ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்

2 posters

Go down

பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள் Empty பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்

Post by ayyasamy ram Tue Mar 27, 2018 6:20 am

பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள் LnfIUKxDQROmDbBEQqAN+201803270131591029_The-statue-of-Navapakshana-in-Palani-Murugan-temple_SECVPF
-
சென்னை,

பழனி முருகன் கோவில் நவபாஷாண மூலவர் சிலையை
வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டது பற்றி பரபரப்பு
தகவல் வெளியாகி உள்ளது.

புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில்
நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை உள்ளது.
மிகவும் அரிதான அந்த சிலையை சித்தர் போகர்
உருவாக்கினார் என்பது வரலாறு.

அந்த சிலை சேதமடைந்துவிட்டதால் அதே போல் புதிதாக
ஐம்பொன் சிலை ஒன்று கடந்த 2003-2004-ம் ஆண்டு செய்யப்
பட்டது. அந்த சிலையை பிரபல சிற்பி முத்தையா ஸ்தபதி
செய்துள்ளார்.

அந்த சிலையை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக
புகார்கள் எழுந்தது.

இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.
பொன் மாணிக்கவேல் நேரடியாக விசாரணை நடத்தினார்.
விசாரணையில், சிலை செய்ததில் ரூ.1.31 கோடி முறைகேடு
நடந்தது கண்டறியப்பட்டது.

அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தீவிர விசாரணைக்கு பிறகு முத்தையா ஸ்தபதி,
அறநிலையத்துறை முன்னாள் இணை கமிஷனர் கே.கே.ராஜா
ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

கும்பகோணத்தில் செயல்படும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு
விசேஷ கோர்ட்டில் அவர்கள் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் நீதிமன்ற
காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பழனி முருகன் கோவிலில் நவபாஷாண மூலவர் சிலையை
அகற்றுவது போன்று அகற்றிவிட்டு, அதை வெளிநாட்டுக்கு
கடத்தி சென்று பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய
சதித்திட்டம் தீட்டி இருப்பது போலீஸ் விசாரணையில்
வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
-
-------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள் Empty Re: பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்

Post by ayyasamy ram Tue Mar 27, 2018 6:20 am



இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டது எப்படி? என்பது குறித்து சிலை
கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த வழக்கை பொறுத்தமட்டில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு
சரியான கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறது.
பழனி முருகன் கோவில் மூலவர் சிலையான நவபாஷாண
சிலையை அகற்றுவதற்கு திட்டமிட்டது சரியான நடவடிக்கை
அல்ல.

அதை அகற்றிவிட்டு அதேபோல இன்னொரு ஐம்பொன் சிலையை
செய்து மூல ஸ்தானத்தில் வைத்துள்ளனர். அந்த சிலை
நவபாஷாணத்தால் செய்யப்பட்ட சிலைக்கு முன்னால் வைத்து
வழிபாடு செய்யப்பட்டுள்ளது.

நவபாஷாண சிலையின் முகத்தை புதிதாக செய்யப்பட்ட
ஐம்பொன் சிலை மறைத்துள்ளது. மேலும் சிலை நிறுவப்பட்டு
4 மாத காலத்துக்குள் ஐம்பொன் சிலையின் நிறம் மாற
தொடங்கியது.

20 கிலோ தங்கம் கலந்து செய்யப்பட்ட ஐம்பொன் சிலை
4 மாதத்துக்குள் எப்படி நிறம் மாறும்?. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு
தெரிவிக்கவே, புதிதாக வைக்கப்பட்ட ஐம்பொன் சிலையை
அகற்றிவிட்டார்கள்.

மீண் டும் நவபாஷாண சிலையை மூலவராக வைத்து வழிபாடு
செய்யப்பட்டது. புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன் சிலை அறையில்
வைத்து பூட்டப்பட்டது.

புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன் சிலை நிறம் மாறாமல்
இருந்திருந்தால் அதையே நிரந்தரமாக மூலவர் சிலையாக வைத்து
வழிபாடு செய்திருப்பார்கள். காலப்போக்கில் நவபாஷாண
சிலையை அங்கிருந்து அகற்றி இருட்டறையில் பூட்டி வைக்க
திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பல ஆண்டு காலம் கழித்த பிறகு அந்த நவபாஷாண சிலையை
வெளிநாட்டுக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய சதித்திட்டம்
தீட்டப்பட்டுள்ளது.
\இதில் அறநிலையத்துறை அதிகாரிகள் பலருக்கு தொடர்பு உள்ளது.

இந்த வழக்கில் மேலும் சில முக்கிய புள்ளிகள் கைது செய்யப்
படுவார்கள். இந்த முறைகேடு தொடர்பாக போலீசில் புகார்
எதுவும் கொடுக்கப்படவில்லை. அப்படியே மூடி மறைத்துவிட்டார்கள்.

முத்தையா ஸ்தபதி ஐம்பொன் சிலையை செய்வதற்கு தகுதி
படைத்தவர் அல்ல. அவர் கற்சிலைகளை தான் செய்து வந்தார்.
அதுவும் ஐம்பொன் சிலையை தனது சொந்தப்பட்டறையில் வைத்து
செய்துள்ளார். இது தவறான செயல் ஆகும்.

அவர் சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும்
அருங்காட்சியகம் நடத்தி வருகிறார். அதன் மூலம் ஆயிரம்
சிலைகளை வெளிநாடுகளுக்கு கொண்டுசென்று விற்பனை
செய்துள்ளார். அதுதொடர்பாக விரிவான விசாரணை நடக்க
உள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள முத்தையா ஸ்தபதியையும்,
கே.கே.ராஜாவையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
நடத்த உள்ளோம்.

இதற்காக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த வழக்கில் விசாரணையை தோண்ட, தோண்ட மேலும்
அதிர்ச்சி தகவல் வெளியாக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள முத்தையா ஸ்தபதி போலீஸ்
விசாரணையின்போது கண்ணீர்விட்டு கதறி அழுததாக தெரிகிறது.

நான் தெய்வ குற்றத்துக்கு ஆளாகி விட்டேன். நான் மட்டும்
இந்த தவறை செய்யவில்லை. எனக்கு மேல் நிறைய பெரிய
மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்
என்று முத்தையா ஸ்தபதி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
-
----------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள் Empty Re: பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்

Post by ayyasamy ram Tue Mar 27, 2018 6:40 am

இந்த வழக்கில் 2004ல் கோயில் இணை ஆணையராகவும்
தமிழ்நாடு தேர்வாணைய உறுப்பினராகவும் இருந்த
கே.கே.ராஜா என்பவரை நேற்று முன்தினம் நள்ளிரவு
போலீசார் கைது செய்தனர்.

இவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மருமகன் ஆவார்.
கைது செய்யப்பட்ட ராஜாவை நேற்று காலை கும்பகோணம்
நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின், திருச்சி மத்திய சிறையில்
அடைத்தனர்.
-
----------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள் Empty Re: பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்

Post by anikuttan Tue Mar 27, 2018 6:57 am

அய்யா இதை  இவர்கள் செய்யாவிட்டால்  அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து அரசியல் வாதிங்கள்  வேலையை எளிதாக முடித்திருப்பார்கள் .
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள் Empty Re: பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி
»  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,
» டைட்டானிக் கப்பல் மூழ்கியது எப்படி?பரபரப்பு தகவல்கள் வெளியீடு
» 5 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
» விமானத்தில் வெடிபொருள் பார்சல் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? தேடுதல் வேட்டை குறித்த பரபரப்பு தகவல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum