ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் ....

3 posters

Go down

ஈகரை சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் ....

Post by sundaram77 Sat Oct 27, 2018 1:18 pm

நம் பண்டைய இலக்கியங்கள் - சங்க இலக்கியங்களில்தான் - வானியல் உண்மைகள் சிலவும் காணமுடிகிறது. முதன் முதலில் தோன்றிய அறிவியல் வானியலாகத்தான் இருக்க முடியும். ஆனால் அதன் உன்மைகளைக் கண்டறிவதிலும் அதை வெளியிடுவதிலும் எத்துனை இடர்ப்பாடுகள் ; எத்துனை சிக்கல்கள் ! எத்துனை விலைமதிப்பில்லா உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன ; எத்துனை பேர் மனதாலும் - அதைவிடக் கோடுரமாக - உடலாலும் சிதைக்கப்பட்டிருக்கின்றனர் ...
எதற்கு ? புவியைக் கோள் என்று சொன்னதற்கு...ஒரு தண்டனை நிறைவேற்றம் ....


பெயர் : ஜியார்டனோ ப்ரூனோ
நாள் : 16 , பிப்ரவரி , 1600
நடந்தது : உயிருடன் எரித்து கொல்லப்பட்டார்
இடம் : ரோம்
செய்த குற்றம் : " புவிதான் ஞாயிற்றைச் சுற்றுகிறது "


இந்த தண்டனை எப்படி நிறைவேற்றப்படவேண்டும் தெரியுமா ....



"to be handed over to the secular arm to be dealt with mercifully as possible without the shedding of blood. "

இந்த ' secular ' என்ற வார்த்தையின் பொருள் அன்றைக்கே திரிக்கப்பட்டிருக்கிறது ... அடுத்து ' without the shedding of blood.'
என்ன பித்தலாட்டம் ...!!??


அனாக்ஸகோரஸ் ( கி.மு. 500 ) ஞாயிறானது ஒரு நெருப்புக்கோளம் - ஏறத்தாழ கிரீஸ் பரப்பளவில் - என்ற கருத்தை  வெளியிட்டதற்காக அவரது உயிர் கிள்ளி எறியப்படும் என அச்சுறுத்தப்பட்டார் ; அவர் கல்வி கற்பிக்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டது !?

இவ்வாறெல்லாம் மதத்தின் பெயராலும் , கடவுளின் பெயராலும் , சமூகக்கட்டுப்பபாடு எனும் நொண்டிச்சாக்காலும்  உண்மைகள் ஒளித்து வைக்கப்படலாயிற்று !


[b]புவியைப்பற்றி நிரூபண ' உண்மை ' யாக - முந்தைய கருத்துக்கள் பல உண்மையேயாயினும் அவை நிரூபணத்துடன் சொல்லப்படவில்லை - நிக்கோலஸ் கோபர்னிக் ( இவர் போலந்து தேசத்தைச் சேர்ந்த கிருத்தவப் பாதிரி என்பது  ஆச்சரியப்படத்தக்க செய்தி ; ஏனெனில் , இவர் வெளியிட்டக் கொள்கை அன்றைய மதக்கோட்பாட்டிற்கு முற்றிலும் விரோதமானது மட்டுமல்ல , சொன்ன நேரத்திலேயே உயிரைப்பறிக்கும் கொடுமையும் கொண்டதாக அம்மதம் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த நேரமது ! ) 1543- ல் புவி , ஞாயிற்றைச் சுற்றும் ஒரு கோள் ( கிரகம் ) என்ற உண்மையை  வெளியிட்டார் . அவர் கண்டு நிறுவிய இந்த உண்மைகூட அவரது நணபர் ஒருவரால் பதிப்பிக்கப்பட்ட
De Revolutionibus Orbitum Celestiam நூல் மூலம்தான் வெளி உலகத்திற்குத் தெரிய வந்தது ! நூல் வெளியான  சின்னாட்களிலேயே அவர் இயற்கையாய் மரணமடைந்தது அவரது பேரதிர்ஷ்டமே ... இல்லையெனில் ...ஓ ..நெஞ்சம் பதறுகிறது .


இப்போது நமது இடத்திற்கு வருவோமே...
[/b]


[b][b]சங்க இலக்கிய காலத்தில் - அதாவது கி.மு 300 லிருந்து கி.பி 200 வரை - தமிழ் நாட்டில் மதம் , அதாவது சமயம் என ஏதும் இருக்கவில்லை என்பது உறுதி . கடவுள் உண்டு - திருமால் உண்டு ; முருகு உண்டு ; இன்னும் பெருந்தெய்வங்கள் உண்டு ;  சிறு தெய்வங்களும் உண்டு ! கடவுள் மனதிலேறிய வெறியாட்ட்ங்களும் ( பேய் பிடித்தல் ) உண்டுதான் !!ஆயின் , சமயம்  என்றொதொரு அமைப்பு இருந்ததில்லை ; (அப்படி முதலில் தமிழ் மண்ணிலான ஏற்பாடு ஜைனமும் புத்தமுமே!) அதனாலேயே சமய ஒடுக்குமுறைகளும் அறவே இல்லை ! பெரும்பாலும் இயற்கையே இறையாகத் தொழப்பட்டது .

இயற்கையின் ஒரு சிறுதுளி உண்மைதான் , இப்புவி ஞாயிற்றைக் குடும்பத்தலைவனாகக் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் ஒரு உறுப்பினன் என்பதும் ! இதை அன்றையப் புலவர்களும் கணியன்களும் தெற்றென அறிந்திருந்தார்கள் என்பதற்கு இவ்வரிகள் சான்று ...


" வால் நிற விசும்பில் கோள் மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு " ( சிறுபாண். 242 )


மேலும் நற்றிணையில்

" வானம் மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று " ( நற்றிணை - 163 )


என்றும் குறிப்பிட்டுச் சொல்வதால் அறியலாம்.

அடுத்து , புவிக்க்கோளத்தைச் சுற்றிவரும் துணைக்கோளான இந்த நிலவு ...!
இதைப்பற்றி எழுதாத உலக இலக்கியங்கள் ஏது ! தமிழ் இலக்கியத்திலும் - குறிஞ்சிக் கபிலனிலிருந்து இன்றையக் கவிஞர்கள் வரை -  இதற்கெனவே பெருமைக்குரிய இடம் உண்டு . தாலாட்டுப் பாடல்களிலும் - இவை எங்குதான் ஓடின -


நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா


போன்ற மழலையர் பாடல்களிலும் நிலவுதான் ...
[/b][/b]


[b][b][b]இது பூமியைப்போன்ற வடிவமைப்பு உள்ளது என்று தொலை ஆடியில் கண்டு சொன்னவன் பேரறிஞன் கலீலியோ கலிலி !
அது நிற்க ...
இந்த தண்மதியை ஒரு கோள் என

" சிறு கோட்டு
குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்கு
சுறவுவாய் அமைந்த அரும்பு சூழ "... ( பெரும்பாணா. 383 - 385 )


அடுத்து கொஞ்சம் பின்னர் பார்ப்போமே....
[/b][/b][/b]


Last edited by sundaram77 on Sat Oct 27, 2018 1:20 pm; edited 1 time in total (Reason for editing : for spacing)
sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

ஈகரை Re: சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் ....

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 27, 2018 5:35 pm

வானியல் பற்றி பல உண்மைகள் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது
நன்றி நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஈகரை Re: சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் ....

Post by krishnaamma Sat Oct 27, 2018 11:09 pm

நல்ல பதிவு என்றாலும் இடம் பார்த்து பதிவு போடுங்கள் புன்னகை...........
.
.

.
.இப்பொழுது நான் மாற்றிவிடுகிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum