ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
ayyasamy ram
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
mohamed nizamudeen
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
VENKUSADAS
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 

Top posting users this month
heezulia
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
ayyasamy ram
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
mohamed nizamudeen
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
VENKUSADAS
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் எங்கே இருக்கிறார்

5 posters

Go down

கடவுள் எங்கே இருக்கிறார் Empty கடவுள் எங்கே இருக்கிறார்

Post by ayyasamy ram Fri Sep 28, 2018 11:43 am

கடவுள் எங்கே இருக்கிறார் God10

குருகுலத்தில் பயின்ற மாணவர்களில் இளங்கோவனும்
ஒருவன். மற்ற மாணவர்களைக் காட்டிலும் மிகவும்
புத்திசாலியாக இருந்ததால் குருவுக்கு அவனை மிகவும்
பிடித்திருந்தது.

அதனால், தனக்கு தெரிந்த அனைத்தையும்
இளங்கோவனுக்கு குரு கற்றுக் கொடுத்தார்.
குருகுலத்தில் பல ஆண்டுகள் பயின்ற
இளங்கோவனுக்கு வயது பதினெட்டு ஆயிற்று.

ஒரு நாள் குரு அவனை அழைத்து, மகனே நீ கற்றுக்
கொள்ள வேண்டிய அனைத்தையும் தெரிந்து கொண்டு
விட்டாய். இனிமேல் குருகுலவாசம் உனக்கு போதும்.
நீ இனி உன் பெற்றோரிடம் சென்று அவர்களுக்குத்
தொண்டு செய்வாய். கடவுள் எப்போதும் உனக்குத்
துணை இருப்பார் என்று வாழ்த்தினார்.

தனது குருவை வணங்கிய இளங்கோவன் அவரிடம்
பணிவாக, குருவே எனக்கு எவ்வளவோ பாடங்கள்
கற்றுக் கொடுத்தீர்கள். ஆனால், எந்தக் கடவுளைப்
பற்றி இப்பொழுது குறிப்பிட்டீர்களோ அவரை மட்டும்
எனக்குக் காட்டவில்லையே!

கண்ணால் காண முடியாத கடவுள் எவ்வாறு எனக்குத்
துணை இருப்பார்? என்று வினவினான்.

உன்னுடைய சந்தேகத்திற்கு பிறகு ஒரு நாள் விடை
அளிக்கிறேன். நீ இப்போது வடக்கு திசையில் உள்ள
காட்டின் வழியே சென்றால் ஒரு நகரம் வரும்.

அங்கு சென்று அங்குள்ள என் சகோதரனை சந்தித்து
அவரை நலம் விசாரித்து வா? என்றார்.
இளங்கோவனும் மறுநாள் காலை கிளம்பினான்.
அப்போது அவனுக்கு மிகவும் தாகமாக இருந்தது.
அப்போது அவன் கண்களில் ஒரு வயதான
பார்வையற்ற ஒருவர் தென்பட்டார்.

அவர் செடியிலுள்ள இலைகளைக் கைகளால் தடவிப்
பார்த்து சில இலைகளை மட்டும் பையினுள் போட்டுக்
கொண்டார்.

அதைப் பார்த்த அவன் ஐயா, தாங்கள் எதைத் தேடுகிறீர்கள்?
என்று கேட்டான். நான் மூலிகைகளை சேகரித்து பிறருக்கு
வழங்குகிறேன். இது பாம்புக் கடிக்கான மூலிகை.

இந்த மூலிகையின் சாறை பாம்பு கடித்தவன் வாயில்
விட்டால், விஷம் இறங்கிவிடும். நீ காட்டு வழியில்
சுற்றுகிறாய். இந்த மூலிகையை கொஞ்சம் வைத்துக்கொள்,
என்று சில இலைகளைக் கொடுத்தார்.
பிறகு குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டான்.

அருகில் ஒரு கிணறு உள்ளது! என்று கிணறு இருக்கும்
இடத்தைக் காட்டினார். அந்தக் கிணற்றை அடைந்து தாகம்
தீர தண்ணீர் குடித்தபின், ஒரு மரத்தடியில் அமர்ந்து உணவு
உண்டுவிட்டு அப்படியே உறங்கிவிட்டான்.

அவன் மீது ஏதோ இடித்துவிட்டு ஓடுவது தெரிந்து திடீரெனக்
கண் விழித்த பார்த்த போது கண்களில் ஒரு முயல்
தென்பட்டது. நிமிர்ந்து பார்த்தால் ஒரு பெரிய கிளை ஒடிந்து
கீழே விழ இருந்தது. உடனே நகர்ந்து விட தற்செயலாக உயிர்
தப்பினான்.

அங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்த இளங்கோவன்
இருட்டும் நேரத்தில் நகரை அடைந்தான். அன்று இரவு ஒரு
சத்திரத்தில் தங்கினான். நடு இரவில் ஏதோ சத்தம் கேட்டு
திடுக்கிட்டு எழுந்த இளங்கோ தன் அருகில் உறங்கிக்
கொண்டிருந்தவர் வாயில் நுரைதள்ளியதை பார்த்தான்.

கொஞ்ச தூரத்தில் ஒரு விஷப்பாம்பு ஓடிக்கொண்டிருப்பதை
கண்டதும் உடனே இளங்கோ தன்னிடமிருந்த விஷக்கடி
மூலிகைகளை எடுத்து சாறு பிழிந்து அவர் வாயில்விட்டதும்
அவர் உயிர் பிழைத்தார்.

மறுநாள் காலை குருவின் சகோதரரை சந்தித்து விசாரித்து
விட்டு, பிறகு தன் குருவிடம் திரும்பினான். தான் சென்று
வந்த விவரங்களையும், அவரது சகோதரனைப் பற்றியும்
விளக்கிக் கூறினான்.

இப்போது குரு கண்ணால் காண முடியாத கடவுள் எங்கே
என்று வினவினாய் அல்லவா? அந்த சந்தேகத்திற்கு நான்
ஏதும் விளக்கம் கூறாமல் உனக்கு விடை கிடைத்துவிட்டது.
கடவுளைப் பார்த்து விட்டாய் அல்லவா? என்றார்.

நானா! நான் எங்கே கடவுளைப் பார்த்தேன்?
பார்க்கவில்லையே! என்றான்.

மகனே கடவுள் எப்போதும் எல்லா இடங்களிலும் காணப்
படுகிறார். எந்த முதியவர் உனக்கு பாம்பின் விஷக்கடிக்கான
மூலிகை தந்தாரோ, அவர் கடவுள்.

காட்டிலும் கூட கிணற்றின் தேவை ஏற்படும் என்று எண்ணி,
யாரோ ஒருவன் கிணறு தோண்டி இருந்தானே, அவனும்
கடவுள் தான்.

உன்னுடைய உயிரைக் காப்பாற்றிய முயலும் கடவுள் தான்.
யாரை நீ பாம்புக் கடியிலிருந்து பிழைக்க வைத்தாயோ,
அவருக்கு நீ கடவுள்.

இவ்வளவு உருவங்களில் கடவுளைக் கண்ட பிறகுமா
கடவுளை நான் காணவில்லை என்று நீ கூறுகிறாய்? என்றார்.

குருவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை அறிந்து
உணர்ந்ததும் இளங்கோவிற்கு ஞானோதயம் உண்டாயிற்று.
பிறகு இளங்கோ தன் பெற்றோருடன் மகிழ்ச்சியாக வாழ
ஆரம்பித்தான்
-
---------------------------------------
நன்றி
யோகி வெங்கட்ராவ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடவுள் எங்கே இருக்கிறார் Empty Re: கடவுள் எங்கே இருக்கிறார்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Sep 29, 2018 11:37 am

ayyasamy ram wrote:
இப்போது குரு கண்ணால் காண முடியாத கடவுள் எங்கே
என்று வினவினாய் அல்லவா? அந்த சந்தேகத்திற்கு நான்
ஏதும் விளக்கம் கூறாமல் உனக்கு விடை கிடைத்துவிட்டது.
கடவுளைப் பார்த்து விட்டாய் அல்லவா? என்றார்.

நானா! நான் எங்கே கடவுளைப் பார்த்தேன்?
பார்க்கவில்லையே! என்றான்.

மகனே கடவுள் எப்போதும் எல்லா இடங்களிலும் காணப்
படுகிறார். எந்த முதியவர் உனக்கு பாம்பின் விஷக்கடிக்கான
மூலிகை தந்தாரோ, அவர் கடவுள்.

காட்டிலும் கூட கிணற்றின் தேவை ஏற்படும் என்று எண்ணி,
யாரோ ஒருவன் கிணறு தோண்டி இருந்தானே, அவனும்
கடவுள் தான்.

உன்னுடைய உயிரைக் காப்பாற்றிய முயலும் கடவுள் தான்.
யாரை நீ பாம்புக் கடியிலிருந்து பிழைக்க வைத்தாயோ,
அவருக்கு நீ கடவுள்.

இவ்வளவு உருவங்களில் கடவுளைக் கண்ட பிறகுமா
கடவுளை நான் காணவில்லை என்று நீ கூறுகிறாய்? என்றார்.

குருவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை அறிந்து
உணர்ந்ததும் இளங்கோவிற்கு ஞானோதயம் உண்டாயிற்று.
பிறகு இளங்கோ தன் பெற்றோருடன் மகிழ்ச்சியாக வாழ
ஆரம்பித்தான்
-
---------------------------------------
நன்றி
யோகி வெங்கட்ராவ்
மேற்கோள் செய்த பதிவு: 1279588
அருமையான விளக்கம் கடவுளுக்கு இதை சிறப்பாக வழங்கிட முடியாது ஐயா
நன்றி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கடவுள் எங்கே இருக்கிறார் Empty Re: கடவுள் எங்கே இருக்கிறார்

Post by krishnaamma Sat Sep 29, 2018 1:23 pm

மிக அருமையான கதை அண்ணா, கிட்ட தட்ட இதே போல ஒரு வாட்சப் பகிர்வை   இப்போது தான் பதிவிட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடவுள் எங்கே இருக்கிறார் Empty Re: கடவுள் எங்கே இருக்கிறார்

Post by SK Sat Sep 29, 2018 9:14 pm

கடவுள் எங்கும் இருக்கிறார் நாம் தான் கட்டணம் கட்டி பார்த்து கொண்டு இருக்கிறோம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கடவுள் எங்கே இருக்கிறார் Empty Re: கடவுள் எங்கே இருக்கிறார்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Sep 30, 2018 7:12 am

அருமையான கதை அழகான கருத்து... பகிர்வுக்கு நன்றி ஐயா..🙏🏼

SK wrote:கடவுள் எங்கும் இருக்கிறார் நாம் தான் கட்டணம் கட்டி பார்த்து கொண்டு இருக்கிறோம்

உண்மையோ உண்மை..🤣😂🤣

Sent from Topic'it App


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கடவுள் எங்கே இருக்கிறார் Empty Re: கடவுள் எங்கே இருக்கிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum