ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?

2 posters

Go down

அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Empty அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 04, 2018 8:44 pm





ழிக்கப்படும் வனங்களுக்கு ஈடாகப் புதிய வனங்களை வளர்ப்பதற்கான இழப்பீட்டு நிதிச் சட்டத்தை(2016) அமல்படுத்த விதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது மத்திய அரசு. ஒருபக்கம் அரசின் வளர்ச்சித் திட்டங்களாலும் இயற்கையான காரணங்களாலும் வனங்களின் பரப்பளவு குறைந்துகொண்டேவருகிறது. மறுபக்கம், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அரசு, இத்தகைய மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கிறது. ஒரு அரசு, தானே எடுத்த முடிவின் அடிப்படையிலான நடவடிக்கையைக் கூடத் தொடரவில்லை என்றால், அதன் அக்கறையின்மையை எப்படி எடுத்துக்கொள்வது?

சர்தார் சரோவர் அணைத் திட்டம் போன்ற பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களில்கூட, அழிக்கப்பட்ட வனப் பகுதிகளுக்குப் பதில் வேறிடங்களில் காடுகளை வளர்க்கும் முயற்சிகள் அக்கறையுடன் செயல்படுத்தப்படவில்லை. புதிய வனங்களை உருவாக்குவதற்கான இழப்பீட்டு நிதியத்தில் சேர்ந்திருக்கும் தொகை ரூ.40,000 கோடி. அழிக்கப்பட்ட வனங்களின் வளம் அதிகம் என்பதைப் பறைசாற்றும் தொகை இது. அத்துடன், பாரிஸ் பருவநிலை மாநாட்டில் ஒப்புக்கொண்டபடி பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய சுற்றுப்புறச் சூழல் காப்பு நடவடிக்கைகளிலும் மத்திய அரசு போதிய அக்கறை காட்டவில்லை. அம்மாநாட்டில் ஒப்புக்கொண்டபடி காற்றில் கலந்துள்ள கரித்துகள் அளவை அகற்ற, தொடர்ந்து பராமரிக்கப்படும் வனப் பகுதிகள் அவசியம்.

இந்நிலையில், இப்போது மத்திய அரசு செய்ய வேண்டியதெல்லாம் நாட்டின் அனைத்து வன வளர்ப்பு, பாதுகாப்புத் திட்டங்களையெல்லாம் ஒரே அமைப்பின் கீழ் தணிக்கைக்குக் கொண்டுவந்து, நிதியை முறையாகத் திருப்பிவிடுவதுதான். சிறந்த நடைமுறைகளை அடையாளம் கண்டு, அதை எல்லா மாநிலங்களும் பின்பற்ற உதவ வேண்டும். அழிக்கப்பட்ட வன நிலங்களுக்கு இணையான பரப்பளவில் பெரும் நிலப்பகுதியைப் போதிய பாதுகாப்பு வசதிகளோடு வனத் துறை மற்றும் அறிவியல் நிபுணர்கள் அடங்கிய பெரும் நிர்வாக அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். வனப் பகுதியை விரிவுபடுத்த அறிவியல்ரீதியிலான தேசியத் திட்டம் அவசியம்.

வன வளர்ப்பு என்றால், எந்தவிதமான மரங்களையும் எல்லா இடங்களிலும் வளர்த்துவிடலாம் என்பதல்ல. மண்ணின் தன்மை, நீர்ப்பிடிப்பு மற்றும் சுற்றுப்புறத் தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து, உரிய மரங்களையும் தாவரங்களையும் வளர்ப்பது. அதில் பூச்சிகள், பறவைகள், புழுக்கள், பிராணிகள், விலங்குகள், நீர்வாழ்வன ஆகியவையும் பெருக இடம்தருவது போன்றவை அடிப்படையான தேவைகள். இதற்கு 2016-ல் இயற்றப்பட்ட சட்டத்தை விரைந்து அமல்படுத்துவது அவசியம். வனங்களின் மதிப்பை அறிய இப்போது கையாளப்படும் முறை காலத்தால் பிந்தையது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அழிக்கப்பட்ட வனங்களுக்குப் பதிலாகப் புதிய வனங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதை முன்னர் நீதித் துறைதான் தனது உத்தரவுகள் வாயிலாக வலியுறுத்திவந்தது. இப்போது மத்திய அரசே சட்டம் இயற்றியிருக்கும் நிலையில், அதை அமல்படுத்துவதற்கு ஏற்ப விதிகளை உருவாக்குவதில் தாமதம் கூடாது!
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Empty Re: அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?

Post by SK Fri Jan 05, 2018 3:18 pm

அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  103459460


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Empty Re: அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 05, 2018 6:49 pm

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Empty Re: அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum