ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி பெருமாளை "கோவிந்தா " என்று ஏன் எல்லோரும் அழைக் கிறார்கள் உங்களுக்கு தெரியுமா ?

Go down

திருப்பதி  பெருமாளை  "கோவிந்தா " என்று ஏன் எல்லோரும் அழைக் கிறார்கள் உங்களுக்கு தெரியுமா ? Empty திருப்பதி பெருமாளை "கோவிந்தா " என்று ஏன் எல்லோரும் அழைக் கிறார்கள் உங்களுக்கு தெரியுமா ?

Post by krishnaamma Tue Apr 09, 2019 10:45 pm

திருப்பதி  பெருமாளை  "கோவிந்தா " என்று ஏன் எல்லோரும் அழைக் கிறார்கள் உங்களுக்கு தெரியுமா ? 9d3tnAMQS0yDtNinjO6m+61nCf7fw4OL._SY300_QL70_



திருப்பதி  பெருமாளை  "கோவிந்தா " என்று ஏன் எல்லோரும் அழைக்
கிறார்கள் உங்களுக்கு தெரியுமா ?

கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் திருவேங்கட மலையான்.

திருமலை திருப்பதியில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் பெருமாள்.

பெருமாளுக்கு ஆயிரம் திரு நாமங்கள்.அவற்றுள் சிறப்பு மிக்க நாமங்கள் பன்னிரண்டு.

அவற்றுள்ளும் சிறப்பு மிக்க நாமமாகப் போற்றப்படுவது கோவிந்தா என்னும் திரு நாமம்.

பாகவதத்தில் பகவான் கிருஷ்ணருக்கு பட்டாபிஷேகம் செய்யும் போது சூட்டப்பட்ட நாமம் கோவிந்தா என்பது. 

ஆதி சங்கரரும் தனது பஜகோவிந் தத்தில், கோவிந்த நாமத்தையே முன்னிலைப் படுத்துகிறார்.

ஆண்டாள், குறையொன்றும் இல்லாத கோவிந்தா என்று சொல்லிப் போற்றுகிறார்.

அத்தகைய சிறப்பு மிக்க கோவிந்த நாமம் கருணைக் கடலான வேங்கடவனுக்கு ஏற்பட்டதற்கு ஒரு சுவாரஸ்யமான புராண சம்பவம் ஒன்று சொல்லப் படுகிறது.

மகாவிஷ்ணு கலியுகத்தில் அவதரிக்க முடிவு செய்து, மனித வடிவில் திருப்பதிப் பகுதியில் தோன்றினார்.

மனித உருவில் வந்த காரணத்தால் அவருக்கும் பசி, தாகம் போன்ற அடிப்படை உணர்வுகள் இருந்தன. 

தான் பால் அருந்த ஒரு பசு இருந்தால் நலம் என்று நினைத்தார்.

அவர் வசிக்கும் மலைக்கு அருகிலேயே ஒரு மலையில் தான் மாமுனிவர் அகத்தியரின் ஆசிரமமும் இருந்தது.

அகத்தியர் தன் ஆசிரமத்தில் பெரிய கோசாலை ஒன்றை வைத்திருந்தார்.

அதில் நூற்றுக் கணக்கான பசுக்கள் இருந்தன.

வேங்கடேசன் அவர் குடிலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும் அவரே இந்த உலகத்தைக் காக்கும் மகாவிஷ்ணு என்பதை அகத்தியர் ஞானத்தால் அறிந்து கொண்டார்.

வேங்கடேசனை வணங்கி வரவேற்றார். 

முனிவரே, நான் கலியுகத்தில் சில செயல்களை முடிக்கத் திருவுளம் கொண்டு 
இங்கு வந்து வந்திருக்கிறேன்.

தங்களிடம் உள்ள பசுக் கூட்டங்களி லிருந்து எனக்கு ஒரு பசுவினை தானம் செய்ய வேண்டும்" என்று கேட்டார்.

மூவுலகையும் காக்கும் இறைவன் தன் குடிலுக்கு வந்து தன்னிடம் தானம் கேட்பது குறித்துப் பெருமகிழ்ச்சி யடைந்தார் அகத்திய முனிவர். 

அதே வேளையில் இந்த மாயவன் ஏன் நம்மைத் தேர்ந்தெடுத்தான் என்றும் யோசித்தார்.

இதில் ஏதேனும் மாயத் திருவிளையாடலைச் செய்யத் திருவுளம் கொண்டாரோ என்று சிந்திக்கலானார்.


தொடரும்.....


Last edited by krishnaamma on Tue Apr 09, 2019 10:54 pm; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருப்பதி  பெருமாளை  "கோவிந்தா " என்று ஏன் எல்லோரும் அழைக் கிறார்கள் உங்களுக்கு தெரியுமா ? Empty Re: திருப்பதி பெருமாளை "கோவிந்தா " என்று ஏன் எல்லோரும் அழைக் கிறார்கள் உங்களுக்கு தெரியுமா ?

Post by krishnaamma Tue Apr 09, 2019 10:46 pm

திருப்பதி  பெருமாளை  "கோவிந்தா " என்று ஏன் எல்லோரும் அழைக் கிறார்கள் உங்களுக்கு தெரியுமா ? JsLgp7ATYG37suqH1ni7+Brahmotsav



ஐயனே, நீர் யார் என்பதை நான் நன்கு அறிவேன்.


உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய நியதி எதுவுமில்லை.


பசுவினை  பிரம்மச்சாரிக்கு தானம் செய்யக் கூடாது என்று சொல்வர்.


ஒருவன் இல்லறத்தில் இருக்கும் போது தான், 


அவனுக்கு தானமாகத் தரப்படும் பசுவினை அவன் நல்ல முறையில் பராமரிப்பான்.


இல்லத்தில் இருக்கும் அவன் மனைவி அந்தப் பொறுப்பைச் சரிவரச் செய்வாள்.


அப்படிப் பணிவிடை செய்ய ஆள் இல்லாத பிரம்மச்சாரிக்கு பசுவை தானமாகத் தர இயலாது.


மேலும் கலியுகத்தில் தாங்கள் அவதரித்தது போல், அன்னை மகாலட்சுமியும் அவதரித்திருக்கிறார். 


நீங்கள் அன்னையைக் கரம் பற்றி தம்பதி சமேதரராக இங்கு வருவீர்கள் என்றால், நான் அடுத்த கணமே தங்களுக்கு ஒரு பசுவை தானமென அளிக்கிறேன்" என்று பணிவுடன் கூறினார்.


பெருமாளும் அகத்தியர் சொல்வதில் இருக்கும் நியாயத்தைப் புரிந்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.


பின்னர் அவர் அன்னை பத்மாவதியைத் திருமணம் செய்து 
கொண்டு தனது வாசஸ்தலமான திருமலைக்குச் செல்லத் தொடங்கினார்.


அதற்கு முன்னர், அகத்தியரின் குடிலுக்குச் சென்று அவர் தருவதாகச் சொன்ன பசுவையும் வாங்கிக் கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்தார்.


அதற்காக அவர் அகத்தியரின் இருப்பிடம் சென்றார்.


ஆனால்,  அப்போது அகத்தியர் அங்கே இல்லை.
முனிவரின் சீடர்களே, அங்கிருந்தனர்.


அவர்களிடம் பெருமாள் அகத்தியர் தமக்கு ஒரு பசுவை தானமாகத் தருவதாக வாக்குப் பண்ணியிருக் கிறார்' என்பதைச் சொல்லி பசுவைப் பெற்றுச் செல்லவே தான் வந்திருப்பதாகச் சொன்னார்.


செய்வதறியாது திகைத்தனர் சீடர்கள்.


ஐயா, தங்களையும் அன்னையையும் கண்டால் வைகுண்ட வாசனான அந்தப் பரந்தாமனையும் அன்னை மகாலட்சுமி யையும் காண்பது போல் உள்ளது.


தாங்கள் கேட்டு மறுக்க வேண்டிய சூழல் எங்களுக்கு.


இந்த ஆசிரமத்தில் அனைத்தும் எங்கள் குருநாதர் அகத்தியருக்கே உரிமையானவை. 


அவர் அனுமதி யில்லாமல் நாங்கள் எதையும் தரவும் பெறவும் இயலாது. 


நீங்கள் அவர் வரும் வரை இங்கேயே தங்கியிருந்தால் நாங்கள் உங்களுக்குப் பணிவிடை செய்யக் காத்திருக் கிறோம்.


அதன் பின் குருதேவர் வந்ததும், நீங்கள் பசுவினை அவரின் திருக்கரத்தா லேயே பெற்றுச் செல்லலாம்" என்றனர்.


பெருமாளும் அவர்கள் சொன்ன பதிலில் வருத்தம் கொள்ளாது, அவர்களின் குருபக்தியையும், அதிதிகளிடம், காட்டும் மரியாதையையும் கண்டு மகிழ்ந்தார். 


பின்பு அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு தன் நிரந்தர வாசஸ்தலம் நோக்கிப் புறப்பட்டார்.


சற்று நேரத்துக் கெல்லாம் அங்கு வந்த அகஸ்தியர் நடந்தவற்றைக் கேள்விப்பட்டு வருத்தமுற்றார்.


உலகையே காக்கும் உத்தமனை ஒரு பசுவின் காரணமாக அலைக்
கழித்து விட்டதற்காக வருந்தினார்.


எப்படியும் பெருமாளைச் சந்தித்து தன்னிடம் உள்ளதில் ஆகச் சிறந்த பசுவினைத் தந்து விடுவது என்று முடிவு செய்து காமதேனுவைப் போன்ற பசு ஒன்றினை அவிழ்த்துக் கொண்டு, பெருமாள் தாயாரோடு சென்ற வழியை விசாரித்துக் கொண்டே சென்றார்.


வேகமாக நடந்ததில் கொஞ்ச நேரத்திலேயே பெருமாள் முன்பாக நடந்து செல்வதை அகத்தியரும் பார்த்து விட்டார்.


பெருமாளை நோக்கிக் குரல் கொடுத்தார். " சுவாமி கோவு  இந்தா " என்று சத்தமிட்டார்.


தெலுங்கில் ` "கோவு " என்றால் பசு. `இந்தா' என்றால் எடுத்துக் 
கொள் என்று பொருள். 


ஆனால், சுவாமிக்கு முனிவரின் குரல் கேட்கவில்லை போலும். மீண்டும் சத்தமாக `சுவாமி கோவு இந்தா என்று சொன்னார்.


அப்போதும் அவர் திரும்பவில்லை.




மீண்டும் மீண்டும்
சுவாமி கோவு இந்தா...
 சுவாமி கோவு இந்தா... 
சுவாமி கோவு இந்தா" 
என்று அழைத்துக் கொண்டே யிருந்தார். 


அதுவரை அன்னநடை போட்டுக் கொண்டிருந்த பெருமாளும் தாயாரும் விரைவாக நடக்க ஆரம்பித்து விட்டனர்.


அகத்தியரோ, தன் குரலை இன்னும் உயர்த்தி `கோவு இந்தா கோவு இந்தா' என்று வேகவேகமாக உச்சரிக்க அதுவே சற்று வேகமான வழக்கில் வார்த்தையில் கோவிந்தா... கோவிந்தா என்று ஆனது.


கோவிந்தா, கோவிந்தா என்று அவர் அழைத்தது 108 முறை ஆனதும் பெருமாள் நின்றார்.


திரும்பிப் பார்த்தார். அகத்தியர் மூச்சு வாங்க அவரிடம் ஓட்டமும் நடையுமாய்ப் பசுவோடு வந்தார்.


பெருமாள் அவரை ஆசுவாசப் படுத்தி, அந்தப் பசுவை தானமாகப் பெற்றுக் கொண்டார். பின்னர்,இந்தக் கலியுகத்தில் என்னை அழைக்க 
உகந்த நாமம் கோவிந்தா என்பதே. 


நீங்கள் `கோவு - இந்தா' என்று சொன்ன தன் மூலம் கோவிந்தா என்னும் நாமத்தைச் சொல்லி என்னை மகிழ்ச்சிப் படுத்தினீர். 


நீர் மட்டுமல்ல, இனி யார் யார் எல்லாம்,தம் ஜீவனாகிய பசுவினை என்னிடம் சேர்ப்பிக்க விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாருமே கோவிந்தா என்னும் நாமத்தைச் சொன்னாலே போதும், நான் உடனடியாக அவர்களை நோக்கி விரைவாக அனுக்கிரகம் செய்வேன்" என்று சொல்லி விடை பெற்றுத் திருமலையில் ஆனந்தமாக ஆர்ப்பாட்டமின்றி குடிபுகுந்தான் வேங்கட  மலையான்.




நன்றி : வாட்சப் !  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?
» ஆன்டிபயாட்டிக்(antibiotic) எடுக்கும் போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?
» திருப்பதி சென்று பெருமாளை சேவிக்கும் முறை !
» முகலாய கொள்ளையர்களிடமிருந்து திருப்பதி பெருமாளை காப்பாற்றிய வராகமூர்த்தி
» திருப்பதி செல்பவர்கள் எப்படி முறையாக பெருமாளை தரிசிக்க வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum