Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எண்ணங்களின் வலிமை !
+3
ayyasamy ram
சிவா
krishnaamma
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எண்ணங்களின் வலிமை !
எண்ணங்களின் வலிமை !
ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார்.
வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர்.
இதைப் பார்த்த சமய குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் எனக் கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார்.
அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.
பிறகு அந்த சமய குரு, இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும் என்றார் .
இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல்நிலை சரியாகிவிடும் எனக் கூறினார்.
அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். சமய குரு சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான்.
வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தைத ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான்.
அதற்கு அந்த சமய குரு, இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள்,
மூடன், மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார்.
இதைக் கேட்டதும் அவன், நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையேல் உங்களை அடித்து விடுவேன் என்றபடியே அடிக்கப் பாய்ந்தான்.
பதற்றமே இல்லாத அந்த சமய குரு, முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி?
இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றார்.
நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
ஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே, 'நல்லதையே நினை. நல்லதையே பேசு' என அழகாக நம் முன்னோர்கள், சொல்லி விட்டனர்.
நாம் இன்று என்ன நிலையில் இருக்கின்றோமோ, அந்நிலையை கொடுத்தது, நம் எண்ணங்களே!!!
எண்ணங்கள் அழகானால்...,,
எல்லாம் அழகாகும்..
வாழ்க வளமுடன் !
ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார்.
வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர்.
இதைப் பார்த்த சமய குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் எனக் கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார்.
அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.
பிறகு அந்த சமய குரு, இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும் என்றார் .
இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல்நிலை சரியாகிவிடும் எனக் கூறினார்.
அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். சமய குரு சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான்.
வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தைத ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான்.
அதற்கு அந்த சமய குரு, இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள்,
மூடன், மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார்.
இதைக் கேட்டதும் அவன், நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையேல் உங்களை அடித்து விடுவேன் என்றபடியே அடிக்கப் பாய்ந்தான்.
பதற்றமே இல்லாத அந்த சமய குரு, முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி?
இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றார்.
நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
ஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே, 'நல்லதையே நினை. நல்லதையே பேசு' என அழகாக நம் முன்னோர்கள், சொல்லி விட்டனர்.
நாம் இன்று என்ன நிலையில் இருக்கின்றோமோ, அந்நிலையை கொடுத்தது, நம் எண்ணங்களே!!!
எண்ணங்கள் அழகானால்...,,
எல்லாம் அழகாகும்..
வாழ்க வளமுடன் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எண்ணங்களின் வலிமை !
நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்
முற்றிலும் உண்மை~!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எண்ணங்களின் வலிமை ! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எண்ணங்களின் வலிமை !
நன்றி சிவா, நன்றி அண்ணா ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஞானமுருகன்- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
Re: எண்ணங்களின் வலிமை !
நன்றி ஐயா, நன்றி முருகன் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எண்ணங்களின் வலிமை !
கடவுளை வேண்டினால் மட்டும் போதாது ; மருந்தும் சாப்பிடவேண்டும் . அப்போதுதான் நோய் குணமாகும் .
கடவுளை வேண்டினால் மட்டும் போதாது ; தினமும் படிக்கவேண்டும் . அப்போதுதான்
தேர்வில் வெற்றிபெற முடியும் .
வெறும் கடவுள் நம்பிக்கை என்ன செய்யும் ? கூடவே நம் முயற்சியும் இருந்தால்தான் வெற்றி கைகூடும் .
தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் .
என்ற குறளை நோக்குக !
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ ? என்ற கருத்தை உணர்த்தவில்லையா ? நாம் முயற்சி செய்தால்தான் , தெய்வம் , தனது மடியை வரிந்து கட்டிக்கொண்டு , நமக்குத் துணையாக நிற்கும் .
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும் .
ஆகவே முயல்க ! அதுவே வெற்றியின் திறவுகோல் .
கடவுளை வேண்டினால் மட்டும் போதாது ; தினமும் படிக்கவேண்டும் . அப்போதுதான்
தேர்வில் வெற்றிபெற முடியும் .
வெறும் கடவுள் நம்பிக்கை என்ன செய்யும் ? கூடவே நம் முயற்சியும் இருந்தால்தான் வெற்றி கைகூடும் .
தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் .
என்ற குறளை நோக்குக !
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ ? என்ற கருத்தை உணர்த்தவில்லையா ? நாம் முயற்சி செய்தால்தான் , தெய்வம் , தனது மடியை வரிந்து கட்டிக்கொண்டு , நமக்குத் துணையாக நிற்கும் .
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும் .
ஆகவே முயல்க ! அதுவே வெற்றியின் திறவுகோல் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எண்ணங்களின் வலிமை !
கடவுள் வேறு நாம் வேறல்ல. நம் எண்ணம் தான் கடவுள். நான் தான் எனக்கு கடவுள். நான் கடவுள்.
என்னை (எண்ணங்களை) வேண்டி மருந்து சாப்பிட வேண்டும். என்னை வேண்டி (எண்ணங்களை) வேண்டி படிக்கச் வேண்டும்.
வெறும் கடவுள் நம்பிக்கை இல்லை , நம்பிக்கை தான் கடவுள்னு என்ன வேண்டும்
என்னை (எண்ணங்களை) வேண்டி மருந்து சாப்பிட வேண்டும். என்னை வேண்டி (எண்ணங்களை) வேண்டி படிக்கச் வேண்டும்.
வெறும் கடவுள் நம்பிக்கை இல்லை , நம்பிக்கை தான் கடவுள்னு என்ன வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
ஞானமுருகன்- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
Re: எண்ணங்களின் வலிமை !
மேற்கோள் செய்த பதிவு: 1284452M.Jagadeesan wrote:கடவுளை வேண்டினால் மட்டும் போதாது ; மருந்தும் சாப்பிடவேண்டும் . அப்போதுதான் நோய் குணமாகும் .
கடவுளை வேண்டினால் மட்டும் போதாது ; தினமும் படிக்கவேண்டும் . அப்போதுதான்
தேர்வில் வெற்றிபெற முடியும் .
வெறும் கடவுள் நம்பிக்கை என்ன செய்யும் ? கூடவே நம் முயற்சியும் இருந்தால்தான் வெற்றி கைகூடும் .
தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் .
என்ற குறளை நோக்குக !
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ ? என்ற கருத்தை உணர்த்தவில்லையா ? நாம் முயற்சி செய்தால்தான் , தெய்வம் , தனது மடியை வரிந்து கட்டிக்கொண்டு , நமக்குத் துணையாக நிற்கும் .
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும் .
ஆகவே முயல்க ! அதுவே வெற்றியின் திறவுகோல் .
முயற்சி நிச்சயமாக வேண்டும்.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
இரு பெண்கள். அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களுடன் சங்கரன்கோயில் போயிருந்தேன். எனக்கு தெய்வ நம்பிக்கை உண்டு. இருப்பினும் கோவில்களில் நடக்கும்
வியாபாரங்கள் என்னை மிகவும் வெறுப்படைய செய்யும்.ஊழல்கள் மனம் வெதும்பச்செய்யும்.
அது போகட்டும். அன்றும் அப்பிடித்தான் . கோவில்களில் எல்லா சந்நிதிகளில் இந்த இரு பெண்மணிகளும் அர்ச்சனை முதலியவை செய்தனர்.ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கடவுளை வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்று ஒருவர் கூற அதையும் செய்து விட்டு அவர்கள் வெளியே வந்தனர். காரை நோக்கி நான் போய் கொண்டு இருந்தேன். பின் நோக்கி பார்த்தால் அந்த பெண்மணிகள் காணவில்லை.எப்பிடியும் காருக்கு வருவார்கள் என்று காத்திருந்தேன். 15 நிமிடங்கள் கழித்து வந்தனர். என்ன திடிரென்று காணவில்லையே என்றேன். XX படிப்பிற்காக ஹயக்ரீவரிடம் ஒரு அர்ச்சனை என்றார்கள். நான் ஒன்றும் சொல்லவில்லை. XX ஏற்கனவே 3 முறை பரிட்சை எழுதி தோல்வி அடைந்தவர். நடுவழியில் அப்போ இம்முறை XX பாஸ் பண்ணிவிடுவார் இல்லையா என்றேன். ஆமாம் அர்ச்சகர் அப்பிடித்தான் சொன்னார் என்றார்கள். சின்ன வயசில் (என்னை போல் பலரும்) அரச மரத்தடி பிள்ளையாரை 108 முறை சுற்றினதையும் , சுற்றியவர்கள் குறைந்த மதிப்பெண் வாங்கினதையும் புரிந்து கொண்டு படித்துவிட்டு , ஒரு சுற்று சுற்றிவிட்டு அதிக மார்க் வாங்கியவனை பற்றியும் கூறினேன். ரசித்தார்கள். இனிமேல் எல்லோரும் ஹயக்ரீவரை அர்ச்சனை செய்தால் பாஸாகிவிடலாம் என்றேன்.
கப்சிப். சத்தம் ஒன்றுமில்லை. உழைக்காமல் பலனை எதிர்பார்த்தல் தற்காலங்களில் ஈடுபடுவதில்லை என்றேன். மனக்கசப்புதான் . XX மேலும் இரு முறை தேர்வு எழுதி மூன்றாம் முறைதான் பாஸ் செய்தார்.
தெய்வ நம்பிக்கை இருக்கவேண்டும். தவறில்லை. ஆனால் நாம் செய்யவேண்டியதை முழுமையாக
மனம் ஒன்றி முறையாக செய்யவேண்டும், படிக்காமல் பாஸ் செய்யமுடியுமா? தமிழ்நாட்டில் வேண்டுமானால் நடக்கலாம். மற்ற நாடுகளில் நிச்சயமாக நடக்காது.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|