ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! Empty ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran Thu Nov 30, 2017 8:22 am


ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! I102jH8QiG74QVDEyrEg+1
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! Rm8LN1pQWaaxBwoKWcpw+2

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! -- ௧- ( 1 )
வரலாற்றில் ஓலைச் சுவடிகளின் பங்கு - ௧ ( 1 )

வரலாறு என்பதன் அவசியம் கடந்து போன காலத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்காக மட்டும் அன்று . வரலாற்றின் தேவை நிகழ்காலத்தின் தேவைக்கேற்ப மாறக்கூடியது . சொல்லப் போனால் வாழ்வின் வளர்ச்சியே நாம் புறப்பட்ட இடத்தையும் இதுவரை கடந்து வந்த பாதையை நினைவு படுத்திக் கொள்வதையும் அதிலிருந்து பாடங்கள் பெறுவதையும் பொறுத்துத்தான் அமைகிறது .வரலாறு எத்தனை ஆழமாகப் பாடங்களை ஒரே ரீதியில் கூறினாலும் அதன் பாடங்களைச் சரிவரப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதில்லை.
வரலாற்றுக்கு ஆதாரமான காலத்தை ஆய்வதற்கு அந்தக் காலத்தைய இலக்கியமும், நிகழ்காலத்தில் செய்யப்படும் தொல்பொருள் ஆய்வும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அகழ்வாய்வில் பெறப்படும் முடிவுகளை அந்தக் காலத்தைய இலக்கியச் செய்திகளோடும், அந்தக் காலத்தைய இலக்கியச் செய்திகளை அகழ்வாய்வில் பெறப்படும் சான்றுகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் . அப்போதுதான் ஓர் உறுதியான முடிவுக்கு வரஇயலும்.
ஆனால் உலகின் பெரும்பாலான இடங்களில் இதுவரை அகழ்வாய்வில் பெறப்பட்ட சான்றுகள் இலக்கியத்தோடு ஒப்பிடப்பட்டு முடிவுகள் பெறப் படவில்லை .காரணம் அங்கே தொல்லிலக்கியங்கள் அகப்படவில்லை.
எகிப்தில் பிரமிடுகள் வரலாற்றைப் பறை சாற்றிக் கொண்டு கண்ணுக்கேதிரே இன்னும் நிற்கின்றன. காலத்தை வென்ற சான்றுகள்தாம் அவை. ஆனால் ஒரே குறை ஒப்பு நோக்கத் தொல்லிலக்கியங்கள் மட்டும் அங்கே இல்லை .நம் நாட்டிலேயே கூட வட இந்தியாவில் சிந்து வெளியில் மொகஞ்சோதரோ , ஹாரப்பா அகழ்வாய்வில் கிடைத்த முடிவுகள் சான்றுகள் இருக்கின்றன . ஆனால் அந்த ஆய்வை நிலை நிறுத்தும் வகையில் ஒப்புநோக்கத் தக்க தொல்லிலக்கியங்கள் தான் கிடைக்கப் பெறவில்லை .
ஆனால் தமிழ்நாட்டின் நிலையோ நேர்மாறானது. இங்கே தொல்லிலக்கியங்கள் கொட்டிக் கிடக்கின்றன ஒப்பிட்டுப்பார்க்க. தொல்லி லக்கியங்கள் கூறும் சான்றுகளைத் தேடும் தொல்பொருள் ஆய்வுதான் அத்தனை இல்லை. பூம்புகாரின் சிறப்புக்களைக் கூறும் சிலப்பதிகாரம் நம்மிடம் உண்டு; ஆனால் பூம்புகார் இன்னும் ஆழ்கடலில் பத்திரமாகத் தேடுவாரின்றி உறங்கிகொண்டு இருக்கறது . அங்கே எகிப்தில் பிரமிடுகள், சிந்து வெளியில் மொகஞ்சோதரோ , ஹாரப்பா அகழ் வாய்வில் கிடைத்த முடிவுகள், சான்றுகள் இருக்கின்றன .ஆனால் நிலை நிறுத்த இலக்கியங்கள் போன்ற புறச் சான்றுகள்தான் இல்லை .
ஆனால் தமிழ்நாட்டின் வரலாற்றை நிலை நிறுத்த எந்த அகழ்வாய்வும் தேவைப்படாத அளவில் நம்மிடம் மிக முக்கிய ஆதாரங்கள் உள்ளன. அதுவே வழி வழி வந்து இன்றும் நிலைத்திருக்கும் பழந்தமிழர் மரபு ஆகும் . தொல்லிலக்கியங்களில் பேசப்படும் அதே மொழியை இன்றும் வழி வழியாகப் பேசிவரும் பழங்குடிகளான தமிழர் மரபு இன்றும் நீடித்து வருகிறது .இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட அதே இலக்கண விதிப்படி இன்னும் அதே போல் பாடல் இயற்றும் வல்லமை கொண்ட தமிழர் மரபு இழை இன்னும் அறுபடாமல் வாழ்ந்து வருகிறது; சீரிளமை குறையாமல் தமிழ்க்குடி வாழ்ந்து வருகிறது. ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என வாழ்ந்த குலம் இன்னும் வாழ்ந்து வருகிறது .
வாழும் வரலாற்றுச் சின்னங்கள்தான் தொல் தமிழர்கள் .
அவர்களிடமே இன்னும் தொல்லிலக்கியங்கள் ஓலைச் சுவடிகளிலே எழுதப்பட்டு ஆண்டாண்டு காலமாகப் பாதுகாப்பாக உள்ளன; வாழும் தொல்குடிகளும் இருக்கின்றனர்; ஆனால் இதை அனைவரும் ஒப்புக் கொள்ளும் வகையில் புறச் சான்றுகளான அகழ்வாய்வுகள் தான் தேவை .
தமிழர்களான நாம் உண்மையில் அதிர்ஷ்டம் செய்தவர்கள். ஆயிரம், இரண்டாயிரம் வருஷத்திற்கு முன் வாழ்ந்த ஒரு கவியின் உள்ளத்தை அறியக்கொடுத்து வைத்திருக்கிறோம்; அந்த மொழி இன்னும் அதே வடிவில் இருக்கிறது . இன்னும் அதில் உள்ள சொற்கள் நமக்குப் புரிகின்றன. அதே பொருளில் இன்னும் அதே சொல் புழக்கத்தில் இருக்கிறது .
ஆயிரம் வருடத்திற்கு முந்தைய இத்தாலிய, லத்தீன் நூல்களை அவற்றைத் தாய் மொழியாகக் கொண்டு வாசிப்பவர் தற்போது இல்லை; ஆயிரம் வருஷத்திற்கு முன் இருந்த ஆங்கில நூல் எதையும் தற் காலத்து ஆங்கிலேயர்களால் படித்து விட முடியாது.
இது எப்படித் தமிழ் நாட்டில் மட்டும் நிகழ்ந்தது ?
இதில்தான் தமிழர் தம் தொல்லறிவு வெளிப்படுகிறது . தன்னைச் சுற்றி இருந்த இயற்கையின் கொடையான செடி கொடி மரங்கள் இவை களைத் தனது உணவு மற்றும் உடல் நலம் பேணும் மருத்துவ குணங் களைக் கண்டு அவற்றைத் தக்கவாறு பயன்படுத்த அறிந்த தொல் தமிழ் இனம் மன வழி , செவி வழி பெற்ற கருத்துக் கோவைகளை வரி வடிவில் மாற்றுவதற்கு ஏற்ற சாதனம் ஒன்றைத் தங்கள் ஆற்றல்மிகு அறிவால் கண்டனர் .
கற்பக விருக்ஷமான பனை மரத்தின் ஓலைகளின் பெரும் பயன் பாட்டைக் கண்டனர். பனை ஓலைகளில் எழுதப்பட்டவை எவ்விதப் பராமரிப்பு இல்லாத போதும் குறைந்தது 300 ஆண்டுகளாவது இருக்கும் திறன் அறிந்தனர் . தொடர்ந்த பராமரிப்பு இருப்பின் ஓலைகளின் ஆயுள் நீடிப்பதையும் கண்டனர் . இவ்வாறு பழந்தமிழர் தொல் இலக்கி யங்கள் , அறிவுச் செல்வங்கள் காலம் காலமாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுத் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டன. வட இந்தியாவில் பனை ஓலைகள் கிடைக்காத இடங்களில் பத்திரங்கள் எனப்படும் இலைகளில் எழுதும் வழக்கம் இருந்தது .
.இதுவே தமிழ் நாட்டின் தொல் இலக்கியங்கள் தொடர்ந்து பாதுகாப் பட்டதன் காரணம் ஆனது. தமிழின் குன்றாத சீரிளைமைக்கு ஓலை களே ஒருவகையில் காரணம் ஆனது .
தொன்ம இலக்கியங்களை ஓலைகளில் பாதுகாத்துப் படிஎடுத்துப் பாதுகாத்து வருங்கால சமுதாயத்திற்கு தங்கள் மரபின் செல்வங்களாக வழங்கியதே அன்றிருந்த மொழியும், இலக்கணமும் இன்னும் ஜீவனுடன் விளங்குவதற்குக் காரணமானது எனலாம் . இன்றும் தமிழின் தொன்மைக்குச் சான்றாக நமக்குக் கிடைத்துள்ள எண்ணற்ற இலக்கியங்களுக்கும், அறிவுசார் நூல்களுக்கும் காரணம் ஓலைச் சுவடிகளில் எழுதும் பழக்கமே ஆகும் . பனையின் கொடையால்தான் நமக்கு ஜீவனுள்ள நமது தமிழ்மொழியும் அதன் தொன்மை இலக்கியங்களும் கிடைத்துள்ளன .
.
முன்னையோரின் புலமை, அவர்களுடைய கல்வி பண்பாட்டுப் பெருமை முதலியவற்றை அறிந்து கொள்வதற்குத் துணை நிற்பது ஓலை சுவடிகள் மூலம் அவர்கள் விட்டுச் சென்ற அறிவுசார்ந்த சொத்துக்களேயாகும். சென்ற நூற்றாண்டுவரை அவற்றைச் செல்வமாக மதித்துப் பூசித்து வந்தனர். சுவடிகள் இல்லாத வீடுகளே தமிழ் நாட்டில் இல்லை என்று சொல்லும்படி, அவை சிற்றூர்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்தன . தமிழின் தொன்மையை அறிவதற்குத் துணையாக நிற்கும் சங்க நூல்களைச் சுவடிகளில்தான் எழுதித் தொடர்ந்து போற்றிப் பாதுகாத்தனர். பனை ஓலையை நன்கு பதப்ப டுத்தி ஒழுங்குபட நறுக்கிச் சுவடிவடிவில் அமைத்து எழுதினர். இன்றும் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஓலைச் சுவடிகள் தமிழ் நாட்டின் கிராமங்களில் பரவலாகக் காணப்படுவது நமது பண்டையோரின் அறிவின் ஆழத்தை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
சீனர், கிரேக்கர், பினிசியர், உரோமர், எபிரேயர், அர்மீனியர், அராபியர் ஆகியோர் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை பைரஸ் என்னும் ஒருவகை புல்லையே எழுதப்படும் பொருளாகப் பயன்படுத்தினர். பேப்பர் என்ற சொல்லும் ''பைபரஸ்'' என்னும் சொல்லிலிருந்து உருவானது என்பர். ஆனால் இவை நமது தொல்தமிழர் பயன்பாட்டில் இருந்த ஓலைச் சுவடிகளுக்குத் தரத்தில் ஈடாகாது .
பழஞ்சுவடிகளுள் பல போற்றுவாரின்றி அழிந்து போனமையால் நமக்குக் கிடைக்க வேண்டிய பல அரிய நூல்களும் கிடைக்கவில்லை. இலக்கண இலக்கியங்கள், மருத்துவம், சோதிடம், வானசாத்திரம் முதலான பல்வேறு சுவடிகள் இன்னும் அச்சிடப் பெறாத நிலையில் கிராமங்களில் இருக்கக் கூடும். அவற்றையெல்லாம் தொகுத்து முறைப் படுத்தி ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சுவடிகளைப் படித்து அவற்றைப் படியெடுத்துப் பாதுகாக்கும் அரிய கலையைப் பயிற்றுவிக்க ஆர்வம் கொண்டோர் அருகிப் போனதால் படி எடுக்கப் படாமலும் , பாதுகாக்கும் முறை அறியாததாலும் கொஞ்சம் கொஞ்ச மாகச் சுவடிகள் நமது கிராமங்களில் இருந்து மறையத் தொடங்கின. அப்போதுதான் எஞ்சிய ஓலைச் சுவடிகளைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தையும், அவசரத்தையும் உணர்ந்த மத்திய அரசின் கலாசாரத் துறை 2003 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கும் பழமை வாய்ந்த ஓலைச் சுவடிகள் , காகித சாசனங்கள் இவற்றைக் காக்க ஓர் இயக்கம் ( NMM) தொடங்கியது .
இந்த இயக்கம் தமிழ் நாட்டில் NSS மாணவர்களைக் கொண்டு அந்தந்தப் பகுதியில் இருந்த கிளை நூலகர்களைக் கொண்டு ஒரு மாபெரும் கணக்கெடுப்பு நடத்தித் தமிழ் நாட்டில் மட்டும் சுமார் ஐந்து லக்ஷம் சுவடிகள் சுமார் 16,000 இடங்களில் இருப்பதாக அறிவித்தது .
இன்னும் சுவையான இனிய பல அனுபவங்கள், ஓலையைத் தேடி நாங்கள் ஓடிய போது சந்தித்த பெரிய மனிதர்கள் , அவர்கள் காட்டிய பெருந்தன்மை ,தங்களின் பாரம்பர்ய சொத்தாகப் பாதுகாத்து வந்த அறிவின் செல்வங்களை நாங்கள் கொடையாகக் கேட்டபோது எந்தப் பொருளாதார எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் முக மலர்ச்ச்சியோடு அவர்கள் தஞ்சைப் பல்கலைக்கு வழங்கிய பண்பு ,அப்போது அவர்கள் காட்டிய உபசரிப்பு இவற்றை வாழ்நாள் முழுதும் மறக்க இயலாது .
தஞ்சைத் தமிழ்ப் பல்கலையும், தமிழ் மரபு அறக்கட்டளையும் சேர்ந்து செய்து கொண்ட MOU வின்படி மேற்கொள்ளப்பட ஓலைச் சுவடிகள் சேகரிப்புத் தொடர்பாக அண்ணாமலை சுகுமாரன் ஆகிய நான், செல்வமுரளி இருவரும் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாகவும் முனைவர் கோவை மணி அவர்கள் தஞ்சைப் பல்கலை சார்பாகவும் கடந்த பெப்ருவரி, மார்ச் மாதங்களில் சென்னை ,திருவள்ளூர், காஞ்சி புரம், நாமக்கல், திருநெல்வேலி ,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்ட தேடுதலின் முக்கியமான சுவையான சந்திப்புகள் அடங்கிய இத்தொடர் அவர்களுக்கு நன்றி கூறும் முகத்தான் இங்கு எழுதப்படுகின்றது .
இந்தத் திட்டத்தின் பின்புலமாக இயக்கும் சக்தியாகச் செயல்பட்ட THF நிர்வாகிகள் சுபா ,கண்ணன், ஆண்டோ இவர்களின் அன்பும் ஆதரவும் என்றும் மறக்க முடியாதவை .
------------------------------------
ஏதோ தேடும் போது , எனது இந்தப் பழைய கட்டுரை கண்ணில் பட்டது .அதை மீண்டும் நண்பர்களின் பார்வைக்குப் பகிர்கிறேன் .--
இந்தக்கட்டுரை தொடர் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் எனது முதல் கட்ட சுவடித்த தேடல் முழுமைபெற்றபின் ,கிடைத்த ஓய்வின் போது எழுதியது
எனது இரண்டாம் கட்ட தேடலில் பேராசிரியர் கோவைமணி , கணினி நிபுணர் செல்வமுரளி ஆகியோர் வரவில்லை .நான் மட்டுமே பயணித்தேன் .
அந்த இரண்டாம் கட்டத்தில் மட்டுமே பேருஇம்பாலான சுவடிகள் சுமார் 70,000 ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்டு தமிழ்ப் பலகலைக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது .
இந்த செய்திகளும் அப்போதேஇணையத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது .
அண்ணாமலை சுகுமாரன் M.A,
21/11/17
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! Empty Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by Dr.S.Soundarapandian Thu Nov 30, 2017 8:34 pm

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! 1571444738

எனக்குப் பழைய நினைவுகளைக் கொண்டுவந்து தந்துள்ளீர்கள்!

படத்தில் இருக்கும் இராசேந்திரனும் நானும் ஓலைச்சுவடி ஆய்வகத்தில் ஒன்றாகப்
பணி புரிந்தவர்கள்! தாங்கள் குறிப்பிட்ட கோவை மணியும் என் நண்பரே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! Empty Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran Sat Dec 02, 2017 7:28 pm

ஓலைச் சுவடிகளைத் தேடிய படலம் ! -- ௩ - ( 3 )
2009 டிசம்பர் மாதம் 18 நாள் அன்று தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் சுபாஷிணியும் , தமிழ்ப் பல்கலைக் கழகமும் ஓலைச் சுவடிகள் தேடுதல், அவற்றை மின்னாக்கம் செய்தல் ஆகியவை பொருட்டு ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். , நான் அதில் சாட்சி கையெழுத்து போட்டேன் .
அதைத் தொடர்ந்து உடனே பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா, அதைத் தொடர்ந்து அரையாண்டு விடு முறை என நாட்கள் நகர்ந்தன .
நானும் இடைவிடாது தஞ்சைக்கு அலைந்தேன் .அது தனிக்கதை .
நீண்ட அலைச்சலுக்குப்பிறகு ,ஒருவழியாக ,5/ 2 / 2010 முதல் திட்டமிட்டபடி சென்னையில் முனைவர் கோவை மணியுடன் தேடுதல் பணி தொடங்கலாம் என்த்தகவலின் படி பணி தொடங்கியது. தஞ்சையில் இருந்து நான் புறப்பட்ட நேரம் மாலை 6 மணி, நாள் 4 /2 /2010 . .நான் புதுவைக்கு விரைந்தேன் .
! செல்வமுரளி மறுநாள் கலந்து கொள்ள நிச்சயித்து உடுப்பு எடுக்க ஊருக்குப் போக , நான் எடுத்தேன் ஓட்டம் !இரவு முழுவதும் பயணம் ! விடியலில் மீண்டும்காலையில் சென்னைக்கு பயணம் ! அத்தனை ஆர்வம் !
பத்து மணிக்கே எழும்பூர் !ரயிலும் வந்தது, அத்துடன் கோவை மணியும் வந்தார் .
ரயில் நிலைய பிளாட்பாரத்தின் நாற்காலிகள் எங்கள் ஆலோசனை அறையாக மாறியது . சென்னையில் சுவடிகள் இருப்பதாக NMM தயாரித்த பட்டியலில் இருந்த முகவரிகள் மொத்தம் 76 .நான் முன்பே அவற்றைப் பகுதி வாரியாக ராயப்பேட்டை, மயிலாப்பூர் பகுதி என முகவரிகள் பிரித்து வைத்திருந்தேன். அன்று எங்கே போவது ? எங்கே முடிப்பது என ஆராய்ந்தோம். அருகில் இருக்கும் சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர் , திருவல்லிகேணி பார்த்து நான் அங்கே விடுதியில் தங்கு வது. மறுநாள் காலை மீண்டும் அங்கிருந்து ஆரம்பிப்பது என்று தீர்மானித்தோம் . எதிரே சென்று அவசர அவசரமாக மதிய உணவை முடித்துக் கொண்டோம் . அழைப்பு வண்டியை (CALL TAXI) அழைத்தோம் . மறுநாள் முதல் நான்கு நாட்களுக்கு ஒரு வண்டியை அமர்த்திக் கொண்டோம் .
உ வே சா அவர்கள் மாதிரி மாட்டு வண்டியில் செல்லும் பாக்கியம் இப்போது கிட்டாதே ! ஏதோ கிடைத்த வண்டியில் திருப்தி அடைய வேண்டியதுதான் என மனத்தை சமாதானப்படுத்திக் கொண்டோம். (சும்மா நகைச்சுவைக்குத்தான் ! முன்பே சொல்லிவிட்டேன், அது வேறுவகைத் தேடல். NO COMPARISON PLEASE ! )
சிந்தாதிரிப் பேட்டையில் ஒரே ஒரு முகவரிதான் இருந்தது. எனவே குழப்பம் இல்லை. வண்டி நேரே சிந்தாதிரிப் பேட்டை சென்றது. முகவரியில் இருந்த பெயர் நிமலன். பட்டியலில் எப்படி இருந்தது தெரியுமா ?
Nameelan .A
107 , CHIKANA CHETTY STREET
CHENDARIPET. CHENNAI -2
சிந்தாதிரிப் பேட்டை சென்று தோன்றிய ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி நமீலன், சிக்கன செட்டித் தெரு என விசாரிக்க ஆரம்பித்தோம். யாருக்கும் தெருவும் தெரியவில்லை , நபரும் தெரியவில்லை . நடந்து நடந்து வண்டியை விட்டு நீண்ட தூரம் வந்து விட்டோம் . தாகம் நாக்கை இழுத்தது , நடை தளர்ந்தது ! அப்போது தான் தவறு புரிய ஆரமித்தது.
குளிர்பானம் குடிக்க ஒரு கடைக்குச் சென்று பானம் அருந்தி மீண்டும் மெதுவாக ’ இங்கே நமீலன் என யாராவது....’ எனக் கேட்க ஆரம்பித்ததும் ’ நிமலனைக் கேட்கிறீர்களா ? பக்கத்தில் சிக்கண்ண செட்டித் தெருவில் தான் போங்கள் !’ என்றார்.
.
இரண்டு புதிர்களை ஒரே நேரத்தில் விடுவித்த சாதனை அவருக்குத் தெரியவில்லை! இப்போது கொஞ்சம் தெம்பாக அருகில் இருந்த வீட்டை அடைந்தோம் வீட்டு எண்ணைப் பார்த்தேன் அதுவும் 107 இல்லை. என்னை அறியாமல் ’முருகா!’ என்றேன்! ஆனால் அப்படி உரக்கக் கூறும் வழக்கம் எனக்குக் கிடையாது. என்னவோ தோன்றியது, கூறிவிட்டேன். உள்ளே சென்று ’நிமலன் ஐயா இருக்கிறாரா?’ என்றேன்.
அது ஒரு புத்தகக் கடையாக இருந்தது. ஒரு சிறுமியும் சிறுவனும் இருந்தனர் .’ நிமலன் வெளியே சென்றிருக்கிறார், உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டனர். எங்களுக்குச் சுவடிகள் வேண்டும் என எப்படிக் கேட்பது . எனவே நாங்கள் எங்களைப் பற்றியும், சுவடி தேடிக் கிளம்பி இருப்பதையும் கூறினோம். இருவரும் எங்களைச் சில கணங் கள் பரிதாபமாகப் பார்த்தனர்.’ இங்கே ஏன் வந்தீர்கள்?’ எனக் கேட்டனர். பிறகு உடனே NMM பற்றி விளக்க ஆரம்பித்தோம் ‘ இந்தப் பட்டியலில் உங்கள் வீட்டில் 160 சுவடிகள் இருப்பதாகப் பதியப் பட்டுள்ளது’ என்றதும் அதுவரை உற்சாகமாகப் பேசிவந்தவர்கள் இப்போது எங்களை பயத்துடன் ஏதோ பிள்ளை பிடிக்க வந்தவர்களைப் பார்ப்பது போல் பார்த்து , அருகில் இருந்த அழைப்பு மணியை அலற விட்டனர்.
உடனே மாடியில் இருந்து ஒரு பெண்மணி இறங்கி வந்து, மீண்டும் ஒருமுறை எங்கள் கதையை முழுவதும் கேட்டார். பின் ’இது யார் வீடு தெரியுமா?’ எனக் கேட்டார். நாங்களும் முகத்தை அப்பாவித் தனமாக வைத்துக்கொண்டு ’ ‘இங்கே நிமலன்...’ என்று இழுத்தோம் . உடனே அந்தப் பெண்மணி மேலும் எங்களைச் சோதிக்க விரும்பாமல் ‘ இது வாரியார் சுவாமிகள் வீடு ! நான் அவரது சகோதரர் மகள்! நிமலன் அவரது சகோதரர் மகன். அவர் சுவாமிகளின் புத்தகங்களைப் பதிப்பித்து வருகிறார். நீங்கள் கூறியபடி இங்கே 160 புத்தகக் கட்டு வேண்டுமானால் இருக்கிறது. 160 சுவடிக் கட்டுகள் கிடையா " என்றார்.

வாரியார் சுவாமிகள் பெயரைக் கேட்டதும் ஒரு கணம் நாங்கள் இருவரும் மெய்சிலிர்த்து விட்டோம் . இறையருளாலேயே நாங்கள் முதலில் இங்கு வந்து எங்கள் தேடுதலை ஆரம்பித்ததை உணர்ந்தோம்.
இன்னும் சொல்லப்போனால் வாரியார் சுவாமிகளுக்கும் என் வாழ்க் கைக்கும் தொடர்பு உண்டு . நான் முதல் வெளிநாடு சென்று திரும்பி யதும் ஒரு தொழில் உற்பத்திசாலை ஆரம்பித்தேன் ;.அதைத் திறந்து வைத்தது (1985) வாரியார் சுவாமிகளே ! அத்தொடர்பை நான் கூறியதும் அந்தப் பெண்மணி எங்களை மாடியில் இருக்கும் சுவாமிகளின் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று, வழிபடச் செய்து, பூஜைகள் நடத்தி, எங்கள் பணி வெற்றியடையும் எனவும் வாழ்த்தினார். எங்களுக்குச் சில புத்தகங்களையும் பரிசாகத் தந்தனர். கந்தன் அருள் பெற்ற சந்தோ ஷத்துடன் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தோம். சிந்தாதிரிப் பேட்டையில் எங்களுக்குச் சுவடி கிடைக்காவிட்டாலும் நான்கு முக்கிய போதனைகள் கிடைத்தன.
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
28/11/17
சுவடிகள் எங்கு எங்கு எல்லாம் இருக்கும் தெரியுமா ?
படத்தைப்பாருங்கள் !
கூரையில் சேமித்துவைத்ததை
கோரியவுடன் தானம் தரும்
தயவு கொண்ட தாத்தா !
இந்தக்கட்டுரை 01 May 2010 12:18 அன்று எழுதப்பட்டது .
2009 டிசம்பர் மாதம் 18 நாள் ஒப்பந்தம் செய்யப்பட்டது
மிகுந்த அலைச்சலுக்குப் பிறகு ,தேடல் துவங்கியது 5/2/2010
முதல் கட்டத தேடலில் சுமார் 26, 000 ஏடுகளைத்த தேடி பல்கலைக் கழகத்தில் ஒப்படைத்தோம் .அப்போது கிடைத்த ஓய்வில் இந்தக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்தேன் .
அதன் பயனாக இரண்டாம் கட்ட தேடுதல் வாய்ப்பு கிடைத்தது .அப்போது நான் மட்டுமே தேடலில் ஈடுபட்டேன் .அப்போதுதான் அதிக அளவில் ஏடுகள் தேடி எடுக்கப்பட்டது சுமார் 70.000 ஏடுகள் கிடைத்தது .இரண்டாம் கட்ட தேடுதலின் முதல்நாளில் மட்டும் 9.000 ஏடுகள் கிடைத்தது .
அவை அத்தனையும் அப்போதே பதிவு செய்யப்பட்டுள்ளது .
அப்போது துணை வேந்தராக இருந்த முனைவர் ராஜேந்திரன் அவர்களின்
அன்பையும் ,அவர் நல்கிய ஒத்துழைப்பையும் மறக்க இயலாது .
இன்னமும் நிறைய அனுபவங்கள் தொடரும் .

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! Zlvr8tGWTQ6ey211X96X+m1
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! Empty Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran Sat Dec 02, 2017 7:45 pm

Dr.S.Soundarapandian wrote:ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! 1571444738

எனக்குப் பழைய நினைவுகளைக் கொண்டுவந்து தந்துள்ளீர்கள்!

படத்தில் இருக்கும் இராசேந்திரனும் நானும் ஓலைச்சுவடி ஆய்வகத்தில் ஒன்றாகப்
பணி புரிந்தவர்கள்! தாங்கள் குறிப்பிட்ட கோவை மணியும் என் நண்பரே!
மேற்கோள் செய்த பதிவு: 1252147


அப்படியா ? மிகுந்த மகிழ்ச்சி
முனைவர் ராஜேந்திரன் அப்போது தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தில்
துணை வேந்தராக இருந்த போது அவர் நல்கிய ஒத்துழைப்பு மறக்க இயலாது .
கோவை மணியைப் பற்றி சொல்ல நிறைய உள்ளது .

தங்களை சந்தித்து பேச நினைக்கிறேன் .
முன்பே ஒருமுறை எனது விருப்பத்தை தெரிவித்திருந்தேன் .
எனது எண் 9345419948

நான் இதைத்தொடரையெழுத்தியது , அந்த தேடுதல் நடைபெற்றபோதே 2010 இல்.

ஆனால் இப்போது வரலாறு ஏழு ஆண்டுகளில் திருத்தப்படுவதாக அறிந்தேன்.
எனவே இதை மறு பதிவு செயகிறேன் .
இத்தனை பெரிய தேடுதல் நடைபெற்றது ,இப்போதைய இளைய சமுதாயத்திற்கு தெரியவேண்டும் .
தங்களிடம் நேரில் பேச விழைகிறேன் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! Empty Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran Mon Dec 04, 2017 2:07 pm

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! TsvkkycfSZiFNJUt8hMQ+o9ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! Rigllq7oRNaiL6Qn4YtS+o8
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! VF2DfW5PQs6MpeMOAAZK+o7

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !- ௪ (4 )
பழஞ்சுவடிகளில் ஒற்றெழுத்துகளுக்குப் புள்ளி இருக்காது; நெட்டெ ழுத்தைக் காட்டும் கொம்பு வேறுபாடுகளும் சுவடிகளில் இரா. ஏடுகள் ஒடிந்தும் கிழிந்தும் இருக்கும்; மெய்யெழுத்துகளில் புள்ளி இருக்காது ; இவற்றை அறிந்து எழுதுவதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும். அதை விட அதிகம் வேண்டுவது பொறுமை. பார்வைக் கூர்மை மிக அவசியம் .
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிந்தாதிரிப் பேட்டையில் எங்களுக்குச் சுவடி கிடைக்காவிட்டாலும் நான்கு முக்கிய போதனைகள் கிடைத்தன என்று சொல்லி இருந்தேன். இப்போது நாங்கள் பெற்ற போதனைகளைப் பார்ப்போமா?
NMM பட்டியல் 2006ல் முழுமையாக வெளியிடப்பட்டுப் பயன்பாட்டில் இருந்தாலும் அதை நாங்கள் இப்போதுதான் மிகவும் தாமதமாகப் பயன்படுத்த இறங்கி இருக்கிறோம். பெரும்பாலான சேகரிப்பாளர்களும்,
நிறுவனங்களும் முன்பே முதல் அறுவடை செய்து சுலபமாகப் பெறகூடியவற்றைப் பெற்றுவிட்டன .எனவே இந்தப் பட்டியல் உண்மையா பொய்யா ? அதிலுள்ள தகவல்களை எந்த அளவு நம்பலாம் இந்தப் பட்டியலை வைத்துத் திறம்பட எவ்வாறு வேலை செய்வது.? அதில் இருந்து அதிக பட்ச வெற்றியைப் பெற என்ன செய்ய வேண்டும் ? எனப் பல சிந்தனைகள் மனத்தில் இருந்தன . வேறு முனையில் வேறு இந்தப்பட்டியல் முழுவதும் தவறு என ஒரு பேச்சு இருந்தது. ஆனால் சிந்தாதிரிப் பேட்டை விஜயம் எங்களுக்குச் சில தெளிவை உடனே உண்டாக்கியது.
க ) பட்டியலில் இருக்கும் ஊரின் பெயர், தெருவின் பெயர், நபரின் பெயர் இவை எதையும் அதில் உள்ளபடியே எடுத்துக்கொள்ளக் கூடாது; ஏன் எனில் தமிழ் நாட்டில் NSS மாணவர்களால் வீடு வீடாகச் சென்று எடுக்கப்பட்ட பட்டியல் தில்லிக்கு அனுப்பப்பட்டு அங்கிருக்கும் தமிழ் தாய்மொழி அல்லாத ஹிந்திக்காரர்களால் தட்டச்சு செய்யப்பட்டிருப்பதால் இதில் இருக்கும் ஊர், தெரு, நபர்கள் பெயருக்கு அவர்களுக்குத் தோன்றிய உச்சரிப்புக் கொடுத்துத் தட்டச்சுச் செய்திருக்கிறார்கள். எனவே நிமலன் என்பது நமீலன் ஆனது போல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் எனவே பட்டியலில் இருப்பது ஒருவேளை சரியாக இருந்தாலும் இருக்கலாம் அல்லது அதை ஒத்த வேறு பெயராகவும் இருக்கலாம். எனவே விபரம் வழி முதலியவை விசாரிக்கும்போது பெயரை ஒத்த எல்லாவித மார்கத்திலும் விசாரிக்க வேண்டும்; நிறையக் கற்பனை வளம் வேண்டும். நிகண்டு அறிந்திருந்தாலும் நல்லதே. அம்மட்டுமா ?
௨) முகவரியைச் சரியாகக் கண்டபின் அங்கிருப்பவரிடம் எப்படி அணுகுவது என எங்களுக்கு ஒரு தெளிவு உண்டாகியது .வாரியார் சுவாமிகள் வீட்டில் இருந்தோர் மிகுந்த நல்ல எண்ணம் கொண்ட வர்கள். எங்களுக்கு ஆறுதலும் ,ஆசியும் வழங்கினர். ஆனால் பிற இடங்களில் எப்படிப் பேச வேண்டும் எப்படி அணுக வேண்டும் என ஒரு மனக்கணக்கு எனக்கு உருவானது .
’First impression is the best impression’ எனக் கூறுவார்கள். எனவே நாம் கூறும் முதற் சொற்களைப் பொறுத்தே, ஆரம்பிக்கும் விதத்தை வைத்தே அங்கே ஓலைச் சுவடி பெறுவதும், இதர உபசரிப்பும் இருக்கும் எனப் புரிந்து கொண்டேன்
௩) நடக்க ஆரம்பிக்கும்போது நாம் போகப் போக வண்டியையும் கூடவே நகரச் செய்ய வேண்டும். அதற்கு முதலில் ஓட்டுனரின் கை பேசி எண் மிகவும் தேவை. இதனால் ஒரு வேலை முடிந்ததும் அடுத்த இடம் போக வண்டியும் தயாராக இருக்கும் .
௪) பட்டியலில் இருக்கும் முகவரிகள் ஏதோ பொய் முகவரிகள் அல்ல. அவை ஓலைகள் இருக்கும் இடம், இருந்த இடம் அல்லது இருக்கும் சாத்தியம் உள்ள இடம்தான் என்பதை புரிந்து கொண்டோம். ஒவ்வொரு இடமும் அவசியம் போகவேண்டிய இடமே! எந்தப் புற்றில் பாம்பு இருக்குமோ தெரியாது.
புரிந்தவை எனக் குறிப்பிடுபவை மிகவும் elementary ஆகப் பலருக்கும் தோன்றலாம். ஆனால் சின்னச் சின்னப் புரிதலும் அதன் ஒழுக்கமும் தான் வாழ்வின் வெற்றியை நிர்ணயிக்கின்றன . நாங்கள் சென்னையை முதலில் ஓலை தேடுதலுக்குத் தேர்ந்தெடுத்த காரணமே, சென்னையில் கிடைக்கும் அனுபவங்களைப் பொறுத்தே தேடுதல் தொடர்பான சில முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும் என்பதால்தான்;.ஏனெனில் சென்னையில் மொத்தம் 76 இடங்கள்தான். எனவே முடிந்தவரை எல்லா இடங்களையும் சென்று பார்த்துப் பட்டிய லின் நம்பகத்தன்மையை அறிவதும், மக்களை எப்படி அணுகுவது, அவர்களின் reaction எவ்வாறு இருக்கிறது என்பதைக் காண்பதும் எனது நோக்கமாக இருந்தது. சென்னை அருகில் இருக்கிறது; .குடியிருப்புப் பகுதிகள் அருகருகே உள்ளன; ஓரளவு சாலை வசதி அங்கே உண்டு.பிற மாவட்டங்களில் ஒவ்வொன்றும் ஆயிரத்திற்கு மேல் முகவரி உண்டு. மொத்தமும் கிராமங்களை கொண்டது. இடைவெளி தூரம் அதிகம். எனவேதான் சோதனை செய்யச் சென்னையைத் தேர்ந்தெடுத்தேன்
விளையாட்டுப் பயிற்சிக்கு அருகில் இருக்கும் மைதானம் தானே சிறந்தது.
வாரியார் சுவாமிகளின் வீட்டில் இருந்து அவசர அவசரமாக மயிலாப்பூர் கிளம்பினோம். மயிலாப்பூரில் சமஸ்க்ருத கல்லூரி, K.S.R INSTITUTE NO. 84, T.V.K ROAD என இரு முகவரிகள் இருந்தன. மாலை எத்தனை மணிக்குக் கல்லூரி மூடப்படுமோ என்ற பயத்துடன் விரைந்தோம்; நல்லவேளை அங்கு கல்லூரி மூடப்படவில்லை; K.S.R NSTITUTE கல்லூரி வளாகத்திலேயே இருந்தது . நாங்கள் அதன் முதல்வர் முனைவர் காமேஸ்வரியை சந்தித்தோம். அவர்களிடத்தில் சுமார் 1500 சுவடிகள் இருப்பதைக் காட்டினார். அதில் ’சாரங்கன் கதை’ என்ற ஒரு கதைப் பாடலும், மற்றவை வைஷ்ணவ கிரந்தங்களாகவும் இருப்பதாகக் கூறினார். ஆனால் அவற்றைத் தஞ்சை பல்கலைக்குக் கொடையாகத் தர இயலாது என்றார். அவர்களிடம் அவற்றை மின் னாக்கம் செய்வது குறித்தும் பேசினோம். அவர்கள் முறைப்படி எழுத்து மூலம் அனுமதி கேட்கச் சொன்னார். முதல் நாளிலேயே ஓலைச் சுவடிகள் 1500 கண்ணால் கண்டது எங்களுக்கு உற்சாகத்தை அளித்தது. மேலும் ஒரு விஷயம் முகவரி சரியாக இருந்தது மட்டுமல்லாமல், ஓலைச் சுவடிகளின் எண்ணிக்கை அதில் 1050 + 600 எனவும் சரியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது மன சந்தோஷத்தை அளித்தது.
இவ்வாறு எங்கள் சுவடி தேடல் முதலில் அளித்த மனநிறைவால் ஆண்டவனுக்கு நன்றி கூறி, கபாலீசுவரரையும் கற்பகாம்பாளையும் மனத்தில் தொழுது அன்றைய வேலையை முடித்தோம் .
மறுநாள் காலை 8.30 மணிக்கே திருவல்லிக்கேணி வியாசராஜ மடத்தில் இருந்தோம் . அங்கே 200 சுவடிகள் இருப்பதாக பட்டியல் கூறியது .
மடம் என்பதால் எங்களுக்கும் இருக்கும் என நம்பிக்கை இருந்தது . ஆனால் எங்களை உபசரித்தார்களே தவிர அவர்கள் இது வரை ஓலையைக் கண்ணாலேயே பார்த்ததில்லை என ஒரே போடு போட்டனர் .அவர்களின் மைசூர் தலைமை முகவரி கேட்டுப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.
அடுத்து ராயபுரம் அவ்வை கலைக் கழகம் என்ற முகவரி இருந்தது. அதல் 30 சுவடிகள் இருப்பதாகவும், அது ராமானுஜர் மியுசியம் எனவும் போட்டிருந்ததால் மனத்தில் பல கனவுகள்;
30 கட்டாக இருக்கும் எனப் பேசிக்கொண்டோம் .
ஆனால் அங்கே போனதும்தான் தெரிந்தது அது கணிதமேதை ராமானுஜர் கண்காட்சி என்று. அவர்களும் ஆர்வமுடன் பேசினர்.ஆனால் அங்கே ஓலைச் சுவடிகள் இல்லை; ஆனால் பார்க்கவேண்டிய இடம்தான் அது.
அடுத்து வண்ணாரப்பேட்டையை நோக்கி வண்டியை விட்டோம். அங்கே எங்களுக்கு ஒரு மிகப்பெரிய வியப்புக் காத்திருந்தது.
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
------------------------------------------------------------------------------------
இந்தக் கட்டுரை 2010 ஏப்ரல் கடைசியில் எழுதப்பட்டது .
இப்போதுதான் மீண்டும் படித்தது ப்பார்க்கிறேன் .எனக்கே உற்சாகமாகஇருக்கிறது .
ஆனால் ஒரு மாத்சத்திற்கு முன் 2017 இல் நவம்பர் மாதம் மயிலையில் இருக்கும் சம்ஸ்கிருத கல்லூரிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது .
சுவடிகள் தேடி 2010 வந்ததை பற்றி நான் கூறியதும் அவர்கள் நினைவுகூர்ந்தனர் என்னை அவர்கள் நன்றாக நினைவில் வைத்திருந்தனர் .மேலும் நான் அறிமுகப்படுத்திக்கொண்டு விதமும் அவர்களுக்கு பிடித்திருந்தது .
"நான் ஏழு ஆண்டுகளுக்கு முடி முழுவதும் கருத்திருந்த தலையுடன் வந்திருந்தேன் .இப்போது முழுவதும் நரைத்த முடியுடன் ,வெண்மை தலையுடன் வந்திருக்கிறேன் " என்றேன் . அவர்கள் அப்போது முழுவதும் மின்னாக்கம் செய்யப்பட அவர்களிடம் இருந்த சுவடிகளை கட்டினார்கள் .
மிகுந்த மகிழ்ச்சியுடன் அடுக்கடுக்காக வரிசைப்படுத்தப்பட்ட நான் ஏழு ஆண்டுகளுக்கு முன் கண்டவை ,இப்போது புதுப் பொலிவுடன் இருப்பதைக்கண்டேன் .
இன்னமும் ஒரு ஆனந்த செய்தியையும் அவர்கள் கூறினார்கள் .அவர்களிடம் திருக்குறள் சுவடிக்கட்டு ஒன்று இருப்பதாகவும் ., தற்போது புழக்கத்தில் இருக்கும் சில குறள்களில் மிக சிறிய மாறுபாடுகள் அவர்களிடம் இருக்கும் சுவடியில் கூறினார் .திருவள்ளுவர் பிறந்ததாக நம்பப்படும் மயிலையில் திருக்குறள் சுவடியைக்கண்டது
மிகுந்த நிறைவை அளித்தது .
அங்கு எடுத்த சில புகைப்படங்களை பகிர்கிறேன் .
கட்டுரையெழுத்தியது 2010, புகைப்படகள் 2017 நவம்பரில் எடுக்கப்பட்டது
அண்ணாமலை சுகுமாரன்
2/12/17
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! Empty Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran Tue Dec 05, 2017 1:57 pm


ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! MvW3auTFQlSV119LYX98+o1
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! J2q33ez3SA2HhU9btmaK+o3
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! Sg6ztJKaRnirUBJ2cXHo+o4






ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! - ௫ - ( 5 )
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர், ச. வையாபுரிப்பிள்ளை போன்ற பலரை நாம் ஓலைச் சுவடிப் பதிப்பாசிரியர்கள் என இப்போது கொண்டாடினாலும், இவர்கள் அத்துணை பேரையும் விட மிக முந்தைய ஒரு சுவடிப் பதிப்பாசிரியரை நாம் முழுமையாக மறந்து விட்டோம். சொல்லப்போனால் இதன் புரவலர் தஞ்சையில் இருந்து தான் அவரை இயக்கினார்.
அவர் யார் ? மேலும் விபரங்களை அடுத்தப் பகுதியில் காணலாம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வண்ணாரப் பேட்டையை நோக்கி வண்டி ஓட ஆரம்பித்தது. அங்கே மொத்தம் 9 முகவரிகள் இருந்தன. அனைத்துமே தனி நபர்கள்; ஒரே ஒரு மருத்துவமனை. எப்படி ஓலை வைத்திருக்கும் நபர்கள் பலரும் அதிக எண்ணிக்கையில் சென்னை வண்ணாரப் பேட்டையைத் தேர்ந்தெடுத்து வசிக்கிறார்கள் என்ற வினா மனத்தில் மின்னலடித்தது.
எப்படியும் அத்தனையையும் பார்த்து விடுவது என உறுதி எடுத்து அதிகம் அலைந்தோம். தனி நபர்கள், வீடுகளை எல்லாம் அலைந்து திரிந்து ஒவ்வொன்றாகத் தேடினோம். வழக்கம்போல் அப்படியும் இப்படியும் திரிந்து வழியில் அகப்படும் அனைவரையும் தொந்தரவு செய்து அவர்களையும் மிகவும் சிந்திக்கச் செய்து ஒவ்வொரு முகவரியாகச் சென்று விசாரித்தோம்.
ஆனால் சென்ற இடம் எங்கும் ஓலைச் சுவடிகள் இல்லை என்ற பதிலே கிடைத்தது. ஒருவேளை பட்டியல் தவறோ என்ற எண்ணம் வந்தபோது , ஓரிடத்தில் மட்டும் அவர்களுக்கும் ஓலைச் சுவடிக்கும் சம்பந்தம் இருக்கும் தகவலை கூறினார்கள். குடும்பமே கூடி அந்தத் தகவல்களை உறுதிப்படுத்தினர். பாஸ்கர் என்னும் அந்த குடும்பத் தினைச் சேர்ந்த வாலிபர் வீடுகட்டும் தொழில் செய்து வருகிறார்.
சென்னையில் ஒரு வீட்டைப் புதிதாக்க் கட்டுவதற்காக முழுமையும் இடிக்கும் வேலையில் ஈடுபட்டபோது இரண்டு சாக்குப்பை நிறைய அங்கே ஓலைச் சுவடிகள் கிடைத்தனவாம்; அந்தச் சுவடிக் குவியலை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் வைத்திருந் தனராம்; ஆறுமாதம் முன் யாரோ ஒரு மீசைக்காரர் அதை வாங்கிக் கொண்டு போனாராம். எங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்கள் ? அந்த மீசைக்காரர் பற்றி வேறு ஏதாவது மேல் விபரம் தெரியுமா என்று மிக்க ஆதங்கத்துடன் பலமுறை கேட்டோம்; ஆனால் அவர்கள் அதை அத்துணை சிரத்தை எடுத்துக் குறித்து வைக்கவில்லை. எங்களுக்கோ கைக்கு எட்டியது இப்படி நழுவி விட்டதே என்ற வேதனை. பிறகு மோர் எல்லாம் கொடுத்து எங்களை அவர்களே ஆறுதல் படுத்தினர். சில ஆண்டுகளுக்கு முன் NSS மாணவர்கள் வநது ஓலைச் சுவடி பற்றிக் கேட்டதையும் உறுதிப்படுத்தினர்; ஆனால் ’உடனே வருவது தானே, இவ்வளவு ஆண்டுகள் என்ன செய்தீர்கள் ?’ என்ற
அவர்களது கேள்விக்குத்தான் எங்களால் பதில் கூற முடியவில்லை.
பல இடங்களில் இப்படித்தான் ’அங்கே கொடுத்தோம், இங்கே கொடுத்தோம்’ என்று கூறுவதை அடிக்கடி கேட்பது வழக்கம் ஆனது. கொஞ்சம் விபரம் அறிந்தவர்கள் புதுவை பிரெஞ்சு நிறுவனம், சென்னை பல்கலை , திருப்பதி தேவஸ்தானம் என விபரம் கூறுவார்கள். பலர் யாரோ வந்து வாங்கிச் சென்றனர் என்பதோடு நிறுத்திக் கொள்வர். இன்னும் சில இடங்களில் வண்ணாரப் பேட்டையில் அலைந்தோம் ஆனால் அவர்களிடம் ஓலைச் சுவடிகள் இருந்த தடயமே இல்லை .
வெய்யில் சுட்டெரிக்க நண்பகல் உணவு நேரம் தாண்டி,மணி இரண்டைக் கடந்தது . உடல் களைப்பும், மனச் சோர்வும் மிகவும் உண்டாயின. காலையில் இருந்து சுவடிகளைக் கண்ணால் பார்க்காத ஏக்கம் வேறு !
அந்த நேரத்தில் குவளை நிறைய பாதாம் இட்ட சுவைமிக்க கெட்டியான குளிர்ந்த பானத்தைக் கொடுத்துக் கையில் ஒரு கட்டு திருவாசகம் ஏடுகளைக் கொடுத்தால் எப்படி இருக்கும் ? என்ன பகலிலேயே கனவா என்கிறீர்களா ?
உண்மையில் இது அப்படியே நடந்தது !
வண்ணாரப் பேட்டையில் மொத்தம் 9 முகவரிகளில் ஒரு மருத்துவ மனை முகவரி இருந்தது எனச் சொல்லிருந்தேன் அல்லவா ? அந்த மருத்துவமனையின் பெயர் ’ராகவேந்திரா மருத்துவமனை’ என்று இருந்தது; சென்றபோது எதிர்பார்த்தபடி அது சித்த மருத்துவசாலை தான்; ஆனால் நவீனமாக இருந்தது. மக்கள் கூட்டமும் அதிகம் இருந்தது . நாங்கள் முக்கிய விஷயமாக டாக்டரைப் பார்க்கணும் என்று சொல்லி எப்படியோ டாக்கடர் அறையில் நுழைந்து விட்டோம். எங்கள் பசி அப்படி ! டாக்டரும் நவீனமாகத்தான் இருந்தார். என்ன வேண்டும் என்றபோது ’ டாக்டர் உங்களிடம் நிறைய ஓலைச் சுவடிகள் இருப்ப தாக எங்களுக்குத் தகவல். நாங்கள் அதைப் பார்க்க தஞ்சைப் பல்கலை யில் இருந்து வருகிறோம்’ என்றோம் . இப்போது எல்லாம் எப்படிப் பேசுவது என்பது அத்துப்படி ஆகிவிட்டது. ’அப்படியா ?’ என்ற டாக்டர் வேறு ஒருவரை அழைத்து ’இவர்களை அலுவலகம் அழைத்துப் போங்கள் ’என்று கூறி , எங்களைப் பார்த்து "நீங்கள் அங்கே சென்று கொஞ்ச நேரம் இருங்கள்; நான் விரைவில் காத்திருப்பவர்களை அனுப்பிவிட்டு வநது உடனே வநது விடுகிறேன் " என்றார். அவர் ஓலைச் சுவடிகள் இல்லை என்று சொல்லாமல் காத்திருக்கச் சொன்னதுமே எங்கள் கற்பனை சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது.
அங்கே நாங்கள் போனதும் பார்த்தால் கண்ணாடி அலமாரி நிறைய ஓலைச் சுவடிகள் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. இருவர் ஒரு சிறந்த மின்வருடி கொண்டு சுவடிகளை வருடிக்கொண்டிருந்தனர். அப்படியே நாம் என்ன செய்ய நினத்தோமோ அதை அங்கு செய்து கொண்டு இருந்தனர். நாங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்; செல்வமுரளி technical விபரம் கேட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் ஓலைச் சுவடிகளை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தோம். சுமார் 300 கட்டுகள் இருக்கலாம். அத்தனையும் மருத்துவச் சுவடிகள். மிக நேர்த்தியாகச் சுத்தம் செய்யப்பட்டு, எண்ணெயிட்டு, மையிட்டு, புதிய நூலில் சுற்றி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
டாக்டர் "என்ன, பார்த்தீர்களா ?" என்று கேட்டபடி வந்தார். அவரது அறைக்கு அழைத்தார். முன்பு கூறியபடி குளிர்ந்த பாதாம்கீர் வந்தது. அவரது பெயர் Dr . ராமசாமி பிள்ளை; நாகர்கோயிலைச் சார்ந்தவர். பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் படித்தவர் என்று அறிமுகப் படுத்திக்கொண்டார். எங்களைப் பற்றிக் கேட்டார். நாங்கள் எங்கள் தேடுதல் , தமிழ் மரபு அறக் கட்டளை ஆகியவை பற்றிக் கூறினோம். அவரும் ’MEDICAL MANUSCRIPT RESEARCH CENTRE’ என்ற அமைப்பை உருவாக்கி, இதுவரை சுமார் 300 கட்டுகள் வரை சேர்த்து இருப்பதாகவும் , மத்திய சுகாதாரத் துறையின் நிதி உதவி பெற்று இதைச் செய்து வருவதாகவும் கூறினார்.
அவருக்கு மருத்துவச் சுவடிகள் மட்டுமே தேவை என்றாலும் ,வேறு வகைச் சுவடிகளும் கிடைப்பதாகக் கூறி அப்போதுதான் திருவாசகச் சுவடிக் கட்டை எங்கள் கையில் கொடுத்தார். அவர்களிடமிருந்தும் சுவடிகளைப் பெறமுடியாது என்று தெரிந்து கொண்டு சோகத்துடன் சுவடியைத் திருப்பிக் கொடுத்துக் கிளம்பினோம்.
பிறகு அருகில் இருந்த உணவு விடுதியில் கிடைத்ததை உண்டு விட்டு அருகில் இருக்கும் திருவொற்றியூர் சென்றோம். அங்கே நல்ல தண்ணி ஓடையை நாடிச் சென்று ஊர்ப் பஞ்சாயத்தில் மாட்டிக்கொண்ட கதையை சொல்கிறேன் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக்கட்டுரை எழுதப்பட்டது 03 May 2010
ஆனால் இன்றையவரையில் 2017 வரை இந்தக்கட்டுரையில் குறிப்பிடப்படும் மருத்துவர் ராமசாமி பிள்ளை சிறந்த நண்பராக விளங்கிவருகிறார் .
அவரது அன்பு மரக்கையாளாதது .
எனக்கு பல முறை இலவசமாக சித்தமருத்துவ சிகிச்சை அளித்துள்ளார் .
இத்தனைக்கும் காரணம் என்னிடம் அவர் கண்ட ஈடுபாடும் , உழைப்பும் தான் .இன்றைய வரை அவர் சிறந்த நண்பராக இருந்து வருகிறார் இப்படி எத்தனையோ
ஓலைச் சுவடிகளைக் கொடுத்ததுடன் இன்றைய வரை நண்பர்களாகத்தொடர்கின்றனர் .
படங்கள் பயணத்தில் எடுக்கப்பட்டவையே .ஆனால் இந்த கட்டுரைக்கு தொடர்புடையவை இல்லை . இவை சேகரித்த சுவடிகளில் சிலவற்றைக் காட்டுகிறது
அண்ணாமலை சுகுமாரன்
3/12/17
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! Empty Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by Dr.S.Soundarapandian Tue Dec 05, 2017 8:43 pm

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! 103459460 ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! 103459460 ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! 103459460 ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! 1571444738 ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! Empty Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 06, 2017 7:29 pm

sugumaran wrote:




இந்தக்கட்டுரை எழுதப்பட்டது 03 May 2010
ஆனால் இன்றையவரையில் 2017 வரை இந்தக்கட்டுரையில் குறிப்பிடப்படும் மருத்துவர் ராமசாமி பிள்ளை சிறந்த நண்பராக விளங்கிவருகிறார் .
அவரது அன்பு மரக்கையாளாதது .
எனக்கு பல முறை இலவசமாக சித்தமருத்துவ சிகிச்சை அளித்துள்ளார் .
இத்தனைக்கும் காரணம் என்னிடம் அவர் கண்ட ஈடுபாடும் , உழைப்பும் தான் .இன்றைய வரை அவர் சிறந்த நண்பராக இருந்து வருகிறார் இப்படி எத்தனையோ
ஓலைச் சுவடிகளைக் கொடுத்ததுடன் இன்றைய வரை நண்பர்களாகத்தொடர்கின்றனர் .
படங்கள் பயணத்தில் எடுக்கப்பட்டவையே .ஆனால் இந்த கட்டுரைக்கு தொடர்புடையவை இல்லை . இவை சேகரித்த சுவடிகளில் சிலவற்றைக் காட்டுகிறது
அண்ணாமலை சுகுமாரன்
3/12/17
மேற்கோள் செய்த பதிவு: 1252588
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! 3838410834 ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! 3838410834 ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! 3838410834 ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! 103459460 ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! Empty Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran Thu Dec 07, 2017 8:32 am

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! JUEIU0gbTNCqWUzCsvBZ+o5
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! YPOnYpgdRuBQ5Y53j7EQ+o6

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் - ௬ (6 )
--------------------------------------------------------------------------------------------------
திருநாரையூரே அன்று களைகட்டி விட்டது மக்கள் புத்தாடை அணிந்து சாரி சாரியாகக் கோவிலை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர்; அனைவர் முகத்திலும் ஆனந்தக் களை. இருக்காதா பின்னே? மாமன்னர் ராஜராஜ உடையார் அல்லவா அவர்கள் ஊருக்கு விஜயம் செய்ய உள்ளார்; அதுவும் அவர்கள் ஊர் பொள்ளாப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி தரும் பிரசாதத்தை அருந்தும் அற்புதத்தை, நாடெங்கும் அதிசயமாக பேசப்பட்டு வரும் அற்புதத்தை அல்லவா பார்க்க வருகிறார் !
நால்வர் பாடிய உலகு புகழும் தேவாரப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட ராஜ ராஜ உடையார் தொடர்ந்து அவற்றைத் தொகுக்க முயன்று வந்தார்; ஆனால் சில பாடல்கள்தான் கிடைத்தனவே தவிர ,அவருக்குப் பாடல்கள் முழுவதும் இருக்குமிடம் தெரியவில்லை. நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த மன்னன், திருநாரையூர் வந்து தனக்கு உதவும்படி கேட்க்கத்தான் வருகைப்புரிந்தார் .
பிறகு என்ன நடந்தது என்று அடுத்தப் பகுதியில் காணலாம் .
------------------------------------------------------------------------------------------------
திருவொற்றியூரை அடுத்த டோல் கேட் எனும் பகுதியில் நல்ல தண்ணி ஓடக்குப்பம் என்ற இடத்தில் கண்ணன் என்பவரிடம் 50 சுவடிகள் இருப்பதாக எங்களது NMM பட்டியல் கூறியது. அந்தப் பகுதி முழுவதும் கடலை ஒட்டிய மீனவர் குப்பங்கள். நாங்கள் ஒவ்வொரு கிராமமாக நல்ல தண்ணி ஓடக்குப்பம் என்பதையும், கண்ணன் என்ப வரைப் பற்றியும் விசாரித்துக்கொண்டு, கடலை ஒட்டியே நடந்தோம். ஆனால் எங்கள் நடவடிக்கைகளைக் கண்காணித்தபடியே ஒரு கும்பல் எங்களுக்குப் பின்னால் வருவதை நாங்கள் உணரவில்லை. இப்படியே போய்க்கொண்டிருந்த போது இடையில் ஒரு கோயில் வந்தது; அங்கே சுமார் 20 நபர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர் .நாங்கள் இவர்களைக் கேட்டால் இவர்களில் ஒருவருக்கு நிச்சயம் கண்ணன் என்பவரைப்பற்றித் தெரிந்திருக்கும் என்று எண்ணி ’ இங்கு நல்ல தண்ணி ஓடக்குப்பம் என்ற இடத்தில் கண்ணன் என்று யாராவது இருக்கிறார்களா ?’ என்றோம். உடனே அவர்களில் ஒருவர் ’இதுதான் நல்ல தண்ணி ஓடக்குப்பம், உட்காருங்கள்’ என்றார்; .நாங்களும் உட் கார்ந்தோம். அடுத்தகணம் எங்கள் பின்னால் வந்த சுமார் 10 பேர் ’தலைவரே ! இவர்கள் ஒரு மணி நேரமாக நம்ம கண்ணனைத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள் ’ என்று கூறியபடி அவர்களும் அந்தக் கூட்டத்தில் அமர்ந்து விட்டனர்.
எனக்கு உடனே புரிந்துவிட்டது, நாங்கள் மீனவர் பஞ்சாயத்தில் அமர வைக்கப்பட்டிருக்கிறோம் என்பது. சரிவரச் சமாளிக்காவிட்டால் விஷயம் விபரீதமாகலாம் என்பதும் புரிந்தது. உடனே நான் எங்களது ஓலை தேடும் படலத்தைப் பற்றி மிக விரிவாகக் கூற ஆரம்பித்தேன்.
பிறகு ’ நல்ல தண்ணி ஓடை என்று சொன்னார்களே, அந்த நல்ல தண்ணி ஓடை எங்கே இருக்கிறது ?’ எனப் பேசி அங்கே ஒரு சுமுக சிநேகித சூழ்நிலையை உண்டாக்கத் தலைப்பட்டேன். உடனே தலைவர் எனப் பட்டவர் அந்தக் கூட்டத்திலேயே இருந்த ஒருவரைக்காட்டி ’இவர்தான் கண்ணன்’ என்று கூறி எங்களை அதிசயப்படுத்தினார். ஏன் எனில் அவர் எங்களுடனேயே இதுவரை நடந்து வந்தவர்களில் ஒருவர். பிறகு ’ எங்கள் குப்பத்தில் வந்து எங்களில் ஒருவரைப்பற்றி நீங்கள் விசாரிக் கிறீர்கள்; என்ன விஷயம் என்பது தெரியாமல் நாங்கள் எப்படி அவரைக் காட்டிக் கொடுப்போம். பின்னால் அவருக்கு உங்களால் ஏதாவது தீங்கு வந்தால் நாங்கள்தானே பொறுப்பாவோம் ’ என்று தம் செயலுக்குக் காரணமும் கூறினர். அவர்களின் ஒற்றுமையை அவரி டமே பாராட்டிவிட்டு ‘எங்களைப் பார்த்தால் அப்படித் தீங்கு செய்பவர் கள் மாதிரியா தெரிகிறது?’ என அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டோம் . ’நாங்கள் தமிழ் அன்னையின் தொலைந்து போன இலக்கிய, அறிவுசார் நூல்கள் போன்ற ஆபரணங்கள் எங்காவது மதிப்பறியாமல் புதைந்து போய்விடக் கூடாதே என அவற்றைத் தேடுகி றோம்’ என இலக்கிய ரீதியில் பேசத்தொடங்கினோம் . ’கண்ணன் அவரிடமிருக்கும் சுவடிகளை எங்களுக்குத் தந்தால் அரசு மூலம் பரிசுகளும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது’ என்றோம். உடனே தலைவர் ’ஏம்ம்பா, உன்னிடம் ஓலைச் சுவடிகளிருக்கிறதா?’ என்று கேட்டார் .
கண்ணன் பவ்யமாக ’ நான் இதுவரை ஓலைச் சுவடிகளை சன் டி வி யில்தான் பார்த்திருக்கேன் தலைவா ! ’ என்று சிரிக்காமல் கூறினார் .
நாங்களும் அதை நம்பியதுபோல் காட்டிக்கொண்டு எழுந்தோம்; உடனே தலைவர் ’இந்த இடத்தில் ஒரு நல்ல தண்ணீர் ஓடை நீண்ட நாட்களாக மக்களுக்குக் குடிநீர் தந்து வந்தது; .இப்போது அந்த ஓடையும் கடலால் மூழ்கடிக்கப்பட்டு விட்டது. ஆனால் இப்பவும் கடலில் அந்த இடத்தில் இருக்கும் தண்ணீர் நல்ல தண்ணீராக இருக்கிறது. இத்தனைக்கும் காரணம் இந்த அம்மன்தான்’ என்று நாங்கள் அமர்ந்திருந்த கோயிலைக் காட்டினார் .நாங்களும் அம்மனை நோக்கி ஒரு கும்பிடு போட்டுவிட்டு இடத்தைக் காலி செய்தோம் .
இவ்வாறு இந்த நிகழ்ச்சியை விரிவாகக் கூறக்காரணம் இந்த மாதிரி எங்களுக்கு அடிக்கடி பின்னாளிலும் நேர்ந்தது. விசாரித்து உண்மையான முகவரி கண்டுபிடிப்பது ஒரு நம்பிக்கை ஏற்பட்டால்தான் எளிதாகிறது. சென்னையில் இருக்கும் முகவரிகளில் பார்க்கும்போது நிறையக் கோயில்கள் இருக்கக் கண்டோம். திருவேட்டீஸ்வரர் கோயில் சன்னதி என முகவரி இருந்தது .நாங்களும் சன்னதிக்குச் சென்று E.O மற்றும் குருக்களைக் கேட்டோம். நாங்கள் என்ன நம்பியாண்டார் நம்பியா ? இறைவனிடம் நேரடியாகப் பேசுவதற்கு; ஆனால் அவர்களே அவர்கள் கோயில் நிலத்தை மீட்கப் பழைய ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருப்ப தாகக் கூறினர். பழைய சுவடிகள் எங்கே போனது எனத் தெரியவில்லை எனக்கூறி, ஏதாவது எங்களுக்குக் கிடைத்தால் கூறுங்கள் என்றனர். நாங்களும் அவர்கள் கொடுத்த காப்பியைக் குடித்துவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்ந்தோம் .
எங்கள் பட்டியலில் இன்னும் அமைந்தகரை மாங்காளி அம்மன் கோயில், வடபழனி முருகன் கோயில், வடபழனி 100 ரோடு சித்தர்கள் மடம்,வடபழனி ஜெயின் கோயில், வடபழனி வேங்கீஸ்வரர் கோயில், ஜாபர்கான் பேட்டை கங்கை அம்மன் கோயில், புரசைவாக்கம் நவசக்தி விநாயகர் கோயில், புவனேஸ்வரி அம்மன் கோயில், பாடி திரு வாலேஸ்வரர் கோயில், கோயம்பேடு குசேலேஸ்வரர், செம்பியம் சுந்தர விநாயகர் கோயில், தி நகர் சிவவிஷ்ணு கோயில், அண்ணா நகர் எல்லைப் பிடாரி கோயில், வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயில் போன்றவற்றுடன் ஏன் வள்ளுவர் கோட்டம் பெயர் கூட இருந்தது. பொறுமையாக எல்லாக் கோயிலுக்கும் சென்றோம். அங்கு பொறுப்பான அதிகாரிகளை க் காத்திருந்து பார்த்தோம். ஆனால் எந்த இடத்திலும் சுவடிகளின் சுவடுகூடக் கிடைக்கவில்லை.
எப்படி ? பட்டியல் தவறாகத் தயாரித்து விட்டார்களா என்ற வினா எழுந்தது; ஆனால் அப்படியும் எண்ணமுடியாதபடி ஜாபர் கான் பேட்டை கங்கை அம்மன் கோயில்பூசாரி முன்று கட்டுகள் முன்பு இருந்ததாகவும், ஓர் ஆண்டுக்கு முன் யாரோ வாங்கிச் சென்றனர் எனவும் கூறினார். எனவே நாங்கள் தாமதமாகத் தேடி வந்திருக் கிறோம்; சுவடிகள் இருந்தபோது பட்டியல் எடுக்கப்பட்டிருக்கிறது என உணர்ந்தோம். எனவே கோயில்கள் நீண்ட நாட்களாக சுவடிகளைப் பாதுகாக்கும் இடமாக, saraswathi பண்டாரம் எனப்படும் பொது நூலக மாக, தேவாரம் திருவாசங்கள் தினசரி பாடும் இடமாக ஒரு காலத்தில் இருந்து வந்துள்ளன என்பது உறுதியாகத் தெரிய வந்தது. தேவாரத் திருமுறைகள் வேண்டும்போது பொது மக்கள் கோயில்களில் இருக்கும் மூலங்களிலிருந்து படி எடுத்துப் போகும் வழக்கமும் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது படிப்படியாகக் காலப் போக்கில் சுவடிகளும் மாய மாகி விட்டன. இப்போது இருக்கும் குருக்களும், அதிகாரிகளும் வம்பில் மாட்டிக்கொள்ளவேண்டாம் என மிக்க முன்ஜாக்கிரதையாக ’ஓலைச் சுவடியா, அப்படி என்றால் என்ன?’ என்று கேட்டு விடுகின்றனர்.
தருமமிகு சென்னையாயிற்றே ! வாழ்க்கையில் உஷாராகத்தான் இருக்கவேண்டி இருக்கிறது ;.ஆனால் நாங்கள் மதுரைக்குத் தெற்கே பாண்டிய நாட்டுப்பகுதியில் தேடும்போது வேறுவிதமான அனுபவங்கள் கிடைத்தன.
ஒரு வழியாக மாலை ஏழு மணிக்கு வேலையை முடித்து அறைக்குத் திரும்பினோம். .அடுத்தநாள் ஒரு பெரிய சுவடிக் குவியலை சுமார் 150 கட்டுகள், 20, 000 ஏடுகள் பார்க்கப் போகிறோம் எனத் தெரியாததால் சற்றுச் சோர்வுடனேயே அன்று படுத்தோம் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
-----------------------------------------------------------------------------------------------
தொடர்ந்து பல நண்பர்களும் இதை படித்துவருவது மகிழ்ச்சியை அளிக்கிறது .இந்த நிகழ்வு நடந்தது 2010 இல் .
அதில் பங்கேற்றவர்கள் ,சுவடி அளித்தவர்கள் , இந்தத் தொடரை அப்போது தொடர்ந்து படித்தவர்கள் என பல நூறு பேர்கள் இந்த நிகழ்வுகளை முழுமையாக அறிந்தவர்கள் இன்னமும் இருக்கிறார்கள் .
அப்போது எடுத்தப் புகைப்படங்கள் பல நூறு இருந்தன எனதுகணினியில் அத்தகைய புகைப்படங்களைத் தேடிவருகிறேன் .
இப்போது கிடைக்கும் சில படங்களைப்போடுகிறேன் .அவைகள் நான் எடுத்தப் படம் தான்
இந்தப்பகுதி வெளிவந்த நாள் 22 May 2010
கடந்த மாதம் கூட புதுவையைஅடுத்த காலாப்பட்டில் கிடைத்த சுவடிகளின் படங்களை அடுத்தது தொடரில் வெளியிடுகிறேன் .
அண்ணாமலை சுகுமாரன்
6/12/17
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! Empty Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran Sun Dec 10, 2017 9:36 pm

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! TJvcOfJR4q9GQ5SpsK01+tanjai1
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! FyQ6YaoqSH2kpqA6c2JS+3p


ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! ௭ - (7 )
=========================================================================
நால்வர் பாடிய உலகு புகழும் தேவாரப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட ராஜ ராஜ உடையார் தொடர்ந்து அவற்றைத் தொகுக்க முயன்று வந்தார்; ஆனால் சில பாடல்கள்தான் கிடைத்தனவே தவிர ,அவருக்குப் பாடல்கள் முழுவதும் இருக்குமிடம் தெரியவில்லை. நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த மன்னன், திருநாரையூர் வந்து தனக்கு உதவும்படி கேட்டார். நம்பியும் விநாயகரிடம் முறையிட்டார். அப்போது ஒலித்த அசரீரி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தென்மேற்கு மண்டபத்தில் திருமுறைச் சுவடிகள் இருப்பதாகக் கூறியது. இன்றும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் மேற்கு உள்பிராகாரத்தில் ‘திரு முறை காட்டிய விநாயகர்’ எனும் சந்நிதி இருப்பதைக் காணலாம் .

நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம்சென்ற மன்னர், தீக்ஷிதர்கள் வைத்த நிபந்தனையை நிறைவேற்றி, மண்டபத்தில் புற்றுக்களால் மூடிக்கிடந்த திருமுறைச் சுவடிகளை மீட்டு எடுப்பதற்குப் புற்றின்மேல் எண்ணெயூற்றி, புற்றைக் கரைத்து, அரித்தது அழிந்தது போக எஞ்சி யதை எடுத்தனர். அவற்றை நம்பியாண்டார் நம்பி ஒழுங்குபடுத்தி 7 திருமுறைகளாகத் தொகுத்தார். தொகுக்கப்பட்ட தேவாரப் பதிகங் களுக்குப் பண் அமைக்க விரும்பிய நம்பியும், அரசனும் திருஎருக் கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வேண்டினார்கள். "திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் பிறந்த பாடினி என்ற ஒரு பெண்ணுக்குப் பண்களை அருளினோம். இத்தலத்திலுள்ள அப் பெண்ணை அழைத்துச் சென்று பதிகங்களுக்குப் பண்முறை அமைக்கச் செய்வீர்" என்று தெய்வவாக்குக் கிடைத்தது. மனம் மகிழ்ந்த மன்னனும், நம்பியும் அத்தலத்திலுள்ள அப்பெண்ணைக் கண்டறிந்து, தில்லை கனகசபைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எல்லோரது முன்னிலை யிலும் அப்பெண்ணைக் கொண்டு தேவாரப் பதிகங்களுக்குப் பண் முறைகளை முறையாக அமைக்கச் செய்தனர். இவ்வாறு, திருமுறைகள் கிடைக்கக் காரணமாக இருந்ததால் பொள்ளாப் பிள்ளையாருக்கு ’திருமுறை காட்டிய விநாயகர்’ என்ற பெயரும் உண்டானது. இந்தப் பிள்ளையார் சந்நிதிக்கு எதிரில் ராஜராஜ அபயகுலசேகர சோழ மன்னனுக்கும், நம்பியாண்டார் நம்பிக்கும் சிலைகள் உள்ளன. மன்னர் ’திருமுறை கண்ட சோழன்’ ஆனார் .

இவ்வாறு பத்தாம் நூற்றாண்டில் தஞ்சை மன்னர் ராஜராஜ உடையார் உதவியுடன் நம்பியாண்டார் நம்பி மறைந்து கிடந்த தேவாரத் திரு முறைகளைத் தொகுத்து, அவற்றை மீண்டும் பல நூறு ஏடுகளில் படியெடுத்துப் பதிப்பித்து, அந்த தேவாரச் சுவடிகளை எல்லா சிவால யங்களிலும் இடம் பெறச் செய்தார். சொல்லப்போனால் இவரே முதல் சுவடிப் பதிப்புச் செய்தவராக இருக்கலாம்; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏடுகளைத்தேடி, தொகுத்து, அவற்றைத் தமிழ் நாடெங்கும் இருக்கும் ஆலயங்களில் வைத்து அவற்றை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தார். அவரும் தஞ்சை மன்னர் ராஜராஜ உடையாரும் இதை மட்டும் செய்யாதிருந்தால் நமக்குத் தேவாரம், திருவாசகம் கிடைத்திராது .
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------



ஒரு வழியாக முடிவுக்கு வந்த சென்னைத் தேடுதல் !


கோயில்களுக்கு அடுத்தபடியாக எங்கள் பட்டியலில் பல ஜோதிடர் களும் இடம் பெற்றிருந்தனர். நாங்கள் அவர்களையும் விடாமல் தேடித் தேடிச்சென்று பார்த்தோம். ஆனால் நாடி ஜோதிடர்கள் யாரும் நாங்கள் அவர்களை நாடியபோதும் திறந்த மனத்துடன் எங்களை வரவேற்க வில்லை; எங்களைத் துரத்துவதிலேயே குறியாக இருந்தனர்.
.
ஒரு நாடி ஜோதிடர் எங்களைப் பார்த்ததும் ஏதோ சரியான கிராக்கி கிடைத்து விட்டது என அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு வந்தவர், நாங்கள் சுவடி தேடி வந்திருக்கிறோம் என்றவுடன் முகம் மாறி, உடல் வேர்த்து ‘ எங்களிடம் எந்தவித ஓலைச் சுவடியும் இல்லை; தேவைப் படும் போதெல்லாம் வைத்தீஸ்வரன் கோவிலில் எங்கள் குருவிடம் கேட்டுவாங்கிப் பின் திருப்பி அனுப்பிவிடுவோம்" என்றார். எங்களை விரைவில் கிளப்புவதிலேயே குறியாக இருந்தார். ஒரு வழியாக நாங்கள் கிளம்பியதும் ’யாருயா இந்த மாதிரி ஆளுங்களை உள்ளே விட்டது ? இனி சரியாக விசாரித்து உள்ளே விடுங்கப்பா’ என இரைந்தது நாங்கள் தெருக்கோடி போகும்வரை எங்கள் காதில் ஒலித்தது. மனிதரில் இத்தனை விதமா? என வியந்தபடி அடுத்த இடத்திற்கு நடையைக் கட்டினோம் .

ஆனால் மதுராந்தகத்தில் ஓர் உண்மையான நாடி ஜோதிடரைப் பார்த்ததையும் அவரிடம் இருந்த சுவடிகள் அனைத்தையும் காட்டிய தையும், அத்தனையும் உண்மையான ஜோதிடச் சுவடிகளாக இருந்த தையும் பின்னால் விரிவாகக் கூறுகிறேன்.

முருகு ராஜேந்திரன் என்ற ஒரு முதிய ஜோதிடரை வடபழநியில் சந்தித்தோம்; எனக்கும் முன்பே அவரைத் தெரியும் . இரண்டு ஜோதிடப் பத்திரிக் கைகளை நடத்தி வருகிறார். அவர் எங்களை அன்புடன் வரவேற்றார். அவரது மகனும் (B.A.B.L ) ஜோதிடம் பார்த்து வருவதையும் கூறி அறிமுகப்படுத்தினார் .அவரிடம் இருக்கும் மிகப் பழமை வாய்ந்த ஜோதிட நூல்களை மின்னாக்கம் செய்து கொள்ள அனுமதி வழங்கினார்.

பிறகு வேறு சில இடங்களைப் பார்த்து அரும்பாக்கம் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் வந்து சேர்ந்தோம். அங்கே அலுவலகத்தினுள் சென்றதுமே கண்ணாடி அலமாரிகளில் அடுக்கடுக்காக ஒவ்வாரு தட்டிலேயும் அடுக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகள்தான் எங்கள் கவனத்தை முதலில் ஈர்த்தன; அத்தனை சுவடிகளை ஒரே இடத்தில் எதிர்பார்க்கவில்லை! சந்தோஷமும் இத்தனை அத்தனை இல்லை எங்களுக்கு ! அந்த நிறுவனம் மத்திய அரசின் சுகாதாரத் துறையின் கீழ இயங்குவது. நாடெங்கிலும் கிடைக்கும் சித்த மருத்துவ ஏடுகளைத் திரட்டிப் பாதுகாத்து வருகிறார்கள். அனைத்தும் அருமையான சித்த மருத்துவ நூல்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வள்ளுவரே இத்தனை சிறப்பாக, விளக்கமாக மருந்து என ஒரு அதிகாரமே யாத்திருக்கிறார் என்றால், அதற்கு எத்தனை காலம் முந்தையதாக நமது தமிழ் மருத்து வம் இருந்திருக்கும் ? அத்தனை தமிழர் தொல் அறிவும் இப்படி உலகால் அறியப்படாமல் அங்கீகாரம் இன்றி உறங்குவது ஏக்கத்தைத் தந்தது .

என்னசெய்வது, எதற்கும் காலம் கூடிவரவேண்டுமே என எண்ணிக் கொண்டே , அந்த நிறுவனத்தின் இணை இயக்குனர் Dr. ஜகஜோதிப் பாண்டியன் அறைக்குள் நுழைந்தோம். அவரும் எங்களை இன்முகத்து டன் வரவேற்றார். சுவையான பேச்சு சிறிது நேரம் சித்த மருத்துவத்தின் ஆழம் குறித்து நடந்தது. சுவடிகள் பாதுகாப்பு அவர்களின் பணிகளில் ஒன்று; எனவே சுவடிகளைக் கொடையாகப் பெறும் பேச்சுக்கே இட மில்லை. ஆனால் இதுவரை சுவடிகள் மின்னாக்கம் செய்யப் பட வில்லை என்பதறிந்து அவரிடம் அனுமதி கேட்டோம். அவர் முறைப் படி அணுகக் கூறினார் .

பின் அடுத்த தேடுதலை நோக்கிய பயணத்திற்காகச் சுவடிகளை ஏக்கப்பார்வை பார்த்தபடியே விடைபெற்றோம் .

பிறகு அஹோபில மடம் சார்பில் நடத்தப்பெறும் நரசிம்ஹ பிரியா பத்திரிக்கை அலுவலம்,கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி முதலிய இடங்களுக்கும் ஆசையுடன் சென்று வெறுங்கையுடன் திரும்பினோம் .
சில பள்ளிக்கூடங்களும் பட்டியலில் இருந்தன; அங்கும் சென்றோம்.

வடபழனியில் ஒரு வீட்டில் முகவரியில் இருக்கும் கார்த்திக் என்பவரின் கைபேசி எண்ணை மிகுந்த சிரமத்தின் பேரில் பெற்றோம். வீட்டில் இருப்பவர்களும் ஓலை அவரிடம் இருப்பதாக கூறியதும் எங்கள் ஆவல் எல்லை மீறியது .ஆனால் கார்த்திக்கிடம் 50 ஏடுகள் வடமொழி மந்த்ரம் அடங்கிய சுவடி இருப்பதாகவும், ஆனால் அவர் காஞ்சியில் வேலை செய்வதாகவும், வரும்போது தெரிவிப்பதாகவும் கூறினர்.
இவ்வாறு எங்கள் தேடுதல் நிர்ணயித்த ஐந்தாம் நாளை அடைந்தது.

பெரும்பாலும் எல்லா முகவரிகளையும் பார்த்துவிட்டோம்; பட்டியல் எப்படித் தயாரிக்கப்பட்டிருக்கும் என மெல்லப் புரிய ஆரம்பித்தது .

ஆனால் எதிர்ப்பார்த்த சில இடங்களில் கூடச் சுவடி இல்லாதது வியப்பை அளித்தது; உதாரணமாக Chennai fort museum முகவரி கூடப் பட்டியலில் இருந்தது . அங்கே தக்க அதிகாரிகளை அணுகிப் பார்த்த போது சுவடிகளே அங்கே இல்லை; இது சற்று வியப்பாகவே இருந்தது.

ஒருவாறு சென்னை மாவட்ட 5 நாள் தேடல் முடிந்தது; தொடர்ச்சியாகச் சுவடிகளைப் பார்த்தோம்; ஆனால் கொடையாகப் பெற முடியவில்லை. மின்னாக்கம் செய்ய அனுமதி கேட்டோம். எப்படி அணுகுவது என ஒரு தெளிவு பிறந்தது. ஒருவழியாக அடுத்த தேடுதல் திருவள்ளூர் மாவட்டம் என முடிவு செய்து அவரவர் ஊருக்கு அடுத்த பயணம் ஆயத்தப் படுத்திக்கொள்ளப் புறப்பட்டோம்.

அடுத்து திருவள்ளூரில் !

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
======================================================================
இந்தக்கட்டுரை எழுதப்பட்டது மே 2010 இல் . அதேகட்டுரையைத்தான் மீண்டும் இடுகிறேன் .
இதை எழுதும் போது முதல் கட்டத தேடல்தான் முடித்திருந்தது .
அடுத்தக்கட்டத் தேடல் இருக்கும் என்ற உறுதி இல்லாது இருந்தது .
இந்தக்கட்டுரை வெளிவந்தப்பிறகுத்தான் இரண்டாம் கட்டத் தேடல் அனுமதி
கிடைந்தது .அதில் தான் அதிக ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது .
அந்த இரண்டாம் கட்டத் தேடலில் நான் மட்டுமே பயணித்தேன்
இரண்டாம் கட்ட த் தேடல் அனுபவங்கள் இன்னமும் சரிவர நான் எழுதவில்லை .
சுவடிக்குவியலைப் பார்த்தபின் எழுதும் ஆசை அப்போது எழவில்லை .
இப்போது இடம் பெற்றிருக்கும் படங்கள் ,

முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தேடல் முடிந்து கண்டெடுத்தத் சுவடிகள் ஒப்படைத்தல் நடந்த பின் எங்கள் குழுவுக்கு நடைபெற்ற பாராட்டுவிழா
!
தேடிப் பாதுகாக்காவிட்டால் அடையும் சுவடிகளின் நிலை .


.
அண்ணாமலை சுகுமாரன்
10/12/17
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! Empty Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum