ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை!

2 posters

Go down

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை! Empty ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 5:44 pm

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை! Plm8abeaR8u1lBod5eOF+ec4f4975693ea2ebf9d02755258a9a7d
பருப்பு வகைகள் பலதும் வாயுவை அதிகபடுத்தும் என்று பல கட்டுரைகளில் நீங்கள் தெரிவித்து வருகிறீர்கள். எப்படி சாப்பிட்டால் வாயுவைக் குறைக்க முடியும்? ஒரு சில மருத்துவ குணங்களை விவரிக்க முடியுமா?
- சிவகாமி, திருச்சி.
பருப்பு வகைகள் அனைத்துமே ஜீரணமாகத் தாமதமாகுபவை. புளிப்பையும் எரிச்சலையும் அதிகப்படுத்துபவை. வயிற்றில் வாயு அழுத்தத்தை அதிகமாக்குபவை. இவற்றைத் தண்ணீரில் ஊற வைத்துத் துணியில் இறுகக் கட்டி முளைக்க வைத்துப் பின் குத்திப் புடைத்து வைத்துக் கொள்வதுண்டு. முளை நீங்குவதால் இவை எளிதில் செரிக்கும். வறுத்து உபயோகிக்க மேலும் லேசான தன்மையை அடைகிறது. நெய்யில் சேர்த்துச் சாப்பிட வறட்சி தராது. இவற்றில் உளுந்து நல்லது. காய்ச்சல் உள்ள நிலையில் பச்சைப் பயறு நல்லது. களைப்பு சோர்வுள்ள நிலையில் பச்சைப் பயறும் , துவரம் பருப்பும் நல்லது. மாதவிடாய் சிக்கல், இரவில் அதிகம் சிறுநீர் போகுதல் இவற்றிற்கு எள்ளு நல்லது. வாயில் பற்களிடுக்கில், தொண்டையில், மலத்தில் ரத்தக் கசிவிருந்தால் துவரம் பருப்பு நல்லது. மூலம் சிறுநீர்த் தாரையில் கல்லடைப்பு, விக்கல், மூச்சுத்திணறல் முதலியவற்றுக்கு கொள்ளு நல்லது.
துவரை- நல்ல வலிமை தரும் பொருள். படுக்கையிலேயே வெகு நாட்கள் நோய் வாய்ப்பட்டிருந்தவர், மிக மெலிந்தவர் திரும்பவும் வலுவடைய ஏற்றது. பட்டினி முடிவிற் சேர்க்கத்தக்க பத்திய உணவு. உடலுரம் கூடச்செய்யும். உள் அழற்சி ஆற்றும். அதனால் உணவு வரிசையில் இதற்கு முதல் இடம். தோல் நீக்கிய பருப்பு உணவாகிறது. மிக பலவீனமானவர், வயிற்றில் வாயு சேர்பவர் இதனை லேசாக வறுத்துச் சேர்ப்பர். காரம், புளிப்பு, உப்பு இவை இரைப்பையைப் புண்படுத்தாமலிருக்க துவரம் பருப்பு அவற்றிற்கு நடுவே நின்று உதவுகின்றது.
துவரம் பருப்பை வேக வைத்து அதன் தண்ணீரை இறுத்து அதில் மிளகு, பூண்டு சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடும் போதும், பருப்பை வறுத்து அரைத்து துவையலாகச் சாப்பிடும் போதும், வாயு அழுத்தம் குறையும்.
காராமணி- இனிப்பும் குளிர்ச்சியும் உள்ளது. சிறுநீர் பெருக்கி. உப்பும் வெல்லமும் சேர்த்து வேகவைத்து உண்பதுண்டு. வாயுத் தொந்தரவு, பேதி உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.
உளுந்து- நல்ல புஷ்டி தரும் புரதசத்து நிறைந்தது. செரிப்பதற்குத் தாமதமாகும். உடல் மூட்டுகளுக்கு எண்ணெய்ப் பசையை உருவாக்கித் தரும். இதில் பெரும் பகுதி மலமாக மாறுவதால் அதிக அளவில் உபயோகித்தால் சிறுநீரும் மலமும் அதிகமாகி அடிக்கடி வெளியாகும்.
நரம்புகளிலும் தசைகளிலும் வலியும் எரிச்சலும் உள்ள நிலையில் உளுந்தை வேக வைத்துச் சூட்டுடன் தேய்க்க வலி நீங்கும். உளுந்து சேர்த்து தயாரிக்கப்படும் மஹாமாஷ தைலம், தசைகளிலும் மூட்டுகளிலும் ரத்தக் குழாய்களிலும் வறட்சி அதிகமாகி எண்ணெய் பசையில்லாமல் அசைக்கக் கூட முடியாத நிலையில், இது எண்ணெய்ப் பசையை அளித்து வறட்சியைப் போக்கி, உட்புற பூச்சையும் பிசுபிசுப்பையும் அளித்து தசைகளைத் தளர்த்தி வேதனையை குறைக்கும். உளுந்தையும் கொள்ளையும் வேக வைத்து அதன் கஷாயத்தால் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுப்பது வலியை குறைக்க உதவும்.
கொள்ளும், அரிசியும் சேர்த்துக் காய்ச்சிய கஞ்சி நல்ல பசி, உடல் பலம், விந்தணு வீர்ய வளர்ச்சி, சுறுசுறுப்பு தரக்கூடியது. பச்சைக் கொள்ளை நீர் சேர்த்து இடித்துப் பிழிந்த சாற்றைத் தினம் பருகிவர வற்றிய உடல் பருக்கும். தூண்போல் உரத்து நிற்கும், வறட்சி, சளியுடன் இருமல், சளியால் மூச்சுத்திணறல், ஜலதோஷம் இவற்றை நீக்கும். ஒரு பங்கு கொள்ளை பத்து பங்கு தண்ணீரில் நீர்த்த கஞ்சியாக்கி இந்துப்பு சேர்த்துச் சாப்பிட சிறுநீரகம், பித்தப்பை முதலான இடங்களில் ஏற்படும் கற்கள் கரைந்து வெளியாகும். பிரசவ அழுக்கு வெளியேற இந்த நீர்த்தக் கஞ்சி உதவும்.
கடலை - நல்ல புஷ்டி தரும் பருப்பு. அதிக அளவில் வயிற்று உப்புசம், பெருங்குடலின் கடைசிப் பகுதியில் அழுத்தம், ஜீரணமில்லாத பெருமலப் போக்கு, தலைசுற்றுதல் இவற்றையும் ஏற்படுத்தும்.
பச்சைக்கடலை - நல்ல வாளிப்பைத் தரும். உடலை ஊட்டப்படுத்தி தசைகளை நிறைவுறச் செய்யும். நுரையீரலுக்குப் பலம் தரும். கடலையைச் சற்றுக் கருக வறுத்து பொடித்துச் சாப்பிட வயிற்றுப் பொருமல், மூத்திரத்தடை நீங்கும். கடலையை லேசாக வேக வைத்து மென்று சாப்பிட்டு மேல் பால் சாப்பிட நீர்க்கோர்வையும் இருமலும் விலகும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை! Empty Re: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை!

Post by ayyasamy ram Sun Feb 11, 2018 7:40 pm

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை! 103459460 ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை! Empty Re: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Feb 12, 2018 7:01 am

ayyasamy ram wrote:ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை! 103459460 ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1259299
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை! Empty Re: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் - கை வைத்திய முறைகள்
» ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல...
» ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரைப்பை மந்தத்தை விரட்டும் கடுகு!
» ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கரைந்து போகும் சிறுநீரகக் கற்கள்!
» ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum