ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எரிமலை லாவாவால் உருவான சிங்கப்பாறை... இலங்கையின் முக்கியமான சுற்றுலாதளம்!

Go down

எரிமலை லாவாவால் உருவான சிங்கப்பாறை... இலங்கையின் முக்கியமான சுற்றுலாதளம்! Empty எரிமலை லாவாவால் உருவான சிங்கப்பாறை... இலங்கையின் முக்கியமான சுற்றுலாதளம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 3:49 pm

பாறை உச்சியில் உள்ள கோட்டைக்கு நடுவிலிருக்கும் மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருக்கின்றன. அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரிய நீர்க்குளம் காற்றில் அலையடித்துக் கொண்டிருக்கிறது. இவைத்தவிர, பாறை உச்சியில் அரண்மனை ஒன்று பிரமாண்டமாக அமைந்துள்ளது. அந்த அழகைக் காண ஆட்கள் இரும்பினால் செய்யப்பட்ட படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏறி சுற்றிப் பார்த்துவிட்டு இறங்க ஒரு நாளாகும். ஆம், அது 660 அடி உயரமுள்ள சிங்கப் பாறை.


எரிமலை லாவாவால் உருவான சிங்கப்பாறை... இலங்கையின் முக்கியமான சுற்றுலாதளம்! XIXo5oXTTSiyjwu8wU9h+752024c367e3b8fdc75161ff1cf759fc

பார்ப்பதற்குச் சிங்கம் படுத்திருப்பதைப் போன்ற அமைப்பில் இருக்கிறது இந்தப் பாறை. 600 அடி உயரத்துக்கு மேற்புறம் பாறைகளில் அமைந்துள்ள மரங்களும், குளங்களும் இன்றளவும் பசுமை மாறாமல் நிலைத்து நிற்கின்றன. சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலை வெடித்து அதிலிருந்து வெளிவரும் லாவாக்கள் காலப்போக்கில் உறைந்ததுதான் இந்தப் பாறை என்ற வரலாறும் உண்டு.
இலங்கையிலுள்ள மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள சிகிரியா கிராமத்தில் இப்பாறை அமைந்துள்ளது. இலங்கையின் முதன்மையான சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்று. இப்பாறைக்கோட்டை உலக பாரம்பர்ய தலங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் 1982-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள அஜந்தா குகையில் உள்ள ஓவியங்களைப் போலவே ஓவியம் இக்கோட்டையின் மீது அமைந்துள்ளது. இத்தனை காலமாக, மழை வெயில் என அனைத்தையும் கடந்து ஓவியங்கள் புதுமை மாறாமல் காட்சியளிப்பது, உலகில் வேறு எங்கும் இல்லை என்று சொல்லலாம். ஆனால், இப்போது அங்கு வரும் பயணிகளால் ஓவியங்கள் சேதமடையத் துவங்கியுள்ளன. இதனைப் பாதுகாக்க அரசே இத்தாலியில் இருந்து ரசாயன திரவங்களை வாங்கி ஓவியங்களின் மீது பூசி இருக்கிறது. இக்கோட்டையை காசியப்பன் எனும் அரசன் கி.பி 477 முதல் கி.பி 495-ம் ஆண்டு வரையில் வடிவமைத்து ஆட்சி செய்து வந்தான் என வரலாறு சொல்கிறது. சிகிரியா கிராமமானது கொழும்பிலிருந்து 165 கிமீ தூரத்திலும், தம்புள்ளாவில் இருந்து 15 கிமீ தூரத்தில் அமைந்ததுள்ளது.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

எரிமலை லாவாவால் உருவான சிங்கப்பாறை... இலங்கையின் முக்கியமான சுற்றுலாதளம்! Empty Re: எரிமலை லாவாவால் உருவான சிங்கப்பாறை... இலங்கையின் முக்கியமான சுற்றுலாதளம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 3:51 pm

எரிமலை லாவாவால் உருவான சிங்கப்பாறை... இலங்கையின் முக்கியமான சுற்றுலாதளம்! PJFNxneScyofrpZVLHn5+14198f042aabb5df3c124fb2b1c22d0b

முழுவதும் பாறையாக இருந்தாலும் இதன் மேற்புறம் எப்போதும் பசுமையாகவே இருக்கிறது. இம்மலையைச் சுற்றி அடர்ந்த நீரூற்றுகளும், குளியல் குளங்களும் கல்லிலேயே செதுக்கப்பட்டுள்ளன என்பது மற்றொரு சிறப்பு. காசியப்ப அரசன் தன் சகோதரனுக்குப் பயந்து பாதுகாப்பான இடமாக இக்கோட்டையைத் தேர்வு செய்தார். அவர் தேர்வு செய்தபோது பாறை கரடு முரடான உச்சியைக் கொண்டு இருந்திருக்கிறது. அப்பாறையைச் சிங்கம் போன்ற தோற்றத்துக்கு மாற்றி பாறையிலும், பாறையைச் சுற்றிலும் பசுமையை ஏற்படுத்தினார். காசியப்பனுக்குப் பின்னர் இது புத்த துறவிகளின் தங்கும் இடமாக மாறியது. இப்பாறையின் உச்சியில் அரண்மனை, பயிற்சி எடுக்கும் பகுதி, விருந்தினர் தங்கும் இடங்கள், குளங்கள் எனப் பலவகை அமைப்புகள் பார்க்க பிரமாண்டமாக அமைந்துள்ளன. பழங்காலத்தில் மலையின் உச்சியை சமன்படுத்தி அமைத்த கோட்டைகளில் இது முக்கியமானது. சுமார் 1.5 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பாறையின் உச்சியில் உருவாக்கப்பட்ட குளம் மட்டும் சுமார் 27 மீட்டர் நீளமும், 21 மீட்டர் அகலமும் கொண்டது. பாறையின் உச்சியில் மேற்புறம் 360 டிகிரி கோணத்தில் சுற்றிப் பார்க்கலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

எரிமலை லாவாவால் உருவான சிங்கப்பாறை... இலங்கையின் முக்கியமான சுற்றுலாதளம்! Empty Re: எரிமலை லாவாவால் உருவான சிங்கப்பாறை... இலங்கையின் முக்கியமான சுற்றுலாதளம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 3:52 pm

எரிமலை லாவாவால் உருவான சிங்கப்பாறை... இலங்கையின் முக்கியமான சுற்றுலாதளம்! TbFnEcrzRRmqW2GQWt3S+5e453c57c8f0ebddf9709d4a670cfcf2

பாறையின் நுழைவு வாயில் சிங்கத்தின் வாய்ப்பகுதிக்குள் பார்வையாளர்கள் பாறைக்குள் நுழையுமாறு அமைக்கப்பட்டிருக்கும். இதுவே பார்வையாளர்களுக்கு திகில் அனுபவத்தைக் கொடுக்கும். இதுதவிர, மலையேறும் படிக்கட்டுகளும் பாறைகளில் ஒட்ட வைக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் நடந்து செல்லும்போது நிச்சயமாகப் பதற்றம் உருவாகும். பாறைமீது அமைக்கப்பட்டுள்ள படிகளை ஒட்டி இளைப்பாற, தியானம் செய்ய பாறையில் குகை வடிவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பார்வையிடச் செல்லும் பயணிகள் உடன் குடிநீரை எடுத்துச் செல்வது நல்லது. அங்கே கடைகள் ஏதும் இல்லை. சிங்கப் பாறையில் அப்போது ஏற்படுத்திய நீரூற்றுகள் இன்னும் நீரை ஊற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. இப்பாறையில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் தனித்தனியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாவாசிகளுக்கு சிங்கப்பாறை சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். ஆம், சிகரியா பாறைக்குச் சென்று திரும்பும் அனைவரும் மனதில் உள்ள பாரம் குறைவதாகத்தான் சொல்கிறார்கள்.
சிகரியா பாறையை ஒட்டி பிதுரங்கல் குன்று ஒன்று உள்ளது. அங்கு யானையின் மீது அமர்ந்தவாறே தண்ணீருக்குள் சவாரி செய்யலாம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

எரிமலை லாவாவால் உருவான சிங்கப்பாறை... இலங்கையின் முக்கியமான சுற்றுலாதளம்! Empty Re: எரிமலை லாவாவால் உருவான சிங்கப்பாறை... இலங்கையின் முக்கியமான சுற்றுலாதளம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum