Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு
3 posters
Page 1 of 1
ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு
![ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு ScT2rYYPR6KOlOhwOzPa+Screenshot_2018-03-31-18-12-27](https://www.filepicker.io/api/file/ScT2rYYPR6KOlOhwOzPa+Screenshot_2018-03-31-18-12-27.png)
ஏ.டி.எம் கார்டு மூலம் பெட்ரோல் நிரப்பிய வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்கள் ஸ்கிம்மர் கருவி மூலம் திருடிய ஊழியர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் என இரண்டு பேரை சென்னை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
சென்னை, கொட்டிவாக்கத்தில் ஐ.ஓ.சி-க்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டுவருகிறது. இங்கு பாலவாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகர் மேலாளராகப் பணியாற்றிவருகிறார். இவர், நீலாங்கரை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், பெட்ரோல் பங்க்கில் வேலைபார்க்கும் ஜெயராமன் என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, தலைமைக் காவலர் செந்தில் மற்றும் போலீஸார் அக்பர், அகிலன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் ஜெயராமனைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "ஏ.டி.எம், கிரெடிட் கார்டுகள் மூலம் பெட்ரோல் நிரப்பும் வாடிக்கையாளர்களிடம் ஜெயராமன் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதாவது, வாடிக்கையாளர்களின் கார்டுகளை ஸ்வைப் செய்யும் ஜெயராமன், தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருக்கும் ஸ்கிம்மர் கருவியிலும் அந்தக் கார்டை ஸ்வைப் செய்துவிடுவார். அப்போது, கார்டுகளின் விவரங்கள் அதில் பதிவாகிவிடும். பிறகு வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை குறித்துக்கொண்டு டூப்ளிக்கேட் கார்டுகளைத் தயாரித்து மோசடிக் கும்பலிடம் கொடுத்துவிடுவார்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு
அந்தக் கும்பல் டூப்ளிக்கேட் கார்டு மூலம் லட்சக்கணக்கில் பணத்தை எடுத்துவிடும். இந்த ஸ்கிம்மர் கருவி மோசடிக்கு மாதவரத்தைச் சேர்ந்த கணேஷமூர்த்தியும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் இருவரையும் கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து லேப்டாப் மற்றும் ஸ்கிம்மர் கருவியைப் பறிமுதல் செய்துள்ளோம். இந்த வழக்கில் டூப்ளிக் கார்டு தயாரிக்கும் கும்பலைத் தேடிவருகிறோம்" என்றனர்.
![ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு 06nEpQ0YQe2HVkZGY1DT+Screenshot_2018-03-31-18-17-21](https://www.filepicker.io/api/file/06nEpQ0YQe2HVkZGY1DT+Screenshot_2018-03-31-18-17-21.png)
பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயராமன் பிடிபட்டது எப்படி என்று விசாரித்தபோது கிடைத்த தகவல் அதிர்ச்சி ரகம். பெட்ரோல் பங்க்கில் ஜெயராமனின் நடவடிக்கைகளில் அங்கு பணியாற்றும் சக ஊழியர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மேலாளர் ராஜசேகரிடம் அவர்கள் கூறியுள்ளனர். இதனால், ஜெயராமனின் நடவடிக்கைகள் பெட்ரோல் பங்க்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்தோம். அப்போது, வாடிக்கையாளர்களின் கார்டுகளை ஸ்கிம்மர் கருவியில் ஸ்வைப் செய்வது தெரிந்தது. இதுகுறித்து விசாரித்தபோது ராஜசேகரைத் தாக்கிவிட்டு ஜெயராமன் தப்பி ஓடிவிட்டார். இந்தத் தகவலை போலீஸாரிடம் ராஜசேகர் தெரிவித்தவுடன் ஜெயராமனைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். அதாவது, பணிக்குச் சேரும்போது ஜெயராமன் பள்ளிச் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டுகளின் நகலைக் கொடுத்துள்ளார். அதன்மூலம் அவரை போலீஸார் பிடித்துள்ளார். இவர், திருச்சியைச் சேர்ந்தவர். ஜெயராமனின் பின்புலம் மற்றும் ஸ்கிம்மர் கருவி மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடந்துவருகிறது.
![ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு 06nEpQ0YQe2HVkZGY1DT+Screenshot_2018-03-31-18-17-21](https://www.filepicker.io/api/file/06nEpQ0YQe2HVkZGY1DT+Screenshot_2018-03-31-18-17-21.png)
பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயராமன் பிடிபட்டது எப்படி என்று விசாரித்தபோது கிடைத்த தகவல் அதிர்ச்சி ரகம். பெட்ரோல் பங்க்கில் ஜெயராமனின் நடவடிக்கைகளில் அங்கு பணியாற்றும் சக ஊழியர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மேலாளர் ராஜசேகரிடம் அவர்கள் கூறியுள்ளனர். இதனால், ஜெயராமனின் நடவடிக்கைகள் பெட்ரோல் பங்க்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்தோம். அப்போது, வாடிக்கையாளர்களின் கார்டுகளை ஸ்கிம்மர் கருவியில் ஸ்வைப் செய்வது தெரிந்தது. இதுகுறித்து விசாரித்தபோது ராஜசேகரைத் தாக்கிவிட்டு ஜெயராமன் தப்பி ஓடிவிட்டார். இந்தத் தகவலை போலீஸாரிடம் ராஜசேகர் தெரிவித்தவுடன் ஜெயராமனைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். அதாவது, பணிக்குச் சேரும்போது ஜெயராமன் பள்ளிச் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டுகளின் நகலைக் கொடுத்துள்ளார். அதன்மூலம் அவரை போலீஸார் பிடித்துள்ளார். இவர், திருச்சியைச் சேர்ந்தவர். ஜெயராமனின் பின்புலம் மற்றும் ஸ்கிம்மர் கருவி மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடந்துவருகிறது.
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 31, 2018 6:18 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு
ஜெயராமன், வேலைக்குச் சேர்ந்த சில தினங்களிலேயே சிக்கிவிட்டார். இல்லையெனில் பல லட்ச ரூபாயைச் சுருட்டியிருப்பார். ஜெயராமனால் பாதிக்கப்பட்ட கொட்டிவாக்கம் பெட்ரோல் பங்க்கில் மட்டும் 19 வாடிக்கையாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், ஜெயராமன், சென்னையில் உள்ள சில பெட்ரோல் பங்க்களில் வேலைபார்த்துள்ளார். அவர் வேலைபார்த்த பெட்ரோல் பங்க்களில் நிரந்தரமாக இருப்பதில்லை. கார்டுகளின் டேட்டாக்களைத் திருடிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். இவர்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு, விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவு ஆகியவற்றில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதுகுறித்து பெயரைக் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "டிஜிட்டல் இந்தியாவை நோக்கிச் செல்லும் நாமும் வங்கிகள் கார்டுகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். அதாவது, கார்டுகளின் சி.வி.வி எண்கள், ரகசிய எண்களை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. சி.வி.வி எண்களைக் கார்டிலிருந்து அழித்துவிடுவது காலச் சிறந்தது. கார்டுகளைப் பயன்படுத்துவோர்கள் கவனமாக இருந்தால் பணத்தை இழக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. சென்னை பெட்ரோல் பங்க்கில் ஸ்கிம்மர் கருவி மூலம் நடந்த நூதன மோசடியில் டேட்டாக்களைத் திருடிய ஜெயராமனுக்கு மோசடிக் கும்பல் கொடுக்கும் தகவல்களுக்கு ஏற்ப கமிஷனாகப் பணம் கொடுத்துள்ளது" என்றார்.
இதுகுறித்து பெயரைக் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "டிஜிட்டல் இந்தியாவை நோக்கிச் செல்லும் நாமும் வங்கிகள் கார்டுகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். அதாவது, கார்டுகளின் சி.வி.வி எண்கள், ரகசிய எண்களை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. சி.வி.வி எண்களைக் கார்டிலிருந்து அழித்துவிடுவது காலச் சிறந்தது. கார்டுகளைப் பயன்படுத்துவோர்கள் கவனமாக இருந்தால் பணத்தை இழக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. சென்னை பெட்ரோல் பங்க்கில் ஸ்கிம்மர் கருவி மூலம் நடந்த நூதன மோசடியில் டேட்டாக்களைத் திருடிய ஜெயராமனுக்கு மோசடிக் கும்பல் கொடுக்கும் தகவல்களுக்கு ஏற்ப கமிஷனாகப் பணம் கொடுத்துள்ளது" என்றார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு
உம்மைதான் அய்யா .கோள்களை வேவு பார்க்கும் விஞ்சானி
இப்படிபட்டதுரோகிகளை களைய ஏதேனும் கண்டு பிடித்தால்
பாராட்டலாம்.
இப்படிபட்டதுரோகிகளை களைய ஏதேனும் கண்டு பிடித்தால்
பாராட்டலாம்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு
ஜெயராமன் போன்ற சில்லரை திருடர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள் . ஆனால் ...........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு
மேற்கோள் செய்த பதிவு: 1264726M.Jagadeesan wrote:ஜெயராமன் போன்ற சில்லரை திருடர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள் . ஆனால் ...........
இந்த சில்லறை திருடர்கள் நம் சில்லறை சேமிப்பை காலிசெய்து விடுவார்கள்
போல் தெரிகிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நூதன முறையில் 35 பவுன் நகை திருட்டு: ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
» தி.நகரில் ஒரு கிலோ தங்க நகைகள் நூதன முறையில் கொள்ளை:
» ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு
» நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை
» காரில் வந்தவரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் அபேஸ்
» தி.நகரில் ஒரு கிலோ தங்க நகைகள் நூதன முறையில் கொள்ளை:
» ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு
» நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை
» காரில் வந்தவரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் அபேஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|