Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்ப்பிணியாக நடித்து குழந்தையை விலைக்கு வாங்கிய பெண்ணால் மிகப்பெரிய மோசடி கும்பல் கைது
4 posters
Page 1 of 1
கர்ப்பிணியாக நடித்து குழந்தையை விலைக்கு வாங்கிய பெண்ணால் மிகப்பெரிய மோசடி கும்பல் கைது
சென்னை:
கர்ப்பிணியாக நடித்து குழந்தையை விலைக்கு வாங்கிய
பெண்ணால், குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்த
கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தை கடத்தல் கும்பலை
சென்னையில் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து
சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த ஒரு பெண் பச்சிளம்
குழந்தையை விலைக்கு வாங்கியதாக சென்னை மத்தியக்
குற்றப்பிரிவு போலீஸாருக்கு புகார் வந்தது.
அதாவது, யோகேஷ் குமார் - பத்மினி தம்பதிக்கு கடந்த 2016ல்
திருமணமானது. திருமணமான 2 மாதத்தில் பத்மினி கர்ப்பமாக
இருப்பதாக, கணவர் வீட்டாரிடம் கூறியுள்ளார்.
அவரது மருத்துவ அறிக்கையில், கருப்பையில் கட்டி இருப்பதாகக்
கூறப்பட்டிருந்த நிலையில், அதனை மறைத்து கருவுற்றிருப்பதாக
பத்மினி ஏமாற்றியுள்ளார்.
பிரசவத்துக்காக எழும்பூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு பத்மினி
சென்றுள்ளார். பிறகு, குழந்தை பிறந்ததாகக் கூறி கணவர்
குடும்பத்திடம் ஒரு குழந்தையையும் காண்பித்துள்ளார்.
இதில் கணவர் குடும்பத்துக்கு சந்தேகம் எழுந்ததை அடுத்து மத்தியக்
குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரை விசாரித்த மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு,
பத்மினி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கும்பலிடம் இருந்து
ரூ.2 லட்சம் கொடுத்து குழந்தையை வாங்கியிருப்பது தெரிய
வந்தது.
இதையடுத்து விசாரணை தீவிரம் பிடித்தது. அப்போது, குழந்தைகள்
நல வாரியத்தின் உதவியோடு, காஸியாபாத்தைச் சேர்ந்த ஒரு
கும்பல், குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்து வருவதை கண்டு
பிடித்தோம்.
காஸியாபாத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரே தம்பதி
2017 ஜனவரி மற்றும் 2017 ஜூன் மாதத்தில் தங்களது குழந்தையை
தத்துக் கொடுக்க இருப்பதாக பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டு
பிடித்தனர். ஒரே தம்பதி எப்படி 7 மாத இடைவெளிக்குள் இரண்டு
குழந்தைகளை தத்துக் கொடுக்க முன்வர முடியும்.
தத்துக் கொடுக்க முன்வருவதாக பதிவு செய்திருந்த
கோமல் வெர்மா (34), ரிக்கி வெர்மா (40) ஆகியோரை பிடித்து
விசாரித்தனர். அவர்கள் தில்லியைச் சேர்ந்த புரோக்கர்கள் என்பதும்,
அவர்களிடம் அமித் ஷர்மா - ஜெயா ஷர்மா தம்பதியினர், தங்களுக்குப்
பிறந்த 3வது குழந்தையை விற்பனை செய்ய முன் வந்ததை அடுத்து
அவர்கள் குழந்தையை விற்க சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு
செய்திருந்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில்தான் பிறந்த பச்சிளம் குழந்தையை தத்தெடுக்க
தான் தயாராக இருப்பதாக இணையதளம் ஒன்றில் பத்மினி
பதிவு செய்திருப்பதைப் பார்த்த கோமல் வெர்மா, பத்மினியை
தொடர்பு கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு குழந்தையை
விற்றுள்ளார்.
2017ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு
மருத்துவமனையில் தனக்கு குழந்தை பிறந்திருப்பதாக பத்மினி
கணவருக்கு தொலைபேசி வாயிலாகக் கூறியுள்ளார்.
அவர் மருத்துவமனைக்கு வருவதற்குள் பத்மினி குழந்தையுடன்
வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
குழந்தையின் தொப்புள் கொடி காய்ந்திருந்ததாலும், குழந்தை
பிறந்ததற்கான எந்த உடல்நல மாற்றமும் பத்மினியிடம் இல்லை
என்பதும் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
உடனடியாக மருத்துவரிடம் பத்மினியை அழைத்துச் சென்று,
அவருக்கு பிரசவம் ஆனாதா என்பதை மருத்துவரிடம்
பரிசோதிக்குமாறு கூறியுள்ளனர். அதில், அவர் கர்ப்பம் தரிக்கவே
இல்லை என்பதை மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதையடுத்து உடனடியாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர்
காவல்நிலையத்தில் பத்மினி மீது புகார் அளிக்கப்பட்டு,
அது மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களிடம் போலீஸார்
வாடிக்கையாளர்போல, தங்களுக்கு குழந்தை தேவைப்படுவதாக
பேசினர். இதைக் கேட்ட அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்,
குழந்தைகளை கடத்தி விற்பது தொடர்பாக பேச திங்கள்கிழமை
சென்னை வந்தனர்.
அப்போது போலீஸார், அவர்களை ரகசிய இடத்துக்கு வரவழைத்து
அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களை கையும்களவுமாக கைது
செய்தனர்.
போலீஸார் விசாரணையில், அவர்கள் உத்தரப் பிரதேச மாநிலம்
காசியாபாத் பகுதியைச் சேர்ந்த ரிக்கி வர்மா (43), அவரது மனைவி
கோமல் (39), அஜய்சர்மா (41), ஜெயா (35) என்பது தெரிய வந்தது.
இவர்கள், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியாணா
உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள்,
குழந்தைகள் நல மையங்கள், கோயில்கள், மார்க்கெட் உள்ளிட்ட
பகுதிகளில் இருந்து குழந்தைகளை திருடி விற்பது தெரிய வந்தது.
அவர்களிடம் மேற்கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
-
-----------------------------------------
தினமணி
Re: கர்ப்பிணியாக நடித்து குழந்தையை விலைக்கு வாங்கிய பெண்ணால் மிகப்பெரிய மோசடி கும்பல் கைது
முன் பாதி ஏற்கனவே ஓராண்டிற்கு முன் வந்துள்ளது.
பின் பாதி புதிது.
ரமணியன்
பின் பாதி புதிது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கர்ப்பிணியாக நடித்து குழந்தையை விலைக்கு வாங்கிய பெண்ணால் மிகப்பெரிய மோசடி கும்பல் கைது
இந்தத் திருட்டுப் பயலுங்களால்
திருவண்ணாமலை மாவட்டத்தில்
பகல் இரவு என எப்பவும்
ஒரு கிராமத்தில் கூட
இரு சக்கர - நான்கு சக்கர வாகனங்களில்
யாருமே செல்ல முடியவில்லை
பிள்ள பிடிக்கிறவன் வர்ரான்
புள்ளப் புடிக்கிறவன்
சாக்லேட் குடுத்திட்டான்
என்று
காட்டுப்பூச்சிகள் மாதிரி விரட்டி விரட்டி
புதிய ஆட்களை மொய்த்துப் பிய்த்துப் போட்டு விடுகிறார்கள் ...
வெட்கப் பட வேண்டியது
அரசுகளா
மக்களா
திருவண்ணாமலை மாவட்டத்தில்
பகல் இரவு என எப்பவும்
ஒரு கிராமத்தில் கூட
இரு சக்கர - நான்கு சக்கர வாகனங்களில்
யாருமே செல்ல முடியவில்லை
பிள்ள பிடிக்கிறவன் வர்ரான்
புள்ளப் புடிக்கிறவன்
சாக்லேட் குடுத்திட்டான்
என்று
காட்டுப்பூச்சிகள் மாதிரி விரட்டி விரட்டி
புதிய ஆட்களை மொய்த்துப் பிய்த்துப் போட்டு விடுகிறார்கள் ...
வெட்கப் பட வேண்டியது
அரசுகளா
மக்களா
aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
Similar topics
» பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது
» வில்லங்கத்தை விலைக்கு வாங்கிய யாழ்.துணைவேந்தர்!
» வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி
» அரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்...
» எஸ்.எம்.எஸ் மூலம் மோசடி-நைஜீரியக் கும்பல் மீது குவியும் புகார்
» வில்லங்கத்தை விலைக்கு வாங்கிய யாழ்.துணைவேந்தர்!
» வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி
» அரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்...
» எஸ்.எம்.எஸ் மூலம் மோசடி-நைஜீரியக் கும்பல் மீது குவியும் புகார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|