ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டோர்…அவுட்டோர் – விளையாட எது பெஸ்ட்?

Go down

இண்டோர்…அவுட்டோர் – விளையாட எது பெஸ்ட்? Empty இண்டோர்…அவுட்டோர் – விளையாட எது பெஸ்ட்?

Post by ksikkuh Sat Dec 02, 2017 7:22 pm

இன்றைய காலகட்டத்தில், வீட்டின் வரவேற்பறைதான் குழந்தை விளையாடும் இடமாக மாறிவிட்டது. ஓடிப்பிடித்து விளையாடுவது, உயரம் தாண்டுவது, கண்ணாமூச்சி விளையாடுவது என அனைத்தும் மறைந்து அதற்கு பதில், கம்ப்யூட்டர், வீடியோ, மொபைல் கேம், தொலைக்காட்சி, மியூசிக் பிளேயர் உள்ளிட்டவையே விளையாட்டு, பொழுதுபோக்கு விஷயமாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட 90 சதவிகித பெற்றோர், தங்கள் குழந்தையை வெளியே விளையாட அனுமதிப்பது இல்லை. வெளியே விளையாடுவது உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்று கருதுகின்றனராம்.

தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் குழந்தைகளுக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன என்கின்றன ஆய்வுகள். வீட்டுக்குள் இருக்கும் குழந்தை மிகவும் பாதுகாப்பானதாக இருக்கிறது என்று பெற்றோர் கருதுகின்றனர். ஆனால், குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு தேவையானதை தவறவிடுகின்றனர் என்பதுதான் உண்மை. இது குழந்தையின் சமூக, உணர்வுபூர்வ, உடல் ரீதியான பாதிப்புகளை எதிர்காலத்தில் உருவாக்கலாம்.

இண்டோர் விளையாட்டு
வெளியே விளையாடும் நேரம் போக வீட்டுக்குள்ளே விளையாட, தாயக்கட்டை, பரமபதம், சொட்டாங்கல், பல்லாங்குழி அதன்பிறகு செஸ், கேரம் என பல விளையாட்டுக்கள் இருந்தன. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த பல குழந்தைகள், ஸ்மார்ட்போன் கேம் பிரியர்களாகத்தான் இருக்கிறார்கள்.

பாதிப்புகள்
ஸ்மார்ட்போன் விளையாட்டுகள், எந்த வகையிலும் குழந்தைகளின் அறிவுத்திறனை (ஐக்யூ) வளர்க்க உதவுவது இல்லை. குழந்தையின் சிந்திக்கும், செயலாற்றும் திறனை மழுங்கடிக்கின்றன.
இருட்டில் அமர்ந்து, ஒளிர் திரை கேம் விளையாடுவதால், விழித்திரை நரம்புகள் பாதிப்பு, பார்வைத்திறன் குறைவு, திரையில் உண்டாகும் அதீத ஒளி, மூளை நியூரான்களைத் தூண்டி, தூக்கமின்மையை ஏற்படுத்தும். அடுத்த நாள் காலையில் தாமதமாக எழ நேரிடும்; அன்றைய நாள் சோம்பல் நிறைந்ததாக ஆகிவிடும். இதன் காரணமாக படிப்பில் கவனக் குறைவு, ஞாபகமறதி ஏற்பட்டு கற்றல்திறனும் பாதிக்கப்படும்.
ரத்தம், வன்முறை அதிகமாக இருக்கும் கேம் விளையாடுவதால் ‘டெம்பர் டான்ட்ரம்’ (Temper tantrum) எனப்படும் அதீதக் கோபம் மற்றும் முரட்டுத்தனத்துக்கு ஆளாகிறார்கள்.
வீடியோ கேம் விளையாடிவிட்டு, நொறுக்குத் தீனிகள் சாப்பிடும்போது உடல்பருமன் ஏற்படுகிறது.
தடுக்கும் வழிகள்
குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட வேண்டும். பெற்றோர் பேசுவதைப் பார்த்துதான், குழந்தைகள் பேச ஆரம்பிக்கின்றனர். குழந்தைகளுடன் பெற்றோரும் சேர்ந்து விளையாடும்போது குழந்தைகள்-பெரியவர்கள் ஒருங்கிணைப்பு அதிகரிக்கும். குழந்தைகள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள்; பெற்றோர்களின் கண்காணிப்பிலும் இருப்பார்கள்.
அதே நேரம் ஒரேயடியாக அவர்களை ஸ்மார்ட்போனில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதும் தவறு. அன்றைக்குப் படிக்க வேண்டியவற்றைப் படித்து முடித்த பிறகு குறிப்பிட்ட சிறிது நேரத்துக்கு மட்டும் விளையாட அனுமதிக்கலாம். முக்கியமாக, அறிவுத்திறனை மேம்படுத்தும் செஸ், ரூபிக் கியூப், கணித பசில் போன்ற விளையாட்டுக்களை விளையாடச் சொல்லி ஊக்கப்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு பிடித்த மியூசிக், நடனம், ஒவியம், நீச்சல் போன்ற பயிற்சிகளில் விடலாம். இதனால் வீடியோ கேம்களில் உள்ள மோகம் குறையத் தொடங்கும்.
புத்தகம் வாசித்தல் மற்றும் அறிவுத்திறனை வளர்க்கும் உள் விளையாட்டுகளில் ஆர்வமுள்ள குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுவிடுவதே நல்லது.
தினமும் உடற்பயிற்சிகளை செய்யச் சொல்லலாம். பெரியவர்கள் நடைப்பயிற்சி செய்யும்போது குழந்தைகளையும் பார்க்கில் விளையாட விடலாம். இதனால் ஓடிவிளையாடும் விளையாட்டுக்களால் கிடைக்கும் நன்மைகளும் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.
அவுட்டோர் விளையாட்டு
குழந்தைகள் ஓடி விளையாடுவதால் உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும்; செரிமானம் சீராகும்; நேரத்துக்குப் பசி எடுக்கும்; நன்கு தூக்கம் வரும். உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
மனத்துக்குப் பிடித்த ஏதோ ஒரு விளையாட்டை மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவதால் அதன் மூலம் தங்களை அறியாமலேயே உடல் ஆரோக்கியத்தையும் பராமரிப்பார்கள்.
குழுவாக விளையாடும் விளையாட்டுக்களால் தாழ்வு மனப்பான்மை, காழ்ப்புணர்ச்சி, வன்மம் போன்ற கெட்ட எண்ணங்கள் குறையும். ‘டீம் ஸ்பிரிட்’, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஆகியவை அதிகரிக்கும்.
காலை மற்றும் மாலை வெயிலில் கிரிக்கெட், ஃபுட்பால், வாலி பால் போன்றவற்றை விளையாடுவதால், உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தினமும் காலையில் அரை மணிநேரம் ஷட்டில், பாட்மிண்டன் போன்ற விளையாட்டுக்களை விளையாட குழந்தைகளை ஊக்குவிக்கலாம். அதே நேரத்தில் எந்த விளையாட்டையும் பெற்றோர் குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது. அது அவர்களின் மனதை பாதிக்கும். குழந்தை எந்த விளையாட்டை விளையாடினாலும், அது அவர்களின் உடலுக்கும் மனதுக்கும் வேலை கொடுப்பதாக இருக்க வேண்டும். அதுவே அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது!
ksikkuh
ksikkuh
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum