ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்!

+2
krishnaamma
சிவா
6 posters

Go down

மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்! Empty மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்!

Post by சிவா Fri Sep 28, 2018 2:09 am


மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்!



மதம் பிடித்த யானைக்கும், மதம் பிடித்த மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? ஒரே வித்தியாசம் தான். மதம் பிடித்த யானை எதிரில் தென்படுபவனையெல்லாம் துவம்சம் செய்யும். மதம் பிடித்த மனிதன் மாற்று மத நம்பிக்கைகளையும், மாற்று மதத்தையும் துவம்சம் செய்வான். கிண்டல் செய்வான். கேலி செய்வான்.

அடுத்தவர்களை வெறுப்பேற்றி, உசுப்பேற்றி சமுதாயத்தின் சமத்துவத்தை நாசம் செய்வான். பாதிப்பு மிக அதிகம். பல தலைமுறைக்கும் இந்த வெறுப்பு தொடரும். மதம் யானைக்கு மட்டும் பிடிக்கட்டும். மனிதனுக்கு வேண்டாம்.

நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் கிருஸ்தவ மத போதகர் பாஸ்டர் மோகன் சி. லாசரஸ் பேசும் ஒரு விடியோ உலவியது. மதபோதகர் என்பவர் ஒரு மதத்தின் பிரதிநிதி. இவர் பேசும் பேச்சுக்கள் அவர் சார்ந்த மதத்தின் ஒட்டுமொத்த கருத்து. ஆனால் அவர் துர்நாற்றம் வீசும் சாக்கடையை உறிஞ்சி அடுத்தவன் மீது உமிழும் செயலுக்கு ஒப்பான பேச்சுக்களை பேசிக் கொண்டிருந்தார். இதை சாதாரண மனிதன் பேசியிருந்தால் அது வெறுப்பு பேச்சு. அதையே ஒரு மதபோதகர் பேசினால் அது விஷ உமிழ்வு. அப்படி என்ன பேசிவிட்டார்?

'இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் தமிழ்நாட்டில் இருப்பது மாதிரி சாத்தானுடைய அரங்கு கிடையாது', என்று தொடங்குகிறது அவர் பேச்சு. அவர் சொல்லும் சாத்தானின் அரங்கு தமிழகத்தில் இருக்கும் இந்துக் கோவில்கள். எங்கள் கடவுள் சாத்தானா? என்ன பிதற்றல் இது?

அடுத்ததாக, ‘ஏன் தமிழ்நாட்டை குறிவைத்து சாத்தான் ஸ்டாக் பண்ணியிருக்கிறான்?' என்று கேள்வி எழுப்புகிறார். கும்பகோணம் மிகவும் மோசமாம். கிரஹிக்க முடியாத அளவுக்கு சாத்தான் அங்கே அத்தனை கோவில், அத்தனை இடங்களில் வேறூன்றி இருக்கிறானாம்.

அடுத்ததாக இவர் காஞ்சீபுரம் சென்றாராம். அங்குள்ள சங்கர மடத்திற்குள்ளே செல்வதற்கு ஆண்டவன் பலம் கொடுத்தாராம். அங்கே இரண்டு பேர் இருந்தார்களாம். அவர்கள் பூஜை பண்ணி, யாகம் பண்ணிக்கொண்டிருந்தார்களாம். “வேஷ்டி, பட்டுப் புடவையை எரிச்சு யாகம் பண்ணறாங்க. யாகம் பண்ணி அவர் காலில விழுந்து வணங்கறாங்க. ரூட் என்னன்னு பார்த்த மனுஷ வணக்கம்தான். அவங்க வெளியே சொல்லறதுதான் கோபுரம், சக்தியெல்லாம். ஆனா எல்லாம் அவரைத்தான் சாஷ்டாங்கமா விழுந்து கும்பிடறாங்க', என்று பேச்சு தொடர்கிறது.

இவையெல்லாம் என்ன பேச்சு? பதிலுக்கு இந்துக்கள் இவர் மீதும், இவர் சார்ந்த மதத்தின் மீதும், சர்ச்கள் மீதும் சேற்றை வாரி இறைத்தால் என்னாகும்? இப்படிப் பேசினால் மததுவேஷம் வளரும் என்று தெரியாதா? தெரியும்! தெரிந்தும் அப்படி பேசுகிறார் என்றால் அவருக்கு இந்த தைரியத்தை கொடுத்தது யார்?

தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக்கதையை படிப்போம்.

ஒரு அரசன். ஆட்சியில் நேர்மையும், போர் என்று வந்துவிட்டால் கடுமையாக போராடுவதும், வெற்றி பெறுவதும் அவனது வழக்கம். அவன் பெயரைக் கேட்டாலே எதிரிகள் நடுங்குவார்கள். மக்கள் அவனுடைய ராஜ்ஜியத்தில் வாழ்வதையே பெருமையாக நினைத்தார்கள். அரண்மனையில் ஒரு மருத்துவர் இருந்தார். அவரிடம் ஒரு அபூர்வ சக்தி மிகுந்த வேர் ஒன்று இருந்தது. ஒவ்வொரு முறை அரசனின் உடலில் காயம்படும் போதும் அது அரசனுடைய காயங்களை வேகமாக குணப்படுத்தியது. காயத்தினால் ஏற்படும் வலியோ, தழும்போ இல்லாத அளவுக்கு அது குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது. இதனால் அரசனின் வெற்றிக்கும், நல்வாழ்க்கைக்கும் முக்கியமானவராக அரண்மனை வைத்தியர் பார்க்கப்பட்டார்.

ஒரு நாள் அந்த நாட்டிற்கு ஒரு சாது வந்தார். மக்கள் அவரை தரிசித்தனர். அரசனும் ஆசிபெற்றான்.

‘அரசே! உங்கள் பெருமைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுக்கு ஒரு வரம் கொடுக்க ஆசைப்படுகிறேன். இன்று மாலை என்னை சந்தியுங்கள் நீங்கள் கேட்கும் வரத்தை தருகிறேன்', என்றார் சாது.

விடைபெற்று திரும்பினான் அரசன். சாதுவிடம் என்ன வரம் கேட்பது என்று யோசிக்கத் தொடங்கினான். இதுபோன்ற தருணங்களில் அரசனுக்கு உதவ ஒரு ஆலோசகர் இருந்தார். அவர் பேசினார்.

‘அரசே! அரசன் என்பவன் எப்போதும் அடுத்தவருக்கு உதவும் உயரத்தில் மட்டுமே இருக்க வேண்டும். யாரிடமும் உதவியை கேட்டுப்பெறும் தாழ்ந்த நிலையில் இருக்கக்கூடாது. ஒவ்வொரு முறை நீங்கள் காயப்படும் போதும் அரண்மனை வைத்தியனை நம்பி காலத்தை கழிக்க வேண்டியிருக்கிறது. உங்களின் தகுதிக்கு இது இழுக்கு. ஆகையால், இனி வைத்தியனின் உதவியை எதிர்பார்க்காத வகையில் ஒரு வரத்தை கேட்டுப் பெறுங்கள்', என்றார் ஆலோசகர்.

‘என்ன வரம் கேட்பது! அதையும் நீங்களே சொல்லுங்கள்', என்றார் அரசர்.

‘அரசே! போரில் ஏற்படும் காயத்தால் வலி ஏற்படுகிறது. அதனால் வைத்தியனை அணுக வேண்டியிருக்கிறது. ஆகையால், எத்தகைய காயம் ஏற்பட்டாலும் அது உங்களுக்கு வலியை தராதபடி வரத்தை கேட்டுப் பெறுங்கள்', என்று யோசனை சொன்னார் ஆலோசகர்.

மகிழ்ச்சியடைந்தான் அரசன். சாதுவை சந்தித்தான். ‘வலியே இல்லாத நிலையை', வரமாக கேட்டான் அரசன். சாதுவும் வரத்தை கொடுத்துவிட்டு புனித யாத்திரைக்கு புறப்பட்டார்.

ஒரு மாதம் சென்றது. யாத்திரையை முடித்துவிட்டு அரசனை பார்க்க வந்தார் சாது. அரசன் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தான்.

‘அரசே! நலமா?' என்று விசாரித்தார் சாது.

‘சாதுவே! என் உடலில் வலி, மயக்கம் ஆகிய எதுவும் இல்லை. ஆனால், என் உடல் இளைத்துக் கொண்டே செல்கிறது. நடக்க முடியவில்லை. இது ஏன்?' என்று கேட்டார் அரசர்.

படுத்திருந்த அரசனை புரட்டி அவரின் முதுகைப் பார்த்தார் சாது. முதுகு முழுவதும் கத்தியால் குத்திய காயம் இருந்தது.

‘அரசே! உன் முதுகில் இவ்வளவு கத்திக்குத்து இருந்தும் அவற்றை உன்னால் உணர முடியவில்லை. காரணம் நீ கேட்டுப் பெற்ற வலியில்லா வரம். வலியில்லாததால் முதுகில் குத்தியவர்களைப் பற்றி நீ கவலைப்படவும் இல்லை. உன்னைச் சுற்றி பல எதிரிகள் இருந்தாலும் அவர்களைப் பற்றி நீ இப்பொழுதெல்லாம் கவலைப்படுவதில்லை. அப்படிப்பட்ட எதிரிகளில் முதன்மை எதிரி யார் தெரியுமா? ‘வலியில்லா வரத்தை கேட்டுப் பெறச் சொன்ன அந்த அலோசகர்தான். அவர் உன் மீது அக்கறையுள்ளவராக இருந்திருந்தால் வைத்தியனிடம் இருப்பது போன்ற ‘மூலிகை வேரை' வரமாக கேட்டுப் பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் அப்படிப்பட்ட ஆலோசனையை வழங்கவில்லை. அப்படிப்பட்ட ஆலோசனையை வழங்கியிருந்தால் அவர் உன் மீது அக்கறையுள்ளவர், நல்ல சிந்தனையுள்ளவர் என்று அர்த்தம். அப்படியில்லாமல், அவரின் ஆலோசனையினால், உன் வலியையும், உணர்வுகளையும் மறக்கடிக்கச் செய்துவிட்டார். அதன் விளைவு உன்னுடைய தனித்தன்மையை இழந்து இன்று வெற்று மனிதனாக நிற்கிறாய். வலியில்லாத வாழ்க்கை சிறந்ததல்ல. அது உணர்வில்லாத வாழ்க்கை. மீண்டும் உனக்கு வலியை கொடுக்கிறேன். அது உன்னுடைய உணர்வுகளை தட்டி எழுப்பும். யாராவது உன்னை சீண்டினால் அதைக்கூட புரிந்துகொள்ள முடியாத வாழ்க்கை பிணத்துக்குச் சமமானது. விழித்துக்கொள், பிழைத்துக்கொள்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

அரசன் வலியை உணர்ந்தான், உடன் இருந்து கெடுத்த துரோகிகளையும் உணர்ந்தான். வலி அரசனுக்கு வலிமையை கொடுக்கட்டும். நாம் தொடர்ந்து படிப்போம்.

அரசனுக்கு ஏற்பட்ட உணர்வற்ற நிலை இந்து மதத்திற்கும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தமிழகத்தில் மட்டுமே இருக்கிறது. நாத்திகம், பகுத்தறிவு என்ற போர்வையில் இந்து மத நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும் நாசம் செய்துவிட்டனர் ஒரு தரப்பினர். இத்தனை காலமாக ஜாதீய வெறுப்புகளை முன்னிலைப்படுத்தி, இந்து மதத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டனர். இத்தகைய நாத்திக சிந்தனையாளர்களின் கருத்துக்கள் எல்லாம் இதுநாள்வரை இந்துக்களுக்கு எதிராக மட்டுமே இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட பாஸ்டர் மோகன் சி. லாசரஸுடைய சிந்தனையைப் போலத்தான்.

பெரும்பான்மையினருக்கு எதிராக வெறுப்பான கருத்துக்களை பதியும் ஒருவர் தடுமாற்றமோ, பயமோ, நடுக்கமோ இல்லாமல் இவ்வளவு தைரியமாக பேசுகிறார் என்றால் ஜனநாயகமும், பேச்சுரிமையும் ஒரு தரப்பிற்கு மட்டுமே சொந்தமாக இருப்பது புரிகிறது. இத்தகைய வெறுப்பு பேச்சு குற்றம். இப்படி பேசினால் சட்டத்தினால் தண்டிக்கப்படலாம் என்பது அவருக்கு தெரியாதா? தெரியும்! ஒன்று மட்டும் புரிகிறது. அவருக்கு பெரும்பான்மையினரின் உணர்வுகளைப் பற்றி கவலையில்லை. அடுத்த மத உணர்வுகளைப் பற்றி கவலையில்லை, அடுத்தவர்களின் நம்பிக்கைகளின் மீது கவலையில்லை, சட்டத்தைப் பற்றியும் கவலையில்லை. இது கிட்டத்தட்ட தமிழகத்தின் மீது கட்டவிழித்துவிடப்படும் வன்முறைக்குச் சமம். எப்படி பேசினாலும் இந்துக்களில் சிலர் நம்மை ஆதரிப்பார்கள் என்ற தைரியம்.

நீங்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருங்கள். எந்த மதத்தினராக வேண்டுமானாலும் இருங்கள், ஒரு மத போதகர் அடுத்த மத கடவுள்களை ‘சாத்தான்' என்று பேசுவதும், இந்துக் கோவில்களை ‘சாத்தான் கூடம்' என்று வர்ணிப்பதும் தவறு. இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்தத் தருணத்தில் காந்திய வழியில், நமது எதிர்ப்பை பதிவு செய்வது அவசியம். வன்முறை தேவையில்லை. இப்படி பேசும் ஒரு மத போதகரின் மீது தாமாக வழக்கை நீதிமன்றம் பதிவு செய்யும் என்று நம்புவோம்.

இன்றுவரை அண்டைவீட்டு மாற்று மதத்தவர்களுடன் யாரும் மத ரீதியான மோதல் போக்கை கடை பிடிப்பதில்லை. இது போன்ற மதபோதகர்களின் விஷமப் பேச்சு வெறுப்பு விதைகளை நம்மிடையே விதைக்கிறது. ஒரு அரசியல்வாதியோ, சாதாரண மதவாதத்தில் ஆர்வமுள்ள ஒருவரோ அடுத்த மதத்தை இழிவுபடுத்துவதை பார்க்கிறோம், ஆனால், ஒரு மதபோதகர் இப்படி பேசலாமா? இந்துக்களின் ஒற்றுமை மட்டுமே இத்தகைய வெறுப்பு பேச்சுகளுக்கு பதிலாக அமைய வேண்டும். நீங்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள். யாரை வேண்டுமானாலும் ஆதரியுங்கள். ஆனால், மதத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். தான் சார்ந்த மதத்தின் அருமை பெருமைகளை மக்களிடம் கொண்டு சேர்க்காமல் அடுத்த மதத்தை இழிவுபடுத்தும் செயலில் இறங்கும் நம்மைச் சுற்றி வளர்ந்து நிற்கும் விஷச் செடிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள்.

 சாது ஸ்ரீராம் (saadhusriram@gmail.com)




மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்! Empty Re: மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்!

Post by krishnaamma Fri Sep 28, 2018 8:39 am

//பதிலுக்கு இந்துக்கள் இவர் மீதும், இவர் சார்ந்த மதத்தின் மீதும், சர்ச்கள் மீதும் சேற்றை வாரி இறைத்தால் என்னாகும்? //


என்ன ஆகும்?....உடனே நம் மீது சட்டம் பாயும்... மதநல்லிணக்கத்துக்கு கெடுவிளைவிக்கிறார்கள் என்று கொக்கரிக்கும் சோகம்.............. கோபம் கோபம் கோபம் ஊத்திக்கிச்சு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்! Empty Re: மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்!

Post by krishnaamma Fri Sep 28, 2018 8:47 am

//இந்த நிலை தமிழகத்தில் மட்டுமே இருக்கிறது. நாத்திகம், பகுத்தறிவு என்ற போர்வையில் இந்து மத நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும் நாசம் செய்துவிட்டனர் ஒரு தரப்பினர். இத்தனை காலமாக ஜாதீய வெறுப்புகளை முன்னிலைப்படுத்தி, இந்து மதத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டனர். இத்தகைய நாத்திக சிந்தனையாளர்களின் கருத்துக்கள் எல்லாம் இதுநாள்வரை இந்துக்களுக்கு எதிராக மட்டுமே இருந்திருக்கிறது.//


கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லும் தமிழ் நாட்டை ஆளுபவர்கள் கை இல் தான் கோவில்கள் சிக்கிக்கொண்டு இருக்கின்றன.... வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத 'இந்து அறநிலையத்துறை ' என்று வைத்துக்கொண்டு , அல்லாததை யும் பொல்லாததையும் செய்துகொண்டு இருக்கிறார்கள்....சிலைகளை திருடி விற்றும், கோவில் நிலங்களை ஆக்ரமிப்பு செய்தும், பணத்தை கொள்ளை  அடித்தும் கொட்டமடிக்கிறார்கள்......தட்டிக் கேட்க ஆட்கள் இல்லையே !.............என்ன செய்வது??????? சோகம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்! Empty Re: மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்!

Post by krishnaamma Fri Sep 28, 2018 8:56 am

//இந்துக்களின் ஒற்றுமை மட்டுமே இத்தகைய வெறுப்பு பேச்சுகளுக்கு பதிலாக அமைய வேண்டும். நீங்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள். யாரை வேண்டுமானாலும் ஆதரியுங்கள். ஆனால், மதத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். தான் சார்ந்த மதத்தின் அருமை பெருமைகளை மக்களிடம் கொண்டு சேர்க்காமல் அடுத்த மதத்தை இழிவுபடுத்தும் செயலில் இறங்கும் நம்மைச் சுற்றி வளர்ந்து நிற்கும் விஷச் செடிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள்.//


ம்ம்... இது தான் இப்போதைய உடனடித்தேவை ! .... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்! Empty Re: மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்!

Post by aeroboy2000 Fri Sep 28, 2018 6:09 pm

கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லும் தமிழ் நாட்டை ஆளுபவர்கள் கை இல் தான் கோவில்கள் சிக்கிக்கொண்டு இருக்கின்றன.... வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத 'இந்து அறநிலையத்துறை ' என்று வைத்துக்கொண்டு , அல்லாததை யும் பொல்லாததையும் செய்துகொண்டு இருக்கிறார்கள்....சிலைகளை திருடி விற்றும், கோவில் நிலங்களை ஆக்ரமிப்பு செய்தும், பணத்தை கொள்ளை  அடித்தும் கொட்டமடிக்கிறார்கள்.....


அம்மா வாழ்க்கை ஒரு வட்டம் மட்டும் அல்ல
மக்கள் எவ்வழியோ மன்னனும் அவ்வழி
என்ற நியதிக்கு ஏற்ப நடக்கும் நிகழ்வுகள் தான் இவை...

மக்கள்
ஆசை ...
களவு ....
இலவசம் .......
வஞ்சகம் ....

என மனதை குப்பை ஆக்கி விட்டார்கள்
குப்பை சுத்தம் ஆக காலம் ஆகும்....

கடவுள் இல்லை என்று சொன்னவன் மகள் இன்று
காளி கோயிலின் சிறப்பை எழுதுகிறாள் ...
எல்லா நிகழ்வுகளுக்கும் சில காலம் பிடிக்கும்

அது போல் கொள்ளை அடித்தவன்
விரைவில் கொள்ளை போவான் ...

அநீதியில் வந்த செல்வம்
அநீதியில் போய் விடும்...

என்ன....
சிலவற்றை.... மட்டும் நாம் பார்ப்போம் ....
மற்றவற்றை காலம் பார்த்துக்கொள்ளும் ....

இந்த நிலை மாறும்... என்று நம்புங்கள் ...


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்! Empty Re: மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்!

Post by ayyasamy ram Fri Sep 28, 2018 9:00 pm

மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்! 103459460
-
விழிப்புணர்வு ஊட்டும் தகவல்கள்.... மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்! Empty Re: மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்!

Post by சிவனாசான் Sun Sep 30, 2018 7:13 am

சிவா அன்பருக்கு பாராட்டு . மிக நல்ல கருத்தை பநிவு செய்துள்ளீர் நன்றி.
நன்றி. வாழ்க பல்லாண்டு>>>> உம் ஆக்கமும் சிந்தனைகளும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்! Empty Re: மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்!

Post by கோபால்ஜி Sun Sep 30, 2018 5:02 pm

அருமையான பதிவுகள்....இதில் அந்த மத போதகர் பேசியது ஒரு புறம் இருக்கட்டும்,தினம் பொழுது விடிந்தால் அன்றைய அறிக்கைக்கு என்ன பிரச்சினை கிடைக்கும் என்று அலையும் "மதசார்பற்ற" கட்சிகள்,இடது சாரிகள்,"அறிவுஜீவிகள்",லெட்டர் பேட் கட்சிகள்,ஊடகங்கள் என யாருமே இதை கண்டிக்காதது தான் இதில் உள்ள முக்கிய செய்தி..நம்மை பற்றி இவர்கள் மனதில் என்ன அபிப்பிராயம் இருக்கிறது என்பதற்கு இதை விட வேறு சான்று வேண்டாம்..இனியாவது போலி மதச்சார்பின்மைவாதிகளை புறந்தள்ளுவோம்..சிறுபான்மையின சகோரதர்களுக்கு ஒரு வேண்டுகோள் : ஓட்டுக்காக இன்று எங்களை அவமதிக்கும் இந்த அமைப்புகள் நாளை உங்களால் எந்த ஓட்டு பலனும் இல்லை என்ற நிலை வந்தால் உங்களை நட்டாற்றில் விட்டு உங்களையும் அவமதித்து அடுத்த ஓட்டு பிச்சைக்கு சென்று விடுவார்கள்...உங்களுக்கு பாதுகாப்பு இங்கே இருக்கும் கோடிக்கணக்கான ஹிந்து சகோதரர்கள் தானே தவிர இந்த "மதச்சார்பின்மை" அரசியல் வியாதிகள் அல்ல..
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்! Empty Re: மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum