ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில்

Go down

ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Empty ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில்

Post by ayyasamy ram Tue Feb 05, 2019 8:49 am

ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் 201902050656515168_Men-only-worship-muniyappa-swamy-temple_SECVPF
-
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து
25 கி.மீ தூரத்தில் உள்ளது மாம்பாறை கிராமம்.

இங்குள்ள முனியப்பசாமி கோவிலில் பெண்கள் வழிபடவும்,
பூஜைகளில் பங்கேற்கவும் அனுமதியில்லை.

மேலும் கோவிலில் பலியிடப்படும் விலங்குகள் கூட
ஆட்டுக்கிடா மற்றும் சேவல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

இக்கோவிலில் அனைத்து வழிபாடுகளிலும் ஆண்கள் மட்டுமே
பங்கேற்க முடியும். பெண் குழந்தைகளுக்கு கூட அனுமதியில்லை.
அவ்வளவு சக்தி வாய்ந்த இக்கோவிலின் தல வரலாறு
மகாபாரதத்துடன் தொடர்புடையது என்கிறார் கோவில் பூசாரி
சேகர்.

பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது இப்பகுதிக்கு வந்தனர்.
அப்போது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழம் தரும் மரத்தின்
அடியில் சைந்தவா முனிவர் தவமிருந்தார்.

அந்த மரத்தின் பழத்தை உண்ண பாஞ்சாலி விரும்பியதால்,
அர்ஜூணன் அம்பு எய்தவுடன் பழம் தரையில் விழுந்ததாம்.
அப்போது அங்கு தோன்றி கிருஷ்ணர் அந்த அற்புதமான
மாம்பழத்தை முனிவர் உண்ண விரும்பினார் என்றும்,
பழம் மரத்தில் இல்லை என்றால் முனிவரின் சாபத்துக்கு ஆளாக
நேரிடும்.

எனவே மாம்பழத்தை பழையபடி மரத்திலேயே ஒட்ட வைத்து
விடும்படி கூறினார். அதன்பேரில் பாண்டவர்கள் அந்த அற்புத
பழத்தை மரத்தில் ஒட்ட வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி
விட்டார்களாம்.

கிருஷ்ணர் மட்டும் இடையர் உருவத்தில் அங்கு மாடுகளை
மேய்த்துக் கொண்டிருந்தார். தவம் கலைத்த முனிவர் அந்த
மரத்தில் இருந்த மாம்பழத்தில் காயம் இருப்பதை கண்டார்.

அந்தப்பழம் காயம்பட்டதற்கு மாடு மேய்ப்பவர்தான் காரணம்
என்று எண்ணி அவரை துரத்த முயன்றார். அப்போது
கிருஷ்ணரின் தலை முடியை பிடித்த முனிவர், ஞானப்
பார்வையால் நடந்தவற்றை அறிந்து கொண்டார்.

ஒரு பெண்ணால்தான் தனக்கு கிடைக்க வேண்டிய கனி
மரத்திலிருந்து பறிக்கப்பட்டது. அதனால் பெண்களுக்கு
என்னுடைய தரிசனம் கிடையாது என்றும் நான் தவிமிருந்த
காலத்தில் எனக்கு உதவிய முனியப்பசாமிக்கு எனக்கு
எதிரே கூடாரம் அமைத்து என்னையும், அவரையும் தரிசனம்
செய்யலாம்.

முனியப்பசாமிக்கு மட்டும் கிடா மற்றும் சேவல் வெட்டி
படைக்கலாம் என்று கூறிய முனிவர் அப்படியே சிலையாகி
விட்டார். இதுதான் இக்கோவிலின் தல வரலாறு என்றார்
பூசாரி சேகர்.

இந்த கோவிலின் சிறப்பு, வசூலாகாத கடன்கள் குறித்து சீட்டில்
எழுதி கோவிலில் உள்ள வேல்கம்பில் தொங்கவிட்டால் உடனே
அக்கடன் தொகை வசூலாகி விடும் என்பது பக்தர்களின்
நம்பிக்கையாக உள்ளது.

கடன் தொகை வசூலான பிறகு நேர்த்திக்கடனாக கிடா வெட்டி
பிரார்த்தனையும் செய்கின்றனர். இங்கு சாதாரண நாட்களில்
சுமார் 50 கிடாக்களும், தை, மாசி, ஆடி மாதங்களில் நூற்றுக்
கணக்கான கிடாக்களும் நேர்த்திக்கடனாக வெட்டப்படுகின்றன.

நேர்த்திக்கடனாக கோழிகள், ஆடுகளில் பெண் இனங்களை
தவிர்த்து விடுகின்றனர். இங்கு சமைப்பது முதல் சாப்பிடுவது
வரை ஆண்கள் மட்டுமே. சாப்பாடு, கறி மீதி இருந்தால் வீட்டுக்கு
கூட எடுத்துச் செல்வதில்லை. அங்கேயே குழி தோண்டி புதைத்து
விடுகின்றனர்.

இந்த முனியப்பசாமியை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி
கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட வெளி
மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.
-
---------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum