Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
+2
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
சமூகவலைதளங்களில் சமீபத்திய வைரல் 'இலுமினாட்டி' புகழ் பாரிசாலன் பஜாஜ் சர்வீஸ் சென்டரில் தாக்கப்பட்ட விவகாரம்தான். ``சர்வீஸுக்கு ஏன் ஏழாயிரம்?'' என பாரிசாலன் கேட்க, அதற்கு பஜாஜ் சர்வீஸ் சென்டர் நிர்வாகம் - கம்பெனி பரிந்துரைக்காத வேறு இன்ஜின் ஆயிலை பயன்படுத்தியதால் வாரன்ட்டி கிடையாது என மறுக்க, அது கைகலைப்பில் முடிந்து, விவகாரம் சோஷியல் மீடியாவுக்கு வந்துவிட்டது. இதன்மூலம் உண்மையிலேயே ''பைக்ல ஆயில் மாத்திப்போட்டா வாரன்ட்டி கிடையாதா?'' என்பதுதான் எல்லோருக்குள்ளும் எழுந்திருக்கும் கேள்வி.
ஒருவர் வைத்திருக்கும் பைக்கில் எந்தெந்த பாகங்களுக்கு வாரன்ட்டி கிடைக்கும்? எந்த பாகங்களுக்கு வாரன்ட்டி கிடைக்காது? எதனால் வாரன்ட்டி ரத்தாகும்? இங்கே பாரி சாலனுக்குப் பிரச்னை தந்தது பஜாஜ் பைக் என்பதால், அந்நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடல்களில் ஒன்றான பல்ஸர் 150 (மாதத்துக்குச் சராசரியாக 50 ஆயிரம் பைக்குகள் விற்பனை) பைக்கையே இங்கே உதாரணத்துக்கு எடுத்துள்ளோம்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
பைக் நிறுவனத்தின் வாரன்ட்டி குறித்த விதிமுறைகள்:
1. ஒவ்வொரு புதிய பைக்குக்கும், 2 ஆண்டு அல்லது 30 ஆயிரம் கிமீ வரை வாரன்ட்டி கிடைக்கும். இதில் எது முதலில் வருகிறதோ, அதைப் பொருத்து வாரன்ட்டி கணக்கில் கொள்ளப்படும்.
2. டயர், ட்யூப், பேட்டரி, ஸ்பார்க் ப்ளக், ஷாக் அப்சார்பர், ஸ்பீடோமீட்டர் ஆகியவை, பல்வேறு உதிரிபாக உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கியே பைக்கில் பொருத்தப்படுகிறது. எனவே இதற்கு பைக்கைத் தயாரித்த நிறுவனம் நேரடியாகப் பொறுப்பேற்காது என்றாலும், அந்தந்த பாகங்களைத் தயாரித்தவர்கள் வழங்கும் ஒரு வருட வாரன்ட்டி காலத்தில் ஏதெனும் பிரச்னை ஏற்பட்டால், அதனை டீலர்/சர்வீஸ் சென்டர் உதவியுடன் க்ளெய்ம் பெற்றுக் கொள்ளலாம்.
3. வாரன்ட்டி க்ளெய்மிற்கு, ஒரு பாகம் அனுப்பப்படுகிறது என எடுத்துக் கொள்வோம். அந்த பாகத்தைத் தயாரித்தவரிடமிருந்து மாற்று பாகம் வரவில்லையெனில், அதே பாகத்தைத் தயாரிக்கும் மற்றொரு நிறுவனத்திடமிருந்து வாங்கும் உரிமை, பைக்கைத் தயாரித்த நிறுவனத்துக்கு இருக்கிறது.
1. ஒவ்வொரு புதிய பைக்குக்கும், 2 ஆண்டு அல்லது 30 ஆயிரம் கிமீ வரை வாரன்ட்டி கிடைக்கும். இதில் எது முதலில் வருகிறதோ, அதைப் பொருத்து வாரன்ட்டி கணக்கில் கொள்ளப்படும்.
2. டயர், ட்யூப், பேட்டரி, ஸ்பார்க் ப்ளக், ஷாக் அப்சார்பர், ஸ்பீடோமீட்டர் ஆகியவை, பல்வேறு உதிரிபாக உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கியே பைக்கில் பொருத்தப்படுகிறது. எனவே இதற்கு பைக்கைத் தயாரித்த நிறுவனம் நேரடியாகப் பொறுப்பேற்காது என்றாலும், அந்தந்த பாகங்களைத் தயாரித்தவர்கள் வழங்கும் ஒரு வருட வாரன்ட்டி காலத்தில் ஏதெனும் பிரச்னை ஏற்பட்டால், அதனை டீலர்/சர்வீஸ் சென்டர் உதவியுடன் க்ளெய்ம் பெற்றுக் கொள்ளலாம்.
3. வாரன்ட்டி க்ளெய்மிற்கு, ஒரு பாகம் அனுப்பப்படுகிறது என எடுத்துக் கொள்வோம். அந்த பாகத்தைத் தயாரித்தவரிடமிருந்து மாற்று பாகம் வரவில்லையெனில், அதே பாகத்தைத் தயாரிக்கும் மற்றொரு நிறுவனத்திடமிருந்து வாங்கும் உரிமை, பைக்கைத் தயாரித்த நிறுவனத்துக்கு இருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
வாடிக்கையாளருக்கு வாரன்ட்டி குறித்த விதிமுறைகள்:
1. தனது பைக்கில் ஏதெனும் பிரச்னையை உணர்ந்த உடனேயே, பைக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான டீலர் அல்லது சர்வீஸ் சென்டருக்கு விரைந்து சென்று, தனது பைக்கில் பிரச்னைக்குரிய பாகங்களைக் குறிப்பிட்டு வாரன்ட்டி க்ளெய்மிற்கு அனுப்பச்சொல்ல வேண்டும்.
2. தனது பைக்கின் தகவல்களைச் சரிபார்க்க, உண்மையான Owners Manual-யை கேட்கும்போது சமர்பிக்க வேண்டும்.
3. ஒருவர் தனது பைக்கில் வாரன்ட்டி க்ளைய்ம் பெறுவதற்கு, கீழ்கண்ட விஷயங்களைப் பின்பற்றியிருக்கவேண்டும்.
*முதல் 3 இலவச சர்வீஸை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்திருக்க வேண்டும்.
*அடுத்தபடியாக 4 Paid சர்வீஸை, 120 நாள்கள் அல்லது 5 ஆயிரம் கி.மீட்டர் காலக்கெடுவுக்குள் (எது முதலில் வருகிறதோ) சர்வீஸ் செய்திருக்க வேண்டும்.
* பைக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலர்/சர்வீஸ் சென்டர்களில்தான் பைக்கின் சர்வீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
*சர்வீஸ் குறித்த ஆவணங்களில், டீலர்/சர்வீஸ் சென்டரில் கையொப்பம் இருக்க வேண்டும்.
*பைக் நிறுவனம் பரிந்துரைக்கும் இன்ஜின் ஆயிலை (DTS-i 10,000), குறிப்பிட்ட காலக்கெடுவில் டாப்-அப் (5,000 கிமீ) மற்றும் 10 ஆயிரம் கி.மீட்டருக்குள் மாற்றியிருக்க வேண்டும்.
1. தனது பைக்கில் ஏதெனும் பிரச்னையை உணர்ந்த உடனேயே, பைக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான டீலர் அல்லது சர்வீஸ் சென்டருக்கு விரைந்து சென்று, தனது பைக்கில் பிரச்னைக்குரிய பாகங்களைக் குறிப்பிட்டு வாரன்ட்டி க்ளெய்மிற்கு அனுப்பச்சொல்ல வேண்டும்.
2. தனது பைக்கின் தகவல்களைச் சரிபார்க்க, உண்மையான Owners Manual-யை கேட்கும்போது சமர்பிக்க வேண்டும்.
3. ஒருவர் தனது பைக்கில் வாரன்ட்டி க்ளைய்ம் பெறுவதற்கு, கீழ்கண்ட விஷயங்களைப் பின்பற்றியிருக்கவேண்டும்.
*முதல் 3 இலவச சர்வீஸை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்திருக்க வேண்டும்.
*அடுத்தபடியாக 4 Paid சர்வீஸை, 120 நாள்கள் அல்லது 5 ஆயிரம் கி.மீட்டர் காலக்கெடுவுக்குள் (எது முதலில் வருகிறதோ) சர்வீஸ் செய்திருக்க வேண்டும்.
* பைக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலர்/சர்வீஸ் சென்டர்களில்தான் பைக்கின் சர்வீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
*சர்வீஸ் குறித்த ஆவணங்களில், டீலர்/சர்வீஸ் சென்டரில் கையொப்பம் இருக்க வேண்டும்.
*பைக் நிறுவனம் பரிந்துரைக்கும் இன்ஜின் ஆயிலை (DTS-i 10,000), குறிப்பிட்ட காலக்கெடுவில் டாப்-அப் (5,000 கிமீ) மற்றும் 10 ஆயிரம் கி.மீட்டருக்குள் மாற்றியிருக்க வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
கோப்புப் படம்
எந்தந்த பாகங்களுக்கு வாரன்ட்டி கிடைக்காது?
1. சர்வீஸ் சென்டரில் செய்யப்படும் பிரேக் மற்றும் க்ளட்ச் அட்ஜஸ்ட்மென்ட், கார்புரேட்டர் கிளீனிங், இன்ஜின் ட்யூனிங் ஆகியவற்றுக்கு வாரன்ட்டி கிடையாது.
2. பைக்கின் இயக்கத்தால் தனது ஆயுளை இழக்கும் க்ளட்ச் பிளேட், பிரேக் பேடு, செயின் ஸ்ப்ராக்கெட், ஃபோர்க் ஆயில் சீல், ஸ்பார்க் ப்ளக், பிரேக் - க்ளட்ச் - ஆக்ஸிலரேட்டர் - மீட்டர் கேபிள்களுக்கு வாரன்ட்டி கிடையாது.
3. எலெக்ட்ரிக் ஸ்டார்ட், பல்ப் போன்ற எலெக்ட்ரிக்கல் பாகங்கள், ரப்பர் பாகங்கள், ஃபில்டர்கள், Gaskets ஆகியவற்றுக்கு வாரன்ட்டி கிடையாது.
4. பைக்கில் பெயின்ட் செய்யப்பட்ட பகுதிகளுக்கு வாரன்ட்டி உண்டு. ஆனால் பைக்கின் உரிமையாளர் அதில் கவர் அல்லது கோட்டிங் செய்திருந்தால் வாரன்ட்டி கிடையாது.
5. இன்ஜின் ஆயில், ஃபோர்க் ஆயில், பிரேக் ஆயில், க்ரீஸ் ஆகியவற்றுக்கு வாரன்ட்டி கிடையாது. மேலும் முன்னே சொன்ன பொருள்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவில் மாற்றாவிட்டாலோ, பரிந்துரைக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தாவிட்டாலோ வாரன்ட்டி கிடையாது.
6. பைக்கில் க்ரோம் ப்ளேட்டிங் செய்யப்பட்ட பகுதியில் கோளாறு ஏற்பட்டால், அது வாரன்ட்டியில் சரிசெய்யப்படும். ஆனால் நிறம் மாறியிருக்கும் எக்ஸாஸ்ட் பகுதி, சரிவர பராமரிக்கப்படாத க்ரோம் பாகங்களுக்கு Warranty கிடையாது.
7. கடலோர பகுதிகளில் இருக்கும் பைக்கின் க்ராங்க் கேஸ், சிலிண்டர் ப்ளாக், சிலிண்டர் ஹெட் போன்ற பாகங்களுக்கு Warranty கிடையாது. துருப்பிடித்திருந்தாலும் Warranty கிடையாது.
8. பைக்கில் அகலமான டயர், வித்தியாசமான ஹேண்டில்பார், அதிக வெளிச்சத்தை உமிழும் லைட், அதிக சத்தத்தை வெளிப்படுத்தும் எக்ஸாஸ்ட், பவர்ஃபுல் ஹாரன், பர்ஃபாமென்ஸ் ஏர் ஃபில்டர் மற்றும் ஸ்பார்க் ப்ளக், ரிமோட் லாக், LED பட்டை, அலாரம் ஆகியவை பொருத்தப்பட்டிருந்தால் Warranty கிடையாது.
9. ரேஸ், கண்காட்சிப் போட்டி, தனிநபர் சாதனைக்காக நிகழ்த்தப்பட்ட ரைடு போன்றவற்றில் பங்கேற்ற பைக்குக்கு Warranty கிடையாது.
நானும் பஜாஜ் பைக்தான் வைத்திருக்கிறேன். ஆனால் இதை எழுதிய எனக்கே அப்பப்பா... விதிகளைப் பார்க்கும்போது தலையே சுற்றிவிட்டது. ஆக ஒருவர் தனது பைக்கை முறையாகப் பராமரித்து வந்தாலும், வாரன்ட்டி க்ளெய்ம் கிடைக்காது என்பதை பைக் நிறுவனங்கள் சொல்லாமல் சொல்கின்றவோ?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
போகாத ஊருக்கு வழி சொல்லும் வித்தகர்கள்.
பேசாமல் வாரண்டியே கிடையாது என்று சொல்லிவிடலாம்.
அங்கிருக்கும் மெக்கானிக் நமக்கு தெரிந்தவர் என்றால் நன்மைகள் பல உண்டு.
ரமணியன்
பேசாமல் வாரண்டியே கிடையாது என்று சொல்லிவிடலாம்.
அங்கிருக்கும் மெக்கானிக் நமக்கு தெரிந்தவர் என்றால் நன்மைகள் பல உண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
அதிர்ச்சியான தகவல் , என்ன பண்ண ஜனநாயக நாட்டில் இதெல்லாம் சகஜம்.
இங்கெல்லாம் வாகன விபத்து என்றால் , போலீஸ் வரும்வரை சம்பவ இடத்திலேயே இரண்டு வாகன ஓட்டிகளும் நிற்க வேண்டும். (சாலையில் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் அருகில் உள்ள பார்க்கிங் லாட்டில் வண்டியை நகர்த்தி நிப்பாட்டலாம்) போலீஸ் வந்து யார் மேல் தவறு என்று பார்த்து paper கொடுப்பார்கள் அதை எடுத்துக்கொண்டு போய் இன்சூரன்ஸ்ல கொடுத்து அதன் பிறகு தான் மெக்கானிக்கிட்டும் செல்ல வேண்டும்.
வண்டியின் அனைத்து பிரச்சினைகளும் பெரும்பாலும் இன்சூரன்ஸிலேயே கவர் ஆகிவிடும் , ரொம்ப பழைய வண்டி என்றால் நாம் ஒரு தொகை செலுத்த நேரிடும்.
இங்கெல்லாம் வாகன விபத்து என்றால் , போலீஸ் வரும்வரை சம்பவ இடத்திலேயே இரண்டு வாகன ஓட்டிகளும் நிற்க வேண்டும். (சாலையில் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் அருகில் உள்ள பார்க்கிங் லாட்டில் வண்டியை நகர்த்தி நிப்பாட்டலாம்) போலீஸ் வந்து யார் மேல் தவறு என்று பார்த்து paper கொடுப்பார்கள் அதை எடுத்துக்கொண்டு போய் இன்சூரன்ஸ்ல கொடுத்து அதன் பிறகு தான் மெக்கானிக்கிட்டும் செல்ல வேண்டும்.
வண்டியின் அனைத்து பிரச்சினைகளும் பெரும்பாலும் இன்சூரன்ஸிலேயே கவர் ஆகிவிடும் , ரொம்ப பழைய வண்டி என்றால் நாம் ஒரு தொகை செலுத்த நேரிடும்.
Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
இதுக்கு தான் நான் எங்கள் பக்கத்துக்கு தெரு மெக்கானிக் செட்ல வண்டியை சர்விஸ் கொடுத்து விடுகிறேன் தேவை இல்லாத இந்த டென்ஷன் எதற்கு
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
சரியாக சொன்னீர்கள்.T.N.Balasubramanian wrote:போகாத ஊருக்கு வழி சொல்லும் வித்தகர்கள்.
பேசாமல் வாரண்டியே கிடையாது என்று சொல்லிவிடலாம்.
அங்கிருக்கும் மெக்கானிக் நமக்கு தெரிந்தவர் என்றால் நன்மைகள் பல உண்டு.
ரமணியன்
அந்த மெக்கானிக் வைத்து ஒப்பேத்த வேண்டியது தான்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
இங்கு இந்த விசயம் எதுவும் நடக்காது.ராஜா wrote:அதிர்ச்சியான தகவல் , என்ன பண்ண ஜனநாயக நாட்டில் இதெல்லாம் சகஜம்.
இங்கெல்லாம் வாகன விபத்து என்றால் , போலீஸ் வரும்வரை சம்பவ இடத்திலேயே இரண்டு வாகன ஓட்டிகளும் நிற்க வேண்டும். (சாலையில் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் அருகில் உள்ள பார்க்கிங் லாட்டில் வண்டியை நகர்த்தி நிப்பாட்டலாம்) போலீஸ் வந்து யார் மேல் தவறு என்று பார்த்து paper கொடுப்பார்கள் அதை எடுத்துக்கொண்டு போய் இன்சூரன்ஸ்ல கொடுத்து அதன் பிறகு தான் மெக்கானிக்கிட்டும் செல்ல வேண்டும்.
வண்டியின் அனைத்து பிரச்சினைகளும் பெரும்பாலும் இன்சூரன்ஸிலேயே கவர் ஆகிவிடும் , ரொம்ப பழைய வண்டி என்றால் நாம் ஒரு தொகை செலுத்த நேரிடும்.
நம் நடைமுறை நமக்கு சாதகமாக மில்லை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
விவரம் தெரிந்த ஆள் நீங்கள்..SK wrote:இதுக்கு தான் நான் எங்கள் பக்கத்துக்கு தெரு மெக்கானிக் செட்ல வண்டியை சர்விஸ் கொடுத்து விடுகிறேன் தேவை இல்லாத இந்த டென்ஷன் எதற்கு
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|