா’ என்று இரண்டு
கைகளையும் விரித்துப் போட்டான். இரண்டே இரண்டு
நெல்மணிகள்தான் விழுந்தன. ஆச்சரியத்தோடு பின்னால்
பார்த்தான்; சிரித்தான்.
பின்பு ஏதோ சிறிது யோசனை செய்தான். அதன்பின்
“எனக்கு இப்பொழுது பழம் கொடு. அப்பா வந்தவுடன் உனக்கு
நிறைய நெல் தர சொல்கிறேன்’ என்றான்.
கிழவி திடீரென்று “நீ என் மடியில் உட்கார்ந்து “அம்மா’ என்று
சொன்னால்தான் உனக்குப் பழம் தருவேன்’ என்றாள்.
வேகமாக வந்து மடியில் உட்கார்ந்தான். தன் முகத்தை
நிமிர்ந்து “அம்மா எனக்குப் பழம் கொடு’ என்றான்.
பழக்காரி பயத்தோடு பூரித்துவிட்டாள்.
யாராவது பார்த்தால் என்ன ஆகும் என்ற பயம்தான்.
“இந்தா கண்ணே பழம்’ என்றாள்.
கண்ணன் எழுந்து நின்று இரண்டு கைகளைக் குவித்துப் பழத்தை
வாங்கினான். கிழவி தன் இடது கையால் அவனது கைகளைப்
பிடித்துக் கொண்டு வலது கைகளால் பழங்களை எடுத்து,
அவனின் குவிந்த கைகளில் முடிந்தவரை அடுக்கினாள்.
-
-----------------
Re: “பழம் வாங்கலியோ.... பழம்’
கண்ணன் திரும்பிச் செல்வதையே மிகவும் திருப்தியோடு
பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவளுக்கு எல்லா பழங்களையும் கொடுத்து விட்டது போன்ற
எண்ணம். பழக்காரி தன் பிறவி முற்றுப் பெற்றதைப்போல்
உணர்ந்தாள்.
மதுரா நோக்கி நடந்தாள். அவள் இனி பழம் பறிக்கவோ,
விற்கவோ செல்லக்கூடாது. அவனுக்குக் கொடுத்த கைகளால்
இனி யாருக்கும் பழம் தர முடியாது என்று முடிவு செய்தாள்.
யமுனையின் கரை அருகே வந்தபொழுது கூடை இப்பொழுது
பாரமாகத் தோன்றியது. சிரமப்பட்டுக் கீழே இறக்கினாள்.
ஒளிவீசும் ரத்தினக் கற்கள் கூடை நிறைய இருந்தன.
அப்படியே கூடையைத் தூக்கி, யமுனையில் வீசி எறிந்தாள்.
உலக வாழ்க்கையை முழுவதையும் வெறுத்துவிட்டாள். காலையில்
இருந்து உணவு, நீர் கூட எடுக்காமல் இருந்த கிழவி, இப்பொழுது
வேக வேகமாக நடந்து, தன் குடிசைக்கு வந்தாள்.
குடிசையினுள் ரத்தினக் குவியல்களும், தெய்வத்தன்மை மிக்க
வாசம் வீசும் அன்னக் குவியலும் இருந்தன. தன் இனத்தாரை
வேண்டும் அளவு எடுத்துக் கொள்ள சொன்னாள். எல்லோரும்
வேண்டும் அளவு அள்ளிச் சென்றும் அதே அளவு அப்படியே இருந்தது.
மீண்டும் கண்ணனைப் பார்க்க அவளுள் உண்டான ஏக்கம், வெறி
தணியவில்லை. பழம் விற்கும் சாக்கில் பலமுறை கோகுலம் சென்றாள்.
மறுபடியும் கண்ணன் தென்படவேயில்லை.
“கண்ணன் வாங்கி வந்த அந்த பழங்களின் ருசியை இதுவரை யாரும்
கோகுலத்தில் அனுபவித்ததே இல்லை. பழங்களும் எடுக்க எடுக்க
குறையவே இல்லை’ என்று கோகுலம் முழுவதும் பிரபலமாகப் பரவிய
பேச்சு மட்டுமே அவள் காதில் இறுதிவரை கேட்டுக் கொண்டே இருந்தது.
-
----------------------------------
- டாக்டர் உமாகாந்தன் மற்றும் டாக்டர் உ.உமாதேவி
மஞ்சரி & வாரமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» (கல்சியம் கார்பைட்டால்) சுட்ட பழம் வேண்மா? சுடாத பழம் வேண்டுமா?
» பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்!
» பழம்:
» ஞானப் பழம்
» பலா கொட்டை, பழம்...
» பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்!
» பழம்:
» ஞானப் பழம்
» பலா கொட்டை, பழம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|