Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:46 am
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
4 posters
Page 1 of 1
திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
-
திமுகவின் நிதி மற்றும் சொத்துகள் தவறாகப்
பயன்படுத்தப்படுவதாக மு.க.அழகிரி குற்றம்
சாட்டியுள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் ஒரு வார துக்கம்
அனுசரிப்புக்கு முன்பே மெரினாவில் உள்ள அவரது
நினைவிடத்தில் மகன் மு.க.அழகிரி திங்கள்கிழமை
போர்க்கொடி உயர்த்தினார்.
தன் குடும்பத்தினருடன் கருணாநிதியின் நினைவிடத்தில்
அஞ்சலி செலுத்திய அழகிரி அதன்பின்பு செய்தியாளர்களிடம்
பேசுகையில், “என்னுடைய ஆதங்கத்தை என் தந்தையிடம்
தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன்.
அது என்ன என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது.
கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே
உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள விசுவாசிகள் என்னையே
ஆதரிக்கின்றனர்.காலம் இதற்கான பதிலைச் சொல்லும்”
எனத் தெரிவித்தார்.
மேலும், அவருடைய ஆதங்கம் கட்சிக்குள்தான் என்றும்,
குடும்பத்திற்குள் இல்லை என்றும் அழகிரி கூறினார்.
கட்சிக்குள் மீண்டும் தான் சேர்த்துக்கொள்ளப்படுவேனா
என்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.
திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை
கூடுவதற்கு ஒருநாள் முன்பு அவர் இவ்வாறு பேசியது
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல், ஒருவார துக்க அனுசரிப்பு முடிவடையும்
முன்னரே கட்சி குறித்து இவ்வாறு அழகிரிபேசியுள்ளார்.
அதன்பின்பு, 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அழகிரி
பேட்டியளித்தார்.
அதில் அவர் கூறுகையில் “திமுகவின் சொத்துகள் மற்றும்
நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. கட்சி நிதியை
வட்டிக்கு விடும் அளவுக்கு அவர்கள் வளைந்துள்ளனர்.
இதனால் வரும் லாபம் கட்சிக்குச் சென்று சேருவதில்லை.
அதனால் யார் லாபம் அடைகின்றனர் என்பது எல்லோருக்கும்
தெரியும்.
நான் இப்போது கட்சிக்குள் இருந்தால், இதனையெல்லாம்
தடுத்திருப்பேன். அதனால் தான் என்னை மீண்டும் கட்சிக்குள்
சேர்க்கத் தயங்குகின்றனர். கட்சியின் சொத்துகளை
அபகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”
எனக் கூறினார்.
மேலும், கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தான்
ஆசைப்படவில்லை எனவும், தொண்டனாக
தன் தந்தையைப் போல் கட்சியை வலுப்படுத்துவதே தனது
எண்ணம் எனவும் அழகிரி தெரிவித்தார்.
மு.க.அழகிரி 1980-களில் திமுகவின் அதிகாரபூர்வமான
நாளிதழான முரசொலியை நிர்வகிப்பதற்காக மதுரைக்கு
இடம்பெயர்ந்தார்.
அப்போதிலிருந்து அவர் தென் தமிழகத்தில் கட்சிக்குள்
பெருத்த செல்வாக்கை அடைந்தார். முன்னாள் மத்திய
அமைச்சராக இருந்தவர் அழகிரி.
இந்நிலையில், திமுகவில் அழகிரி - ஸ்டாலின் இடையே
மோதல் வலுத்தது. இதையடுத்து 2014 மார்ச் 25-ம் தேதி
கட்சியில் இருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
கருணாநிதி உயிருடன் இருந்தபோதே திமுகவில் மீண்டும்
இணைவதற்கு அழகிரி பல பிரயத்தனங்களை எடுத்தாலும்
அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
கருணாநிதியின் மறைவுக்குப் பிறகும் தனக்கு கட்சிக்குள்
பதவியோ அல்லது உரிய இடமோ வழங்கப்படாது என
அறிந்த அழகிரி, தற்போது வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இப்போது, மதுரையில் உள்ள அழகிரியின் ஆதரவாளர்கள்
அவருக்கான ஆதரவை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அழகிரியின் தீவிர ஆதரவாளரான மதுரை மாநகராட்சி
வடக்கு மண்டலத் தலைவர் இசக்கிமுத்து கூறுகையில்,
“அழகிரி மதுரைக்கு வரவேண்டும் என நாங்கள்
காத்திருக்கின்றோம். நாங்கள் அவரிடம் பேசியிருக்கிறோம்.
அவரின் ஆதரவாளர்கள் அனைவரும் இணைந்து தமிழகம்
முழுவதும் கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.
மறைந்த தலைவர் கருணாநிதிக்கு தென் தமிழகத்தில்
ஒழுங்கான இரங்கல் கூட்டங்கள் கூட நடைபெறவில்லை”
எனத் தெரிவித்தார்.
''அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு தென் தமிழகத்தில்
திமுக வலுவிழந்து விட்டது. திமுக அழகிரியை ஒரு அநாதை
போன்று ஆக்கிவிட்டது. மற்ற கட்சியிலிருந்து திமுகவுக்கு
வந்தவர்களுக்கு அங்கே நல்ல பெயர் கிடைக்கிறது'' என்றும்
இசக்கிமுத்து கூறினார்.
அழகிரியின் திடீர் கலகம் குறித்துப் பேசிய திமுக எம்எல்ஏவும்,
ஸ்டாலின் ஆதரவாளருமான ஜெ.அன்பழகன், “அழகிரியைக்
கட்சியிலிருந்து நீக்கும் முடிவை எடுத்தது எங்கள் தலைவர்
கருணாநிதி. அவருடைய முடிவு குறித்து நாங்கள் ஒன்றும்
சொல்ல முடியாது” எனக் கூறினார்.
அழகிரி பலம் பொருந்தியவர் எனவும், அவரால் தான்
மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது
எனவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், ‘‘அழகிரியால் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட
தொகுதியான சங்கரன்கோவிலில் அதே வெற்றியைப்
பெற முடியவில்லை?” என திமுக மாவட்ட செயலாளர்
ஒருவர் கேள்வியெழுப்புகிறார்.
அழகிரி தனக்கு வழங்கப்பட்ட தென்மண்டல அமைப்புச்
செயலாளர் பதவியை தன்னை நிரூபித்துக்கொள்ளப்
பயன்படுத்தாமல், வீணடித்து விட்டதாகவும், சில திமுக
மாவட்டச் செயலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
“முன்னாள் அமைச்சரான தா.கிருட்டிணன் கொலை வழக்கு
தொடர்பில் கைது செய்யப்பட்ட அழகிரி, தன்னுடைய
அரசியல் வாழ்வில் கடினமான காலத்தை எதிர்கொண்டார்.
ஆனால், அதன்பிறகு அவர் பழிவாங்கும் எண்ணத்துடனேயே
இருந்தார்” என மற்றொரு திமுக மாவட்டச் செயலாளர்
கூறுகிறார்.
திமுக ஆட்சியில் இருக்கும் போது மட்டுமே அழகிரி
பிரகாசிப்பார். “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்
அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள், மூத்த
தலைவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படும்போது அழகிரி
அதுகுறித்து கேள்வியெழுப்பியிருக்க வேண்டும்.
அதைச் செய்திருந்தால் தென்தமிழகத்தில் உள்ள கட்சியினர்
அவர் பின்னே இருந்திருப்பர்” எனவும் அந்த மாவட்ட செயலாளர்
கூறினார்.
முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம்,
இசக்கிமுத்து, மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம்.கண்ணன்,
முன்னாள் எம்எல்ஏ கௌஸ் பாஷா, திமுக பொதுக்குழு
முன்னாள் உறுப்பினர் முபாரக் மந்திரி, மதுரை மாநகராட்சி
முன்னாள் தலைவர் எம்.எல்.ராஜ் உள்ளிட்டோர் அழகிரி
ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
-------------------------------
தி இந்து
Re: திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
இவர் தியானத்தில் உக்கரவில்லையா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
பார்லிமென்டில் தியானம்.
மத்திய மந்திரியாக இருந்தபோது அவர் பேசியதே இல்லையாம்.
அவருடைய துணை மந்திரிதான் கேள்விகளுக்கு எல்லாம்
பதில் சொல்லுவாராம் .
உண்மையா?
ரமணியன்
மத்திய மந்திரியாக இருந்தபோது அவர் பேசியதே இல்லையாம்.
அவருடைய துணை மந்திரிதான் கேள்விகளுக்கு எல்லாம்
பதில் சொல்லுவாராம் .
உண்மையா?
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Tue Aug 14, 2018 6:02 pm; edited 1 time in total (Reason for editing : addition)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010
Re: திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
அழகிரிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை ; அவரால் கட்சியை நடத்த முடியாது . சுடாலின் ஓரளவு பக்குவப்பட்ட நிலையில் இருக்கிறார். இப்போதைய சூழ்நிலையில் சுடாலினை விட்டால் மாற்று கிடையாது .எடப்பாடி முதல்வராக இருக்கும்போது , சுடாலின் முதல்வராவதில் என்ன தவறு ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» புற்றுநோய் இருப்பதாக கூறி, தேவதாஸ் என்பவர், என் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார் - கனகா
» திமுகவின் முக்கியப் பொறுப்பில் இருந்து மு.க. அழகிரி விலகல்!
» திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்- மு.க.அழகிரி
» சொத்தை அபகரிக்க முயற்சி-போலீஸ் கமிஷனரிடம் திருமாவளவனின் தாயார் புகார் மனு
» திமுகவின் வெற்றிக்கு துணை போகிறார் விஜயகாந்த்: பாஜக குற்றச்சாட்டு
» திமுகவின் முக்கியப் பொறுப்பில் இருந்து மு.க. அழகிரி விலகல்!
» திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்- மு.க.அழகிரி
» சொத்தை அபகரிக்க முயற்சி-போலீஸ் கமிஷனரிடம் திருமாவளவனின் தாயார் புகார் மனு
» திமுகவின் வெற்றிக்கு துணை போகிறார் விஜயகாந்த்: பாஜக குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|