Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
2 posters
Page 1 of 1
கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
"நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். என் வாழ்க்கையில் இதுதான்
அருமையான நேரம் என்று நினைக்கிறேன்!'' மென்
புன்னகையில் மிளிர்கிறார் கதிர்
"மதயானைக் கூட்டம்', "விக்ரம் வேதா' என அடுத்தடுத்து
படங்களில் கவனம் ஈர்ப்பவர். "சிகை', "சத்ரு', "பரியேறும்
பெருமாள்' என படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
"கேட்டதைவிட, நினைத்ததை விட எல்லாமே அதிசயமாக
அடுத்தடுத்து நடந்துக் கொண்டே வருகிறது. சினிமாவின்
ஆரம்பத்தில் இருந்து வருகிற வெற்றி எல்லோருக்கும்
அமையாது. பல பேர் அதற்காகத்தான் போராடி
வருகிறார்கள்.
என்னை இப்போது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.
நீங்கள் என்ன செய்தாலும் பிடிக்கும் என்று சொல்ற
வார்த்தைகள் காதில் வந்து விழுகிறது. இதில் இருந்து
இனி இறங்கக் கூடாது. மேலே மேலே போக வேண்டும்.
இப்போது எல்லாம் சாமி கும்பிடும்போது எதுவும் கேட்கத்
தோன்றவில்லை. நன்றி மட்டும்தான் கடவுளுக்குச்
சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அப்பா, அம்மா,
மனைவி இந்த வெற்றி எல்லாம் கிடைத்த பிறகு...
கடவுளுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்!''
-
--------------------------------------
Re: கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
சரியான தேர்வில் கதைதளை சரியாக எடைப் போடுறீங்க..
நிறையப் பேருக்கு இந்தக் "கணக்கு' தப்பாகுதே..?
நான் கோவையில் சிவில் இன்ஜினீயரிங் கடைசி ஆண்டு
படித்துக் கொண்டு இருந்த சமயம். அங்கே ஜி.வி.பிரகாஷ்
உறவினர் ஒருவர் என் நண்பர்.
அவர்தான் "ஜி.வி ஒரு படம் தயாரிக்கிறார். சிட்டி பையன்
மாதிரி இல்லாம நம்ம ஊர்ப் பக்கம் இருக்கிற மாதிரியான
புது முகம் வேணும்னு தேடுறாங்க. அந்த ஆடிஷன்ல நீங்க
கலந்துக்கங்களேன்' என்று அவர் சொல்லித்தான் நான்
கலந்து கொண்டேன்.
அவர்கள் முதல்ல என்னை டெஸ்ட் எடுத்தார்கள். எனக்குத்
தாடி வளருமா வளராதா என்பதுதான் அந்த டெஸ்ட். இப்படி
எல்லா டெஸ்டிலும் தேர்வாகி, இயக்குநர் கூடவே இருந்து
படத்துக்கு என்னென்ன தேவையோ அதை அப்படியே
கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து வெளியே கொண்டு
வந்தார்.
இப்படித்தான் "மதயானைக் கூட்டம்' பட வாய்ப்புக் கிடைத்தது.
அது வேறு மாதிரி. எல்லோருக்கும் அது நினைவுகளாக
மாறியிருந்தது. முதல் படத்திலேயே அவ்வளவு படிப்பினைகள்.
எல்லோருக்கும் பிடிக்கிறவனாக இருக்க வேண்டும் என்று
நினைத்துக் கொண்டேன்.
எல்லா வயதுக்கும் பிடிக்க வேண்டும். நிச்சயமாக, ஒரே மாதிரி
படங்கள் நடிக்க மாட்டேன். அடுத்து வருகிற "சிகை', "சத்ரு',
"பரியேறும் பெருமாள்' மூன்று படங்களுமே எனக்குப் பெரிய
லெவல்.
ஒவ்வொரு இயக்குநரிடமும் என்னை அர்ப்பணிக்கிறேன்.
என்ன கொடுக்குறாங்களோ, அதில் என் அதிகபட்ச சக்தியைத்
தருவேன். அவ்வளவுதான்.
-
-----------------------------------
Re: கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
ஹீரோவாக நல்ல அறிமுகம் இருந்தும், "விக்ரம் வேதா'
படத்துக்காக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தீர்கள்...?
"கிருமி' பட விழாவில்தான் புஷ்கர் - காயத்ரியைப் பார்த்தேன்.
"படம் பார்த்தேன் நல்லா இருந்தது' என்று என்னை வந்து
பாராட்டி விட்டு மற்ற இயக்குநர்களுக்கு என்னை அறிமுகப்
படுத்தி வைத்தார்கள்.
அப்போது அவர்களை எனக்கு யாரென்றே தெரியவில்லை.
நீங்க யாருனு எப்படிக் கேட்குறதுனு நான் கேட்கவும் இல்லை.
சினிமாத்துறையில் ஒரு முக்கியமான நபர் போல,
ஒருவேளை தயாரிப்பாளராக இருப்பார்கள் என்று நானும்
விட்டுட்டேன்.
அவர்கள் எனக்கு "விக்ரம் வேதா' கதை சொன்னபோதுதான்
இவர்கள் இயக்குநர் என்றே தெரியும். மாதவனும்
, "விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். உங்களுக்கு ஒரு
முக்கியமான ரோல் இருக்கு பிடித்தால் நடியுங்கள்' என்று
சொன்னார்கள்.
நான் அப்போதுதான் பா.ரஞ்சித் சார் தயாரிப்பில் ஒரு
படத்தில் ஒப்பந்தம் ஆகி இருந்தேன். அதன் பின்பு
விஜய் சேதுபதி அண்ணனிடம்தான் கேட்டேன். அவருக்கும்
எனக்கும் "கிருமி' படத்தில் இருந்து நல்ல பழக்கம். நான்
அப்போதே அண்ணன் என்று அவரை அழைக்க ஆரம்பித்து
விட்டேன்.
அவர்தான் "உனக்குப் பெரிய ப்ளஸா இந்தப் படம் இருக்கவும்
வாய்ப்பு இருக்கு. நீதான் முடிவு செய்ய வேண்டும்' என்று
சொல்லிட்டார். அப்படிதான் அந்தப் படத்துக்குள் நான் உள்ளே
வந்தேன்.
-
------------------------
Re: கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
-
"பரியேறும் பெருமாள்' வன்முறை அதிகம் இருக்கும் போல...?
-
நல்ல படம். இப்போதைய சமூகத்துக்கான படம். திருநெல்வேலி
மண்ணின் அச்சு அசல் வாழ்க்கை. மனிதனுக்கு அழகு அன்புதான்
என்று உணர்த்த வருகிற படம். ரத்தமும் சதையுமா ஒரு
வாழ்க்கையைத் தரிசிக்கவும் வாய்ப்புள்ளது. என் கேரியரில்
இப்படியொரு படம் நடித்திருக்கிறேன் என்று சொல்லுவது
எனக்குப் பெருமை.
கமர்ஷியல் படத்துக்கும் கலைப் படத்துக்கும் இடையில் வந்து
நிற்கும் இந்த "பரியேறும் பெருமாள்'.
-
"சிகை' படத்துக்கு இவ்வளவு தாமதம் ஏன்.... பெண் வேடத்தில்
நடித்து இருக்கிறீர்களாமே...?
-
நியூயார்க் திரைப்பட விழாவுக்காக காத்திருக்கிறோம்.
அதன் பின்பு, இது மாதிரியான சின்ன படங்கள் ரிலீஸ் ஆகிற
நேரம் ரொம்ப முக்கியம். படத்தில் நடிப்பதை விட ரிலீஸ்
செய்வதுதான் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும்.
சிகை க்ரைம் த்ரில்லர். கதை கேட்டவுடனே ரொம்ப பிடித்திருந்தது.
புதிதாக முயற்சி செய்யலாம் என்றுதான் இந்த பெண் வேடம்.
எப்போதும் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாகத்தான்
இந்தப் படம் இருக்கும். இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து
பரிசோதனை முயற்சிகளில் இறங்கலாம்.
அதற்கு இந்தப் படம் முன்னோடியாக இருக்கலாம்.
அடுத்து சினிமாவில் உங்கள் ஆசை என்ன...?
"சிகை', "சத்ரு', "பரியேறும் பெருமாள்' இந்த மூன்று படங்களின்
படப்படிப்பும் முடிந்து விட்டது. அடுத்து இன்னொரு படத்தில்
நடிக்கிறேன். இன்னும் பெயர் வைக்கவில்லை. சினிமாவில்
என்னுடைய ஆசை செல்வராகவன் சார் இயக்கத்தில் நடிக்க
வேண்டும் என்பதுதான்.
அடுத்து ரஜினி, விஜய் சாரின் படங்களில் நடிக்க வேண்டும்.
வெறுமென ஹீரோ என்றில்லாமல் புதிதாக எதாவது செய்து
கொண்டே இருக்க வேண்டும்.
-
-----------------------------------
-ஜி.அசோக்
தினமணி
Re: கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
வளரட்டும்
வளரட்டும்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» நன்றி கடவுளுக்கு ..
» மீனுவை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி
» நல்ல கேரக்டர்களாக கிடைக்க உதவும் கடவுளுக்கு நன்றி-ஐஸ்வர்யா
» நன்றி சொல்ல...!
» நன்றி சொல்ல உனக்கு
» மீனுவை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி
» நல்ல கேரக்டர்களாக கிடைக்க உதவும் கடவுளுக்கு நன்றி-ஐஸ்வர்யா
» நன்றி சொல்ல...!
» நன்றி சொல்ல உனக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|