ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

Top posting users this week
ayyasamy ram
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி Poll_c10காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி Poll_m10காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி Poll_c10 
heezulia
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி Poll_c10காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி Poll_m10காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி

4 posters

Go down

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி Empty காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி

Post by ayyasamy ram Sat Mar 10, 2018 9:24 am

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி 201803100205499955_Cauvery-Management-Board-Drag-to-set-up_SECVPF
-
புதுடெல்லி,

காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கான தண்ணீரின் அளவை குறைத்து கடந்த மாதம் 16-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

அத்துடன், ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கர்நாடகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் உயர் அதிகாரிகளுடன் மத்திய அரசு நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தியது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய நீர்வளத்துறை இணைச் செயலாளர் சஞ்சய் குண்டூ, தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கர்நாடகம் சார்பில் தலைமைச்செயலாளர் ரத்ன பிரபா, நீர்வளத்துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் ஆகியோரும், கேரளா தரப்பில் டாம் ஜோஸ், கூடுதல் தலைமைச் செயலாளர், தலைமைப் பொறியாளர் ஜேம்ஸ் வில்லியம்ஸ் ஆகியோரும், புதுச்சேரி தரப்பில் தலைமைச்செயலாளர் அஸ்வனி குமார், நீர்வளத்துறை அமைப்பின் துணைத்தலைவர் ஏ.அன்பரசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது. கர்நாடகத்தின் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூட்டத்தில் பேசிய கர்நாடக அதிகாரிகள், “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அல்லது காவிரி ஒழுங்காற்று குழு என்ற வார்த்தை எங்கும் பயன்படுத்தப்படவில்லை. மாறாக ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) என்றுதான் கூறப்பட்டு உள்ளது. அந்த ‘ஸ்கீம்’ எப்படி அமையவேண்டும், அதற்கான பணிகள் என்ன? யார் பங்கேற்பது போன்ற விஷயங்களை முதலில் ஆலோசிக்க வேண்டும். இது அனைத்து தரப்புக்கும் ஏற்புடையதாக அமையவேண்டும்” என்று கூறினார்கள்.

தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தண்ணீர் பங்கீட்டை செயல்படுத்தும் சட்ட ரீதியாக அங்கீகாரத்தை காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவற்றுக்கு வழங்க வேண்டும் என அவர்கள் கூறினார்கள். கூட்டம் முடிந்ததும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

கூட்டத்தில் பங்கேற்ற நான்கு மாநிலங்களின் அதிகாரிகளுடன், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் அமைக்க வேண்டிய அமைப்பு குறித்த கட்டமைப்பு, அதன் பொறுப்புகள், அதிகாரங்கள், செயல்பாடுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முடிவுகளை தீர்மானிக்க இந்த கூட்டம் கூட்டப்படவில்லை. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஆலோசனைகளை கேட்பதற்கே இந்த கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. காவிரி நீர் பிரச்சினை இன்று உருவானது அல்ல. பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பிரச்சினை ஆகும். சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பு அனைவருக்கும் பொருந்தும்.

மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீடு சட்டம் 1956-ன் அடிப்படையில் ஒரு செயல்திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. நம் நாட்டில் இது தொடர்பாக ஒன்றுக்கு மேற்பட்ட பல முன்மாதிரிகள் உள்ளன, ஏற்கனவே பக்ராபியாஸ் மேலாண்மை வாரியம் மற்றும் நர்மதா ஒழுங்காற்று குழு ஆகியவை நடைமுறையில் உள்ளன. ஆனால் அவை ஒன்றுக்கு ஒன்று முற்றிலும் மாறுபட்டவை.

காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதை போன்று, வாரியம் ஒன்றையும், ஒழுங்காற்று குழு ஒன்றையும் மத்திய அரசு அமைக்கும். இது சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் இருந்து மத்திய அரசு பெறும் செயல்திட்டத்துக்கான ஆலோசனைகளை பொறுத்து அமையும்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில் ‘ஸ்கீம்’ என்றுதான் கூறப்பட்டுள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். எனவே, இந்த செயல்திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். இன்று (நேற்று) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அதிகாரிகள் வாய்மொழியாகத்தான் தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர். அந்தந்த மாநிலங்களின் ஆலோசனைகளை எழுத்துப்பூர்வமாக அனுப்புமாறு கூறப்பட்டு உள்ளது. இவ்வாறு உபேந்திர பிரசாத் சிங் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த பிரச்சினையில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட கருத்துகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) மூத்த அமைச்சர்கள் மற்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் செல்வதாக இருந்ததாகவும், இந்த ஆலோசனை கூட்டத்தின் காரணமாக அவர் தனது சேலம் பயணத்தை தள்ளிவைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி Empty Re: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி

Post by SK Sat Mar 10, 2018 11:06 am

வாரியம் வருமா வராத


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி Empty Re: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Mar 10, 2018 5:46 pm

வந்தால் நல்லது
வருமா?
கர்நாடக தேர்தல் முடிந்தால்
ஏதாவது நடக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி Empty Re: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி

Post by M.Jagadeesan Sat Mar 10, 2018 8:42 pm

எல்லாமே திட்டமிட்டு செய்கிறார்கள் . தமிழ்நாடு பழிவாங்கப்படுகிறது . எல்லா MP க்களும் ராஜினாமா செய்யவேண்டும் . அத்வானியை மதிக்காத மோடியை நம்பிப் பயனில்லை . அவர் ஒரு வாய்சசொல் வீரர் . அவருடைய நோக்கம் ஊழல் பேர்வழி எடியூரப்பாவை முதலமைச்சர் ஆக்கவேண்டும் ; தமிழ்நாடு எக்கேடு கெட்டாலும் அதுபற்றி அவருக்குக் கவலையில்லை .

தமிழா ! விழித்துக்கொள் ! தமிழ்நாடு பாலைவனம் ஆகப்போகிறது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி Empty Re: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி.
» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
» ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒரே கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் ஏன் வேண்டும்?
» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு
» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை: தேர்தல் ஆணையர் பச்சைக்கொடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum