ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி!

Go down

பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Empty பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி!

Post by ayyasamy ram Sun Oct 14, 2018 8:31 am

பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! E_1539333887
-
கல்வி, செல்வம், வீரம் ஆகிய செல்வங்களுக்கு சரஸ்வதி,
லட்சுமி, பார்வதி என மூன்று தேவியரை வணங்குவது மரபு.

கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என, கல்விக்கு கூட
உலகத்தின் அளவை, ஒரு வரையறையாக வைத்து விட்டனர்.

வீரம் என்பதும் அப்படியே. வல்லவனுக்கு வல்லவன்
வையகத்தில் உண்டு என்று அதற்கும் எல்லை வகுத்து
விட்டனர்.

ஆனால், எவ்வளவு இருந்தாலும், ‘போதாது’ என்ற சொல்ல
வைக்கும் ஓர் அதிசயப் பொருள் உலகில் ஒன்று இருக்கிறதா
என்றால், நிச்சயமாக இருக்கிறது. அது தான் பணம்.

பணத்தை தேடி அலையாதவர்கள் இல்லை. துறவிகளுக்கு
கூட திருப்பணிகளும், யாகங்களும் செய்ய பணம் தேவைப்
படுகிறது. நவராத்திரி மட்டுமல்ல… எந்த விழாவானாலும்,
பணத்தின் நாயகியான மகாலட்சுமியை நினைக்காதவர்கள்
இருக்க முடியாது.

ஆக, பணம் எல்லாருக்கும் பிடிக்கும். அந்த பணத்தின்
நாயகியான லட்சுமிக்கு, தமிழகத்தில் ஓர் ஊர் ரொம்பப்
பிடிக்கும். அது தான் திருத்தங்கல்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள இந்த ஊரில்,
நின்ற நாராயண பெருமாள் கோவில் இருக்கிறது.
இங்கு, செங்கமல தாயார் என்ற பெயரில் அருள்
பாலிக்கிறாள், மகாலட்சுமி.

விஜயதசமியன்று இவளை வழிபட்டால், செல்வ வளம்
பெருகும்.

திருமால், பாற்கடலில் சயனித்திருந்த போது, ஸ்ரீதேவி,
பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூவருக்குள் தங்களில் யார்
உயர்ந்தவர் என்ற பிரச்னை ஏற்பட்டது.

மகாலட்சுமியான ஸ்ரீதேவியின் தோழியர், ‘மற்றவர்களைக்
காட்டிலும் ஸ்ரீதேவியே உயர்ந்தவள்; அவளே அதிர்ஷ்ட
தேவதை. மகாலட்சுமி என்ற பெயரே மிக உயர்ந்தது.
வேதங்கள் இவளை, ‘திருமகள்’ என்று போற்றுகின்றன.

பெருமாளுக்கு இவளிடம் தான் பிரியம் அதிகம். இவளது
பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு, ஸ்ரீனிவாசன்,
ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் (ஸ்ரீ என்றால் லட்சுமி) என்ற
திருநாமங்கள் சூட்டப்பட்டுள்ளன…’ என்று புகழ்ந்தனர்.

பூமாதேவியின் தோழியரோ, ‘உலகிற்கு ஆதாரமான
பூமாதேவியே பொறுமை மிக்கவள்.
இவள் மீது துப்புகின்றனர், மலம் கழிக்கின்றனர்,
மாசுபடுத்துகின்றனர், நெருப்பிடுகின்றனர்.
ஆனால், எல்லாவற்றையும் தாங்கி பொறுமை
காக்கிறாள்.

இவளைக் காக்க, பெருமாள் வராகம் என்ற ஒரு
அவதாரத்தையே எடுத்தார்…’ என்றனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Empty Re: பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி!

Post by ayyasamy ram Sun Oct 14, 2018 8:32 am

நீளாதேவியின் தோழியர், ‘தண்ணீர் தேவதையாக
விளங்குபவள், நீளாதேவி. தண்ணீருக்காக இந்த உலகம்
படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. நீரில்லாவிட்டால்
இந்த உலகம் இல்லை.

தண்ணீரை, ‘நாரம்’ என்பர். இவளது பெயரால் தான்
பெருமாளுக்கு, ‘நாராயணன்’ என்ற சிறப்பு திருநாமம்
ஏற்பட்டது. உலகில், ‘நாராயணா’ என்று உச்சரிப்பவர்களே
அதிகம்…’ என்றனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ஸ்ரீதேவி,
வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு, தானே சிறந்தவள்
என்பதை நிரூபிக்க, பூலோகத்திலுள்ள தங்கால மலைக்கு
வந்து தவம் புரிந்தாள்.

பெருமாள், அவளுக்கு காட்சி அளித்து, ‘ஸ்ரீதேவியே சிறந்தவள்’
என, ஏற்று அருளினார்.

திருமகள் தங்கிய இந்த மலை, நாளடைவில், ‘திருத்தங்கல்’
என பெயர் பெற்றது. ‘திரு’ என்றால் லட்சுமி.

கோவில், தங்கால மலை மீது உள்ளது.
பெருமாள், நின்ற கோலத்தில் காட்சி தருவதால்
, ‘நின்ற நாராயணப் பெருமாள்’ என, அழைக்கப்படுகிறார்.

செங்கமல தாயார் தனி சன்னிதியில் இருக்கிறாள்.
அதிர்ஷ்ட தேவதையான இவளுக்கு, கமல மகாலட்சுமி என்ற
பெயரும் உண்டு. அருணன், மார்க்கண்டேயர், பிருகு முனிவர்
ஆகியோர் கருவறையில் உள்ளனர்.

சுமார், 1,300 ஆண்டு பழமையான கோவில் இது.
மூலஸ்தானத்தில் அன்ன நாயகி (ஸ்ரீதேவி), அம்ருத நாயகி
(பூமாதேவி), அனந்த நாயகி (நீளாதேவி), ஜாம்பவதி என்ற
நான்கு தாயார்கள் உள்ளனர்.

நான்கு தாயார்களுடன் பெருமாளைத் தரிசிப்பது அபூர்வம்.

விருதுநகர் – சிவகாசி சாலையில், 20 கி.மீ., துாரத்தில் இவ்வூர்
உள்ளது.

——————————–

தி.செல்லப்பா
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum