Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரளாவில் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ஹைடெக் மருத்துவமனை
3 posters
Page 1 of 1
கேரளாவில் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ஹைடெக் மருத்துவமனை
![கேரளாவில் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ஹைடெக் மருத்துவமனை En49ICWVTdG9BpFHa2iH+keralahospital4jpg](https://www.filepicker.io/api/file/en49ICWVTdG9BpFHa2iH+keralahospital4jpg.jpg)
![கேரளாவில் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ஹைடெக் மருத்துவமனை Um49kYceQEKT8bomq24G+kovalhospital1jpg](https://www.filepicker.io/api/file/Um49kYceQEKT8bomq24G+kovalhospital1jpg.jpg)
தமிழகத்தில், கூட்டுறவு சங்கங்களை அரசில்வாதிகள் சம்மணம்போட்டு அமர்ந்து சம்பாதிக்கும் மையங்களாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், பக்கத்து மாநிலமான கேரளத்தில் கூட்டுறவு சங்கத்தின் மூலம், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான வசதிகள் கொண்ட ஒரு மருத்துவமனையை செம்மையாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
‘இ.எம்.எஸ் நினைவு கோ-ஆபரேட்டிவ் மருத்துவமனை மற்றும் ரிசர்ச் சென்டர்’ - இதுதான் அந்த ஹைடெக் மருத்துவமனை. பாலக்காடு - கோழிக்கோடு சாலையில் பெருந்தலமன்னா என்ற இடத்தில் இருக்கிறது இந்த மருத்துவமனை. இதன் முகப்பிலேயே மருத்துவமனையை பார்த்தபடி மார்பளவு சிலையாய் இருக்கிறார் இ.எம்.எஸ். உள்ளே நுழைந்தால் தனியார் மருத்துவமனைக்கு நிகரான பிரமிப்பைக் காட்டுகிறது மருத்துவமனை.
இ.எம்.எஸ் நினைவாக..
இதன் அருகில்தான் இருக்கிறது ஏலங்குளம். அங்கு மனக்கல் என்ற இடத்தில்தான் முதுபெரும் கம்யூ னிஸ்ட் தலைவரும் கேரளத்தின் முன்னாள் முதல்வருமான இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் பிறந்தார். ஏலங்குளம், மனக்கல் சங்கரன் நம்பூதிரிபாட் (இ.எம்.எஸ்) என்பதே அவரது முழுப்பெயர். 1998-ல், அவர் இறந்த சமயத்தில் அவரது நினைவாக ஏழைகளுக்கு உதவ இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. கூட்டுறவு சங்கத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை முதலில் 50 படுக்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது 536 படுக்கைகள் கொண்ட ஆறு மாடி கட்டிடமாக வளர்ந்து நிற்கிறது.
ஒரு கூட்டுறவு சங்கத்தால் இது எப்படி சாத்தியமானது? மருத்துவமனையின் பொதுமேலாளர் எம். அப்துன் நசீரைச் சந்தித்து நமது கேள்வியை முன் வைத்தோம். அவர் பேசினார்.
இந்தியாவில் கூட்டுறவு சங்கம் மூலமாக செயல்படும் மருத்துவமனைகளில் என்.ஏ.பி.ஹெச் (National Accreditation Board for Hospitals) அங்கீகாரம் பெற்ற ஒரே மருத்துவமனை இது மட்டும்தான். மற்ற மருத்துவமனைகள் மாதிரி இங்கே நோயாளிகளிடம் சுரண்ட மாட்டார்கள். உழைப்பாளி வர்க்கத்துக்கு உயர்தர சேவை குறைந்த செலவில் கிடைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தொடங்கப்பட்டது இம்மருத்துவமனை
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கேரளாவில் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ஹைடெக் மருத்துவமனை
![கேரளாவில் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ஹைடெக் மருத்துவமனை MrZ03h3TSDqqZ07tgo0m+kovaihospital3jpg](https://www.filepicker.io/api/file/MrZ03h3TSDqqZ07tgo0m+kovaihospital3jpg.jpg)
27 ஆயிரம் பங்குதாரர்கள்
பொதுமக்களின் பங்களிப்பான 1.5 கோடி ரூபாயை வைத்து வாடகைக் கட்டிடத்தில் தொடங்கப்பட்ட இம்மருத்துவமனை இப்போது சொந்தக் கட்டிடத்தில் இயங்குகிறது. இப்போது இதன் பங்கு மதிப்பு 60 கோடி. 27 ஆயிரம் பங்குதாரர்கள் அவர்களைச் சார்ந்தவர்கள் என இதனால் லட்சம் பேருக்கு மேல் பயனடைகிறார்கள். பங்குதாரர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இங்கே பத்து சதவீதம் கட்டணச் சலுகை தரப்படுகிறது. இங்கு தினமும் 2,000 பேர் வரை வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள். ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்தும், தமிழகத்தின் கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்து மக்களும் இங்கு சிகிச்சைக்கு வருகிறார்கள்” என்ற அவரிடம், “இ.எம்.எஸ் பெயரில் மருத்துவமனை இருப்பதால் இங்கே இடதுசாரிகளின் கை ஓங்கியிருக்குமோ?” என்று கேட்டோம்.
அதற்கு அவர், “அப்படியெல்லாம் இல்லை. சாதி, மதம், இனம் கடந்து வெளிமாநில மக்களும் இதன் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இங்கு மருத்துவ அதிகாரியாக இருந்த ஏ.முகம்மதுதான் இப்போது மருத்துவமனையின் தலைவராக இருக்கிறார். இதன் 13 இயக்குநர்களில் தற்போதைய கேரள சபாநாயகரான ஸ்ரீராமகிருஷ்ணனும் ஒருவர். எவ்வித அரசியல் மனமாச்சரியங்களுக்கும் இடமளிக்காமல் மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மருத்துவமனை இது” என்றார்.
இந்த மருத்துவமனையில் அனைத்துவிதமான நோய்களுக்கும் உயர்தர நவீன சிகிச்சைகள் அளிக் கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, டயாலிசிஸ் சிகிச்சைக்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 150 ரூபாயும், நடுத்தர மக்களுக்கு 250 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் சிகிச்சையளிப்பதால் ஏற்படும் இழப்பை மருத்துவனையின் அறக்கட்டளை நிதியி லிருந்தும் பொதுமக்களிடம் திரட்டப்படும் நன்கொடைகள் மூலமாகவும் ஈடுகட்டிக் கொள்கிறார்கள்.
கேரள அரசின் அங்கீகாரம்பெற்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களும் இங்கு செயல்படுத்தப்படுகிறது. தமிழக முதல்வர் காப்பீட்டுத் திட்டத்திலும் தங்களை இணைத்துக் கொள்ளும்படி இம்மருத்துவமனை 2 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால், நம்மவர்கள் இதுவரைக்கும் மூச்சே விடவில்லையாம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கேரளாவில் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ஹைடெக் மருத்துவமனை
![கேரளாவில் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ஹைடெக் மருத்துவமனை B72HpxtNSE7xWr97RAdw+kovaihospital2jpg](https://www.filepicker.io/api/file/B72HpxtNSE7xWr97RAdw+kovaihospital2jpg.jpg)
விளம்பரம் செய்வதில்லை
இதற்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் நீலகிரி மாவட்டத்தின் பெரும்பகுதி மக்களுக்கு அது பிரயோஜனமாக இருக்கும் என்கிறார்கள் இங்குள்ள மருத்துவர்கள். இந்த மருத்துவமனையில் நர்சிங் கல்லூரியும் செயல்படுகிறது. எந்தவிதமான உள்குத்தும் இல்லாமல் முழுக்க முழுக்க மெரிட் அடிப்படையில் மட்டுமே இங்கே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
மருத்துவமனையிலும் அதற்கான கூட்டுறவு சங்கத்திலும் பணிபுரியும் பணியாளர்கள் ஒருவர்கூட இதன் பங்குதாரர் இல்லை. கேரள அரசின் கூட்டுறவு சங்க சட்டம் இதை அனுமதிப்பதில்லை. “அது சரி, இத்தனை சிறப்புகள் இருந்தும் இங்குள்ள மக்கள் ஏன் பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் என தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு ஓடுகிறார்கள்?” என்று கேட்டபோது,
“காசைக் கொட்டிக் குடுத்துப் பார்த்தால்தான் தரமான சிகிச்சையா இருக்கும்னு மக்கள் நினைக்கிறாங்க. அத்துடன், இப்படியெல்லாம் சிகிச்சையளிக்கிறோம்னு விளம்பரம் செய்வதில்லை என்பதை எங்களதுமருத்துவமனை நிர்வாகம் ஒரு கொள்கையாகவே வெச்சிருக்கு. அந்த வகையில, எங்களை நாங்களே விளம்பரப்படுத்திக்காததும் அதுக்கு ஒரு காரணமா இருக்கலாம்” என்கிறார்கள் இங்குள்ள மருத்துவப் பணியாளர்கள்.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கேரளாவில் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ஹைடெக் மருத்துவமனை
பொதுவாக தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள்
கண்டிப்பும் கனிவும் உள்ளவர்களாக இருந்தால்
அந்த நிர்வாகம் சிறப்பாக அமையும்
-
மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் அனைத்து
ஊழயர்களும் பாராட்டபட வேண்டியவர்கள்....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கேரளாவில் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ஹைடெக் மருத்துவமனை
மேற்கோள் செய்த பதிவு: 1254364ayyasamy ram wrote:
பொதுவாக தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள்
கண்டிப்பும் கனிவும் உள்ளவர்களாக இருந்தால்
அந்த நிர்வாகம் சிறப்பாக அமையும்
-
மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் அனைத்து
ஊழயர்களும் பாராட்டபட வேண்டியவர்கள்....![]()
![]()
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழகத்திலேயே முதன் முறையாக கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவமனை பொதுமக்களுக்கு பத்து ரூபாயில் நோய்க்கு தீர்வு தருகின்றனர்.
» டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள்
» என் கணவர் ரொம்ப ஹைடெக்…!
» இசைப்புயலின் ஹைடெக் மாஸ்க்!
» தில்லாலங்கடி ஹைடெக் திருட்டு-காணொளி
» டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள்
» என் கணவர் ரொம்ப ஹைடெக்…!
» இசைப்புயலின் ஹைடெக் மாஸ்க்!
» தில்லாலங்கடி ஹைடெக் திருட்டு-காணொளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|