ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
பொதுவான   செய்திகள். Poll_c10பொதுவான   செய்திகள். Poll_m10பொதுவான   செய்திகள். Poll_c10 
ayyasamy ram
பொதுவான   செய்திகள். Poll_c10பொதுவான   செய்திகள். Poll_m10பொதுவான   செய்திகள். Poll_c10 
mohamed nizamudeen
பொதுவான   செய்திகள். Poll_c10பொதுவான   செய்திகள். Poll_m10பொதுவான   செய்திகள். Poll_c10 
VENKUSADAS
பொதுவான   செய்திகள். Poll_c10பொதுவான   செய்திகள். Poll_m10பொதுவான   செய்திகள். Poll_c10 

Top posting users this month
heezulia
பொதுவான   செய்திகள். Poll_c10பொதுவான   செய்திகள். Poll_m10பொதுவான   செய்திகள். Poll_c10 
ayyasamy ram
பொதுவான   செய்திகள். Poll_c10பொதுவான   செய்திகள். Poll_m10பொதுவான   செய்திகள். Poll_c10 
mohamed nizamudeen
பொதுவான   செய்திகள். Poll_c10பொதுவான   செய்திகள். Poll_m10பொதுவான   செய்திகள். Poll_c10 
VENKUSADAS
பொதுவான   செய்திகள். Poll_c10பொதுவான   செய்திகள். Poll_m10பொதுவான   செய்திகள். Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுவான செய்திகள்.

2 posters

Go down

பொதுவான   செய்திகள். Empty பொதுவான செய்திகள்.

Post by சிவனாசான் Sat Feb 16, 2019 8:16 pm

சென்னை: ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துதுறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பத்திரப்பதிவுத்துறை ஐ.ஐ., குமரகுருபரன் பேரிடர் மேலாண்மை, மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார். வணிகவரித்துறை முதன்மை செயலாளர் பாலசந்திரன் பத்திரப்பதிவுத்துறை கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்த பிரகாஷ் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமனம்.பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலாளரக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் தமிழ்நாடு ஊரக கல்வி நிறுவன இயக்குனராக நியமனம்.கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஹரிஹரன் நகராட்சி நிர்வாக சிறப்பு செயலாளராக நியமனம்.புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக இருந்த கணேஷ் இந்திய மருத்துவம் ஓமியோபதி இயக்குனராக நியமனம். அவருக்கு பதிலாக உமா மகேஸ்வரி புதுக்கோட்டை கலெக்டராக நியமனம்.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனராக இருந்த ஆனந்த் திருவாரூர் மாவட்ட கலேக்டராக நியமனம். திருவாரூர் கலெக்டராக இருந்த நிர்மல்ராஜ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனராக நியமனம்.பொள்ளாச்சி சப் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கோவை வணிகவரித்துறை இணை ஆணையராக நியமனம்.திருப்பூர் சப் கலெக்டர் ஷ்ராவன் குமார் ஜட்டாவத் கோவை மாநகராட்சி ஆணையராக நியமனம்.மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த அனிஷ் சேகர் டிட்கோ செயல் இயக்குனராக மாற்றம். டிட்கோ செயல் இயக்குனர் விசாகன் மதுரை மாநகராட்சி ஆணையராக மாற்றம்.ஐ.ஏ.எஸ் அதிகாரி நாகராஜனுக்கு சுகாதார திட்ட இயக்குனராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.


Last edited by சிவனாசான் on Sat Feb 16, 2019 8:30 pm; edited 1 time in total
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பொதுவான   செய்திகள். Empty Re: பொதுவான செய்திகள்.

Post by சிவனாசான் Sat Feb 16, 2019 8:18 pm

புதுடில்லி; புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ஜவான்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசுகள் இழப்பீடு அறிவித்துள்ளன.
காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில், நேற்று முன்தினம், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சென்ற வாகனம் மீது, பாக்.,கைச் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் பயங்கரவாதி, வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட வாகனத்தை மோதச் செய்ததில் சி.ஆர்.பி.எப்., வாகனத்தில் இருந்த, 40 வீரர்கள் உடல் சிதறிஉயிரிழந்தனர்;பலர்காயங்களுடன்மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர்.நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த கொடூர தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களில் பஞ்சாப் அரசு தலா ரூ. 12 லட்சமும், மஹாராஷ்டிரா அரசு ரூ. 50 லட்சமும், ஒடிசா அரசு ரூ. 10 லட்சமும் ,ஜார்க்கண்ட் அரசு ரூ. 10லட்சமும் அறிவித்துள்ளன.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பொதுவான   செய்திகள். Empty Re: பொதுவான செய்திகள்.

Post by சிவனாசான் Sat Feb 16, 2019 8:19 pm

ஸ்ரீநகர்: காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரரின் உடலை, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங், தோளில் சுமந்து சென்றார்.ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த, 40 வீரர்களின் உடல்களுக்கு, நேற்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங், டில்லியில் இருந்துபுறப்பட்டு, ஜம்மு - காஷ்மீர்மாநிலம்,ஸ்ரீநகர்சென்றார்.அங்கு, மூவர்ண கொடியால் போர்த்தப்பட்ட, 40 வீரர்களின் உடல்களுக்கு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.பின், வீரர்களின் உடல்கள், ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு,
ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.அப்போது, வீரர் ஒருவரின் உடல் வைக்கப்பட்டு இருந்த பெட்டியை, மத்திய அமைச்சர், ராஜ்நாத் சிங், கண்ணீர் மல்க, தன் தோளில் சுமந்து சென்றார். இதன் பின், ஸ்ரீநகரில் இருந்து, சிறப்பு விமானம் மூலம், உடல்கள் டில்லிக்கு அனுப்பப்பட்டன.பயங்கரவாதிகளின் தாக்குதலில், பீஹார் மாநிலம், பாகல்பூரைச் சேர்ந்த, ரத்தன் தாக்கூர் என்ற வீரரும் உயிரிழந்தார்.மகன் இறந்த செய்தி கேள்விப்பட்டதும், ரத்தன் தாக்கூரின் தந்தை, அதிர்ச்சியில் கதறி அழுதார். அப்போது, அவரது தந்தை கூறியதாவது:நாட்டுக்காக ஒரு மகனை இழந்துவிட்டேன். மற்றொரு மகனை தியாகம் செய்யவும் தயாராக உள்ளேன். ஆனால், இந்த படுகொலையை செய்த பாகிஸ்தானுக்கு, தகுந்த பதிலடி கொடுத்தே ஆக வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பொதுவான   செய்திகள். Empty Re: பொதுவான செய்திகள்.

Post by சிவனாசான் Sat Feb 16, 2019 8:21 pm

புதுடில்லி: உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க பாலிவுட் நடிகர் அகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வியாழன் அன்று மத்திய ரிசர்வ் படையினர் 44 பேர் பயங்கரவாதிகளின் வெடி குண்டு தாக்குதலில் வீர மரணம் அடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடு மறந்து தாக்குதலுக்கு கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களில் மாநில அரசுகளும் வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளது.மிதாப்பச்சன் முடிவு செய்துள்ளார்.இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கூறியதாக அவருடைய செய்தி தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது: உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்கள் 44 பேருக்கும் அவர்களின் குடும்பத்தாரிடம் தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பொதுவான   செய்திகள். Empty Re: பொதுவான செய்திகள்.

Post by சிவனாசான் Sat Feb 16, 2019 8:23 pm

பிப்ரவரி 16, 1944
தாதா சாகிப் பால்கே: மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில், கோவிந்த் சதாசிவ் - துவார்க்கா பாய் தம்பதிக்கு, 1870 ஏப்., 30ல் பிறந்தார். இவரது இயற்பெயர், துண்டிராஜ் கோவிந்த் பால்கே. இந்தியாவிற்கு, சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர், இவர் தான். அரிச்சந்திரா என்ற படத்தை, மராட்டிய மொழியில் முதன்முதலில் இயக்கினார். நடிகர்களை எப்படி தேர்வு செய்வது என, அவர் யோசிக்கவே இல்லை. தன் குடும்பத்திலிருந்த, 18 பேரையும் நடிக்க வைத்தார். முதல் இந்திய சினிமாவே, ஒரு குடும்ப படம்.அவர், 1910 -- 1940 வரை, பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அவற்றை, அவரே இயக்கவும் செய்தார். இந்திய திரைப்பட துறையின் தந்தை என அழைக்கப்படும், துண்டிராஜ் கோவிந்த் பால்கே, 1944 பிப்., 16ல் காலமானார். அவரது நினைவாக, திரைப்பட துறையில் சிறந்து விளங்கு வோருக்கு, 'தாதா சாகிப் பால்கே' விருதை, மத்திய அரசு வழங்கி வருகிறது. அவர் இறந்த தினம் இன்று.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பொதுவான   செய்திகள். Empty Re: பொதுவான செய்திகள்.

Post by சிவனாசான் Sun Feb 17, 2019 5:46 pm

மும்பை :இந்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுகளை கடைபிடிக்காத, மூன்று தேசிய வங்கிகளுக்கு, 3.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ஆர்.பி.ஐ., வெளியிட்ட தகவல்: வங்கிகளில் பணம் கையாள்வது, வங்கிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் மற்றும் கணக்குகளை மறுகட்டமைப்பு செய்தல் போன்றவற்றில், ஆர்.பி.ஐ., சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. ந்த உத்தரவுகளை, பாங்க் ஆப் இந்தியா, ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை பின்பற்றவில்லை. இதற்காக, பாங்க் ஆப் இந்தியாவுக்கு, 1 கோடி; ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ் வங்கிக்கு, 1.5 கோடி; பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பொதுவான   செய்திகள். Empty Re: பொதுவான செய்திகள்.

Post by சிவனாசான் Sun Feb 17, 2019 5:48 pm

புதுடில்லி : காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைவதற்கு காரணமான கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இஸ்ரேல், துருக்கி, சவுதி அரேபியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கசகிஸ்தான் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட உலக நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்தியாவுக்கு துணையாக நிற்பதாகவும் உறுதி அளித்துள்ளன.புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாக்.,க்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணையாக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தனது தற்காப்பு உரிமையை பாதுகாக்க முழு ஆதரவையும் தர உள்ளதாகவும் டிரம்ப் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. பாக்., மீது வான்வழியாக இந்தியா தாக்குதல் நடத்தினாலும் அதற்கு உதவுவதில் எந்த தயக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.பாக்., உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ளும்படி பலோசிஸ்தான் தேசிய காங்., இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்லாமாபாத்திற்கான இந்திய தூதரை திரும்பப் பெற வேண்டும் எனவும், டில்லியில் உள்ள பாக்., தூதரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் இந்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது. அந்நாட்டு அதிபர் வாகித் பல்லோச் வெளியிட்டுள்ள செய்தியில், இதற்கு நீதி கிடைத்தாக வேண்டும். இந்த தாக்குதலின் பின்னணியில் பாக்., இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகவும், அப்பாவி மக்களை கொல்வதற்காகவும் பாக்., விலை கொடுக்க வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பொதுவான   செய்திகள். Empty Re: பொதுவான செய்திகள்.

Post by சிவனாசான் Sun Feb 17, 2019 5:51 pm

வாஷிங்டன்: சென்னையில், அலுவலகம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற, தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், தீர்வு காணும் வகையில், அமெரிக்க பங்குச் சந்தைக்கு, 178 கோடி ரூபாயை செலுத்த, 'காக்னிசென்ட்' நிறு வனம் முன்வந்துள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த காக்னிசென்ட் என்ற, கம்ப்யூட்டர் மென்
பொருள் நிறுவனம், நம் நாட்டிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்
துக்காகசென்னையில், 27 லட்சம் சதுர அடியில் புதிய வளாகம் கட்ட, 2014ல் பணிகள் நடந்தன. இந்த அலுவலக வளாகம் கட்டுவதற்கான ஒப்புதல் அளிக்க, தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவர், 14 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இந்தத் தொகையை, அந்த வளாக கட்டுமான ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் அளிக்கும் படி, காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைவர் கார்டன் கோபர்ன், தலைமை சட்ட அதிகாரி, ஸ்டீபன் ஸ்குவார்ட்ஸ் கூறியுள்ளனர். அந்தத் தொகையை, கட்டுமான பணிகள் தொடர்பான கூடுதல் செலவாக, கணக்கு காட்டி செலுத்தி உள்ளனர். இதைத் தவிர, வேறு சில அதிகாரிகளுக்கும், இதே பாணியில், 11.41 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, வெளிநாட்டு லஞ்ச நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ், காக்னிசென்ட் மீது, அந்த நாட்டின் பங்குச் சந்தை நடவடிக்கை எடுத்துள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள், வெளிநாடுகளில் செயல்
படும்போது, லஞ்சம் கொடுப்பது தவறு. மேலும், லஞ்சம் கொடுத்ததை மறைத்து, கூடுதல் பணியை மேற் கொண்டதாக, கணக்கு காட்டப்பட்டு உள்ளது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், கோபர்ன் மற்றும் ஸ்குவார்ட்ஸ் மீது வழக்குகள் பதிவு செய்யப்
பட்டுள்ளன.இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ளும் வகையில், அமெரிக்க பங்குச் சந்தைக்கு, 178 கோடி ரூபாயை செலுத்துவதற்கு, காக்னிசென்ட் முன்வந்துள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பொதுவான   செய்திகள். Empty Re: பொதுவான செய்திகள்.

Post by சிவனாசான் Sun Feb 17, 2019 5:53 pm

புதுடில்லி : காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைவதற்கு காரணமான கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இஸ்ரேல், துருக்கி, சவுதி அரேபியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கசகிஸ்தான் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட உலக நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்தியாவுக்கு துணையாக நிற்பதாகவும் உறுதி அளித்துள்ளன.புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாக்.,க்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணையாக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தனது தற்காப்பு உரிமையை பாதுகாக்க முழு ஆதரவையும் தர உள்ளதாகவும் டிரம்ப் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. பாக்., மீது வான்வழியாக இந்தியா தாக்குதல் நடத்தினாலும் அதற்கு உதவுவதில் எந்த தயக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.பாக்., உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ளும்படி பலோசிஸ்தான் தேசிய காங்., இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்லாமாபாத்திற்கான இந்திய தூதரை திரும்பப் பெற வேண்டும் எனவும், டில்லியில் உள்ள பாக்., தூதரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் இந்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது. அந்நாட்டு அதிபர் வாகித் பல்லோச் வெளியிட்டுள்ள செய்தியில், இதற்கு நீதி கிடைத்தாக வேண்டும். இந்த தாக்குதலின் பின்னணியில் பாக்., இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகவும், அப்பாவி மக்களை கொல்வதற்காகவும் பாக்., விலை கொடுக்க வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அரக்சிசி, கடந்த சில நாட்களாக இந்தியாவும், ஈரானும் 2 பயங்கரவாத தாக்குதல்களால் மிகப் பெரிய துயரத்தை சந்தித்துள்ளன. பொறுத்தது போதும். பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பொதுவான   செய்திகள். Empty Re: பொதுவான செய்திகள்.

Post by ayyasamy ram Mon Feb 18, 2019 4:47 am

பொதுவான   செய்திகள். 103459460

செய்தி தொகுப்பு பொதுவான   செய்திகள். 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொதுவான   செய்திகள். Empty Re: பொதுவான செய்திகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum