Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழாக்களா... விடாதீர்கள்!
2 posters
Page 1 of 1
விழாக்களா... விடாதீர்கள்!
எங்கும், எதற்கும் செல்லாமல், அரச மரத்தடி பிள்ளையார்களாகவே காலம் கழித்து விடும் மனிதர்கள் நம்மில் அநேகர் உண்டு. வாழ்வின் எல்லைகளை குறுகலாகவும், சிறிதாகவும் அமைத்து, இப்படி சிறை வாழ்க்கையை மேற்கொள்வோர், உண்மையில் இரக்கத்துக்கு உரியவர்கள்.
திருமணம், மற்ற நல்லது, கெட்டதுகளுக்கு ஒன்றாகக் கூட வேண்டும் என்பதே, சக மனிதர்களோடு கலந்து பழகுவதற்காக ஏற்பட்டது தான்!
ஆனால், இவ்வாறு பழகும் தன்மை பலரிடம் இல்லாமல் போக காரணம், எதிலும் லாப, நஷ்டக் கணக்கு பார்க்கும் குணமே!
இதுவே, இவர்களை, இருந்த இடத்தைவிட்டு நகர விடாமல் செய்யும் முக்கிய காரணியாக உள்ளது. இப்படி கணக்கு பார்க்கும் குணம் உள்ளோர்,'அவன் என் வீட்டு விசேஷத்தில் அரைமணி நேரம் தான் இருந்தான்; நான் அஞ்சு நிமிஷம் கூட, அதிகமாக இருக்க மாட்டேன்...' என்று எதிர்மறையாக நடந்து கொள்ளவோ, கணக்கு பார்க்கவோ வேண்டியதில்லை.
எதிராளிகளை வெற்றி கொள்வது, கணக்கு பார்த்து நடந்து கொள்வதில் இல்லை; பெருந்தன்மையாக நடப்பதில் தான் உள்ளது.
இரு நண்பருக்கு தெரிந்த ஒருவர் இப்படிச் சொன்னார்... 'அவன் தான் அப்படி நடந்துகிட்டான்...
நம்மாளு ரொம்ப பெருந்தன்மை; எதையுமே வெளிக் காட்டிக்காம, ரொம்ப நேரம் கல்யாண வீட்டில் இருந்தாரு. அதுமட்டுமல்ல, சில வேலைகளைத் தானே எடுத்துப் போட்டு செஞ்சாரு... நம்மாளு மாதிரி யாரும் வரமாட்டாங்க...' என்று உச்சி முகர்ந்து சொல்லி விட்டார்.
கேள்விப்பட்ட, 'கணக்கு' மனிதருக்கு ரொம்பவும் வெட்கமாகப் போய் விட்டது.
ஓர் அழைப்பு என்பதை வெறும் காகிதமாக பார்க்கக் கூடாது; அதை, உணர்வும், உயிர்ப்பும் அடங்கிய இதயமாக பார்க்க வேண்டும்.
விசேஷம் மற்றும் நல்லது, கெட்டதுகள் இதயங்களை ஒன்று சேர்க்கின்றன; பல புதிய அனுபவங்களைக் கொடுக்கின்றன. பழைய உறவுகளை - நட்புகளை சந்திக்கிறபோது, அந்த இடத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
புதிய அறிமுகங்கள், பல வகைகளில் நமக்கு பயன்படுகின்றன. நம் உறவு, நட்பு, ஏன், தொழில் கூட விரிவடைய வாய்ப்பு இருக்கிறது.
ஒரு கல்லுாரி தாளாளரின் அறிமுகம், வேலை வாய்ப்பிலோ, கல்வி அட்மிஷனிலோ முடிய வாய்ப்பு இருக்கிறது.
ஒரு மருத்துவரின் அறிமுகம், நல்ல மருத்துவத்திற்கும், அநியாய மருத்துவ பில் வழியே நாம் தீட்டப்படாமல் தப்பிப்பதற்கும் வாய்ப்பாக அமைகிறது.
ஒரு பயணச் சீட்டு ஆய்வாளரின் அறிமுகம், தவிர்க்க முடியாத ஓர் அவசரப் பயணத்தின் போது, ஒரு, 'பர்த்' கிடைப்பதில் கூட முடியலாம்.
வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால், நுாலாம்படை உடலில் படிவதைத் தவிர, வேறு என்ன அதிசயம் நிகழ்ந்து விடும்!
'கல்லுாரி விழா; வாப்பா...' என்கிறாள் மகள். 'அடப் போம்மா... செம போரு; அதுங்க அடிக்கிற கூத்தை எவன் பாக்கறது...' என்று மறுக்கிற தந்தை, மிகப்பெரிய தவறை செய்கிறார்.
இவரது இலக்கு கல்லுாரி விழா கலை நிகழ்ச்சிகள் அல்ல; அழைத்த மகளின் அன்பிற்கு செவி சாய்த்து, அவளது உணர்விற்கு மதிப்பு கொடுப்பது தான்!
அவ்விழாவிற்கு போனால், மகளின் தோழிகள் பற்றி அறியலாம்; அவர்களது அப்பாக்கள், அம்மாக்களின் அறிமுகம் பிற்காலத்தில், தன் மகளின் எதிர்கால விஷயத்தில் நம்ப முடியாத நன்மையான முடிவுகளை எடுக்க உதவலாம்.
சரி, எங்கும் வராமல், இவர் சேமிக்கும் நேரத்தை, நல்லபடியாக பயன்படுத்தினாரா என்றால், இல்லை. வெட்டியான முறையில் இவர் போக்கிய பொழுதை, மகளுக்கென அளித்திருந்தால், வட்டியும், முதலுமாய் திரும்பி வர வாய்ப்பு இருக்கிறது தானே!
எந்த விழாக்களையும், விழாக்களாக பார்க்காதீர்கள்; வீழ்ந்து விடாமல் இருக்க உதவும் வாய்ப்புகளாகக் கருதுங்கள்.
விழாக்கள் எனில் கலந்துகொள்ளக் காரணங்கள் தேட வேண்டுமே தவிர, அவற்றை தவிர்ப்பதற்கான காரணங்களை தேடக் கூடாது!
லேனா தமிழ்வாணன்
திருமணம், மற்ற நல்லது, கெட்டதுகளுக்கு ஒன்றாகக் கூட வேண்டும் என்பதே, சக மனிதர்களோடு கலந்து பழகுவதற்காக ஏற்பட்டது தான்!
ஆனால், இவ்வாறு பழகும் தன்மை பலரிடம் இல்லாமல் போக காரணம், எதிலும் லாப, நஷ்டக் கணக்கு பார்க்கும் குணமே!
இதுவே, இவர்களை, இருந்த இடத்தைவிட்டு நகர விடாமல் செய்யும் முக்கிய காரணியாக உள்ளது. இப்படி கணக்கு பார்க்கும் குணம் உள்ளோர்,'அவன் என் வீட்டு விசேஷத்தில் அரைமணி நேரம் தான் இருந்தான்; நான் அஞ்சு நிமிஷம் கூட, அதிகமாக இருக்க மாட்டேன்...' என்று எதிர்மறையாக நடந்து கொள்ளவோ, கணக்கு பார்க்கவோ வேண்டியதில்லை.
எதிராளிகளை வெற்றி கொள்வது, கணக்கு பார்த்து நடந்து கொள்வதில் இல்லை; பெருந்தன்மையாக நடப்பதில் தான் உள்ளது.
இரு நண்பருக்கு தெரிந்த ஒருவர் இப்படிச் சொன்னார்... 'அவன் தான் அப்படி நடந்துகிட்டான்...
நம்மாளு ரொம்ப பெருந்தன்மை; எதையுமே வெளிக் காட்டிக்காம, ரொம்ப நேரம் கல்யாண வீட்டில் இருந்தாரு. அதுமட்டுமல்ல, சில வேலைகளைத் தானே எடுத்துப் போட்டு செஞ்சாரு... நம்மாளு மாதிரி யாரும் வரமாட்டாங்க...' என்று உச்சி முகர்ந்து சொல்லி விட்டார்.
கேள்விப்பட்ட, 'கணக்கு' மனிதருக்கு ரொம்பவும் வெட்கமாகப் போய் விட்டது.
ஓர் அழைப்பு என்பதை வெறும் காகிதமாக பார்க்கக் கூடாது; அதை, உணர்வும், உயிர்ப்பும் அடங்கிய இதயமாக பார்க்க வேண்டும்.
விசேஷம் மற்றும் நல்லது, கெட்டதுகள் இதயங்களை ஒன்று சேர்க்கின்றன; பல புதிய அனுபவங்களைக் கொடுக்கின்றன. பழைய உறவுகளை - நட்புகளை சந்திக்கிறபோது, அந்த இடத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
புதிய அறிமுகங்கள், பல வகைகளில் நமக்கு பயன்படுகின்றன. நம் உறவு, நட்பு, ஏன், தொழில் கூட விரிவடைய வாய்ப்பு இருக்கிறது.
ஒரு கல்லுாரி தாளாளரின் அறிமுகம், வேலை வாய்ப்பிலோ, கல்வி அட்மிஷனிலோ முடிய வாய்ப்பு இருக்கிறது.
ஒரு மருத்துவரின் அறிமுகம், நல்ல மருத்துவத்திற்கும், அநியாய மருத்துவ பில் வழியே நாம் தீட்டப்படாமல் தப்பிப்பதற்கும் வாய்ப்பாக அமைகிறது.
ஒரு பயணச் சீட்டு ஆய்வாளரின் அறிமுகம், தவிர்க்க முடியாத ஓர் அவசரப் பயணத்தின் போது, ஒரு, 'பர்த்' கிடைப்பதில் கூட முடியலாம்.
வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால், நுாலாம்படை உடலில் படிவதைத் தவிர, வேறு என்ன அதிசயம் நிகழ்ந்து விடும்!
'கல்லுாரி விழா; வாப்பா...' என்கிறாள் மகள். 'அடப் போம்மா... செம போரு; அதுங்க அடிக்கிற கூத்தை எவன் பாக்கறது...' என்று மறுக்கிற தந்தை, மிகப்பெரிய தவறை செய்கிறார்.
இவரது இலக்கு கல்லுாரி விழா கலை நிகழ்ச்சிகள் அல்ல; அழைத்த மகளின் அன்பிற்கு செவி சாய்த்து, அவளது உணர்விற்கு மதிப்பு கொடுப்பது தான்!
அவ்விழாவிற்கு போனால், மகளின் தோழிகள் பற்றி அறியலாம்; அவர்களது அப்பாக்கள், அம்மாக்களின் அறிமுகம் பிற்காலத்தில், தன் மகளின் எதிர்கால விஷயத்தில் நம்ப முடியாத நன்மையான முடிவுகளை எடுக்க உதவலாம்.
சரி, எங்கும் வராமல், இவர் சேமிக்கும் நேரத்தை, நல்லபடியாக பயன்படுத்தினாரா என்றால், இல்லை. வெட்டியான முறையில் இவர் போக்கிய பொழுதை, மகளுக்கென அளித்திருந்தால், வட்டியும், முதலுமாய் திரும்பி வர வாய்ப்பு இருக்கிறது தானே!
எந்த விழாக்களையும், விழாக்களாக பார்க்காதீர்கள்; வீழ்ந்து விடாமல் இருக்க உதவும் வாய்ப்புகளாகக் கருதுங்கள்.
விழாக்கள் எனில் கலந்துகொள்ளக் காரணங்கள் தேட வேண்டுமே தவிர, அவற்றை தவிர்ப்பதற்கான காரணங்களை தேடக் கூடாது!
லேனா தமிழ்வாணன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விழாக்களா... விடாதீர்கள்!
நான் யார் அழைத்தாலும் சென்றுவிடுவேன்
மொய் கொடுப்பதுஎல்லாம் ரெண்டாம்பட்சம் தான்
மொய் கொடுப்பதுஎல்லாம் ரெண்டாம்பட்சம் தான்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: விழாக்களா... விடாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1254485SK wrote:நான் யார் அழைத்தாலும் சென்றுவிடுவேன்
மொய் கொடுப்பதுஎல்லாம் ரெண்டாம்பட்சம் தான்![]()
![]()
![]()
ஹா..ஹா..ஹா....சூப்பர் !
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மூளையைத் தூங்க விடாதீர்கள்!
» வாரிசுகளை வறுமையில் விடாதீர்கள்
» மூளையைத் தூங்க விடாதீர்கள்!
» உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்!
» நல்ல நட்பை இழந்து விடாதீர்கள்… !!!
» வாரிசுகளை வறுமையில் விடாதீர்கள்
» மூளையைத் தூங்க விடாதீர்கள்!
» உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்!
» நல்ல நட்பை இழந்து விடாதீர்கள்… !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|