Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!by ayyasamy ram Today at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமும் ஐந்து மிளகு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்
4 posters
Page 1 of 1
தினமும் ஐந்து மிளகு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்
சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும்.
வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்; தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும்.
நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.
மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும்.
நான்கு பூண்டு பல்லுடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து, சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கை வழியில் நீக்கும்.
கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.
சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தினமும் ஐந்து மிளகு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்
‘பத்து மிளகு கையில் இருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்’என்பது பிரபலமான பழமொழி. அப்படி என்ன மிளகுக்கு சிறப்பு இருக்கிறது?
ஆயுர்வேத சிறப்பு மருத்துவர் மகாதேவன் பதிலளிக்கிறார்.
‘‘உணவில் நச்சுத்தன்மை இருந்தாலும் அதை முறியடிக்கும் வல்லமை கொண்டது மிளகு. இதனால்தான் ‘பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என நம் முன்னோர் தைரியம் கொடுத்தார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் விஷ மாற்று மருந்துகளில்முக்கியமானதாக மிளகு இருக்கிறது.
மருந்துகளின் நல்ல சக்தி அதிகமாகவும், கொடுக்கப்படும் மருந்துகளால் நோயாளியின் உடல் பக்கவிளைவால் பாதிக்கப்படாமல் இருக்கவும் மிளகை ஆயுர்வேத மருத்துவர்கள் சேர்க்கிறார்கள். இது மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ சிறப்புகள் அந்த சின்னஞ்சிறிய மிளகில் இருக்கிறது.’’ கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்...
‘‘மிளகை மிகச் சிறந்த இரைப்பை குடலியல் சிறப்பு மருத்துவர் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இரைப்பை, குடல் தொடர்பான பல்வேறு கோளாறுகளைப் போக்க வல்லது மிளகு. மிளகினால் உமிழ்நீர் அதிகம் பெருகுவதால் செரிமானம் மேம்படும், சுவை உணர்வு அதிகமாகும், பசி உணர்வு தூண்டப்படும். குடல், கல்லீரல் போன்ற உறுப்புகள் சுறுசுறுப்புடன் இயங்கும்.
சாம்பார் பொடி, ரசப்பொடி போன்ற துணை உணவுப் பொருட்களின் கூட்டில் மிளகை நம்மவர்கள் சேர்த்துக் கொள்ளும் ரகசியம் இதுதான். இவற்றுடன் சளியை அகற்றுவதற்கும் மிளகு பயன்படுகிறது. இதனால்தான் மிளகு சூப், பெப்பர் டீ என மிளகு கலந்து பலர்
சாப்பிடுகிறார்கள்.’’
மிளகை எப்படியெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்?
‘‘இட்லி, தோசைக்கு மிளகு பொடி செய்து தொட்டுக் கொள்ளலாம். மிளகைப் பொடித்து நெய்விட்டு பிசைந்து ஒரு கவளம் சாப்பிடலாம். இதேபோல் சாதத்தில் போட்டுப் பிசறி நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டு வர ஜீரண கோளாறுகள் நீங்கும். மிளகை ரசமாக வைத்து சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கிராம் மிளகுப் பொடியை தேனில் கலந்து இருவேளை உண்ணலாம்.
சீரகமும் மிளகும், உப்பும் சேர்த்து பொடித்துச் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் அஜீரணத் தொல்லை நீங்கும். வயிற்றில் ஜீரணமில்லாத போக்கு
இருக்கும்போது மிளகை நல்லெண்ணெயில் பொரித்து வெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். மிளகையும், வால்மிளகையும் நெய்யில் பொரித்து சாப்பிட இருமல் குறையும், மிளகையும், துளசியையும் கடித்து மென்று சாப்பிடக் குளிருடன் வரும் காய்ச்சல் நிற்கும். உடலில் வரும் பல அலர்ஜி
தடிப்புகளுக்கு ஆயுர்வேதமருத்துவர் ஆலோசனையின்படி மிளகை சாப்பிட்டு வரலாம். இதனால் பித்தம் சீரடைந்து தடிப்பு
குறைந்துவிடும்.
மிளகை தூள் செய்து தேனில் நன்கு குழப்பி நடுவிரலில் துவைத்து தொண்டையினுள் தடவ உள்நாக்குத் தொங்குதல் குறையும். அதனால் ஏற்படும் இருமல் தொண்டை கரகரப்பு குறையும். பசுவின் பாலில் மிளகை ஊற வைத்து அரைத்து கலக்கி சாப்பிட்டுவர நீர்த்துவார வலி குறையும். பல் வலி குறைய இதன் தூளும் தைலமும் சிறந்தது. தொண்டை வறண்டோ, வெந்தோ, அடைபட்டோ, குரல் கம்மிவந்தபோதோ, நல்ல நெய்யில் பொரித்த வால் மிளகுடன் திராட்சை பனங்கற்கண்டு, குங்குமப்பூ, பச்சை கற்பூரம், வாதுமைப் பருப்பு இவைகளைச் சேர்த்து மாத்திரை செய்து அரைத்து பயன்படுத்துவது உண்டு.’’
வேறு எப்படி மிளகைப் பயன்படுத்தலாம்?
‘‘மிளகு தூள், வெங்காயம், உப்பு இம்மூன்றையும் அரைத்துத் தலையில் புழு வெட்டுள்ள இடத்தில் பூசி வர, அங்கு முடி முளைக்கும். மிளகு 25 கிராம், சோம்பு 50 கிராம் இரண்டையும் தூள் செய்து வெல்லம்150 கிராம் சேர்த்து இடித்து வைத்துக் கொண்டு தினமும் இரு வேளை சாப்பிட்டு வர வயதானவர்களுக்கும், இளைத்தவர்களுக்கும் ஏற்படும் ஆசனவாய் வலி குணமாகும்.
மூக்குச்சதை அடைப்பு, கட்டிச்சளி, அடைப்பு, முன் மண்டை, உடல் வெக்கை, நீர்க்கோர்வை, தலைவலி இவைகளுக்கு ஊசி முனையில் மிளகைக் குத்தி அனலில் காட்டி அதன் புகையை மூக்கினுள் செலுத்தி சுவாசித்தால் அடைப்பு நீங்கும்.வலியும் குறையும். வெள்ளை மிளகை பால் விட்டரைத்துச் சுடவைத்து சிலர் தலையில் தேய்த்துக் கொள்வதுண்டு. எண்ணெய் தேய்த்துக் கொள்ள முடியாதவர் கடும் நோய்வாய்ப்பட்டு எழுந்தவர்,
எண்ணெய் ஒத்துக்கொள்ளாதவர் இவ்விதம் பால்மிளகு தேய்த்து குளிக்கலாம். இதனால் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
இதேபோல பன்னீரில் அரைத்துத் தலையில் மெலிதாகப் பற்றுப் போட தலையின் வேதனை குறையும். வாய் நாற்றம், எகிறு வீக்கம் இவைகளில் வால்மிளகுத்தூள் சேர்த்த பற்பொடிநல்ல பலன் தரும். உடலில் வாத கபங்களினால் வரும் நோயை மாற்றுவதற்கு மிளகு பயன்படுகிறது.
நல்ல மிளகு 6, தர்ப்பைப் புல் ஒரு பிடி, சீரகம் - 2 சிட்டிகை இவற்றை மைபோல் அரைத்து நெல்லிக்காய் அளவு பாலில் சாப்பிட எல்லா விஷமும் முறியும்.’’
மிளகை யார் பயன்படுத்தக் கூடாது?
‘‘வயிற்றில் குடற்புண்(அல்சர்) உள்ளவர்கள், அதிக ரத்தக் கொதிப்பு கொண்டவர்கள், ரத்தம் உறையும் தன்மையைத் தடுக்கும் மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் மிளகைத் தவிர்ப்பது நல்லது.’’
- க. இளஞ்சேரன்
நன்றி தினகரன்
ஆயுர்வேத சிறப்பு மருத்துவர் மகாதேவன் பதிலளிக்கிறார்.
‘‘உணவில் நச்சுத்தன்மை இருந்தாலும் அதை முறியடிக்கும் வல்லமை கொண்டது மிளகு. இதனால்தான் ‘பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என நம் முன்னோர் தைரியம் கொடுத்தார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் விஷ மாற்று மருந்துகளில்முக்கியமானதாக மிளகு இருக்கிறது.
மருந்துகளின் நல்ல சக்தி அதிகமாகவும், கொடுக்கப்படும் மருந்துகளால் நோயாளியின் உடல் பக்கவிளைவால் பாதிக்கப்படாமல் இருக்கவும் மிளகை ஆயுர்வேத மருத்துவர்கள் சேர்க்கிறார்கள். இது மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ சிறப்புகள் அந்த சின்னஞ்சிறிய மிளகில் இருக்கிறது.’’ கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்...
‘‘மிளகை மிகச் சிறந்த இரைப்பை குடலியல் சிறப்பு மருத்துவர் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இரைப்பை, குடல் தொடர்பான பல்வேறு கோளாறுகளைப் போக்க வல்லது மிளகு. மிளகினால் உமிழ்நீர் அதிகம் பெருகுவதால் செரிமானம் மேம்படும், சுவை உணர்வு அதிகமாகும், பசி உணர்வு தூண்டப்படும். குடல், கல்லீரல் போன்ற உறுப்புகள் சுறுசுறுப்புடன் இயங்கும்.
சாம்பார் பொடி, ரசப்பொடி போன்ற துணை உணவுப் பொருட்களின் கூட்டில் மிளகை நம்மவர்கள் சேர்த்துக் கொள்ளும் ரகசியம் இதுதான். இவற்றுடன் சளியை அகற்றுவதற்கும் மிளகு பயன்படுகிறது. இதனால்தான் மிளகு சூப், பெப்பர் டீ என மிளகு கலந்து பலர்
சாப்பிடுகிறார்கள்.’’
மிளகை எப்படியெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்?
‘‘இட்லி, தோசைக்கு மிளகு பொடி செய்து தொட்டுக் கொள்ளலாம். மிளகைப் பொடித்து நெய்விட்டு பிசைந்து ஒரு கவளம் சாப்பிடலாம். இதேபோல் சாதத்தில் போட்டுப் பிசறி நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டு வர ஜீரண கோளாறுகள் நீங்கும். மிளகை ரசமாக வைத்து சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கிராம் மிளகுப் பொடியை தேனில் கலந்து இருவேளை உண்ணலாம்.
சீரகமும் மிளகும், உப்பும் சேர்த்து பொடித்துச் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் அஜீரணத் தொல்லை நீங்கும். வயிற்றில் ஜீரணமில்லாத போக்கு
இருக்கும்போது மிளகை நல்லெண்ணெயில் பொரித்து வெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். மிளகையும், வால்மிளகையும் நெய்யில் பொரித்து சாப்பிட இருமல் குறையும், மிளகையும், துளசியையும் கடித்து மென்று சாப்பிடக் குளிருடன் வரும் காய்ச்சல் நிற்கும். உடலில் வரும் பல அலர்ஜி
தடிப்புகளுக்கு ஆயுர்வேதமருத்துவர் ஆலோசனையின்படி மிளகை சாப்பிட்டு வரலாம். இதனால் பித்தம் சீரடைந்து தடிப்பு
குறைந்துவிடும்.
மிளகை தூள் செய்து தேனில் நன்கு குழப்பி நடுவிரலில் துவைத்து தொண்டையினுள் தடவ உள்நாக்குத் தொங்குதல் குறையும். அதனால் ஏற்படும் இருமல் தொண்டை கரகரப்பு குறையும். பசுவின் பாலில் மிளகை ஊற வைத்து அரைத்து கலக்கி சாப்பிட்டுவர நீர்த்துவார வலி குறையும். பல் வலி குறைய இதன் தூளும் தைலமும் சிறந்தது. தொண்டை வறண்டோ, வெந்தோ, அடைபட்டோ, குரல் கம்மிவந்தபோதோ, நல்ல நெய்யில் பொரித்த வால் மிளகுடன் திராட்சை பனங்கற்கண்டு, குங்குமப்பூ, பச்சை கற்பூரம், வாதுமைப் பருப்பு இவைகளைச் சேர்த்து மாத்திரை செய்து அரைத்து பயன்படுத்துவது உண்டு.’’
வேறு எப்படி மிளகைப் பயன்படுத்தலாம்?
‘‘மிளகு தூள், வெங்காயம், உப்பு இம்மூன்றையும் அரைத்துத் தலையில் புழு வெட்டுள்ள இடத்தில் பூசி வர, அங்கு முடி முளைக்கும். மிளகு 25 கிராம், சோம்பு 50 கிராம் இரண்டையும் தூள் செய்து வெல்லம்150 கிராம் சேர்த்து இடித்து வைத்துக் கொண்டு தினமும் இரு வேளை சாப்பிட்டு வர வயதானவர்களுக்கும், இளைத்தவர்களுக்கும் ஏற்படும் ஆசனவாய் வலி குணமாகும்.
மூக்குச்சதை அடைப்பு, கட்டிச்சளி, அடைப்பு, முன் மண்டை, உடல் வெக்கை, நீர்க்கோர்வை, தலைவலி இவைகளுக்கு ஊசி முனையில் மிளகைக் குத்தி அனலில் காட்டி அதன் புகையை மூக்கினுள் செலுத்தி சுவாசித்தால் அடைப்பு நீங்கும்.வலியும் குறையும். வெள்ளை மிளகை பால் விட்டரைத்துச் சுடவைத்து சிலர் தலையில் தேய்த்துக் கொள்வதுண்டு. எண்ணெய் தேய்த்துக் கொள்ள முடியாதவர் கடும் நோய்வாய்ப்பட்டு எழுந்தவர்,
எண்ணெய் ஒத்துக்கொள்ளாதவர் இவ்விதம் பால்மிளகு தேய்த்து குளிக்கலாம். இதனால் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
இதேபோல பன்னீரில் அரைத்துத் தலையில் மெலிதாகப் பற்றுப் போட தலையின் வேதனை குறையும். வாய் நாற்றம், எகிறு வீக்கம் இவைகளில் வால்மிளகுத்தூள் சேர்த்த பற்பொடிநல்ல பலன் தரும். உடலில் வாத கபங்களினால் வரும் நோயை மாற்றுவதற்கு மிளகு பயன்படுகிறது.
நல்ல மிளகு 6, தர்ப்பைப் புல் ஒரு பிடி, சீரகம் - 2 சிட்டிகை இவற்றை மைபோல் அரைத்து நெல்லிக்காய் அளவு பாலில் சாப்பிட எல்லா விஷமும் முறியும்.’’
மிளகை யார் பயன்படுத்தக் கூடாது?
‘‘வயிற்றில் குடற்புண்(அல்சர்) உள்ளவர்கள், அதிக ரத்தக் கொதிப்பு கொண்டவர்கள், ரத்தம் உறையும் தன்மையைத் தடுக்கும் மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் மிளகைத் தவிர்ப்பது நல்லது.’’
- க. இளஞ்சேரன்
நன்றி தினகரன்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: தினமும் ஐந்து மிளகு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்
கேரளாவில் இருந்து விற்பனையாகும் ஒரு சர்வதேச மருந்தின்
முக்கியமான அங்கம் மிளகு ,வால்மிளகு ,சுக்கு ,பனங்கல்கண்டு முதலியவை.
இருமல் .சுவாச கோளாறுகளுக்கு உட்கொள்ளலாமென விளம்பரம்.
கைமருந்தாக 10 ரூபாயில் முடியக்கூடிய சில விஷயங்கள் 300 /400 போட்டு
பிளாஸ்டிக் பாட்டில்களில் வாங்குகிறோம்.
ரமணியன்
முக்கியமான அங்கம் மிளகு ,வால்மிளகு ,சுக்கு ,பனங்கல்கண்டு முதலியவை.
இருமல் .சுவாச கோளாறுகளுக்கு உட்கொள்ளலாமென விளம்பரம்.
கைமருந்தாக 10 ரூபாயில் முடியக்கூடிய சில விஷயங்கள் 300 /400 போட்டு
பிளாஸ்டிக் பாட்டில்களில் வாங்குகிறோம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தினமும் ஐந்து மிளகு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்
கெட்டி மிளகு, வால் மிளகு என்றுதான் கேள்வி பட்டிருக்கேன் .கருமிளகும்
உண்டு என பதிவில் கண்டு தெரிந்தேன் . நன்றி அன்பரே..
உண்டு என பதிவில் கண்டு தெரிந்தேன் . நன்றி அன்பரே..
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்.:
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
» தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !!!
» தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
» தினமும் இரண்டு மிளகு சாப்பிடுங்கள்..!
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
» தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !!!
» தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
» தினமும் இரண்டு மிளகு சாப்பிடுங்கள்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|