Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - சிறுகதை
+2
சிவனாசான்
SK
6 posters
Page 1 of 1
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - சிறுகதை
அறந்தாங்கி தாண்டி கட்டுமாவடின்னு ஒரு ஊர் .அதுக்கு பக்கத்துல அடைக்கத்தேவன்னு ஒரு கிராமம் .கிராமத்துக்கு உண்டான எல்லா அடையாளமும் இருக்குற ஊரு இது தான்.
இந்த ஊருக்கு பொண்ணு பாக்க போயிட்டு இருக்குற என் பேரு கெளதம் .பொண்ணு எனக்கில்லைங்க என் அண்ணனுக்கு .நான் என் அண்ணன் தங்கச்சி அப்புறம் அம்மா அப்பா எல்லோரும் போயிட்டு தான் இருக்கோம் .என் அம்மாவுக்கு பொண்ணோட அப்பா அண்ணன் தான்.அதனால தான் போயிட்டு இருக்கோம் .கட்டுமாவடில இருந்து அடைக்கதேவனுக்கு டவுன் பஸ்ல போகணும் .ஆனா பஸ்ல எங்களோட மூட்டை மூட்டையா கருவாடு வருது .மொத்த குடும்பத்துக்கும் வாந்தி எடுத்து எடுத்து மயக்கமும் தான் வருது .ஒருவழியா வந்து இறங்கிட்டோம்.இறங்குன உடனே உடம்புல ஒரு மாதிரி பிசுபிசுப்பு.என் அம்மா சொன்னாங்க "தம்பி இங்க கடல் பக்கம்டா.உப்பு காத்துல உடம்பு பிசுப்பு தட்டும் ஒண்ணும் ஆகாது .வாங்க"எங்கம்மாவுக்கு இதேல்லாம் சகஜம் போல.
அம்மா தலைமையில் நாங்க எல்லோரும் பின்தொடர்ந்தோம்.அப்ப தூரத்தில் ஒரு tvs 50 மின்னல் மாதிரி வந்துட்டு இருந்துச்சு .பக்கத்துல வரும்போது தான் கவனிச்சேன் .அது ஆம்பளை மாதிரி சட்டை போட்டுறுக்குற ஒரு பொண்ணுன்னு.எங்கம்மா அந்த பொண்ண தலையில கொட்டி "அடியேய் இவளே .எதுக்குடி இவ்ளோ வேகம் .கல்யாண பொண்ணு மாதிரி இல்லாம எதுக்குடி இங்க வந்த"என்று மிரட்ட பதிலுக்கு அவள் "அப்பா கொள்ளைக்கு போனது இன்னும் வரல.தம்பியவும் காணோம் .வெயிலுக்குள்ள எம்புட்டு தூரம் நடப்பீக.அது தான் வந்தேன் ."என்றதும் என் அண்ணன் என் முகத்த சோகமா பாத்தான் .அதுக்கான காரணம் அந்த பொண்ணோட நிறம் .அந்த பொண்ணு கருப்பா இருந்தா.அந்த பொண்ணு அம்மா தங்கச்சிய முதலில் கூட்டிட்டு போனா .அப்புறம் என் அப்பாவ.எங்கள கூப்புட அவுங்க அப்பா வந்தாரு .சின்னதா ஒரு ஓட்டு வீடு .வாசல்ல ஒரு பெட்டி கடை.நல்லா வளந்து நிக்குற ஒரு வேப்பம் மரம் .திண்ணையில் ஒரு பெரிய கலப்பை .போன உடனே நம்ம ஊர் சொம்பு நிறைய டீ .காரக் பால் சைஸ்ல போண்டா.இது உபசரிப்பா இல்ல உபத்திரவமான்னு தெரியல .மறு நாள் காலையில பொண்ணு பாக்க போறோம் .அதுனால பக்கத்து வீட்டு வாசல்ல படுக்கை .வரிசையா ரோம்ப வருஷம் ஆகுது .எங்க மொத்த குடும்பமும் ஒண்ணா படுத்து.எங்கம்மா அவுங்க அண்ணன் கூட உக்காந்து பழைய கதைகள பேசிட்டு இருக்காங்க .
நிலா வெளிச்சத்தில் என் பக்கத்துல என் அண்ணன் கண் கலங்கிட்டு இருந்தான் .நான் அத கவனுச்சேன்.எனக்கு அவன பத்தி தெரியும் .அவன் ரோம்ப அமைதியானவன்.எதையுமே அம்மா அப்பாகிட்ட தைரியமா சொல்ல மாட்டான் .பயப்படுவான்.அவனுக்கு இந்த சூழ்நிலை .இந்த பொண்ணு எதுவுமே புடிக்கலை.இதை யார்கிட்டயும் சொல்ற தைரியமும் இல்ல .அவன் ராத்திரி பூரா தூங்கல நானும் தான்.காலையில குளிக்க குளத்துக்கு போனோம் .ஆடு மாடு மனுஷன் எல்லோருக்கும் ஒரே குளம் தான்.
அப்புறம் மறந்துட்டேன் பொண்ணு பேரு முத்துலட்சுமி .காலையில பத்து மணிக்கு ஊர் பெரிய மனுஷங்க எல்லோரும் வந்துட்டாங்க .அப்போது வீட்டு வாசல்ல ஒரு பெண் கையில் குழந்தையுடன் பயந்த முகத்துடன் வெளியே நின்றாள் .எங்க மாமா போய் விசாருச்சு முத்துலட்சுமிய அனுப்பி வச்சாரு .வீட்டு பின்பக்கம் வரச்சொல்லி அந்த குழந்தைய தூக்கி பாத்து "ஒண்ணுமில்ல நங்கை.புள்ளைக்குகுடல் பிரண்டிருக்கு.இதுக்கு போய் பயந்துட்டு."என்றவள் வீட்டுக்குள் இருந்து கிண்ணத்தில் எண்ணெய் கொண்டு வந்து குழந்தைய தனது காலில் படுக்க வைத்து தனது நாக்கை சுழற்றி விளையாட்டு காட்டியவாறே வயிற்றை நீவி சரி செய்தாள் .அழுத குழந்தை சில நிமிடத்தில் அவளின் கொஞ்சலுக்கு சிரித்தது.குழந்தையின் தாய்"எப்படிப்பட்ட குழந்தையும் உன் கையில சிரிச்சுரும் புள்ள"என்றபடி தனது முந்தானையில் கிடந்த பத்து ரூபாயை கொடுக்க அதை வாங்கியவள் .வீட்டுகுள்ள வந்து சாமி படத்திற்கு கீழே இருந்த உண்டியலில் போட்டாள்.பிறகு பெண் பார்க்கும் படலம் தொடங்க நான் அதை நிறுத்த எண்ணி எழ அதற்குள் முத்துலட்சுமி சபையோர் முன்னிலையில் "என்ன மன்னிச்சுருங்க எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை.எங்க அப்பா அம்மாகிட்ட சொன்னேன் கேக்கல.அதனால தான் உங்க முன்னாடி சொல்றேன் "என்றதும் அவளோட அப்பா அடிக்க கை ஓங்க எங்கப்பா தடுத்து "ஏம்மா வேணாம்னு சொல்ற "என்றதும் "எப்படி மாமா சரியா வரும் .மாமாவும் நானும் ஜோடிய நின்னா கூட எல்லோரும் சிரிப்பாங்க.உறவுக்காக கல்யாணம் பண்ணி வச்சு அவரு வாழ்கையை கெடுத்துறாதீங்க மாமா"என்று அவள் சொன்னதும் சபை அமைதியானது.அவள் கண்கள் கலங்கி போனது .அவள் முந்திவிட்டாள்.என் அண்ணன் மெளனத்தின் மொழி உணர்ந்து தன்னை தாழ்த்தி உயர்ந்துவிட்டாள்.அன்று மதியம் பஸ்க்கு காத்திருந்தோம் .நான் என் அம்மாவிடம் "அம்மா என் போன மறந்துட்டேன் "என்று அவள் வீட்டிற்கு வந்தேன் .அவள் நடுவீட்டில் தேம்பி தேம்பி அழுதுகொண்டு இருந்தாள் .நான் அவள் அருகில் அமர்ந்து அவளுடைய கண்ணாடி வளையல் நிறைந்த கைகளை பிடித்து "இன்னும் எத்தனை வருஷம் வாழ போறேன்னு தெரியல.ஆனா வாழ போற ஒவ்வொரு நிமிஷமும் உன்கூட வாழனும்னு ஆசப்படுறேன்.இந்த முகத்த தாண்டி ஒரு அழகு இருக்குடி.அது உன் மனசு .இந்த கருவாச்சி முந்தானையக்குள்ள புதைஞ்சு வாழ விரும்புறேன் .என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?"என்றதும் அவள் அதிர்ச்சியில் உறைந்து என் கை உதறி வீட்டுக்குள் புகுந்து கதவடைத்தாள்.
கொஞ்ச நேரம் காத்திருந்தேன் வரவேயில்லை.நான் கிளம்பி வாசல் வந்ததும் ஜன்னல் வழியே சலசலவேன கண்ணாடி வளையல் குலுங்க நான் திரும்பி பார்க்க"அவள் என்னிடம் "பரிசம் போட எப்ப வருவீக?"என்றதும் நான் "மொதல்ல அண்ணன் கல்யாணம் அடுத்த நம்ம கல்யாணம்"என்றேன் .
ஆறு மாசத்துல அண்ணன் கல்யாணம் .அடுத்த மாசமே எங்க கல்யாணம் .
கல்யாணம் முடிஞ்சதும் அண்ணன் அமெரிக்கா போயிட்டான் .வரவேயில்லை .ஆறு வருஷம் கழிச்சு தங்கச்சி கல்யாணத்துக்கு வந்தான் .அவனுக்கு ஒரே பையன்.எனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு.இப்ப மூணாவது வயித்துல அஞ்சு மாசம் .என் அண்ணன் எங்கள பாத்துட்டே இருந்தான் .மொத்த கல்யாண வேலையையும் முத்துலட்சுமி கவனிச்சுட்டு இருந்தாள்.எனக்கு டையத்துக்கு சாப்பாடு தந்துட்டு என் அம்மா அப்பாவ கவனிச்சுட்டு.மொத்த குடும்பத்துக்கும் ஒரு தாய் போல.அதே சமயம் கல்யாணத்துல மூலையில உக்காந்து பேஸ்புக் பாத்துட்டு இருந்த தன்னோட பொண்டாட்டியையும் பாத்தான் .இப்ப புரிஞ்சுருக்கும் ஆண்டவன் தேவதைய கண்ணுல காட்டும் போதே புரிஞ்சுக்கனும்னு.
(மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் )
இதுவரை 50 முறைக்கு மேல் படித்துவிட்டேன் சளைக்கவில்லை
" நன்றி வாட்சப் தோழி"
இந்த ஊருக்கு பொண்ணு பாக்க போயிட்டு இருக்குற என் பேரு கெளதம் .பொண்ணு எனக்கில்லைங்க என் அண்ணனுக்கு .நான் என் அண்ணன் தங்கச்சி அப்புறம் அம்மா அப்பா எல்லோரும் போயிட்டு தான் இருக்கோம் .என் அம்மாவுக்கு பொண்ணோட அப்பா அண்ணன் தான்.அதனால தான் போயிட்டு இருக்கோம் .கட்டுமாவடில இருந்து அடைக்கதேவனுக்கு டவுன் பஸ்ல போகணும் .ஆனா பஸ்ல எங்களோட மூட்டை மூட்டையா கருவாடு வருது .மொத்த குடும்பத்துக்கும் வாந்தி எடுத்து எடுத்து மயக்கமும் தான் வருது .ஒருவழியா வந்து இறங்கிட்டோம்.இறங்குன உடனே உடம்புல ஒரு மாதிரி பிசுபிசுப்பு.என் அம்மா சொன்னாங்க "தம்பி இங்க கடல் பக்கம்டா.உப்பு காத்துல உடம்பு பிசுப்பு தட்டும் ஒண்ணும் ஆகாது .வாங்க"எங்கம்மாவுக்கு இதேல்லாம் சகஜம் போல.
அம்மா தலைமையில் நாங்க எல்லோரும் பின்தொடர்ந்தோம்.அப்ப தூரத்தில் ஒரு tvs 50 மின்னல் மாதிரி வந்துட்டு இருந்துச்சு .பக்கத்துல வரும்போது தான் கவனிச்சேன் .அது ஆம்பளை மாதிரி சட்டை போட்டுறுக்குற ஒரு பொண்ணுன்னு.எங்கம்மா அந்த பொண்ண தலையில கொட்டி "அடியேய் இவளே .எதுக்குடி இவ்ளோ வேகம் .கல்யாண பொண்ணு மாதிரி இல்லாம எதுக்குடி இங்க வந்த"என்று மிரட்ட பதிலுக்கு அவள் "அப்பா கொள்ளைக்கு போனது இன்னும் வரல.தம்பியவும் காணோம் .வெயிலுக்குள்ள எம்புட்டு தூரம் நடப்பீக.அது தான் வந்தேன் ."என்றதும் என் அண்ணன் என் முகத்த சோகமா பாத்தான் .அதுக்கான காரணம் அந்த பொண்ணோட நிறம் .அந்த பொண்ணு கருப்பா இருந்தா.அந்த பொண்ணு அம்மா தங்கச்சிய முதலில் கூட்டிட்டு போனா .அப்புறம் என் அப்பாவ.எங்கள கூப்புட அவுங்க அப்பா வந்தாரு .சின்னதா ஒரு ஓட்டு வீடு .வாசல்ல ஒரு பெட்டி கடை.நல்லா வளந்து நிக்குற ஒரு வேப்பம் மரம் .திண்ணையில் ஒரு பெரிய கலப்பை .போன உடனே நம்ம ஊர் சொம்பு நிறைய டீ .காரக் பால் சைஸ்ல போண்டா.இது உபசரிப்பா இல்ல உபத்திரவமான்னு தெரியல .மறு நாள் காலையில பொண்ணு பாக்க போறோம் .அதுனால பக்கத்து வீட்டு வாசல்ல படுக்கை .வரிசையா ரோம்ப வருஷம் ஆகுது .எங்க மொத்த குடும்பமும் ஒண்ணா படுத்து.எங்கம்மா அவுங்க அண்ணன் கூட உக்காந்து பழைய கதைகள பேசிட்டு இருக்காங்க .
நிலா வெளிச்சத்தில் என் பக்கத்துல என் அண்ணன் கண் கலங்கிட்டு இருந்தான் .நான் அத கவனுச்சேன்.எனக்கு அவன பத்தி தெரியும் .அவன் ரோம்ப அமைதியானவன்.எதையுமே அம்மா அப்பாகிட்ட தைரியமா சொல்ல மாட்டான் .பயப்படுவான்.அவனுக்கு இந்த சூழ்நிலை .இந்த பொண்ணு எதுவுமே புடிக்கலை.இதை யார்கிட்டயும் சொல்ற தைரியமும் இல்ல .அவன் ராத்திரி பூரா தூங்கல நானும் தான்.காலையில குளிக்க குளத்துக்கு போனோம் .ஆடு மாடு மனுஷன் எல்லோருக்கும் ஒரே குளம் தான்.
அப்புறம் மறந்துட்டேன் பொண்ணு பேரு முத்துலட்சுமி .காலையில பத்து மணிக்கு ஊர் பெரிய மனுஷங்க எல்லோரும் வந்துட்டாங்க .அப்போது வீட்டு வாசல்ல ஒரு பெண் கையில் குழந்தையுடன் பயந்த முகத்துடன் வெளியே நின்றாள் .எங்க மாமா போய் விசாருச்சு முத்துலட்சுமிய அனுப்பி வச்சாரு .வீட்டு பின்பக்கம் வரச்சொல்லி அந்த குழந்தைய தூக்கி பாத்து "ஒண்ணுமில்ல நங்கை.புள்ளைக்குகுடல் பிரண்டிருக்கு.இதுக்கு போய் பயந்துட்டு."என்றவள் வீட்டுக்குள் இருந்து கிண்ணத்தில் எண்ணெய் கொண்டு வந்து குழந்தைய தனது காலில் படுக்க வைத்து தனது நாக்கை சுழற்றி விளையாட்டு காட்டியவாறே வயிற்றை நீவி சரி செய்தாள் .அழுத குழந்தை சில நிமிடத்தில் அவளின் கொஞ்சலுக்கு சிரித்தது.குழந்தையின் தாய்"எப்படிப்பட்ட குழந்தையும் உன் கையில சிரிச்சுரும் புள்ள"என்றபடி தனது முந்தானையில் கிடந்த பத்து ரூபாயை கொடுக்க அதை வாங்கியவள் .வீட்டுகுள்ள வந்து சாமி படத்திற்கு கீழே இருந்த உண்டியலில் போட்டாள்.பிறகு பெண் பார்க்கும் படலம் தொடங்க நான் அதை நிறுத்த எண்ணி எழ அதற்குள் முத்துலட்சுமி சபையோர் முன்னிலையில் "என்ன மன்னிச்சுருங்க எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை.எங்க அப்பா அம்மாகிட்ட சொன்னேன் கேக்கல.அதனால தான் உங்க முன்னாடி சொல்றேன் "என்றதும் அவளோட அப்பா அடிக்க கை ஓங்க எங்கப்பா தடுத்து "ஏம்மா வேணாம்னு சொல்ற "என்றதும் "எப்படி மாமா சரியா வரும் .மாமாவும் நானும் ஜோடிய நின்னா கூட எல்லோரும் சிரிப்பாங்க.உறவுக்காக கல்யாணம் பண்ணி வச்சு அவரு வாழ்கையை கெடுத்துறாதீங்க மாமா"என்று அவள் சொன்னதும் சபை அமைதியானது.அவள் கண்கள் கலங்கி போனது .அவள் முந்திவிட்டாள்.என் அண்ணன் மெளனத்தின் மொழி உணர்ந்து தன்னை தாழ்த்தி உயர்ந்துவிட்டாள்.அன்று மதியம் பஸ்க்கு காத்திருந்தோம் .நான் என் அம்மாவிடம் "அம்மா என் போன மறந்துட்டேன் "என்று அவள் வீட்டிற்கு வந்தேன் .அவள் நடுவீட்டில் தேம்பி தேம்பி அழுதுகொண்டு இருந்தாள் .நான் அவள் அருகில் அமர்ந்து அவளுடைய கண்ணாடி வளையல் நிறைந்த கைகளை பிடித்து "இன்னும் எத்தனை வருஷம் வாழ போறேன்னு தெரியல.ஆனா வாழ போற ஒவ்வொரு நிமிஷமும் உன்கூட வாழனும்னு ஆசப்படுறேன்.இந்த முகத்த தாண்டி ஒரு அழகு இருக்குடி.அது உன் மனசு .இந்த கருவாச்சி முந்தானையக்குள்ள புதைஞ்சு வாழ விரும்புறேன் .என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?"என்றதும் அவள் அதிர்ச்சியில் உறைந்து என் கை உதறி வீட்டுக்குள் புகுந்து கதவடைத்தாள்.
கொஞ்ச நேரம் காத்திருந்தேன் வரவேயில்லை.நான் கிளம்பி வாசல் வந்ததும் ஜன்னல் வழியே சலசலவேன கண்ணாடி வளையல் குலுங்க நான் திரும்பி பார்க்க"அவள் என்னிடம் "பரிசம் போட எப்ப வருவீக?"என்றதும் நான் "மொதல்ல அண்ணன் கல்யாணம் அடுத்த நம்ம கல்யாணம்"என்றேன் .
ஆறு மாசத்துல அண்ணன் கல்யாணம் .அடுத்த மாசமே எங்க கல்யாணம் .
கல்யாணம் முடிஞ்சதும் அண்ணன் அமெரிக்கா போயிட்டான் .வரவேயில்லை .ஆறு வருஷம் கழிச்சு தங்கச்சி கல்யாணத்துக்கு வந்தான் .அவனுக்கு ஒரே பையன்.எனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு.இப்ப மூணாவது வயித்துல அஞ்சு மாசம் .என் அண்ணன் எங்கள பாத்துட்டே இருந்தான் .மொத்த கல்யாண வேலையையும் முத்துலட்சுமி கவனிச்சுட்டு இருந்தாள்.எனக்கு டையத்துக்கு சாப்பாடு தந்துட்டு என் அம்மா அப்பாவ கவனிச்சுட்டு.மொத்த குடும்பத்துக்கும் ஒரு தாய் போல.அதே சமயம் கல்யாணத்துல மூலையில உக்காந்து பேஸ்புக் பாத்துட்டு இருந்த தன்னோட பொண்டாட்டியையும் பாத்தான் .இப்ப புரிஞ்சுருக்கும் ஆண்டவன் தேவதைய கண்ணுல காட்டும் போதே புரிஞ்சுக்கனும்னு.
(மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் )
இதுவரை 50 முறைக்கு மேல் படித்துவிட்டேன் சளைக்கவில்லை
" நன்றி வாட்சப் தோழி"
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - சிறுகதை
மனைவி அமைவதெல்லாம் அவன் ஜென்ம மெடுத்த நேரங்க.
இறைவன் கொடுத்த வரமல்ல<< ஜெனனீ ஜென்ம சவுக்யானாம்
எனபதுபோல அவன் பிறந்த நேரம் ஜாதகப்படி எனலாம்.
இறைவன் கொடுத்த வரமல்ல<< ஜெனனீ ஜென்ம சவுக்யானாம்
எனபதுபோல அவன் பிறந்த நேரம் ஜாதகப்படி எனலாம்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - சிறுகதை
மனைவி அமைவதெல்லாம் இறைவன் வரமென்றால்,
இது மாதிரி கதைகள் ஈகரையில் பதிவாவதும்
இறைவன் வரமே.
SK ,இது மாதிரி முத்துக்களை தொடர்ந்து பதிவிடவும்.
ரமணியன்
இது மாதிரி கதைகள் ஈகரையில் பதிவாவதும்
இறைவன் வரமே.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
Re: மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - சிறுகதை
இது மாதிரி கதைகள் ஈகரையில் பதிவாவதும்
இறைவன் வரமே.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
SK ,இது மாதிரி முத்துக்களை தொடர்ந்து பதிவிடவும்.
ரமணியன்
எனது தோழி அனுப்பிய வாட்ஸாப்ப் கதைகள் தான் அனைத்தும் நான் பகிர்ந்து
எனக்கும் தற்போது ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றுகிறது தவறு ஏற்பட்டால் திருத்துவதற்கு ஈகரை இருக்கிறது என்ற தைரியம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - சிறுகதை
மேற்கோள் செய்த பதிவு: 1276111SK wrote:இது மாதிரி கதைகள் ஈகரையில் பதிவாவதும்
இறைவன் வரமே.
SK ,இது மாதிரி முத்துக்களை தொடர்ந்து பதிவிடவும்.
ரமணியன்
எனது தோழி அனுப்பிய வாட்ஸாப்ப் கதைகள் தான் அனைத்தும் நான் பகிர்ந்து
எனக்கும் தற்போது ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றுகிறது தவறு ஏற்பட்டால் திருத்துவதற்கு ஈகரை இருக்கிறது என்ற தைரியம்
முதலில் ,
முடிவில்" நன்றி வாட்சப் தோழி",என்று
போட ஆரம்பியுங்கள்.
உங்கள் சொந்த கற்பனை கதை என்று
மற்றவர்கள் நினைக்கக்கூடும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - சிறுகதை
கதை மிகவும் அருமை செந்தில் !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» நர்ஸ் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'..!
» கலக்கல் நகைச்சுவை (தொடர்பதிவு)
» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த உரம்..!
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» நர்ஸ் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'..!
» கலக்கல் நகைச்சுவை (தொடர்பதிவு)
» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த உரம்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|