Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓட்டப்பந்தயத்தில் கடைசியாக வந்தவருக்கு விண்ணை முட்டும் கரகோஷம்! சாத்தியப்படுத்தியது எது?
2 posters
Page 1 of 1
ஓட்டப்பந்தயத்தில் கடைசியாக வந்தவருக்கு விண்ணை முட்டும் கரகோஷம்! சாத்தியப்படுத்தியது எது?
![ஓட்டப்பந்தயத்தில் கடைசியாக வந்தவருக்கு விண்ணை முட்டும் கரகோஷம்! சாத்தியப்படுத்தியது எது? 143069_thumb](https://image.vikatan.com/news/2018/11/images/1088X550/143069_thumb.jpg)
-
1992 - ம் ஆண்டு... ஸ்பெயின், பார்சிலோனியாவில் கோடை
க்கால ஒலிம்பிக் திருவிழா கோலாகலத்துடன் நடந்து
கொண்டிருந்தது. 400 மீட்டர் அதிவேக ஓட்டப்பந்தய
அரையிறுதிப் போட்டி அது.
மொத்தம் 8 நாடுகளைச் சேர்ந்த தடகள வீரர்கள்
ஓடுவதற்குத் தயாராக வரிசையில் நின்று
கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர், பிரிட்டனைச்
சேர்ந்த தடகள வீரரான டெரீக் ரெட்மாண்ட்
(derek redmond).
அந்த அரையிறுதிப் போட்டியில் டெரீக்தான் வெற்றி
பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள்.ட
ஏனெனில், டெரீக் தனது வாழ்நாளின் உச்சக்கட்ட
தகுதியுடன்திகழ்ந்த காலம் அது. இதற்கு முன்பு, லண்டனில்
நடந்த 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாதனை புரிந்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல், உலக சாம்பியன்ஷிப், ஐரோப்பிய
சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் போட்டி என்று
நான்கு முறை 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி
வாகை சூடியிருந்தார்.
அதனால் டெரீக் ரெட்மாண்ட் எளிதாக வெற்றிபெறுவார்
என்றே அனைவரும் எதிர்பார்த்தார்கள்.
Re: ஓட்டப்பந்தயத்தில் கடைசியாக வந்தவருக்கு விண்ணை முட்டும் கரகோஷம்! சாத்தியப்படுத்தியது எது?
![ஓட்டப்பந்தயத்தில் கடைசியாக வந்தவருக்கு விண்ணை முட்டும் கரகோஷம்! சாத்தியப்படுத்தியது எது? Derek1_20221](https://image.vikatan.com/news/2018/11/25/images/derek1_20221.jpg)
-
அன்றைய நாள் ஒலிம்பிக் போட்டியில் மட்டுமல்லாமல்
டெரீக் ரெட்மாண்ட் வாழ்விலும் மறக்க முடியாத நாளாக
அமையும் என்று போட்டி தொடங்கும்போது யாரும்
எதிர்பார்க்கவில்லை.
அரங்கத்தில் சூழ்ந்திருந்த சுமார் 65,000 பார்வையாளர்களின்
கண்களும் டெரீக் ரெட்மாண்ட்டைத் தான் நோக்கிக்
கொண்டிருந்தன. அரங்கில் மொய்த்திருந்த கேமராக்களில்
பெரும்பாலானவை டெரீக்கைத்தான் ஃபோகஸ் செய்தன.
டெரீக் வெற்றி பெறப்போகும் தருணத்துக்காகப் பிரிட்டனே
காத்திருந்தது.
போட்டி தொடங்குவதற்கான துப்பாக்கிச் சத்தம் எழுந்ததும்,
தயாராக இருந்த 8 தடகள வீரர்களும் துப்பாக்கிக் குண்டை
விடவும் வேகமாகப் பாயலானார்கள். நிதானமாக ஓடிக்
கொண்டிருந்தார் டெரீக்.
முதல் 200 மீட்டர் தொலைவை நிதானமாகக் கடந்து கடைசி
200 மீட்டர் தொலைவை அதிவேகமாகக் கடக்கும்
பழக்கமுடையவர் அவர். அதனால் அவர் நிதானமாக,
நான்காவது இடத்தில் சென்று கொண்டிருந்தார்.
போட்டி தொடங்கிய 17.1 ஆவது விநாடியின்போது போட்டித்
தொலைவில் 150 மீட்டர் இடைவெளியைக் கடந்திருந்தார்.
இப்போது டெரீக் தனது வேகத்தைக் கூட்டினார்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று சுருண்டு
கீழே விழுந்தார். அவரது கால் தசைகள் பிடித்துக்கொண்டன.
=
Re: ஓட்டப்பந்தயத்தில் கடைசியாக வந்தவருக்கு விண்ணை முட்டும் கரகோஷம்! சாத்தியப்படுத்தியது எது?
![ஓட்டப்பந்தயத்தில் கடைசியாக வந்தவருக்கு விண்ணை முட்டும் கரகோஷம்! சாத்தியப்படுத்தியது எது? Derek-redmond_20297](https://image.vikatan.com/news/2018/11/25/images/derek-redmond_20297.jpg)
-
அதுவரை ஆரவாரமிட்டுக் கொண்டிருந்த பார்வையாளர்கள்
கூட்டம் அந்தக் கணத்தில் திடீரென்று அமைதியானது.
கீழே விழுந்துவிட்ட டெரீக் ரெட்மாண்டையே சோகத்துடன்
பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
லிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதையே
தனது வாழ்நாள் கனவாக வாழ்ந்தவர் அவர். அதற்காக கடும்
பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார். பயிற்சியின்போது
ஏற்பட்ட காயங்களினால் அவர் மிகக் குறைந்த காலத்தில்
பலவித அறுவை சிகிச்சைகளை செய்துகொள்ள
வேண்டியிருந்தது.
வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் திடீரென்று
தசைப்பிடிப்பினால் கீழே விழுந்ததைக் கண்டதும் அனைவரும்
பதைபதைப்புடன் எழுந்து நின்றுகொண்டிருந்தார்கள்.
கீழே விழுந்த டெரீக் போட்டியிலிருந்து பின்வாங்கவில்லை.
விட்டுக்கொடுக்காமல் எழுந்து நின்றார். அவரது ஒரு கால்
கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ஒற்றைக் காலை
ஊன்ற முடியாமல், வலியினால் அழுதபடியே எல்லைக்
கோட்டை நோக்கி நொண்டி நொண்டி நடக்கத்தொடங்கினார்.
”அங்கேயே நில்லுங்கள்... மருத்துவ உதவி வந்து
கொண்டிருக்கிறது” என்று பலர் சத்தமெழுப்பினார்கள்.
ஆனால், அவர் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
தனது இலக்கை நோக்கி மெதுவாக நடக்கலானார்.
வாழ்நாள் கனவு பறிபோனதை எண்ணி அழுதாரா அல்லது
வலியினால் அழுதாரா என்று தெரியவில்லை
அவர் கண்ணீர்விட்டுக் கதறியபடியே நடந்தார். கூட்டத்தினர்
உறைந்து போய் நின்றுகொண்டிருக்க, ஒருவர் மட்டும்
பார்வையாளர் அரங்கத்திலிருந்து டெரீக் ரெட்மாண்ட்டை
நோக்கி ஓடி வந்தார்.
Re: ஓட்டப்பந்தயத்தில் கடைசியாக வந்தவருக்கு விண்ணை முட்டும் கரகோஷம்! சாத்தியப்படுத்தியது எது?
![ஓட்டப்பந்தயத்தில் கடைசியாக வந்தவருக்கு விண்ணை முட்டும் கரகோஷம்! சாத்தியப்படுத்தியது எது? D1_20575](https://image.vikatan.com/news/2018/11/25/images/d1_20575.jpg)
-
அவர்தான் டெரீக் ரெட்மாண்ட்டின் தந்தை ஜிம் ரெட்மாண்ட்
காவலர்கள் ஜிம் ரெட்மாண்ட்டை மறித்தார்கள். தனது
மகனின் வேதனையைப் பார்த்தவர், “அவன் என் மகன்...
அவனுக்கு நான் உதவவேண்டும்” என்று கூறிக்கொண்டு
ஓடினார்.
ஒலிம்பிக் விதிகளின் படி தடகள வீரர்களைத் தவிர வேறு
யாரையும் ஓட்டப் பந்தயக் களத்துக்குள் அனுமதிக்கக் கூடாது.
ஆனால், வலி தாங்கமுடியாமல் ஒவ்வொரு அடியாக எடுத்து
வைத்து இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த
டெரீக் ரெட்மாண்ட்டைக் கண்ட காவலாளிகள் அவரது
தந்தையை மனிதாபிமானத்தோடு அனுமதித்தார்கள்.
அழுதபடி நகர்ந்துகொண்டிருந்த தனது மகனிடம்
சென்றவர், “போதும்... இதை நீ செய்யக்கூடாது...” எனத்
தடுத்தார் ஜிம்.
“நான் இதைச் செய்ய வேண்டும். எல்லைக் கோட்டை நான்
அடைந்தே தீர வேண்டும்” எனப் பதிலளித்தபடியே நகர்ந்தார்
டெரீக்.
“சரி, இதுதான் உனது ஆசையென்றால் நாம் இருவரும்
சேர்ந்தே அதைச் செய்வோம்” எனத் தெரிவித்த ஜிம்,
டெரீக் ரெட்மாண்ட்டைத் தாங்கிக்கொண்டார்.
-
![ஓட்டப்பந்தயத்தில் கடைசியாக வந்தவருக்கு விண்ணை முட்டும் கரகோஷம்! சாத்தியப்படுத்தியது எது? 44b990b7050179e890b5f40beced788e_20219](https://image.vikatan.com/news/2018/11/25/images/44b990b7050179e890b5f40beced788e_20219.jpg)
-
தந்தையின் உதவியுடன் ஒவ்வொரு அடியாக வைத்து
எல்லைக்கோட்டைக் கடைசி ஆளாக அடைந்தர் டெரீக்
ரெட்மாண்ட்.
அந்தப் போட்டியில் டெரீக் வெற்றிபெற்றிருந்தால் கூட
அந்த அரங்கத்தில் அவ்வளவு ஆரவாரம், கைதட்டல்கள்
எழுந்திருக்காது. டெரீக் ரெட்மாண்ட் எல்லைக் கோட்டை
அடைந்ததும், அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்கள்
அனைவருமே எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தினார்கள்.
களத்தில் ஓடிக்கொண்டிருந்த
போது கீழே விழுந்த டெரீக் ரெட்மாண்ட் போட்டியிலிருந்து
பின்வாங்கியிருக்கலாம். அவருக்கு மருத்துவ உதவி
செய்வதற்கு ஒரு குழு தயாராக நின்றுகொண்டிருந்தது.
ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. 'தனது இலக்கைக்
கடைசி ஆளாக அடைந்தாலும் பரவாயில்லை. தான் ஓடத்
தொடங்கிய போட்டியில் எல்லையை அடையாமல்
பின்வாங்கி விடக் கூடாது' என்று வலியைத் தாங்கியபடி
அவர் பயணித்தார்.
யாரும் எதிர்பாராத அந்த நிகழ்வினால்
டெரீக் ஒலிம்பிக்கில் தங்கத்தைப் பெறும் வாய்ப்பை
இழந்திருக்கலாம். ஆனால், அவர் கோடிக்கணக்கான
மக்களின் இதயத்தில் இடம்பெற்றுவிட்டார்.
வெற்றி என்பது முதலாவதாக மட்டும் இலக்கை அடைவதல்ல.
கடைசியாகச் சென்று இலக்கை அடைவதும் வெற்றிதான்.
வாழ்வில் எந்தச் சூழ்நிலையிலும் எது வேண்டுமானாலும்
நடக்கலாம். ஆனால், எதையும் எளிதில் விட்டுக்கொடுத்து
விடக் கூடாது என்பதை டெரீக் ரெட்மாண்ட்
வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்வோம்!
-
--------------------------
சி.வெற்றிவேல்
விகடன்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வயிற்றில் குழந்தையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி சாதனை செய்த பெண்மணி !!
» ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு
» அன்று வெள்ளி; இன்று தங்கம்’ – ஓட்டப்பந்தயத்தில் கலக்கிய இந்திய வீரர்கள்!
» கடைசியாக
» கடைசியாக...
» ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு
» அன்று வெள்ளி; இன்று தங்கம்’ – ஓட்டப்பந்தயத்தில் கலக்கிய இந்திய வீரர்கள்!
» கடைசியாக
» கடைசியாக...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|