ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம் Poll_c10கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம் Poll_m10கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம்

2 posters

Go down

கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம் Empty கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம்

Post by ayyasamy ram Thu Mar 21, 2019 2:19 pm

கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம் _106032472_94ce452b-7569-4cb7-894d-b1374af62f3b
-
கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம் _106032473_527a9d23-e9dd-462c-8673-9f6d73c3e96a
-
படத்தின் காப்புரிமை BARAGUNDI பேமிலி
-
-----------------------

கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு
திருமணத்தின் போது, மனமகனுக்கு மணப்பெண் தாலி
கட்டியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

முத்தேபிஹல் தாலுக்காவின் நலட்வாட் கிராமத்தில் நடைபெற்ற
இந்த திருமண நிகழ்வினை அசாதாரணமான ஒன்றாக மக்கள்
பார்க்கின்றனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி
வெளியிட்டிருந்தன.

ஆனால், தங்கள் குடும்பத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல என்கிறார்
கர்நாடக அரசு அதிகாரியான அஷோக் பரகுன்டி.

"இதில் அசாதாரணமாக ஒன்றும் இல்லை. எங்கள் குடும்பத்தில்
இவ்வாறு பல திருமணங்கள் நடைபெற்றுள்ளன" என்று பிபிசி
இந்தியிடம் பேசிய அஷோக் தெரிவித்தார்.

திருமணத்தில் என்ன நடந்தது?

மண்டபத்தில் 12ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியான
பசவன்னா சிலைக்கு அருகில் இருந்த திருமண மேடையில்,
இரண்டு மணமகன்கள் மற்றும் மணமகள்கள் அமர்ந்திருந்தனர்.

அந்த சிலைக்கு அருகில், இல்கல் ஸ்ரீ மஹந்தேஷ்வரா சம்ஸ்தானா
மடத்தின் குருமஹந்த் சுவாமிஜி அமர்ந்திருந்தார்.

இரண்டு மணமகன்கள் கைகளிலும் இரண்டு விவாக முத்ராக்கள்
(ருத்ராட்சத்தினால் செய்யப்பட்டது) கொடுக்கப்பட்டன.
இது இந்தியாவின் மற்ற பகுதிகளில் கட்டப்படும் தாலிக்கு சமமானது.

மணமகன்கள் அவற்றை அவர்களுக்கான மணப்பெண்கள்
கழுத்தில் கட்டினார்கள்.

அதனைத் தொடர்ந்து. மணமகள்கள் கையிலும் விவாக முத்ராக்கள்
கொடுக்கப்பட்டன. அதை அவர்கள் மணமகன்கள் கழுத்தில்
கட்டினார்கள்.

பின்னர் மலர் மாலை மாற்றிக் கொண்ட இத்தம்பதியினர்,
சுவாமிஜியுடன் எழுந்து நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சுவாமிஜி சொல்ல சொல்ல, அதனை இந்த தம்பதியினரும் திருப்பி
சொன்னார்கள்.
-
-----------------------
-
"இந்த திருமணம் திருமணத்துக்கான உறவு மட்டும் கிடையாது

இது இதயங்களின் அன்பும் ஆன்மீக புரிதலும்.

நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒன்றுபட்டு வாழ்வோம்.

சமுதாயத்திற்கு நாம் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொண்டு
சேர்ப்போம்.

மேலும், தர்மம், தேசியம், சுற்றுச்சூழல் மற்றும் குடும்பத்தில்
அமைதி குறித்து உணர்வுடன் இருப்போம்.

பொறாமை, மூடநம்பிக்கை, குருட்டு நம்பிக்கை மற்றும் சூனியம்
ஆகியவற்றில் இருந்து தள்ளியிருப்போம்.

மற்றவர்களின் பணத்திற்கு ஆசைப்படாமல் வாழ்வோம்.

பேராசை, தவறான நடத்தை, தீய பழக்கங்கள் போன்றவற்றை
விடுத்து, நல்ல வழியை தேர்ந்தெடுப்போம்.

பசவா மற்றும் பிற மத குருக்களின் போதனைகள் படி, அறிவு,
சடங்குகள், அனுபவங்கள் ஆகியவற்றால் நிறைந்த ஒரு
வாழ்க்கையை நாம் வாழ்வோம்.

தரம்குரு பசவன்னாவுடன் மொத்த ஷரனா சமூகத்திற்கும்
முன்பாக நாம் இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொள்வோம்.

ஜெய் குரு பசவன்னா ஷரணு ஷர்னதி"
-
-------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம் Empty Re: கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம்

Post by ayyasamy ram Thu Mar 21, 2019 2:19 pm

இந்த உறுதிமொழியை தொடர்ந்து, சாதாரண வழக்கம்
போல அட்சதையை தூவாமல், திருமணத்துக்கு
வந்திருந்தவர்கள் தம்பதிகள் மீது மலர்களை தூவி
ஆசிர்வதிக்கின்றனர்.

அதோடு, திருமண விழா முடிகிறது. மணமக்கள் தீயை
சுற்றிவரும் நிகழ்வெல்லாம் இல்லை. மேலும், இத்திருமணம்
நடக்க நல்ல நேரம் என்றும் ஏதுமில்லை.

பரகுன்டி மற்றும் டுடாகி குடும்பத்தினரின் இந்த வழக்கம்,
பசவன்னாவை பின்பற்றும் பெரும்பாலான பாரம்பரிய
லிங்காயத் மக்களுக்கு புதிதல்ல.

மும்பை - கர்நாடகா மற்றும் ஹைதராபாத் - கர்நாடகா
போன்ற பகுதிகளில் இந்த வழக்கத்தினை லிங்காயத்
சமூகத்தினர் பின்பற்றி வருகின்றனர்.

இல்கல் மடத்தின் மறைந்த மஹாந்த் சுவாமிகள்
சித்தரகியை பின்பற்றுபவர்கள் இதனை வழக்கமாக
கொண்டுள்ளனர்.

"அவர் வரதட்சணையை எதிர்த்து பிரச்சாரம் செய்ததோடு,
12ஆம் நூற்றாண்டில் பசவன்னாவின் போதனைகளையும்
பின்பற்றினார். பெண்களை தானமாக கொடுப்பதில்
அவருக்கு நம்பிக்கையில்லை.

அதனால், திருமணத்தில் கன்னியாதானம் என்ற சடங்கு
இருக்காது. அவ்வாறு பெண்களை தானமாக கொடுத்தால்,
அவர் மனிதர் என்ற மரியாதையை இழந்துவிடுகிறார்.

இதனால், ஆண்கள் அவர்களிடம் தவறாக நடந்து கொள்ளும்
சூழல் உருவாகிறது" என்கிறார் குருமஹன்ந் சுவாமிஜி.

"இந்த வழக்கத்தை கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களாக
பின்பற்றுகிறோம். என் உறவினர்கள் அவ்வாறுதான் திருமணம்
செய்து கொண்டார்கள். என் மகள் பூஜாவும் அப்படித்தான்"
என்று அஷோக் தெரிவித்தார்.
-
--------------
மற்ற சமூகங்களில் பெண்கள் எப்போதும் திருமாங்கல்யம்
அணிவது போல, அமித் மரகுன்டி எப்போதும் இந்த விவாக
முத்ராவை அணிவாரா?

"ஆம். நான் அணிந்து கொள்வேன். ஆண் பெண் இருவரும்
சமம் என்று இந்த வழக்கம் காண்பிக்கிறது. இந்த விவாக
முத்ராவை அணிந்திருப்பதால் ஆண்களுக்கு எந்த
அழுத்தமும் கிடையாது. எல்லாம் கணவன் மனைவிக்கு
இடையே உள்ள புரிதல்தான்" என்று ஆஸ்திரேலியாவில்
மென்பொருள் பொறியாளராக உள்ள அமித் பரகுன்டி
தெரிவிக்கிறார்.

அமித் மற்றும் பிரியா ஆகியோர் வெவ்வேறு சாதியி
னர் என்றாலும், அவர்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம்
கிடைத்தது.

"இது ஒரு சிறந்த அனுபவம். என் கணவரின் பெற்றோர்,
ஆண் - பெண் இருவரும் சமம்தான் என்று
நிரூபித்திருக்கிறார்கள். முதலில் பெண்கள் விவாக முத்ராவை
ஆண்களுக்கு கட்ட வேண்டும் என்ற வழக்கம் வியப்பாக
இருந்தது" என்று பரியா கூறுகிறார்.

அமித் எப்போதும் விவாக முத்ராவை அணிந்து கொள்வார்
என்பதை எப்படி உறுதி செய்யப்போகிறார் பிரியா?

"அமித் எப்போதும் அணிந்து கொள்வார். எனக்கு சத்தியம்
செய்து கொடுத்திருக்கிறார்" என்றார் பிரியா.
-
----------------------
நன்றி-பிபிசி தமிழ்


Last edited by ayyasamy ram on Thu Mar 21, 2019 8:13 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம் Empty Re: கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 21, 2019 5:17 pm

தாலியை புனிதமாக நினைத்து ஏற்றுக்
கொள்வது வியப்பாக உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம் Empty Re: கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்ணுக்கு சம உரிமை: மணமகன் கழுத்தில் தாலி கட்டிய மணமகள்............
» ஆண் வேடமணிந்த மணமகள்; பெண் வேடமணிந்த மணமகன்: விநோத திருமணம்
» மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் !
» மணமகன் தந்தை, மணமகள் தாயுடன் ஓட்டம்; குஜராத்தில் கூத்து
» திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum