ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்பூசணி நிஜமாகவே நல்லதா?

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தர்பூசணி நிஜமாகவே நல்லதா? Empty தர்பூசணி நிஜமாகவே நல்லதா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 2:58 pm

தர்பூசணி நிஜமாகவே நல்லதா? TMvjbnqdSXGKQsEkdweL+8d4302b0a910dc001faca8844ac4953b
மு

ழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியுமா? மறைக்க முடியும் என்கிறது கோடையில் பெருகும் தர்பூசணி வியாபாரம். தாகம் தீர்க்கும், நிறைய கனிமச் சத்து கொண்டது, நிறமிச் சத்து அதிகம் என ஆரோக்கியத்தின் வடிவமாகப் பார்க்கப்பட்ட தர்பூசணி, இன்று வணிக வன்முறையால் நச்சு ரசாயனக் குவியலின் ஒட்டுமொத்த வடிவமாக மாறிவிட்டது.
வழக்கமாக மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளில் பலரும் கேட்கும் கேள்வி, “சரி, ஐஸ்கிரீம் நல்லதில்லை. தர்பூசணியாவது சாப்பிடலாமா டாக்டர்?”. அழகான கண்களை விரித்துக் கேட்கும் அந்தக் குழந்தைகளுக்கு, “அட! நம் ஊர் பழம்… என்ன செய்யப்போகிறது? பிரிட்ஜில் வைக்காமல் வாங்கிச் சாப்பிடுங்கள்” எனச் சொல்வது வழக்கம்.
ஆனால், சமீபத்தில் காதில் விழுந்த செய்திகளைக்கொண்டு பல விவசாயிகளிடமும் இயற்கை ஆர்வலர்களிடமும் விசாரித்ததில், இப்போது வரும் தர்பூசணிப் பழங்கள் இனிக்கவில்லை, கசக்கின்றன. மனதைக் குளிர்விக்கவில்லை, மாறாகக் கொதிப்படைய வைக்கின்றன.
60 நாள் தர்பூஸ்


ஜப்பானில் சில ஆண்டுகளுக்கு முன்னர், தர்பூசணி வணிகத்தில் பிரச்சினை ஏற்பட்டது. தர்பூசணிகளைக் கொள்முதல் செய்வதில் உள்ள போக்குவரத்து நடைமுறைகளால் லாபம் குறைகிறது என அங்கு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்தது. ‘ரக்பி பந்து போல் இருப்பதால், அடுக்கிவைக்க முடியாமல், அங்கே இங்கே ஓடுவதால் 10 டன் கண்டெய்னரில் வெறும் 8 டன் எடையுள்ள தர்பூசணியைத்தான் அடுக்க முடிகிறது’ என்று இந்தப் பழ வியாபாரத்தில் இறங்கியவர்கள் நொந்துகொண்டார்கள்.
இதற்குத் தீர்வாக மரபணு மாற்றம்செய்து செவ்வக வடிவத்தில், லேத்தில் அடித்ததுபோல் பூசணியை உருவாக்கினார்கள் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் படித்த மேதைகள். இன்னும் என்னென்ன வடிவங்களில் எல்லாம் தர்பூசணி வரப்போகிறதோ என்று திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்த வேளையில், நம் ஊரில் அகஸ்மாத்தாக ‘கஸ்டம் மேட்’ தர்பூசணிப் பழம், 60 நாட்களில் உருவாக்கப்படுவதைப் பார்க்கும்போது நெஞ்சு பொறுக்கவில்லை!
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தர்பூசணி நிஜமாகவே நல்லதா? Empty Re: தர்பூசணி நிஜமாகவே நல்லதா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 2:59 pm

இனிப்பைக் கூட்ட மருந்து!


இப்போது வட மாவட்டங்களைப் பொறுத்தமட்டில் விவசாயிகளுக்கு தர்பூசணி பணப் பயிராகிவிட்டது. நன்றாகக் கொழுத்துச் செழித்த, வழவழ தோலுடன், உருண்டையாய் அதை உருவாக்குவதற்கு, அதை விளைவிக்கும் நிலத்தில் பெரும் அட்டூழியம் நடக்கிறது. அந்த 60 நாள் பயிருக்கு நிலத்தில் விரிக்கும் பிளாஸ்டிக் பேப்பர் (Mulch), தெளிக்கும் பூச்சிக்கொல்லி, மண்ணில் போடும் உரம், எல்லாவற்றுக்கும் மேலாக ஊசி மூலம் செலுத்தப்படும் ஊக்க மருந்துகள் என ஏகப்பட்ட ரசாயனக் கலவையில் பயிராக்கப்படும் இப்பழம் பெரும் அச்சத்தை உருவாக்குகிறது.
இயற்கையாய் விளைந்தால் நடுப்பகுதி மட்டும் கூடுதல் இனிப்புடன் இருக்கும். அதனால், பழத்தின் சிவப்பு நிறத்தையும் ஒட்டுமொத்த இனிப்பையும் கூட்டுவதற்கு, ஊக்க ரசாயனங்களை-ஹார்மோன் மருந்துகளை டிரிப்பில் கலந்து செலுத்துகின்றனர். கூடவே பழத்தை நன்றாகப் பருக்கவைக்க, வரப்புகளின் ஓரம் மாட்டு ஊசியுடன் மருந்தடிக்கும் பெண்கள் இந்தத் தொழிலில் ஆங்காங்கே இருக்கிறார்கள். சில நேரம் ஊசி போடும்போதே ‘பூசணி வெடிக்கும். அதனால் கொஞ்சம் சுளுவா பார்த்துச் செய்யணும்’ என்கின்றனர், இதில் அனுபவம் வாய்ந்த பெண்கள்.
கொஞ்சம் உற்றுப் பார்த்தால், தினம் ஆன்டிபயாட்டிக் மருந்து கொடுத்து வளர்க்கப்படும் 60 நாள் பிராய்லர் கோழிக்கும் 60 நாள் பயிரான தர்பூசணிக்கும் அதிக வித்தியாசமில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தர்பூசணி நிஜமாகவே நல்லதா? Empty Re: தர்பூசணி நிஜமாகவே நல்லதா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 3:01 pm

நிலமும் நீரும் பாழ்…


ஒருபக்கம் இவ்வளவு மருந்தடித்த தர்பூஸ், அதைத் தின்பவரை என்ன பாடு படுத்துமோ என்ற அச்சம் வர, இன்னொரு பக்கம் அதை வளர்க்கும் நிலம் படும் பாடுதான் ரொம்பவே வலியைத் தருகிறது. ‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என உணவுக்கு நுட்பமான பொருள் தந்த சமூகம், தமிழ்ச் சமூகம். ஆனால், இன்றைக்கு உணவுக்காக நிலத்தையும் நீரையும் மொத்தமாக அழிக்கும் வணிகம் இதே மண்ணில்தான் பெரும் கிளை பரப்புகிறது.
தர்பூசணி அறுவடை முடிந்தபின், நிலத்தின் மேல் படிந்திருக்கும் அத்தனை ரசாயன நச்சும், அடுத்த உழவுக்காக உழும்போது மேல் மண்ணிலிருந்து உள்ளே இறங்கும். உள்ளே செல்லும் நச்சு அந்த நிலத்தில் வாழும், நமக்கான உணவைத் தயாரிக்க இடைவிடாமல் உழைக்கும் அத்தனை நுண்ணுயிர்களையும் மண்புழுக்களையும் சேர்த்தே அழிக்கும். நிலத்தடி நீர் வழியே கரைந்து ஓடி, அருகில் உள்ள எல்லா நிலத்துக்குள்ளும் பயிருக்குள்ளும் போய், மனிதரின் நல்வாழ்வுக்குச் சவாலாய் அமையும்.
இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். முறையாக மண்ணிலிருந்து அகற்றப்படாத ‘பிளாஸ்டிக் மல்ச்’ 20 சதவீதம் முதல் 40 சதவீதம்வரை, நிலத்துக்குள் திணிக்கப்படுகிறது. மிச்சமிருக்கும் பிளாஸ்டிக் மல்ச் எரிக்கப்பட்டு, காற்றில் நச்சு பரப்பப்படுகிறது. அத்துடன் இந்த நவீன தர்பூசணி பயிரிடும் முறைக்காக வயலின் வரப்புகள் அழிக்கப்பட்டு, வயலின் வளமான விளைச்சலுக்குக் காரணமாக இருக்கும் மேல்மண்ணும் தொடர்ச்சியாக அழிந்துபோகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தர்பூசணி நிஜமாகவே நல்லதா? Empty Re: தர்பூசணி நிஜமாகவே நல்லதா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 3:02 pm

பயன் தராத இலைகள்


சென்னை முதலான பெருநகருக்குத் தினம் ஆயிரக்கணக்கான டன் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் இந்த தர்பூசணியை, மருந்திட்டு வளர்க்கும் ‘பயிர் வணிகர்கள்’ (விவசாயிகள் என்று அழைப்பது நியாயமானதா?) ஒரு தர்பூசணியைக்கூடச் சாப்பிடுவதேயில்லை என்ற உண்மை, நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
உழவின் அடிநாதமே, உழவின் சக பயனைக் கால்நடைக்கு அளிப்பதுதான். இந்தப் பயிரின் இலைகள், கால்நடைக்கு ஒருபோதும் உணவாவதில்லை. மாறாக 80 சதவீதத்துக்கும் மேலாக நீருள்ள இக்கனி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துக்கொண்டு, பதிலாக நஞ்சையும் பிளாஸ்டிக்கையும் பூமித் தாய்க்குப் பூசிவிட்டுச் செல்லும் கொடிய செயலை வேறு எந்த இனமும் செய்வதில்லை.
மாற்று என்ன?


இப்படிச் சூழலியலைச் சீர்கெடுத்து விளைவிக்கப்படும் தர்பூசணிக்குப் பின்னால் போவதைவிட நீர்மோர், கம்பங் கூழ், பதநீர், இளநீர், எலுமிச்சைச் சாறு போன்றவற்றை மட்டுமே கோடைக்குப் பருகலாம் எனத் தோன்றுகிறது.
‘நம் அன்றாடப் பசிக்கு, எப்போதும் நம் நிலம் போதும். ஆனால், பேராசைக்கு நிச்சயமாகப் போதாது’ என்பார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். ஊரெங்கும் குவிந்து கிடக்கும் இனிப்பும் சிவப்பும் நிறைந்த தர்பூசணியின் பின்னால் மறைக்கப்படும் இந்தச் செய்திகளைத் தாகத்துடன் காத்திருக்கும் நுகர்வோருக்கு வேகமாகச் சொல்ல வேண்டிய நேரம் இது. அரசும் பல்கலைக்கழகங்களும் இதுகுறித்து ஆய்வுசெய்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இப்பூசணி வணிகத்தால் உறிஞ்சப்படப் போவது, நிலத்தின் நலவாழ்வு மட்டுமல்ல… நம் நலவாழ்வும் சேர்த்துத்தான்!
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தர்பூசணி நிஜமாகவே நல்லதா? Empty Re: தர்பூசணி நிஜமாகவே நல்லதா?

Post by SK Mon Mar 26, 2018 2:51 pm

இனி வரும் காலங்களில் எதையும் சாப்பிடாமல் இனிந்தாள் நீண்ட நாள் வாழலாம்
ஆசைப்பட்டு எதையாவது சாப்பிட்டால்

சர்வநாசம் தான்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தர்பூசணி நிஜமாகவே நல்லதா? Empty Re: தர்பூசணி நிஜமாகவே நல்லதா?

Post by ஜாஹீதாபானு Mon Mar 26, 2018 4:47 pm

தர்பூசணி நிஜமாகவே நல்லதா? 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தர்பூசணி நிஜமாகவே நல்லதா? Empty Re: தர்பூசணி நிஜமாகவே நல்லதா?

Post by krishnanramadurai Mon Mar 26, 2018 10:04 pm

SK wrote:இனி வரும் காலங்களில் எதையும் சாப்பிடாமல் இனிந்தாள் நீண்ட நாள் வாழலாம்
ஆசைப்பட்டு எதையாவது சாப்பிட்டால்

சர்வநாசம் தான்
மேற்கோள் செய்த பதிவு: 1264098
நிலையாமையை அடிக்குஅடி சொல்லும் நம் நாட்டில்தான்
"நீண்ட நாள் வாழலாம் ஆசைப்பட்டு" என்ற மக்கள் அதிகரித்துவிட்டார்கள்.
இருக்கும்வரை நன்றாக வாழ வேண்டும், மற்றவரும் நன்றாக வாழ வேண்டும்.
அதற்க்கு நாம் சிரமப்பட்டாலும் பரவாயில்லை என்று நினைத்த பழங்காலம் வருமா?
avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

தர்பூசணி நிஜமாகவே நல்லதா? Empty Re: தர்பூசணி நிஜமாகவே நல்லதா?

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 27, 2018 7:35 am

SK wrote:இனி வரும் காலங்களில் எதையும் சாப்பிடாமல் இனிந்தாள் நீண்ட நாள் வாழலாம்
ஆசைப்பட்டு எதையாவது சாப்பிட்டால்

சர்வநாசம் தான்
மேற்கோள் செய்த பதிவு: 1264098
நாம் இனி எதையும் ஆராய்ந்து
பார்த்து சாப்பிட வேண்டும்.
நன்றி நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தர்பூசணி நிஜமாகவே நல்லதா? Empty Re: தர்பூசணி நிஜமாகவே நல்லதா?

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 27, 2018 7:36 am

ஜாஹீதாபானு wrote:தர்பூசணி நிஜமாகவே நல்லதா? 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1264117
நன்றி சகோதரி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தர்பூசணி நிஜமாகவே நல்லதா? Empty Re: தர்பூசணி நிஜமாகவே நல்லதா?

Post by Guest Tue Mar 27, 2018 11:32 am

தர்பூசணி சிறந்த பழம்.அதை சாகுபடி செய்வதிலேதான் தவறு
என்கிறார்,தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு.பாலசுப்பிரமணியன்
(லிண்டேன் பூச்சிக் கொல்லி மற்றும் தாமிர, கந்தகப் பூசணக் கொல்லிகள் தாவரநச்சாகப் பயிரைப் பாதிப்பதால் அவற்றை உபயோகிக்கக் கூடாது. )

தற்போது பணத்திற்காக எல்லா காய்கறி வகைகளுமே செயற்கைமுறை விவசாயம் தான். இயற்கை முறையில் உருவாகும் பொருட்கள் போதுமானதாக இல்லை. அத்துடன் இயற்கை முறையில் பயிரிடும் விவசாயிகள் பெரு நட்டத்தை அடைகிறார்கள் என்பதை வேறொரு பதிவில் படித்தேன்.(நாட்டுபுறக் காய்கறிகள் விலை தொடர்வீழ்ச்சி…)

நாம் வாரம் ஒருமுறை உழவர் சந்தைக்குப் (இங்கு  Farmers’ Market ) போகிறோம். இப்போது அங்கேயும் கலப்படம் வந்து விட்டது.
avatar
Guest
Guest


Back to top Go down

தர்பூசணி நிஜமாகவே நல்லதா? Empty Re: தர்பூசணி நிஜமாகவே நல்லதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum