Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.
Page 1 of 1
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.
மூலிகைகளும் அதன் சத்துக்களும்..!
1. அத்தி - இரும்புச்சத்து
2. அம்மான் பச்சரிசி - வெள்ளிச்சத்து
3. அக்கிரகாரம் – செம்புச்சத்து
4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து
5. ஆவாரம் – செம்புச்சத்து
6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து
7. ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து
8. ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து
9. எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து
10. எள்ளு, கடுகு – கந்தகச்சத்து
11. கத்திரிக்காய் – மெக்னீசியம்
12. கரிசலாங்கண்ணி – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து
13. கருவேப்பிலை – இரும்புச்சத்து
14. கீழாநெல்லி – காரீயச்சத்து
15. கோபுரந்தாங்கி – தங்கச்சத்து
16. கோவைஇலை – கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து
17. சங்கு, நாரயணசஞ்சீவி – சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து
18. செந்தொட்டி – செம்புச்சத்து, கந்தகச்சத்து
19. தும்பை – செம்புச்சத்து
20. துத்தி – கால்சியம்
21. தூதுவளை – ஈயச்சத்து
22. நன்னாரி – இரும்புச்சத்து
23. நிலவாகை – தங்கச்சத்து, கந்த்கச்சத்து, ஈயச்சத்து
24. பற்பாடகம் – கந்தகச்சத்து
25. பிரம்மத்தண்டு – தங்கச்சத்து
26. பிரண்டை – உப்புச்சத்து
27. புதினா – இரும்புச்சத்து
28. பெரும்தும்பை – தங்கச்சத்து
29. பொன்னாங்கண்ணி – இரும்புச்சத்து, ஈயச்சத்து, செம்புச்சத்து
30. மணத்தக்காளி – இரும்புச்சத்து, கால்சியம் சத்து
31. முசுமுசுக்கை – சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து
32. முருங்கை – இரும்புச்சத்து
33. வெள்ளை அருகு – ஈயச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உப்புச்சத்து
34. வெண்டைக்காய் – அயோடின்.
35. நுணா – தாமிரச்சத்து
மூலிகைகளும் அதன் சத்துக்களும்..!
1. அத்தி - இரும்புச்சத்து
2. அம்மான் பச்சரிசி - வெள்ளிச்சத்து
3. அக்கிரகாரம் – செம்புச்சத்து
4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து
5. ஆவாரம் – செம்புச்சத்து
6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து
7. ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து
8. ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து
9. எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து
10. எள்ளு, கடுகு – கந்தகச்சத்து
11. கத்திரிக்காய் – மெக்னீசியம்
12. கரிசலாங்கண்ணி – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து
13. கருவேப்பிலை – இரும்புச்சத்து
14. கீழாநெல்லி – காரீயச்சத்து
15. கோபுரந்தாங்கி – தங்கச்சத்து
16. கோவைஇலை – கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து
17. சங்கு, நாரயணசஞ்சீவி – சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து
18. செந்தொட்டி – செம்புச்சத்து, கந்தகச்சத்து
19. தும்பை – செம்புச்சத்து
20. துத்தி – கால்சியம்
21. தூதுவளை – ஈயச்சத்து
22. நன்னாரி – இரும்புச்சத்து
23. நிலவாகை – தங்கச்சத்து, கந்த்கச்சத்து, ஈயச்சத்து
24. பற்பாடகம் – கந்தகச்சத்து
25. பிரம்மத்தண்டு – தங்கச்சத்து
26. பிரண்டை – உப்புச்சத்து
27. புதினா – இரும்புச்சத்து
28. பெரும்தும்பை – தங்கச்சத்து
29. பொன்னாங்கண்ணி – இரும்புச்சத்து, ஈயச்சத்து, செம்புச்சத்து
30. மணத்தக்காளி – இரும்புச்சத்து, கால்சியம் சத்து
31. முசுமுசுக்கை – சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து
32. முருங்கை – இரும்புச்சத்து
33. வெள்ளை அருகு – ஈயச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உப்புச்சத்து
34. வெண்டைக்காய் – அயோடின்.
35. நுணா – தாமிரச்சத்து
udhayam72- இளையநிலா
- பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013
Re: ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.
தமிழரின் காலம்.
காலம் என்பது பொழுதுகளால் ஆனது. ஒரு நாளை ஆறு சிறுபொழுதுகளாகவும், ஒரு ஆண்டை ஆறு பெரும்பொழுதுகளாகவும் பிரித்து வைத்திருந்தனர் நம் முன்னோர்.
ஒரு நாள் என்பது 60 நாழிகைகளால் ஆனது. மேலைநாட்டில் நள்ளிரவு 12 மணிக்கு நாளொன்று ஆரம்பிப்பது போல், நமக்கு ஒருநாள் ஆரம்பிப்பது காலை 6 மணிக்கு! எனவே 6 மணியிலிருந்து ஆரம்பிக்கும் 60 நாழிகைகளையும் 10, 10 நாழிகைகளாகப் பிரித்து, 6 சிறுபொழுதுகள் உருவாயின!
காலை = 6.00am - 10.00am
நண்பகல் = 10.00am - 2.00pm
எற்பாடு = 2.00pm - 6.00pm
மாலை = 6.00pm - 10.00pm
யாமம் = 10.00pm - 2.00am
வைகறை = 2.00am - 6.00am
மேலைநாட்டில் சிறுபொழுதும் பெரும்பொழுதும் நான்கு நான்கு தான்.
Summer, Autumn, Winter, spring என்று பெரும்பொழுது நான்கும்,
காலை (morning), பின்மதியம் (afternoon), மாலை (evening), இரவு (night) என்று சிறுபொழுதுகள் நான்கும்!
புவியியல் ரீதியில் அவர்கள் மிதவெப்ப மண்டலத்திலும் (temperate zone), நாம் வெப்ப மண்டலத்திலும் (Tropical zone) வாழ்வதால், இந்த வேறுபாடு இயல்பானதே! ஆனால், நமக்கு வெள்ளையன் செய்வதெல்லாம் தெய்வச் செயலாயிற்றே! நமக்கென்று இருப்பதை விட்டு விட்டு, அவனது பெரும்பொழுது சிறுபொழுதுகளைத் தான் நமக்கும் சொல்லிக் கொண்டு திரிகிறோம்.
அவர்களது ஒருநாள் 24 மணி என்பதால், நான்கு சிறுபொழுதுகள்.
ஒன்றுக்கு, 24/4 = 6 மணி.
எனவே, evening என்பது, இரவு 6 மணி முதல், நள்ளிரவு 12 மணி வரை குறிப்பது. அதாவது, ஓரளவு தமிழ் "மாலை"க்குச் சமனானது!
ஆனால், இப்போது நாம் எற்பாட்டில் (சாயங்காலத்தில்) தான், "குட் ஈவ்னிங்" என்று வாழ்த்துச் சொல்லி, "மாலை வணக்கம்" என்று பயன்படுத்துகிறோம்.
(எல் என்றால் சூரியன். எல் மேற்கில் விழும் - படும் பொழுது =எற்பாடு.
"எல்" இல்லாத நேரம் தான் "அல்" - இரவைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம். "அல்லும் பகலும்" என்று சொல்வோம், இல்லையா? )
இப்படி, இந்த இரு வகைப்பாடுகளையும் குழப்பியதாலேற்பட்ட இன்னொரு விளைவு, பழந்தமிழ் இலக்கிய "மாலை"யை, இன்றைய மாலை - சாயங்காலத்துடன் ஒப்பிட்டு தவறாக புரிந்து கொண்டமை!
சங்க இலக்கியங்களிலும், திருக்குறள் காமத்துப்பாலிலும், காதலன் இன்னும் வரவில்லை என்று காதலி ஏங்கும் "மாலை" - இன்றைய சாயங்காலம் அல்ல! இரவு 6 மணியிலிருந்து 10 மணி வரை வழங்கிய பழைய "மாலை"ப்பொழுது தான்!
ஆம், அதே தான்!
நடைமுறையோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும், தூங்கச் செல்லும் அந்த நேரம் தான், காதலி காதலனை எண்ணி இத்தனை தவிப்பதற்கு காரணமாயிருந்திருக்க முடியும்!
காலம் என்பது பொழுதுகளால் ஆனது. ஒரு நாளை ஆறு சிறுபொழுதுகளாகவும், ஒரு ஆண்டை ஆறு பெரும்பொழுதுகளாகவும் பிரித்து வைத்திருந்தனர் நம் முன்னோர்.
ஒரு நாள் என்பது 60 நாழிகைகளால் ஆனது. மேலைநாட்டில் நள்ளிரவு 12 மணிக்கு நாளொன்று ஆரம்பிப்பது போல், நமக்கு ஒருநாள் ஆரம்பிப்பது காலை 6 மணிக்கு! எனவே 6 மணியிலிருந்து ஆரம்பிக்கும் 60 நாழிகைகளையும் 10, 10 நாழிகைகளாகப் பிரித்து, 6 சிறுபொழுதுகள் உருவாயின!
காலை = 6.00am - 10.00am
நண்பகல் = 10.00am - 2.00pm
எற்பாடு = 2.00pm - 6.00pm
மாலை = 6.00pm - 10.00pm
யாமம் = 10.00pm - 2.00am
வைகறை = 2.00am - 6.00am
மேலைநாட்டில் சிறுபொழுதும் பெரும்பொழுதும் நான்கு நான்கு தான்.
Summer, Autumn, Winter, spring என்று பெரும்பொழுது நான்கும்,
காலை (morning), பின்மதியம் (afternoon), மாலை (evening), இரவு (night) என்று சிறுபொழுதுகள் நான்கும்!
புவியியல் ரீதியில் அவர்கள் மிதவெப்ப மண்டலத்திலும் (temperate zone), நாம் வெப்ப மண்டலத்திலும் (Tropical zone) வாழ்வதால், இந்த வேறுபாடு இயல்பானதே! ஆனால், நமக்கு வெள்ளையன் செய்வதெல்லாம் தெய்வச் செயலாயிற்றே! நமக்கென்று இருப்பதை விட்டு விட்டு, அவனது பெரும்பொழுது சிறுபொழுதுகளைத் தான் நமக்கும் சொல்லிக் கொண்டு திரிகிறோம்.
அவர்களது ஒருநாள் 24 மணி என்பதால், நான்கு சிறுபொழுதுகள்.
ஒன்றுக்கு, 24/4 = 6 மணி.
எனவே, evening என்பது, இரவு 6 மணி முதல், நள்ளிரவு 12 மணி வரை குறிப்பது. அதாவது, ஓரளவு தமிழ் "மாலை"க்குச் சமனானது!
ஆனால், இப்போது நாம் எற்பாட்டில் (சாயங்காலத்தில்) தான், "குட் ஈவ்னிங்" என்று வாழ்த்துச் சொல்லி, "மாலை வணக்கம்" என்று பயன்படுத்துகிறோம்.
(எல் என்றால் சூரியன். எல் மேற்கில் விழும் - படும் பொழுது =எற்பாடு.
"எல்" இல்லாத நேரம் தான் "அல்" - இரவைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம். "அல்லும் பகலும்" என்று சொல்வோம், இல்லையா? )
இப்படி, இந்த இரு வகைப்பாடுகளையும் குழப்பியதாலேற்பட்ட இன்னொரு விளைவு, பழந்தமிழ் இலக்கிய "மாலை"யை, இன்றைய மாலை - சாயங்காலத்துடன் ஒப்பிட்டு தவறாக புரிந்து கொண்டமை!
சங்க இலக்கியங்களிலும், திருக்குறள் காமத்துப்பாலிலும், காதலன் இன்னும் வரவில்லை என்று காதலி ஏங்கும் "மாலை" - இன்றைய சாயங்காலம் அல்ல! இரவு 6 மணியிலிருந்து 10 மணி வரை வழங்கிய பழைய "மாலை"ப்பொழுது தான்!
ஆம், அதே தான்!
நடைமுறையோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும், தூங்கச் செல்லும் அந்த நேரம் தான், காதலி காதலனை எண்ணி இத்தனை தவிப்பதற்கு காரணமாயிருந்திருக்க முடியும்!
udhayam72- இளையநிலா
- பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013
Re: ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.
உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமல் காத்த நாகரீகத்தில் அழிந்த நம் பனை ஓலை பெட்டிகள்..!
பலஆண்டுகளுக்கு முன்பு பனை ஓலையால் செய்யக்கூடிய பெட்டிகள், முறத்திற்கு கிராக்கி பயங்கரமாக இருக்கும். அனைவரின் வீட்டிலும் பனை ஓலைப்பெட்டி, முறம் இல்லாமல் இருக்காது. ஏனென்றால் பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆராக்கியம் தருவதாகவும், அதேநேரத்தில் அந்த உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமலும் இருக்கும்.
இதனால் மக்கள் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கடைகளில் மிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்கள் பனை ஓலைப்பெட்டிகளிலேயே வைத்து கொடுப்பார்கள். இதனால் பனை ஓலைப் பெட்டிகள் இல்லாத மிட்டாய் கடைகளையே பார்க்க முடியாது.
மக்கள் அதிகளவில் பயன்படுத்தியதால் பனை ஓலைப்பெட்டிகளின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் பனை ஓலை பொருட்கள் தொழில் மிகவும் நன்றாக இருந்தது.
ஆனால் காலப்போக்கில் பிளாஸ்டிக் பைகள், அட்டை பெட்டிகள் வரத்தொடங்கின. இவை மிகவும் எளிதாக கையாளக்கூடியதாக இருப்பதால் மக்கள் அதனை பயன்படுத்த தொடங்கினார்கள். ஆகையால் பனை ஓலை பெட்டிகள் உள்ளிட்ட பனைப் பொருட்களின் தேவை குறைந்து விட்டது.
பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைப்பெட்டிகளின் வருகையால் பனை ஓலைப்பெட்டிகள் காணாமல் போய் விட்டன. அந்த தொழிலும் நலிவடைந்து விட்டது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தில் ஒரு காலத்தில் பனை ஓலையினால் செய்யப்படும் பொருட்களின் உற்பத்தியானது மிகவும் சிறந்து விளங்கியது.
குறிப்பாக மிட்டாய் வைக்க பயன்படுத்தும் பனை ஓலைப்பெட்டிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. ஏனென்றால் இப்பகுதியானது பனை மரங்கள் நிறைந்த பகுதியாகும். ஆகவே பனை ஓலையினால் செய்யக்கூடிய பொருட்களான முறம், கல்யாண சீர்வரிசைப் பெட்டி, வீட்டின் சுவற்றை சுற்றி அமைக்கப்படும் வேலி, மேலும் இனிப்பு வகைகளை வைக்க பயன்படும் ஓலைப்பெட்டி போன்றவைகளும் தயாரிக்கப்படுகின்றன.
கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தின்பண்டங்களின் உற்பத்தியானது அதிக அளவில் இருப்பதால், அத்தகைய தின்பண்டங்களை பார்சல் செய்வதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓலைப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதற் கேற்றார் போல் ஓலைப் பெட்டியில் வைக்கப்படும் உணவுப்பொருளும் பனை ஓலைப்பெட்டியால் தனி மணத்தை பெறும்.
முன்பெல்லாம் தினமும் ஆயிரக்கணக்கான பனை ஓலைப்பெட்டிகள் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. மேலும் சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின் போது இங்கிருந்து சுமார் 80,000 முதல் ஒரு லட்சம் வரை பெட்டிகள் அனுப்பப்பட்டு வந்தது.
திருவிழாக் காலங்களில் உறவினர்கள் நண்பர்களின் இல்லங்களுக்கு செல்பவர்கள் ஓலைப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை விரும்பி வாங்கிச் செல்வார்கள் என்பதால் அனைத்து இனிப்பு வகைளிலுமே பனை ஓலைப் பெட்டிகளில் வைத்தே பண்டங்களை வைத்திருப்பார்கள்.
Untitled.png
நாளடைவில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைப் பெட்டிகளின் வருகையை தொடர்ந்து ஓலைப் பெட்டிகளின் பயன்பாடானது குறையத் தொடங்கியது. இதனால் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டு வந்த இத்தொழிலில் தற்பொழுது ஒரு சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபடக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த எளிதாக இருக்கும். ஆனால் அதில் சூடான தின்பண்டங்களை பார்சல் செய்யும்பொழுது வேதிப்பொருட்கள் கலப்பதால் நச்சுத்தன்மை ஏற்பட்டு உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது.பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்படும் உணவு பண்டங்களானது விரைவில் கெட்டுப் போய்விடும். மேலும் உணவுப்பொருட்களை குளிர்சாதன பெட்டிகளில் வைப்பதால் அவை கெட்டுப் போகாமல் இருக்கலாம். ஆனால் அப்பொருட்களின் இயற்கைத்தன்மையை இழந்து விடுவது மட்டுமின்றி, அவற்றை உட்கொள்வதால் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுகின்றது.
images+(8).jpg
ஆனால் பனை ஓலைப்பெட்டிகளில் வைக்கப்படும் திண்பண்டங்கள் பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. உணவுப்பொருளுக்கு புதிய மணமும், உடலுக்கு ஆரோக்கியமும் தரக்கூடியது. ஆகவே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத பனை ஓலைப்பெட்டிகளை பயன்படுத்துவதன் மூலம், அனைவரும் உடல் நலத்தை காக்கலாம்.
மேலும் நலிவடைந்து வரும் பனைப்பொருட்கள் தொழிலுக்கு புத்துயிர் அளித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து கையினால் செய்யப்படும் படின ஓலைபெட்டிகளை பொதுமக்கள் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
பலஆண்டுகளுக்கு முன்பு பனை ஓலையால் செய்யக்கூடிய பெட்டிகள், முறத்திற்கு கிராக்கி பயங்கரமாக இருக்கும். அனைவரின் வீட்டிலும் பனை ஓலைப்பெட்டி, முறம் இல்லாமல் இருக்காது. ஏனென்றால் பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆராக்கியம் தருவதாகவும், அதேநேரத்தில் அந்த உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமலும் இருக்கும்.
இதனால் மக்கள் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கடைகளில் மிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்கள் பனை ஓலைப்பெட்டிகளிலேயே வைத்து கொடுப்பார்கள். இதனால் பனை ஓலைப் பெட்டிகள் இல்லாத மிட்டாய் கடைகளையே பார்க்க முடியாது.
மக்கள் அதிகளவில் பயன்படுத்தியதால் பனை ஓலைப்பெட்டிகளின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் பனை ஓலை பொருட்கள் தொழில் மிகவும் நன்றாக இருந்தது.
ஆனால் காலப்போக்கில் பிளாஸ்டிக் பைகள், அட்டை பெட்டிகள் வரத்தொடங்கின. இவை மிகவும் எளிதாக கையாளக்கூடியதாக இருப்பதால் மக்கள் அதனை பயன்படுத்த தொடங்கினார்கள். ஆகையால் பனை ஓலை பெட்டிகள் உள்ளிட்ட பனைப் பொருட்களின் தேவை குறைந்து விட்டது.
பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைப்பெட்டிகளின் வருகையால் பனை ஓலைப்பெட்டிகள் காணாமல் போய் விட்டன. அந்த தொழிலும் நலிவடைந்து விட்டது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தில் ஒரு காலத்தில் பனை ஓலையினால் செய்யப்படும் பொருட்களின் உற்பத்தியானது மிகவும் சிறந்து விளங்கியது.
குறிப்பாக மிட்டாய் வைக்க பயன்படுத்தும் பனை ஓலைப்பெட்டிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. ஏனென்றால் இப்பகுதியானது பனை மரங்கள் நிறைந்த பகுதியாகும். ஆகவே பனை ஓலையினால் செய்யக்கூடிய பொருட்களான முறம், கல்யாண சீர்வரிசைப் பெட்டி, வீட்டின் சுவற்றை சுற்றி அமைக்கப்படும் வேலி, மேலும் இனிப்பு வகைகளை வைக்க பயன்படும் ஓலைப்பெட்டி போன்றவைகளும் தயாரிக்கப்படுகின்றன.
கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தின்பண்டங்களின் உற்பத்தியானது அதிக அளவில் இருப்பதால், அத்தகைய தின்பண்டங்களை பார்சல் செய்வதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓலைப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதற் கேற்றார் போல் ஓலைப் பெட்டியில் வைக்கப்படும் உணவுப்பொருளும் பனை ஓலைப்பெட்டியால் தனி மணத்தை பெறும்.
முன்பெல்லாம் தினமும் ஆயிரக்கணக்கான பனை ஓலைப்பெட்டிகள் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. மேலும் சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின் போது இங்கிருந்து சுமார் 80,000 முதல் ஒரு லட்சம் வரை பெட்டிகள் அனுப்பப்பட்டு வந்தது.
திருவிழாக் காலங்களில் உறவினர்கள் நண்பர்களின் இல்லங்களுக்கு செல்பவர்கள் ஓலைப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை விரும்பி வாங்கிச் செல்வார்கள் என்பதால் அனைத்து இனிப்பு வகைளிலுமே பனை ஓலைப் பெட்டிகளில் வைத்தே பண்டங்களை வைத்திருப்பார்கள்.
Untitled.png
நாளடைவில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைப் பெட்டிகளின் வருகையை தொடர்ந்து ஓலைப் பெட்டிகளின் பயன்பாடானது குறையத் தொடங்கியது. இதனால் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டு வந்த இத்தொழிலில் தற்பொழுது ஒரு சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபடக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த எளிதாக இருக்கும். ஆனால் அதில் சூடான தின்பண்டங்களை பார்சல் செய்யும்பொழுது வேதிப்பொருட்கள் கலப்பதால் நச்சுத்தன்மை ஏற்பட்டு உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது.பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்படும் உணவு பண்டங்களானது விரைவில் கெட்டுப் போய்விடும். மேலும் உணவுப்பொருட்களை குளிர்சாதன பெட்டிகளில் வைப்பதால் அவை கெட்டுப் போகாமல் இருக்கலாம். ஆனால் அப்பொருட்களின் இயற்கைத்தன்மையை இழந்து விடுவது மட்டுமின்றி, அவற்றை உட்கொள்வதால் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுகின்றது.
images+(8).jpg
ஆனால் பனை ஓலைப்பெட்டிகளில் வைக்கப்படும் திண்பண்டங்கள் பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. உணவுப்பொருளுக்கு புதிய மணமும், உடலுக்கு ஆரோக்கியமும் தரக்கூடியது. ஆகவே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத பனை ஓலைப்பெட்டிகளை பயன்படுத்துவதன் மூலம், அனைவரும் உடல் நலத்தை காக்கலாம்.
மேலும் நலிவடைந்து வரும் பனைப்பொருட்கள் தொழிலுக்கு புத்துயிர் அளித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து கையினால் செய்யப்படும் படின ஓலைபெட்டிகளை பொதுமக்கள் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
udhayam72- இளையநிலா
- பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது
» சித்த நேர மருத்துவம்
» சித்த மருத்துவம்
» முடி வளர சித்த மருத்துவம்
» தலைவலி-சித்த மருத்துவம்
» சித்த நேர மருத்துவம்
» சித்த மருத்துவம்
» முடி வளர சித்த மருத்துவம்
» தலைவலி-சித்த மருத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|