ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி

Go down

வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Empty வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி

Post by சிவா Mon Mar 23, 2009 12:52 am

ஒரு நாட்டில் தந்திலன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான்.

தந்திலன் செல்வச் செழுமையும், சிறந்த அறிவும், நல்ல தகுதியும் பெற்றவனாக இருந்தான். மக்களிடமும் அவனுக்கு நன்மதிப்பு இருந்தது.

அந்த நாட்டின் மன்னரிடம் நல்ல செல்வாக்கையும், பேராதரவையும் பெற்ற அவன் மன்னருடைய கருவூலத்துக்கும் அதிகாரியாக இருந்தான்.

ஒரு நாள் தந்திலன் தன்னுடைய மகள் திருமணத்தை மிகவும் சிறப்பாக நடத்தினான்.

திருமணத்துக்கு மன்னரும் - அரசியாரும் முக்கிய விருந்தினராக வந்து சிறப்பித்தனர்.

தந்திலனின் அழைப்பை ஏற்று அரசாங்க அதிகாரிகளும், சிப்பந்திகளும், பொது மக்களும் திருமண விழாவுக்கு திரளாக வந்திருந்தனர்.

திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் அரண்மனையைப் பெருக்கிச் சுத்தப்படுத்தும் பணியாளனான கோரபன் என்பவனும் வந்திருந்தான்.

அவன் தன்னைப் போன்ற சிப்பந்திகளுக்கென ஒதுக்கபட்ட ஆசனத்தில் அமராமல் அமைச்சர்கள் போன்ற அந்தஸ்துமிக்கவர்களுக்காகப் போடப்பட்டிருந்த ஆசனம் ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டான்.

அதைக் கண்ட தந்திலன் கோரபனிடம் சென்று அவனுக்கு உரிய ஆசனத்தில் சென்று அமருமாறு கேட்டுக் கொண்டான்.

கோரபன் தான் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்திருக்க மாட்டேன் என்று வீம்புக்காக அடம் பிடித்தான்.

நியாயமாகப் பல தடவை சொல்லியும் கோரபன் கேட்காததால் தந்திலன் தன் ஏவலாளரை விட்டு பலாத்காரமாக ஆசனத்தைவிட்டுக் கிளப்பி வெளியே துரத்திவிட்டான்.

அந்தக் காட்சியைக் கண்டு திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் கைகொட்டிச் சிரிக்கலானார்கள்.

கோரபனுக்கு அவமானமாகப் போய்விட்டது. தன்னைப் பலர் முன்னிலையில் கேவலப் படுத்திய தந்திலனை எவ்விதமாவது பழி வாங்கித் தீருவது என்று மனத்திற்குள் தீர்மானித்து அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மறுநாள் அதிகாலையில் கோரபன் அரண்மனையைப் பெருக்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தான்.

மன்னரின் படுக்கை அறையைச் சுத்தம் செய்ய வந்தவன் உள்ளே மன்னன் மட்டும் படுக்கையிலிருந்து எழாமல் அரைத் தூக்கத்திலிருப்பதைக் கவனித்தான்.

படுக்கையறையின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்யும் போது மன்னன் காதில் விழும் வகையில் அவன் கீழ்க்கண்டவாறு முனகிக் கொண்டான்.

இந்த தந்திலனை மன்னர் எவ்வளவு தூரம் நம்பி அரண்மனைக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதிக்கிறார். ஆனால் அந்த மூடனோ மன்னருடைய பெருந்தன்மைக்கு இழுக்கு தேடும் விதத்தில் மகாராணியாரை மானபங்கப்படுத்த முயலுகிறான் என்ன கேவலம்.

இந்தச் சொற்கள் மன்னரின் காதில் தெளிவாக விழவே அவர் திடுக்கிட்டு எழுந்து படுக்கையில் உட்கார்ந்து கொண்டு கோரபனை அழைத்தான்.

கோரபன் வந்து பணிந்து நின்றான்.

இப்போது என்ன சொன்னாய் ? என்று மன்னன் கேட்டான்.

எஜமான் நான் ஒன்றும் சொல்லவில்லையே. நேற்று இரவு சற்று அதிகமாக மது அருந்திவிட்டேன். இன்னும் சரியாக மயக்கம் தெளியவில்லை. ஒரு அரைகுறை மது போதையில் ஏதாவது உளறினேனோ என்னவோ * நான் ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் எசமான் மன்னிக்க வேண்டும் என்று தந்திரமாகக் கூறினான்.

மன்னர் கோரபனை அனுப்பி விட்டார். ஆனால் அவன் சொன்ன விஷயங்கள் அவர் மனத்தைக் குடையத் தொடங்கின.

அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் செல்ல தந்திலனுக்கு மன்னவர் உரிமையளித்திருந்தார். ஆகவே அந்தப்புரத்திற்குச் சென்று தந்திலன் தமது மனைவியைச் சந்திப்பதுகூட சாத்தியந்தான்.

ஏதோ நடக்காமலா கோரபன் அந்தச் தகவலைச் சொல்லியிருக்க முடியும் என்று மன்னர் கொதிப்படைந்தார்.

தந்திலன் மீது அவருக்கு கடுங்கோபம் ஏற்பட்டது. அதே சமயம் தமது மனைவியைப் பற்றியும், அவநம்பிக்கை எண்ணங்கள் அவர் மனத்தில் அலைமோதத் தொடங்கின.

பெண்களை ஒருபோதும் நம்பக்கூடாது என்று முன்னோர் தெரியாமலா சொல்லி வைத்தார்கள்.

பெண்கள் எப்போதும் சஞ்சல சுபாவம் உள்ளவர்கள் தானே.

கணக்கு வழக்கின்றி விறகைப் போட்டுக் கொண்டிருந்தாலும் நெருப்புக்குத் திருப்தி ஏற்படுவது இல்லை. ஆயிரக்கணக்கில் ஆறுகள் சென்று கலந்தாலும் கடலுக்கு நிறைவு ஏற்படாது. கோடிகணக்கில் உயிர்களை அபகரிப்பினும் யமனுடைய மனது நிறைவு பெறுவது இல்லை. இதே போல் எத்தனை ஆடவர்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டாலும் பெண்களுக்கு முழுமையான திருப்தி ஏற்படாது போலும்.


தன் மனைவி தன்னை மட்டுமே காதலிக்கிறாள் என்று மனப்பூர்வமாக நம்புகின்ற ஒருவனைப் போல முட்டாள் உலகத்தில் இருக்கவே முடியாது.

மன்னர் இவ்வாறெல்லாம் எண்ணியெண்ணி மனம் நொந்து நிம்மதி இழந்தார்.

உடனே தனது காவலர்களை விளித்து இனி தந்திலன் அரண்மனைக்கு வந்தால் அவனை உள்ளே பிரவேசிக்க அனுமதிக்காதீர்கள் என்று உத்தரவு போட்டு விட்டார்.

மறுநாள் காலை வழக்கப்படி தந்திலன் அரண்மனைக்கு வந்தபோது காவலர்கள் அவனை சற்றே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விட்டனர்.

என்ன காரணம் ? என்று திடுக்கிட்டவனாக தந்திலன் கேட்டான்.

காரணம் எங்களுக்கு தெரியாது. உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார். அவ்வளவு தான் எங்களுக்குத் தெரியும் என்று காவலர்கள் கூறி விட்டனர்.

தந்திலன் என்ன யோசித்தும் தாம் மன்னர் மனம் நோகச் செய்த குற்றம் என்ன என்று விளங்கவில்லை.

நாம் என்ன தவறு செய்தோம் என மனக்குழப்பத்தோடு திரும்பத் திரும்ப யோசித்த வண்ணம் அரண்மனை வாசலிலேயே சற்று நேரம் நின்றான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி Empty Re: வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி

Post by சிவா Mon Mar 23, 2009 12:53 am

அப்போது அந்தப் பக்கமாக வந்த கோரபன் தந்திலனை நோக்கி ஏளனமாக நகைத்து, ஐயோ
பாவம், மன்னர் உங்களை அவமானப்படுத்தி மனம் நோகச் செய்துவிட்டார் போலும் *
ஆமாம் மனம் வேதனையடையத்தான் செய்யும். அன்று திருமண வீட்டிலே பலர்
முன்னிலையிலே என்னை அவமானப்படுத்திய போது கூட என் மனம் எவ்வளவோ
வேதனைப்படத்தான் செய்தது. தலைவிதியே என்று சகித்துக் கொண்டேன்.
நீங்களும் அதே மாதிரி சகித்துக் கொள்ள வேண்டியதுதான் என்றான்.

தந்திலனுக்கு இப்போது தான் விஷயம் பளிச்சென விளங்கியது.

தன்னைப் பழிவாங்குவதற்காக கோரபன் திட்டமிட்டு மன்னரிடம் ஏதோ கலகமூட்டியிருக்கிறான் என்று யூகித்துக் கொண்டான்.

அப்போதுதான் தந்திலனுக்குச் சில உலகியல் உண்மைகள் விளங்கின.

முட்டாளாக இருந்தாலும், இழி குலத்தில் பிறந்தவனாக இருந்தாலும், கேவலமான
வேலை செய்பவனாக இருந்தாலும் அரண்மனையில் பணி புரிபவனை அலட்சியம் செய்யக்
கூடாது. அவனையும் மதித்து - அவனுக்கு தக்க மரியாதையைக் கொடுத்தாக
வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், மன்னரிடமோ கலகமூட்டி பழி வாங்கி
விடுவார்கள்.

கோரபனை எவ்விதமாவது சரி கட்டினாலொழிய என்மீது மன்னருக்கு இருக்கும் மனக்கசப்பு மாறாது.

இவ்வாறு எண்ணியவாறு தந்திலன் தனது இல்லம் சென்றடைந்தான்.

உடனே தனது பணியாளர்களை அனுப்பி கோரபனை அழைத்து வரச் செய்தான்.

கோரபன் வந்ததும் அவனை வரவேற்று உபசரித்து, கோரபா திருமணத்தன்று உன்னை
அவமானப்படுத்தியது தவறு என் மனத்தில் பட்டது. ஆட்களை விட்டு உன்னைத்
தேடிக்கொண்டு வரச் சொன்னேன். உன்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நடந்து
போனதை மனத்தில் வைத்துக் கொள்ளாதே என்று கூறி தந்திலன் உயர்ந்த ஆடை
அணிகளும், மற்றும் பொன்னும் பொருளுமாக அன்பளிப்பு தந்து அனுப்பி வைத்தான்.

மறுநாள் காலை கோரபன் அரண்மனையில் மன்னரின் படுக்கை அறை பக்கமாகப் பெருக்கி
சுத்தம் செய்துக் கொண்டிருந்தபோது உள்ளே அறைக்குள் படுக்கையில் இருந்த
மன்னர் காதில் விழும் வண்ணம் கீழ்கண்டவாறு முனகினான்.

வர வர மன்னரின் நடவடிக்கைகள் சகிக்கவே முடியவில்லையே. நேற்று மலம்
கழித்துக் கொண்டிருக்கும் அதே சமயம், ஒரு தட்டில் உணவையும் வைத்துக்
கொண்டு சாப்பிட்டாரே * என்ன அசிங்கம் *

மன்னரின் செவியில் கோரபன் சொன்ன சொற்கள் தெளிவாக விழுந்தன.

கோரபனை அழைத்தார்.

கோரபன் அறைக்குள் வந்து அடக்க ஒடுக்கமாக கைகட்டி நின்றான்.

இப்போது ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாயே அது என்ன ? என்று கேட்டார்.

நான் ஏதோ சொன்னேனா ? அப்படி ஒன்றும் இல்லையே. ஒருவேளை நேற்று இரவு சற்று
அதிகமாக மது அருந்திவிட்டேன். மயக்கம் இன்னும் தெளியவில்லை போதை
மயக்கத்தில் ஏதாவது உளறினேனோ என்னவோ என்று சாதுரியமாகப் பதிலளித்தான்.

உண்மையிலேயே மது போதையில்தான் கோபரன் சற்று முன் உளறியிருக்க வேண்டுமென்று மன்னருக்குத் தெளிவாகத் தோன்றியது.

அப்படியானால் அன்றொரு நாள் தந்திலனைப் பற்றியும், தனது மனைவியைப்
பற்றியும் இவன் கூறியவை மது போதை உளறவாகத்தான் இருக்க வேண்டும் என்று
மன்னர் நினைத்தார்.

குடிகாரன் பேச்சை நம்பி அன்பும் பண்பும் போன விஷயங்களைப் பொருட்படுத்த
வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு பழையபடி அவனுக்கு முழு அதிகாரமும் வழங்கி
சிறப்புச் செய்தான்.

தந்திலனும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் பெற்றுத் தனது அலுவல்களை வழக்கம் போலக் கவனிக்கத் தொடங்கினான்.

பெரியோரிடத்தில் நெருக்கமான உறவும், ஆதரவும் கிடைத்துவிட்டது என்பதற்காக யாரையும் கேவலப்படுத்தக்கூடாது
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» அரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்...
» அரண்மனை வடிவில் விமானம்… சவுதி அரேபியா இளவரசர் விலைக்கு வாங்கினார் ..........
» வில்லங்கத்தை விலைக்கு வாங்கிய யாழ்.துணைவேந்தர்!
» ஷாப்பிங் மாலை விலைக்கு வாங்கிய பாலிவுட் முன்னாள் நாயகி
» விலை கொடுத்து வாங்கிய பதவியை விலைக்கு விற்க முன்வந்த எம்எல்ஏக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum