Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட் உலகின் ஜாம்பாவனாக உருவெடுக்கும் இந்தியா: சிறப்பு கட்டுரை!
Page 1 of 1
கிரிக்கெட் உலகின் ஜாம்பாவனாக உருவெடுக்கும் இந்தியா: சிறப்பு கட்டுரை!
சிவா
கிரிக்கெட் விளையாட்டின் மிகச்சிறந்த வாத்தியார்களாக வளர்ந்துவிட்டதை இந்திய அணி நிரூபித்திருக்கிறது. 8 ஓவருக்கு குறைக்கப்பட்ட போட்டியில் எதிரணியைத் திக்குமுக்காட வைத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக ஒரு வரியில் செய்தியைச் சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால், இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் உழைப்பு அத்தனை அசாதாரணமாக இந்தப் போட்டியைப் பற்றிப் பேசவிடவில்லை.
மழை இருந்தாலும், போட்டியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே சொல்லப்பட்டது. இயற்கை எழில் கொஞ்சும் கேரள மாநிலத்தின், திருவனந்தபுரம் பகுதியிலுள்ள கிரீன்ஃபீல்டு மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. கேரளாவைக் கடந்த திங்கட்கிழமை வந்தடைந்த வீரர்களும் மைதானத்தைக் கண்டு திருப்தியடைந்தனர். ஆனால், அடுத்த இரண்டு நாள்களுக்கும் அவர்களைப் பயிற்சி செய்யவிடாத மழை, போட்டி நாளான நேற்றும் (7.11.2017) தூறலைத் தூவிக்கொண்டே இருந்தது.
தூறலாக இருந்தாலும் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையினால் மைதானத்தில் நீர் தேங்கத் தொடங்கியது. ஆனால், தங்களது ஊரில் நடைபெறும் முதல் போட்டியை எந்த காரணத்தாலும் மாற்றிவிடக் கூடாது என்ற உறுதியில் தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருந்தனர் மைதானத்தைச் சுத்தப்படுத்தும் ஊழியர்கள். ஒன்பது மணி வரை மழை தொடர்ந்தால் போட்டி நிராகரிக்கப்பட்டு, டி20 தொடர் டிராவில் முடியும் வாய்ப்பு அதிகமிருந்தபோது 8.20 மணிக்கு மழை நின்றது. கயிறுகளைப் பிடித்து ஓடிக்கொண்டும், மழை நீரை பக்கெட்டில் அள்ளி மைதானத்தை உலர வைத்துக்கொண்டும் இருந்தனர்.
நன்றி
நான் தமிழன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கிரிக்கெட் உலகின் ஜாம்பாவனாக உருவெடுக்கும் இந்தியா: சிறப்பு கட்டுரை!
ஐசிசி நிர்வாகிகள் மைதானத்தில் போட்டி நடத்த முடியுமா என்று ஆய்வு செய்தபோது, கிரிக்கெட் விளையாட கச்சிதமாக தயாராகியிருப்பதை அறிந்து கிரீன் சிக்னல் கொடுக்க, தாமதமானதால் 8 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட போட்டியில் விளையாட இரு அணி வீரர்களும் களம் கண்டனர். அடுத்து நடைபெற்றது வரலாறு. இந்தியாவின் 50ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவின் தோல்வியில்லாத தொடர் வெற்றிகளை நிர்ணயிக்கும் போட்டி தொடங்கியது.
Third party image reference
8 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்தால் போதும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியால் அறிவுறுத்தப்பட்டிருந்ததால் ரன் சேர்க்கும் பணியில் இறங்கினர் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள். மழையால் ஈரமாக்கப்பட்டிருந்த மைதானத்தில் பந்து வேகமாக உருளாது என்பதால் நியூசிலாந்து ஃபீல்டர்கள் அதிகளவில் பவுண்டரி எல்லைக்கு அருகில் இல்லை. அதேசமயம் நியூசிலாந்து பவுலர்களால் அதிவேகத்தில் பந்து வீசவும் முடியவில்லை. அதிகபட்சமாக 130 கிமீ வேகத்திலேயே இந்திய பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொண்டனர்.
Third party image reference
8 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்தால் போதும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியால் அறிவுறுத்தப்பட்டிருந்ததால் ரன் சேர்க்கும் பணியில் இறங்கினர் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள். மழையால் ஈரமாக்கப்பட்டிருந்த மைதானத்தில் பந்து வேகமாக உருளாது என்பதால் நியூசிலாந்து ஃபீல்டர்கள் அதிகளவில் பவுண்டரி எல்லைக்கு அருகில் இல்லை. அதேசமயம் நியூசிலாந்து பவுலர்களால் அதிவேகத்தில் பந்து வீசவும் முடியவில்லை. அதிகபட்சமாக 130 கிமீ வேகத்திலேயே இந்திய பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொண்டனர்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கிரிக்கெட் உலகின் ஜாம்பாவனாக உருவெடுக்கும் இந்தியா: சிறப்பு கட்டுரை!
ஈரப்பதத்தின் காரணமாக பந்து அதிகம் மேலெழும்பாததால், இந்தியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களால் பவுண்டரிக்கு பந்துகளை விரட்ட முடியவில்லை. அதை மீறி முயற்சி செய்தவர்களும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்கள். இந்தியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் செய்த தவறிலிருந்து மீளும் முன்பாகவே, நியூசிலாந்து வீரர்கள் சுதாரித்துக்கொண்டு பவுண்டரி லைன்களை ஆட்கொண்டனர். 48 பந்துகளே கொண்ட போட்டியில் சிக்சர்கள் மட்டுமே உதவும் என்ற ரீதியில் பந்தை விரட்டியவர்களில் பலர் பவுண்டரி லைனிலேயே கேட்ச் ஆனார்கள். அதிலும் மனிஷ் பாண்டேவின் கேட்ச் அதகளமானது.
பௌல்ட் வீசிய பந்தை லாங்-ஆன் திசையில் சிக்ஸுக்கு விரட்டினார் மனிஷ் பாண்டே. பந்தை நோக்கி ஓடிவந்த கிரண்டோமை முந்திக்கொண்டு காற்றில் பின்பக்கமாகப் பறந்தபடியே கேட்ச் பிடித்து, லாவகமாக அதை கிரண்டோமிடம் வீசிவிட்டு கீழே விழுந்தார் சாண்ட்னர். ஒரு நிமிடம் மைதானமே அமைதியானது இந்த கேட்சைப் பார்த்து. ஆனால், இத்தனை சிறப்பான கேட்சி பிடித்த சாண்ட்னரைப் பாராட்ட மைதானமே அதிரும் வகையில் கைதட்டல் ஒலி எழும்பியது. இப்படியாக 67 ரன்கள் அடித்து தனது இன்னிங்ஸை முடித்தது இந்தியா. இரண்டாவதாக விளையாடுவதால் பதப்படுத்தப்பட்ட மைதானத்தில் விளையாடும் அட்வாண்டேஜ் நியூசிலாந்துக்கு இருந்தது. ஆனால், அதை எப்படி உடைக்க வேண்டும் என்ற ஐடியா இந்தியாவிடம் இருந்தது.
பௌல்ட் வீசிய பந்தை லாங்-ஆன் திசையில் சிக்ஸுக்கு விரட்டினார் மனிஷ் பாண்டே. பந்தை நோக்கி ஓடிவந்த கிரண்டோமை முந்திக்கொண்டு காற்றில் பின்பக்கமாகப் பறந்தபடியே கேட்ச் பிடித்து, லாவகமாக அதை கிரண்டோமிடம் வீசிவிட்டு கீழே விழுந்தார் சாண்ட்னர். ஒரு நிமிடம் மைதானமே அமைதியானது இந்த கேட்சைப் பார்த்து. ஆனால், இத்தனை சிறப்பான கேட்சி பிடித்த சாண்ட்னரைப் பாராட்ட மைதானமே அதிரும் வகையில் கைதட்டல் ஒலி எழும்பியது. இப்படியாக 67 ரன்கள் அடித்து தனது இன்னிங்ஸை முடித்தது இந்தியா. இரண்டாவதாக விளையாடுவதால் பதப்படுத்தப்பட்ட மைதானத்தில் விளையாடும் அட்வாண்டேஜ் நியூசிலாந்துக்கு இருந்தது. ஆனால், அதை எப்படி உடைக்க வேண்டும் என்ற ஐடியா இந்தியாவிடம் இருந்தது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கிரிக்கெட் உலகின் ஜாம்பாவனாக உருவெடுக்கும் இந்தியா: சிறப்பு கட்டுரை!
இந்தியாவுக்கு பவர்பிளே ஓவர்கள் இரண்டு ஓவர்களுக்கு மட்டுமே தரப்பட்டது. ஆனால், நியூசிலாந்துக்கு முதல் ஆறு ஓவர்கள் வரை பவர்பிளே இருந்தது. இது ஒரு கட்டத்துக்கு மேலாக அவர்களது சிக்சர் வாண வேடிக்கையை கட்டுப்படுத்த முடியாது என்ற நிலை இருந்ததால், தொடக்கத்திலேயே விக்கெட் எடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து இறங்கியது இந்தியா. ஸ்லோவாக வீசப்படும் பந்துகள் இந்தியாவின் துருப்புச்சீட்டாக இருக்கும் என்பதை நியூசிலாந்து வீரர்களும் அறிந்திருந்தாலும், எப்போது வரும் எனத் தெரியாததாலும், அதற்காகக் காத்திருக்கக்கூடிய அளவுக்கு தாராள ஓவர்கள் இல்லாததாலும் தவித்தனர். அதிலும் பும்ராவினால் 141 கிமீ வேகத்தில் பந்து வீசமுடிந்தது சாதாரணமானதல்ல.
Third party image reference
பந்து வீசப்படும் பிட்சில் ஈரம் உலர்ந்தாலும், மைதானத்தின் புல் தரைகளில் மழையின் அடையாளம் இருந்தது. ஒவ்வொரு முறையும் அதில் விழும் பந்து ஈரமாகி, பவுலர்களுக்கு பந்தை இறுக்கமாக பிடிக்க முடியாது என்பது நியூசிலாந்துக்கு தெரிந்தது. இந்தக் காரணத்தினால்தான் நியூசிலாந்து வீசிய 8 ஓவர்களில் கிட்டத்தட்ட 30 பந்துகளுக்கும் மேலாக 110 கிமீ-க்கு உள்ளாகவே அவர்களது பந்துவீசும் வேகம் இருந்தது. ஆனால், இந்திய பவுலர்கள் நியூசிலாந்தின் இந்த எதிர்பார்ப்பை உடைத்தார்கள். அதிலும் சஹல் வீசிய பந்துகளில் எது எப்படி செல்கிறது என விக்கெட் கீப்பர் தோனியால் கூட கணிக்க முடியவில்லை. இதனால்தான் இத்தனை நெருக்கமான போட்டியிலும் இரண்டு ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார் சஹல்.
Third party image reference
பந்து வீசப்படும் பிட்சில் ஈரம் உலர்ந்தாலும், மைதானத்தின் புல் தரைகளில் மழையின் அடையாளம் இருந்தது. ஒவ்வொரு முறையும் அதில் விழும் பந்து ஈரமாகி, பவுலர்களுக்கு பந்தை இறுக்கமாக பிடிக்க முடியாது என்பது நியூசிலாந்துக்கு தெரிந்தது. இந்தக் காரணத்தினால்தான் நியூசிலாந்து வீசிய 8 ஓவர்களில் கிட்டத்தட்ட 30 பந்துகளுக்கும் மேலாக 110 கிமீ-க்கு உள்ளாகவே அவர்களது பந்துவீசும் வேகம் இருந்தது. ஆனால், இந்திய பவுலர்கள் நியூசிலாந்தின் இந்த எதிர்பார்ப்பை உடைத்தார்கள். அதிலும் சஹல் வீசிய பந்துகளில் எது எப்படி செல்கிறது என விக்கெட் கீப்பர் தோனியால் கூட கணிக்க முடியவில்லை. இதனால்தான் இத்தனை நெருக்கமான போட்டியிலும் இரண்டு ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார் சஹல்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கிரிக்கெட் உலகின் ஜாம்பாவனாக உருவெடுக்கும் இந்தியா: சிறப்பு கட்டுரை!
ஃபீல்டிங்கில் நியூசிலாந்து சிறப்பாக செயல்பட்டது போலவே இந்தியாவும் மிகக் கச்சிதமாக இருந்தது. 8 ஓவர்கள் என்ற மாற்றத்தைப் புரிந்துகொள்ளாமல் பந்துகளை வீணடித்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான தவான், ரோஹித் ஷர்மா ஆகியோர் ஆளுக்கொரு கேட்ச் பிடித்து, இரவு வந்திருக்கக்கூடிய கெட்ட கனவிலிருந்து தப்பித்துக்கொண்டனர்.
Third party image reference
6 ஓவர்களில் பவர்பிளே முடிந்ததும் நியூசிலாந்து வீரர்கள் அடிக்காத பந்துகளிலும் ரன் எடுக்க ஓடியதைப் பார்க்கும்போது பரிதாபம் உருவானது. ஆனால், அந்த நிலையில் வேறு வழியில்லை. அதனால்தான் 6 ரன்களில் தோல்வி என்ற கௌரவமான நிலைக்கு வர முடிந்தது. அப்படி நியூசிலாந்து பேட்ஸ்மேன்களால் எடுக்கப்பட்ட ரன்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர் தோனி. அவரது கைக்கு பந்து சென்றும் அசராமல் ஓடினார்கள் நியூசிலாந்து வீரர்கள். அவர்களது எண்ணம்போலவே தோனியால் சரியாக ரன்-அவுட் எடுக்க முடியவில்லை. ஆனால், இரண்டாவது முறை டாம் புரூஸ் ஓடியபோது தோனி வீசிய பந்தை பும்ரா தவறவிட்டார். அந்தப் பந்தை எடுத்த ஹர்திக் பாண்டியா தோனியிடம் அடிக்க டாம் வெளியேற்றப்பட்டார்.
Third party image reference
6 ஓவர்களில் பவர்பிளே முடிந்ததும் நியூசிலாந்து வீரர்கள் அடிக்காத பந்துகளிலும் ரன் எடுக்க ஓடியதைப் பார்க்கும்போது பரிதாபம் உருவானது. ஆனால், அந்த நிலையில் வேறு வழியில்லை. அதனால்தான் 6 ரன்களில் தோல்வி என்ற கௌரவமான நிலைக்கு வர முடிந்தது. அப்படி நியூசிலாந்து பேட்ஸ்மேன்களால் எடுக்கப்பட்ட ரன்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர் தோனி. அவரது கைக்கு பந்து சென்றும் அசராமல் ஓடினார்கள் நியூசிலாந்து வீரர்கள். அவர்களது எண்ணம்போலவே தோனியால் சரியாக ரன்-அவுட் எடுக்க முடியவில்லை. ஆனால், இரண்டாவது முறை டாம் புரூஸ் ஓடியபோது தோனி வீசிய பந்தை பும்ரா தவறவிட்டார். அந்தப் பந்தை எடுத்த ஹர்திக் பாண்டியா தோனியிடம் அடிக்க டாம் வெளியேற்றப்பட்டார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கிரிக்கெட் உலகின் ஜாம்பாவனாக உருவெடுக்கும் இந்தியா: சிறப்பு கட்டுரை!
ஒவ்வொரு போட்டியிலும் கடைசி ஒரு ஓவர் அல்லது சில ஓவர்களில் தோனி ஒரு ஆக்டிங்-கேப்டனாக செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இன்னும் எத்தனை நாள்களுக்கு இது தொடரும் என நினைக்கும்போது கவலை ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. இந்தியாவின் தரப்பிலும் 4 பவுலர்கள் பந்து வீசியிருக்க, கடைசி ஓவர் வீசப்போவது குல்தீப் யாதவ் என்று அனைவரும் நினைத்திருக்க, ஹர்திக் பாண்டியாவைக் களமிறக்கினார்கள். விராட் கோலி பவுண்டரிக்குப் பக்கத்தில் சென்று நின்றுகொண்டார். வெற்றி பெற்றதை நினைத்து இன்று மகிழ்வதைவிட, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் எனக் கருதப்படும் ஓர் அணியில் இன்னும் சில ஒழுங்குமுறைகள் இல்லாதது சரியானதல்ல.
Third party image reference
மற்றபடி மிகச் சிறந்ததொரு போட்டியாக இது இருந்தது. மேற்குலக நாடுகளில் கிரிக்கெட்டுக்கு குறைந்துவரும் ஆதரவினால்தான் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகள் அதிகமாக நடத்தப்படுகின்றன. அவை தரும் ஆர்வமும் மகிழ்ச்சியும் சாதாரணமானதில்லை என்கிறதையும் இந்தப் போட்டி நமக்குக் காட்டியிருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கிரிக்கெட் உலகின் ஜாம்பாவனாக உருவெடுக்கும் இந்தியா: சிறப்பு கட்டுரை!
Third party image reference
எல்லாவற்றையும் மீறி இந்தப் போட்டியில் வென்றவர்களை இந்தியா அல்லது நியூசிலாந்து எனப் பிரிக்கத் தேவையில்லை. ஏனென்றால் அங்கு வென்றது கிரிக்கெட் எனும் விளையாட்டு. அந்த விளையாட்டை ரசிக்க வந்த ரசிகர்கள். போட்டி முடிந்ததும் பேசிய நியூசிலாந்து அணியின் வில்லியம்சன், எவ்வித கேள்விகளும் இல்லாமலே போட்டியைக் காணவந்த ரசிகர்களின் ஆதரவைப் பாராட்டிப் பேசினார். என் அணி, எதிர் அணி என நினைக்காமல் கிரிக்கெட் என்ற விளையாட்டைச் சிறப்பாக யார் கொடுத்தாலும் ரசிப்போம் என உலகுக்கு சொல்லியிருக்கும் திருவனந்தபுரத்தில் கூடிய நாற்பதாயிரம் ரசிகர்களே நேற்றைய வெற்றியாளர்கள்.
Third party image reference
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» இந்தியா-நியூசி., ஒருநாள் கிரிக்கெட் : இந்தியா வெற்றி
» இந்தியா- நியூசிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி
» ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை
» இந்தியா-நியூசி., ஒருநாள் கிரிக்கெட் : இந்தியா (27) ஓவரில் 99/4
» இந்தியா-நியூசி., ஒருநாள் கிரிக்கெட் : இந்தியா (36) ஓவரில் 139/4
» இந்தியா- நியூசிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி
» ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை
» இந்தியா-நியூசி., ஒருநாள் கிரிக்கெட் : இந்தியா (27) ஓவரில் 99/4
» இந்தியா-நியூசி., ஒருநாள் கிரிக்கெட் : இந்தியா (36) ஓவரில் 139/4
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|