Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
4 posters
Page 1 of 1
திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
-
திமுகவின் நிதி மற்றும் சொத்துகள் தவறாகப்
பயன்படுத்தப்படுவதாக மு.க.அழகிரி குற்றம்
சாட்டியுள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் ஒரு வார துக்கம்
அனுசரிப்புக்கு முன்பே மெரினாவில் உள்ள அவரது
நினைவிடத்தில் மகன் மு.க.அழகிரி திங்கள்கிழமை
போர்க்கொடி உயர்த்தினார்.
தன் குடும்பத்தினருடன் கருணாநிதியின் நினைவிடத்தில்
அஞ்சலி செலுத்திய அழகிரி அதன்பின்பு செய்தியாளர்களிடம்
பேசுகையில், “என்னுடைய ஆதங்கத்தை என் தந்தையிடம்
தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன்.
அது என்ன என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது.
கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே
உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள விசுவாசிகள் என்னையே
ஆதரிக்கின்றனர்.காலம் இதற்கான பதிலைச் சொல்லும்”
எனத் தெரிவித்தார்.
மேலும், அவருடைய ஆதங்கம் கட்சிக்குள்தான் என்றும்,
குடும்பத்திற்குள் இல்லை என்றும் அழகிரி கூறினார்.
கட்சிக்குள் மீண்டும் தான் சேர்த்துக்கொள்ளப்படுவேனா
என்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.
திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை
கூடுவதற்கு ஒருநாள் முன்பு அவர் இவ்வாறு பேசியது
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல், ஒருவார துக்க அனுசரிப்பு முடிவடையும்
முன்னரே கட்சி குறித்து இவ்வாறு அழகிரிபேசியுள்ளார்.
அதன்பின்பு, 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அழகிரி
பேட்டியளித்தார்.
அதில் அவர் கூறுகையில் “திமுகவின் சொத்துகள் மற்றும்
நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. கட்சி நிதியை
வட்டிக்கு விடும் அளவுக்கு அவர்கள் வளைந்துள்ளனர்.
இதனால் வரும் லாபம் கட்சிக்குச் சென்று சேருவதில்லை.
அதனால் யார் லாபம் அடைகின்றனர் என்பது எல்லோருக்கும்
தெரியும்.
நான் இப்போது கட்சிக்குள் இருந்தால், இதனையெல்லாம்
தடுத்திருப்பேன். அதனால் தான் என்னை மீண்டும் கட்சிக்குள்
சேர்க்கத் தயங்குகின்றனர். கட்சியின் சொத்துகளை
அபகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”
எனக் கூறினார்.
மேலும், கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தான்
ஆசைப்படவில்லை எனவும், தொண்டனாக
தன் தந்தையைப் போல் கட்சியை வலுப்படுத்துவதே தனது
எண்ணம் எனவும் அழகிரி தெரிவித்தார்.
மு.க.அழகிரி 1980-களில் திமுகவின் அதிகாரபூர்வமான
நாளிதழான முரசொலியை நிர்வகிப்பதற்காக மதுரைக்கு
இடம்பெயர்ந்தார்.
அப்போதிலிருந்து அவர் தென் தமிழகத்தில் கட்சிக்குள்
பெருத்த செல்வாக்கை அடைந்தார். முன்னாள் மத்திய
அமைச்சராக இருந்தவர் அழகிரி.
இந்நிலையில், திமுகவில் அழகிரி - ஸ்டாலின் இடையே
மோதல் வலுத்தது. இதையடுத்து 2014 மார்ச் 25-ம் தேதி
கட்சியில் இருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
கருணாநிதி உயிருடன் இருந்தபோதே திமுகவில் மீண்டும்
இணைவதற்கு அழகிரி பல பிரயத்தனங்களை எடுத்தாலும்
அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
கருணாநிதியின் மறைவுக்குப் பிறகும் தனக்கு கட்சிக்குள்
பதவியோ அல்லது உரிய இடமோ வழங்கப்படாது என
அறிந்த அழகிரி, தற்போது வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இப்போது, மதுரையில் உள்ள அழகிரியின் ஆதரவாளர்கள்
அவருக்கான ஆதரவை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அழகிரியின் தீவிர ஆதரவாளரான மதுரை மாநகராட்சி
வடக்கு மண்டலத் தலைவர் இசக்கிமுத்து கூறுகையில்,
“அழகிரி மதுரைக்கு வரவேண்டும் என நாங்கள்
காத்திருக்கின்றோம். நாங்கள் அவரிடம் பேசியிருக்கிறோம்.
அவரின் ஆதரவாளர்கள் அனைவரும் இணைந்து தமிழகம்
முழுவதும் கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.
மறைந்த தலைவர் கருணாநிதிக்கு தென் தமிழகத்தில்
ஒழுங்கான இரங்கல் கூட்டங்கள் கூட நடைபெறவில்லை”
எனத் தெரிவித்தார்.
''அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு தென் தமிழகத்தில்
திமுக வலுவிழந்து விட்டது. திமுக அழகிரியை ஒரு அநாதை
போன்று ஆக்கிவிட்டது. மற்ற கட்சியிலிருந்து திமுகவுக்கு
வந்தவர்களுக்கு அங்கே நல்ல பெயர் கிடைக்கிறது'' என்றும்
இசக்கிமுத்து கூறினார்.
அழகிரியின் திடீர் கலகம் குறித்துப் பேசிய திமுக எம்எல்ஏவும்,
ஸ்டாலின் ஆதரவாளருமான ஜெ.அன்பழகன், “அழகிரியைக்
கட்சியிலிருந்து நீக்கும் முடிவை எடுத்தது எங்கள் தலைவர்
கருணாநிதி. அவருடைய முடிவு குறித்து நாங்கள் ஒன்றும்
சொல்ல முடியாது” எனக் கூறினார்.
அழகிரி பலம் பொருந்தியவர் எனவும், அவரால் தான்
மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது
எனவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், ‘‘அழகிரியால் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட
தொகுதியான சங்கரன்கோவிலில் அதே வெற்றியைப்
பெற முடியவில்லை?” என திமுக மாவட்ட செயலாளர்
ஒருவர் கேள்வியெழுப்புகிறார்.
அழகிரி தனக்கு வழங்கப்பட்ட தென்மண்டல அமைப்புச்
செயலாளர் பதவியை தன்னை நிரூபித்துக்கொள்ளப்
பயன்படுத்தாமல், வீணடித்து விட்டதாகவும், சில திமுக
மாவட்டச் செயலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
“முன்னாள் அமைச்சரான தா.கிருட்டிணன் கொலை வழக்கு
தொடர்பில் கைது செய்யப்பட்ட அழகிரி, தன்னுடைய
அரசியல் வாழ்வில் கடினமான காலத்தை எதிர்கொண்டார்.
ஆனால், அதன்பிறகு அவர் பழிவாங்கும் எண்ணத்துடனேயே
இருந்தார்” என மற்றொரு திமுக மாவட்டச் செயலாளர்
கூறுகிறார்.
திமுக ஆட்சியில் இருக்கும் போது மட்டுமே அழகிரி
பிரகாசிப்பார். “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்
அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள், மூத்த
தலைவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படும்போது அழகிரி
அதுகுறித்து கேள்வியெழுப்பியிருக்க வேண்டும்.
அதைச் செய்திருந்தால் தென்தமிழகத்தில் உள்ள கட்சியினர்
அவர் பின்னே இருந்திருப்பர்” எனவும் அந்த மாவட்ட செயலாளர்
கூறினார்.
முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம்,
இசக்கிமுத்து, மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம்.கண்ணன்,
முன்னாள் எம்எல்ஏ கௌஸ் பாஷா, திமுக பொதுக்குழு
முன்னாள் உறுப்பினர் முபாரக் மந்திரி, மதுரை மாநகராட்சி
முன்னாள் தலைவர் எம்.எல்.ராஜ் உள்ளிட்டோர் அழகிரி
ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
-------------------------------
தி இந்து
Re: திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
இவர் தியானத்தில் உக்கரவில்லையா
![திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு Images?q=tbn:ANd9GcQjzLWHpdEZtjfdABnhe0YFv6VwFAfZKZA6ylBcVlKmBr3-OPka](https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQjzLWHpdEZtjfdABnhe0YFv6VwFAfZKZA6ylBcVlKmBr3-OPka)
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
பார்லிமென்டில் தியானம்.
மத்திய மந்திரியாக இருந்தபோது அவர் பேசியதே இல்லையாம்.
அவருடைய துணை மந்திரிதான் கேள்விகளுக்கு எல்லாம்
பதில் சொல்லுவாராம் .
உண்மையா?
ரமணியன்
மத்திய மந்திரியாக இருந்தபோது அவர் பேசியதே இல்லையாம்.
அவருடைய துணை மந்திரிதான் கேள்விகளுக்கு எல்லாம்
பதில் சொல்லுவாராம் .
உண்மையா?
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Tue Aug 14, 2018 6:02 pm; edited 1 time in total (Reason for editing : addition)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
அழகிரிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை ; அவரால் கட்சியை நடத்த முடியாது . சுடாலின் ஓரளவு பக்குவப்பட்ட நிலையில் இருக்கிறார். இப்போதைய சூழ்நிலையில் சுடாலினை விட்டால் மாற்று கிடையாது .எடப்பாடி முதல்வராக இருக்கும்போது , சுடாலின் முதல்வராவதில் என்ன தவறு ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புற்றுநோய் இருப்பதாக கூறி, தேவதாஸ் என்பவர், என் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார் - கனகா
» திமுகவின் முக்கியப் பொறுப்பில் இருந்து மு.க. அழகிரி விலகல்!
» திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்- மு.க.அழகிரி
» சொத்தை அபகரிக்க முயற்சி-போலீஸ் கமிஷனரிடம் திருமாவளவனின் தாயார் புகார் மனு
» திமுகவின் வெற்றிக்கு துணை போகிறார் விஜயகாந்த்: பாஜக குற்றச்சாட்டு
» திமுகவின் முக்கியப் பொறுப்பில் இருந்து மு.க. அழகிரி விலகல்!
» திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்- மு.க.அழகிரி
» சொத்தை அபகரிக்க முயற்சி-போலீஸ் கமிஷனரிடம் திருமாவளவனின் தாயார் புகார் மனு
» திமுகவின் வெற்றிக்கு துணை போகிறார் விஜயகாந்த்: பாஜக குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|