Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உவமைக் கவிஞர் சுரதா
2 posters
Page 1 of 1
உவமைக் கவிஞர் சுரதா
![உவமைக் கவிஞர் சுரதா Suratha-308](https://keetru.com/images/stories/people2/suratha-308.jpg)
காதல் எப்படிப்பட்டது?
வள்ளுவரைப் பின்பற்றிச் சொல்கிறார் சுரதா,
“மலரினும் மெல்லியது காதலே”.
காதல் தலைவி தன் தலைவனைப் பார்க்கிறாள். மகிழ்ச்சி மேலிடுகிறது. அதை அவனிடமே சொல்கிறாள் - இப்படி, “சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வதுபோலே உனைக்கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே”.
suratha 308கவிஞர் சுரதாவின் இந்தப் பாடல் வரிகளின் வயது 58. ஆனால் இன்னமும் இளமையாகவே இருக்கிறது.
காலையில் சூரியனை பார்த்து தாமரை மலரும். அந்தியில் கருக்கலைப் பார்த்து மல்லிகை மலரும். இரவில் நிலவைப் பார்த்து அல்லி மலரும் - அறிவோம் நாம். நாளும் இவை நடைபெறத்தான் செய்கின்றன.
ஆனால் எப்போதோ மேகம் கருத்து, மழை பெய்யும் காலத்தில் மின்னல் வெட்டுகிறது. அதுவும் ஓரிரு மணித்துளிகளில் மறைந்து விடுகிறது.
அந்த ஓரிரு மணித்துளிகளில் பட்டுத் தெறிக்கும் மின்னலின் சுடரைக்கண்டு தாழை மலர்கிறது, என்ற அறிவியல் உவமையைக் காதலுக்குள் நுழைக்கிறார் கவிஞர் சுரதா.
அதனால்தான் அவர் ‘உவமைக் கவிஞர்’ என்று அழைக்கப்பட்டார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் முதன்மை மாணாக்கருள் சுரதாவும் ஒருவர்.
1941ஆம் ஆண்டு சனவரி திங்கள் 14ஆம் நாள் பாவேந்தரை முதல்முதலாகச் சந்தித்தார் சுரதா.
பாரதிதாசனாரை ஆசானாக ஏற்றுக்கொண்டு, அவரின் நினைவைத் தாங்கும் வண்ணம், ‘சுப்புரத்தினம்’ என்ற பெயருடன் ‘தாசன்’ என்று இணைத்து சுரதா ஆனார் நம் கவிஞர்.
பாவேந்தரின் புகழ்பெற்ற ‘புரட்சிக்கவி’ பாவியம், நாடகமாக நடத்தப்பட்டபோது அதில் அமைச்சராக நடித்தவர் சுரதா. அந்நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடத்தப்பட்டது.
1947ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘பொன்னி’ இதழில் பிரசுரமான சுரதாவின் ‘சொல்லடா’ எனும் கவிதை அவரை அடையாளம் காட்டியது.
‘தலைவன்’ என்ற இதழின் ஆசிரியர் நாராயணன்; அவ்விதழின் துணை ஆசிரியர் சுரதா. இதுவும் புதுக்கோட்டையில் வெளிவந்தது.
அக்காலகட்டத்தில் திருலோக சீதாராம் என்பவர் நடத்திய ‘சிவாஜி’ இத
Re: உவமைக் கவிஞர் சுரதா
அக்காலகட்டத்தில் திருலோக சீதாராம் என்பவர் நடத்திய ‘சிவாஜி’ இதழில் இவரின் பல கவிதைகள் வெளிவந்தன.
சுரதாவின் முதல் நூல் ‘சாவின் முத்தம்’ இது 1946 மார்ச் திங்களில் வெளியானது.
1954இல் கலைஞரின் முரசொலி இதழில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்தன.
1955இல் ‘காவியம்’ எனும் வார இதழை நடத்தினார்.
1956இல் ‘பட்டத்தரசி’ எனும் பாவிய நூலை வெளியிட்டார்.
1958ஆம் ஆண்டு ‘ஊர்வலம்’
1963ஆம் ஆண்டு ‘விண்மீன்’
1964ஆம் ஆண்டு ‘சுரதா’
- ஆகிய கவிதை இதழ்களை நடத்தினர்.
1974ஆம் ஆண்டு சுரதாவின் தொகுக்கப்பட்ட கவிதை நூல் ‘சுவரும் சுண்ணாம்பும்’ வெளியானது. இக்கவிதைகள் ஆனந்த விகடனில் வெளிவந்தன, வரவேற்பையும் எதிர்ப்பையும் சந்தித்தன.
1966ஆம் ஆண்டு இவர் ‘தமிழ்க் கவிஞர் மன்ற’த்தின் தலைவரானார்.
அக்காலத்தின் திரைப்படங்களில் மிக இனிமையான பாடல்கள் எழுதுவபர்களில் கு.சா.கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். அவர்தான் சுரதாவை திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர்.
‘மங்கையற்கரசி’ எனும் திரைப்படம் இவர் உரையாடல் எழுதி வெளிவந்த படம்.
“கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே, இன்ப காவியக்கலையே ஓவியமே” - “அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே” போன்ற சுரதாவின் பாடல்கள் இன்றும் அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கிறன.
சுரதா பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருக்கிறார். 1969ஆம் ஆண்டு இவரின் ‘தேன்மழை’ நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்நூலுக்கு 1 லட்ச ரூபாய் பரிசுடன், இராசராசன் விருதும் வழங்கியுள்ளது.
1972இல் இவருக்கு தமிழக அரசு ‘கலைமாமணி’ விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.
1982ஆம் ஆண்டு இவரின் மணிவிழா நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
அதே ஆண்டில் குன்றக்குடி அடிகளார் சுரதாவுக்கு ‘கவியரசர்’ பட்டத்தை வழங்கியுள்ளார்.
1987ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர் இவர்.
1990ஆம் ஆண்டு கலைஞர் இவருக்கு ‘பாரதிதாசன் விருது’ வழங்கிச் சிறப்பித்தார்.
2007ஆம் ஆண்டு இவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.
2008ஆம் ஆண்டு சென்னையில் கவிஞர் சுரதாவுக்கு சிலை நிறுவப்பட்டது. அச்சிலையை கலைஞர் திறந்து வைத்தார்.
தேன்மழை
சுவரும் சுண்ணாம்பும்
அமுதும் தேனும்
எச்சில் இரவு
சாவின் முத்தம்
தமிழ்ச் சொல்லாக்கம்
பட்டத்தரசி
பாவேந்தரின் காலமேகம்
- போன்ற பல்வேறு நூலை இவர் எழுதியிருக்கிறார்.
சுரதாவின் முதல் நூல் ‘சாவின் முத்தம்’ இது 1946 மார்ச் திங்களில் வெளியானது.
1954இல் கலைஞரின் முரசொலி இதழில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்தன.
1955இல் ‘காவியம்’ எனும் வார இதழை நடத்தினார்.
1956இல் ‘பட்டத்தரசி’ எனும் பாவிய நூலை வெளியிட்டார்.
1958ஆம் ஆண்டு ‘ஊர்வலம்’
1963ஆம் ஆண்டு ‘விண்மீன்’
1964ஆம் ஆண்டு ‘சுரதா’
- ஆகிய கவிதை இதழ்களை நடத்தினர்.
1974ஆம் ஆண்டு சுரதாவின் தொகுக்கப்பட்ட கவிதை நூல் ‘சுவரும் சுண்ணாம்பும்’ வெளியானது. இக்கவிதைகள் ஆனந்த விகடனில் வெளிவந்தன, வரவேற்பையும் எதிர்ப்பையும் சந்தித்தன.
1966ஆம் ஆண்டு இவர் ‘தமிழ்க் கவிஞர் மன்ற’த்தின் தலைவரானார்.
அக்காலத்தின் திரைப்படங்களில் மிக இனிமையான பாடல்கள் எழுதுவபர்களில் கு.சா.கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். அவர்தான் சுரதாவை திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர்.
‘மங்கையற்கரசி’ எனும் திரைப்படம் இவர் உரையாடல் எழுதி வெளிவந்த படம்.
“கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே, இன்ப காவியக்கலையே ஓவியமே” - “அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே” போன்ற சுரதாவின் பாடல்கள் இன்றும் அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கிறன.
சுரதா பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருக்கிறார். 1969ஆம் ஆண்டு இவரின் ‘தேன்மழை’ நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்நூலுக்கு 1 லட்ச ரூபாய் பரிசுடன், இராசராசன் விருதும் வழங்கியுள்ளது.
1972இல் இவருக்கு தமிழக அரசு ‘கலைமாமணி’ விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.
1982ஆம் ஆண்டு இவரின் மணிவிழா நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
அதே ஆண்டில் குன்றக்குடி அடிகளார் சுரதாவுக்கு ‘கவியரசர்’ பட்டத்தை வழங்கியுள்ளார்.
1987ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர் இவர்.
1990ஆம் ஆண்டு கலைஞர் இவருக்கு ‘பாரதிதாசன் விருது’ வழங்கிச் சிறப்பித்தார்.
2007ஆம் ஆண்டு இவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.
2008ஆம் ஆண்டு சென்னையில் கவிஞர் சுரதாவுக்கு சிலை நிறுவப்பட்டது. அச்சிலையை கலைஞர் திறந்து வைத்தார்.
தேன்மழை
சுவரும் சுண்ணாம்பும்
அமுதும் தேனும்
எச்சில் இரவு
சாவின் முத்தம்
தமிழ்ச் சொல்லாக்கம்
பட்டத்தரசி
பாவேந்தரின் காலமேகம்
- போன்ற பல்வேறு நூலை இவர் எழுதியிருக்கிறார்.
Re: உவமைக் கவிஞர் சுரதா
தஞ்சை மாவட்டம், பழையனூரில் திருவேங்கடம் - செண்பகம்
அம்மையாரின் மகனாகப் 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள்
கவிஞர் சுரதா பிறந்தார்.
இவரின் இயற்பெயர் இராசகோபாலன்.
தன் 84ஆம் வயதில் உடல் நலிவுற்றார்.
“பிறந்தோம் என்பது முகவுரையாம்
பேசினோம் என்பது தாய்மொழியாம்
மறந்தோம் என்பது நித்திரையாம்
மரணம் என்பது முடிவுரையாம்”
- இப்படி நிலையாமையைச் சொன்ன உவமைக் கவிஞர் சுரதா அவர்கள், 2006ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 20ஆம் நாள் நிலையற்ற வாழ்வில் இருந்து விடைபெற்றார் - மரணத்தைத் தழுவிக் கொண்டு.
மறக்கமுடியுமா
இவரை நாம் மறக்கமுடியுமா
===
எழில்.இளங்கோவன்
நன்றி- கீற்று
அம்மையாரின் மகனாகப் 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள்
கவிஞர் சுரதா பிறந்தார்.
இவரின் இயற்பெயர் இராசகோபாலன்.
தன் 84ஆம் வயதில் உடல் நலிவுற்றார்.
“பிறந்தோம் என்பது முகவுரையாம்
பேசினோம் என்பது தாய்மொழியாம்
மறந்தோம் என்பது நித்திரையாம்
மரணம் என்பது முடிவுரையாம்”
- இப்படி நிலையாமையைச் சொன்ன உவமைக் கவிஞர் சுரதா அவர்கள், 2006ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 20ஆம் நாள் நிலையற்ற வாழ்வில் இருந்து விடைபெற்றார் - மரணத்தைத் தழுவிக் கொண்டு.
மறக்கமுடியுமா
இவரை நாம் மறக்கமுடியுமா
===
எழில்.இளங்கோவன்
நன்றி- கீற்று
Re: உவமைக் கவிஞர் சுரதா
விரசமில்லா ரசமிக்க கவிதைகள் /சினிமா பாடல்கள் அவர் நமக்கு விட்டு சென்ற சொத்துக்கள்.
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ‘உவமைக் கவிஞர்’ சுரதா (தமிழ் கவிஞர், எழுத்தாளர்)
» சொல்லாதே..! - உவமைக் கவிஞர் சுரதா
» பெண்ணுரிமை – உவமைக் கவிஞர் சுரதா
» கூந்தல் – உவமைக் கவிஞர் சுரதா
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
» சொல்லாதே..! - உவமைக் கவிஞர் சுரதா
» பெண்ணுரிமை – உவமைக் கவிஞர் சுரதா
» கூந்தல் – உவமைக் கவிஞர் சுரதா
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|