ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்

3 posters

Go down

அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம் Empty அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்

Post by ayyasamy ram Tue Feb 19, 2019 8:41 pm

கூட்டணி விஷயத்தில் சிறிய அளவில் சமரசம் செய்து
கொண்டாலும் கூட, அதன்மூலம் தமிழகத்திற்கு நன்மை
கிடைக்கும் என்பதால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததாக,
பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை)
வெளியிட்ட அறிக்கையில், "நாடாளுமன்ற மக்களவைத்
தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில்
வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்,
அதை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல்
கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்தத் தேர்தலில் பாமக எத்தகைய நிலைப்பாட்டை
மேற்கொள்ளும் என்பது தான் அரசியல் கட்சிகள்
மட்டுமின்றி அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை
என்பது தான் 2011 ஆம் ஆண்டு முதல் பாமகவின் நிலைப்பாடாக
இருந்து வந்தது. எனினும், இடைப்பட்ட காலத்தில் தமிழக
அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

பல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகள்
பறிக்கப்பட்டன. இத்தகைய சூழலில் தான் 2018 ஆம் ஆண்டு
டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் கோவையில்
நடைபெற்ற பாமகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு
கூட்டங்களில் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்
பாமகவின் நிலைப்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
-

செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் அனைத்துத்
தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்பட்டன. அதன்முடிவில்,
''கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு சந்தித்த அவல
நிலைகளுக்கெல்லாம் காரணம் மாநிலங்களின்
உரிமைகளுக்காக சமரசமின்றி குரல் கொடுக்கும் கட்சிக்கு
மக்களவையில் போதிய வலிமையில்லாதது தான்.
பாமகவுக்கு மக்களவையில் அதிக உறுப்பினர்கள் இருந்த
போது தமிழக நலனுக்காகவும், தமிழர் நலனுக்காகவும்
கடுமையான போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளது.
-
பாமகவினர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும்,
ரயில்வே துறை இணை அமைச்சராகவும் இருந்த போது
தமிழகத்திற்கு கிடைத்த அத்துறை சார்ந்த திட்டங்களில்
பத்தில் ஒரு பங்கு கூட இப்போது கிடைக்கவில்லை.

மத்திய அரசில் பாமக வலிமையாக இருந்தபோது
ஆளும் கூட்டணியின் வழிகாட்டுதல் கூட்டத்தில்
ராமதாஸ் வலிமையாக வாதாடி மத்திய உயர்கல்வி
நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு
27% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார்.


இவை அனைத்துமே உணர்த்துவது மாநில உரிமைகளுக்காக
குரல் கொடுக்கும் பாமக மக்களவையில் அதிக
றுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான்.

இதை உணர்ந்து தான் மக்களவைத் தேர்தலுக்கான உத்திகளை
பாமக வகுத்து வருகிறது. இதற்காக ஒத்த கருத்துடைய
கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாமக புத்தாண்டு சிறப்புப்
பொதுக்குழு தீர்மானிக்கிறது.

கூட்டணி கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை
நிறுவனர் ராமதாஸூக்கு இப்பொதுக்குழு வழங்குகிறது''
எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும்
அதிகாரம் எனக்கு வழங்கப்பட்ட பின்னர் எந்தக் கட்சியுடன்
கூட்டணி அமைப்பது என்பதைத் தீர்மானிக்க, தமிழகத்தின்
உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்,

பாமகவின் கொள்கைகளில் எந்தவித சமரசமும் செய்து
கொள்ளக்கூடாது ஆகிய மூன்றும் தான் மிக முக்கியக்
காரணிகளாக அமைந்தன.

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அ
டுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சி பாமக தான்.
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் பாமகவின்
தலைமையில் கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை
என்ற நிலையில், அதிமுக, திமுக ஆகிய இரு திராவிடக்
கட்சிகளில் ஒன்றுடன் அணி சேருவது தான் வாய்ப்பாக
இருந்தது.

அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை
என்று 2011 ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அவற்றில்
ஒன்றுடன் கூட்டணி அமைப்பது எந்த வகையில் சரியாக
இருக்கும்?

அதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?
ஆகிய கேள்விகள் எழுந்தன.

2011 ஆம் ஆண்டு தீர்மானத்தில் உறுதியாக இருந்து
மக்களவையில் போதிய பிரதிநிதித்துவம் பெறாமல்
தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க
முடியாமலும், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை
போராடிப் பெற முடியாமலும் வேடிக்கைப் பார்த்துக்
கொண்டிருக்கப் போகிறோமா?

அல்லது கூட்டணி குறித்த நிலைப்பாட்டில் சிறிய தற்காலிக
சமரசத்தைச் செய்து கொண்டு மேற்கண்ட இரு கட்சிகளின்
ஒன்றுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தின் நலனுக்காக
குரல் கொடுக்கப் போகிறோமா? என்று தீர்மானிக்க
வேண்டிய கட்டாயத்துக்கு நான் ஆளாக்கப்பட்டேன்.


மிக நீண்ட சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப்
பிறகு கொள்கைகளில் தேக்கு மரமாக இருந்தாலும்,
கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக
இருப்பதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன்.

அடுத்து அதிமுக, திமுக ஆகிய இரண்டில் எந்தக் கட்சியுடன்
கூட்டணி? என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது.
மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கான திட்டங்களைப்
போராடிப் பெற்றாலும், அதை செயல்படுத்துவதில்
பெருந்துணையாக எந்தக் கட்சி இருக்கும்? என்ற கேள்விக்குக்
கிடைக்கும் விடை தான், யாருடன் கூட்டணி என்ற
கேள்விக்குமான விடை என்பதில் மிகவும் உறுதியாக
இருந்தேன்.


2004-09 காலத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக
அன்புமணி ராமதாஸ் இருந்த போது தமிழகத்தின் நலன்
கருதி ஏராளமானத் திட்டங்களைக் கொண்டு வந்தார்.

அவர் மத்திய அமைச்சராக இருந்த போது மேற்கொண்ட
தொடர் நடவடிக்கைகளால் சேலத்தில் ரூ.139 கோடியில்
அதி உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரை மற்றும்
காஞ்சிபுரத்தில் மண்டல புற்றுநோய் மையம்,
நெடுஞ்சாலைகளில் 10 இடங்களில் விபத்துக்காய சிறப்பு
சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள்
செயல்படுத்தி முடிக்கப்பட்டன.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம் Empty Re: அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்

Post by ayyasamy ram Tue Feb 19, 2019 8:43 pm

ஆனாலும், மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்சுக்கு இணையான அதிஉயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டும் அப்போதிருந்த திமுக அரசால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

மாறாக, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டது. அப்போது மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டிருந்தால், அது கடந்த 10 ஆண்டுகளில், இப்போது கட்டுவதற்கு திட்டமிடப் பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை விட பெரிய உச்சநிலை மருத்துவ மையமாக உருவெடுத்திருக்கும்.

அதேபோல், சென்னையில் ரூ.150 கோடியில் பிளாஸ்மா பிரிப்பு மையம், ரூ.50 கோடியில் மெட்ரோ
ரத்த வங்கி, ரூ.112 கோடியில் மூத்த குடிமக்கள் கவனிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்டான்லி
மருத்துவமனையில் குருத்தணு ஆய்வு மையம் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களும் 2009 ஆம் ஆண்டுக்கு
பிறகு இரு ஆண்டுகள் நீடித்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை. அவற்றில் பல திட்டங்கள்
கைவிடப்பட்ட நிலையில் வேறு சில திட்டங்கள் தொடக்க நிலையிலேயே உள்ளன.

பாமகவைச் சேர்ந்தவர்கள் ரயில்வே துறை அமைச்சர்களாக இருந்தபோது அவர்களுக்கு நான் பிறப்பித்திருந்த
கட்டளை, தமிழகத்தில் ஒரு மீட்டர் அளவுக்குக் கூட மீட்டர்கேஜ் பாதைகள் இருக்கக்கூடாது’’ என்பது தான்.

அதைப்போலவே, அனைத்துப் பாதைகளையும் அகலப் பாதைகளாக மாற்றுவதற்கான திட்டங்களுக்கு
பாமக அமைச்சர்கள் ஒப்புதல் பெற்றுக் கொடுத்தனர். பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடும் பெற்றுத் தரப்பட்டது.

ஆனால், 2009 ஆம் ஆண்டு ரயில்வே இணையமைச்சர் பதவியிலிருந்து அரங்க.வேலு விலகிய பின்னர்
தமிழகத்திற்கான ரயில் திட்டங்கள் கேட்பாரற்று கைவிடப்பட்டன. 2009-14 காலத்திலும் திமுக மத்திய
அமைச்சர் பதவியில் நீடித்த போதிலும் அத்திட்டங்களை முடிக்கவோ, அவற்றுக்கு நிதி உதவி பெற்றுத்
தரவோ எந்தவித முயற்சியும் செய்யவில்லை.

இக்காலத்தில் ரயில்வே துறையில் தமிழகம் பின்னடைவைச் சந்தித்தது.

அதிமுக மீது விமர்சனங்களே இல்லையா? என்று கேட்டால் 'இல்லை' என்று பதிலளிக்க முடியாது.
ஆனால், கல்வித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக பாமக முன்வைத்த பல்வேறு யோசனைகளை
அதிமுக அரசு ஏற்றுக் கொண்டது. அதேபோல், 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு
பரிந்துரைத்தது, பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது,

கடலூர்- நாகை மாவட்டங்களில் முந்தைய ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்ட பெட்ரோக்கெமிக்கல்
முதலீட்டு மண்டலத்தைக் கொள்கை அளவில் கைவிட்டது, விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக
பிரித்தது,

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியது என பாமக சார்பில்
முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளையும், யோசனைகளையும் அதிமுக அரசு ஏற்றுக்
கொண்டு செயல்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் நலன் கருதி மாநில அளவில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு
திட்டங்களை செயல்படுத்துவதற்கும் அதிமுக அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளது.
மத்தியில் புதிதாக அமையவிருக்கும் அரசில் தமிழகத்திற்கான திட்டங்களையும், உரிமைகளையும்
போராடிப் பெறும் விஷயத்தில் இணைந்து செயல்படவும் அதிமுகவும், பாமகவும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த ஒருங்கிணைப்பு தமிழகத்திற்கு பல நன்மைகளைப் பெற்றுத் தரும் என்று பாமக நம்புகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம் Empty Re: அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்

Post by ayyasamy ram Tue Feb 19, 2019 8:44 pm

கூட்டணி விஷயத்தில் சிறிய அளவில் சமரசம் செய்து கொண்டாலும் கூட, அதன்மூலம் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதால் அந்த முடிவு மிகவும் சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன். அதன்படி, 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயல்படவும், இந்தக் கூட்டணியில் இணையும் அனைத்துக் கட்சிகளின் வெற்றிக்காக மிகக்கடுமையாக உழைக்கவும் பாமக தீர்மானித்துள்ளது.

தமிழகத்தின் நலன்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாமக பாடுபடும். அதேநேரத்தில் பாமக அதன் கொள்கைகளில் எத்தகைய சமரசத்தையும் செய்து கொள்ளாது. கடந்த காலங்களில் எப்படி தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டதோ, அதேபோல் இனிவரும் காலங்களிலும் பாமக செயல்படும். எந்த தருணத்திலும் மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் பாமக விட்டுக் கொடுக்காது என உறுதியளிக்கிறேன்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம் Empty Re: அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்

Post by ராஜா Thu Feb 21, 2019 1:11 am

நன்றி இந்து தமிழ் திசை ஊடகத்திற்கு ,
பாமக என்றாலே ஒரு சமூகம் சார்ந்த கட்சி என்று கண்ணை மூடிக்கொண்டு தங்களின் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் தமிழர்களே.

தமிழகம் முன்னேற வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும் என்று இனியாவது புரிந்து செயல்படுங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம் Empty Re: அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 21, 2019 11:16 am

ராஜா wrote:நன்றி இந்து தமிழ் திசை ஊடகத்திற்கு ,
பாமக என்றாலே ஒரு சமூகம் சார்ந்த கட்சி என்று கண்ணை மூடிக்கொண்டு தங்களின் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் தமிழர்களே.

தமிழகம் முன்னேற வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும் என்று இனியாவது புரிந்து செயல்படுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1293653
பல விஷயங்கள் கவனிக்க வேண்டியவை
உங்கள் கூற்று சரியே என்று தோன்றுகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம் Empty Re: அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
» அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக கூட்டணி
» 10.5 சதவிகீதம் இட ஒதுக்கீடு பெற ஒரே காரணத்திற்காக மட்டுமே கடந்த ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் அன்புமணி ராமதாஸ்
» விஜயகாந்துடன் கூட்டணி : பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
» அண்ணாவின் ஆவி கூறியதால்தான் அதிமுகவுடன் கூட்டணி: விஜயகாந்த்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum