ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளும் நானும்! (போதையுடன் ஒரு சந்திப்பு!)

Go down

கடவுளும் நானும்! (போதையுடன் ஒரு சந்திப்பு!) Empty கடவுளும் நானும்! (போதையுடன் ஒரு சந்திப்பு!)

Post by Pranav Jain Thu Oct 05, 2017 2:45 pm

நான்: கடவுளே எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருக்கிறது.

கடவுள்: என்ன சந்தேகம்?

நான்: போதை நல்லதா? கெட்டதா?

கடவுள்: பேதை என்பது பெண்களைக் குறிக்கும். அது என்ன போதை?

நான்: இதுவும் பெண்கள் மாதிரிதான்....

கடவுள்: புரியவில்லையே....

நான்: அதான் கடவுளே.... மது ன்னு சொல்லுவாங்கல்ல....

கடவுள்: ஓ! மதுவா? மானிடப்பதர்கள் இதை 'சரக்கு' என்று சொல்வார்கள்தானே?...

நான்: ஆமாம் கடவுளே...

கடவுள்: சரி, இதை ஏன் பெண்களுடன் ஒப்பிட்டு பேசினாய்?

நான்: பெண்களை சைட் அடிச்சா போதை வரும். மதுவை ஸ்ட்ரைட்டா அடிச்சா போதை வரும்.

கடவுள்: ம்ம்ம்ம்ம்...

நான்: சரி சொல்லுங்கள் கடவுளே. மது நல்லதா? கெட்டதா?

கடவுள்: மது என்பது கெட்டதில்லை மாடிடா! அது ஒரு பவர் என்ஜின்!!

நான்: ப...வ...ர்.... என்ஜினா?... என்ன கடவுளே, கூகுள் சர்ச் என்ஜின் மாதரி இவ்வளவு பவரா சொல்லுறீங்க?

கடவுள்: ஆமாம் மானிடா. மது நல்லதுதான்!

நான்: அட போங்க கடவுளே...! நீங்க பாண்டிச்சேரி கடவுள் னு நினைக்கிறேன்!

கடவுள்: ஏன் அப்படி சொல்லுகிறாய்?

நான்: பாண்டிச்சேரியில்தான் டூப்ளிகேட் சரக்கு தயாரிக்கிறார்களாம்.... நீங்களும் டூப்ளிகேட் தானே? அதான் மதுவுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க. நாங்கல்லாம் ஒயின் ஷாப்பை மூட சொல்லி போராட்டம் செஞ்சுகிட்டு இருக்கோம். நீங்க என்னடான்னா மது நல்லது, பவர் என்ஜின் அப்படி இப்படின்னு சொல்லுறீங்க...

கடவுள்: மானிடா.... உனது உடம்பை ஒரு பெண் மெதுவாக தடவிக்கொடுத்தால் எப்படி இருக்கும்?

நான்: சுகமாக இருக்கும் கடவுளே...!

கடவுள்: அதையே கொஞம் அழுத்தமாக நீண்ட நேரம் தடவினால்?...

நான்: உராய்வினால் சதை தேய்ந்து எரிச்சல் உண்டாகும்!

கடவுள்: அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டால் எப்படி இருக்கும்?

நான்: கொஞ்சம் ஆறுதலாத்தான் இருக்கும்!

கடவுள்: இன்னும் இறுக்கமாக கட்டிப்பிடித்தால்?

நான்: லைட்டா வலிக்கும்?

கடவுள்: இறுக்கத்தை மேலும் மேலும் அதிகப்படுத்தினால்?

நான்: வலியும் அதிகரிக்கும்?

கடவுள்: இடைவிடாமல் இறுக்கிக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தால் என்னாகும்?

நான்: மூச்சுத்திணறி செத்துப் போய்விடுவேன்! இப்ப என்னதான் சொல்ல வரீங்க கடவுளே?..

கடவுள்: அளவுக்கு அதிகமாகப் போனால் எல்லாமே கெட்டது தாண்டா!

நான்: சரி கடவுளே... குடிகாரர்கள் நடக்கும்போது ஏன் தள்ளாடுகிறார்கள்? ஏன் உளறுகிறார்கள்? ஏன் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார்கள்? ஏன் பேசும்போது தேவையே இல்லாமல் சிரிக்கிறார்கள்?

கடவுள்: மது என்பது பவர் என்ஜின் என்று நான்தான் சொன்னேனே... அதனால்தான் மதுவை அருந்தியவர்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்ளுகிறார்கள்!

நான்: இப்படியெல்லாம் ஒரே லைன்ல சொன்னால் புரியாது கடவுளே.  'எழுத்ததிகாரன்' ஸ்டைலில் உதாரணத்துடன் தெளிவாக சொல்லுங்கள்.

கடவுள்: கொஞ்சம் பெரிதாக இருக்கும் பரவாயில்லையா?

நான்: ஏன் உங்களுக்கு ரத்தினைச் சுருக்கமாக சொல்லத் தெரியாதா?

கடவுள்: அதான் மது என்றால் "பவர் என்ஜின்" என்று பிளாட்டினச் சுருக்கமாகவே சொல்லியிருக்கிறேனே.... புரிந்துகொள்ள வேண்டியதுதானே?...

நான்: இது திருக்குறளை விட சிறியதாக இருக்கிறதே...

கடவுள்: பிளாட்டின சுருக்கம் அப்படித்தான் இருக்கும்!

நான்: அப்படியானால், இரத்தின சுருக்கம் என்பது எப்படி இருக்கும்?

கடவுள்: சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து, குதர்க்கமாக பேசுவதுதான் ரத்தினைச் சுருக்கம் என்பது.

நான்: சரி, பிளாட்டினமும் வேண்டாம், ரத்தினமும் வேண்டாம். பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் உங்கள் ஸ்டைலிலேயே சொல்லுங்கள். ஆனால் புரியிற மாதரி இருக்க வேண்டும்.

கடவுள்: அதாவது, மது என்பது உயிர்களின் உடலுருப்புகளுக்கான ஒரு பவர் என்ஜின்! இதை அளவோடு பயன்படுத்தினால் நல்லது. அளவுக்கு மீறினால் ஆபத்தாகவும் முடியும்.

நான்: இதைத்தான் ஏற்கெனவே சொல்லிட்டீங்களே கடவுளே.

கடவுள்: டேய்! நான் பேசும்போது குறுக்கே பேசக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லுறது.

நான்: ஓ! மன்னிச்சுடுங்க கடவுளே!

கடவுள்: சரி, உன்னோட முதல் கேள்வியை கேளு...

நான்: "..................."

கடவுள்: உன்னைதாம்பா கேக்குறேன்... உன்னோட முதல் கேள்வி என்ன?

நான்: நீங்கதான் குறுக்கே பேசக் கூடாதுன்னு சொன்னீங்க.... இப்ப பேசலாமா கடவுளே...?

கடவுள்: குருக்கேதான் பேசக் கூடாதுன்னு சொன்னேன். இப்படி குதர்க்கமா பேச சொல்லல. கேள்வி கேக்கும்போது பதில் சொல்லு.

நான்: குடிகாரர்கள் போதையில் நடக்கும்போது தள்ளாடுவது ஏன்?

கடவுள்: அதாவது, மது என்பது பவர் என்ஜின் இல்லையா?... இந்த பவர் என்ஜின் உடலுக்குள்ளே போனவுடனே உறுப்புக்கள் என்ன செய்கின்றன என்று கவனிக்கிறது. அப்படி கவனிக்கும்போது எல்லா உறுப்புகளும் தங்களுடைய முழு பவரையும் பயன்படுத்தாமல் இருப்பதை பார்த்து மது கோபமடைகிறது. அதனால் ஒவ்வொரு உறுப்புக்களையும் தங்களுடைய முழு பவருடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடியைப்போல கால அவகாசம் கொடுக்காமல் உடனடியாக கட்டாய உத்தரவு போட முயற்சிக்கிறது. எனவே முதலில் மனிதனின் கண்கள் என்ன செய்கின்றன என்று பார்க்கிறது. ("பிரதமர் மோடியைப் போல" என்பது ஒரிஜினல் பதிவில் இல்லை. புதிதாக சேர்த்திருக்கிறேன்.)

நான்: மது ஏன் முதலில் கண்களை போய் பார்க்கிறது?

கடவுள்: குடிகாரர்கள் ஏன் தள்ளாடி நடக்கிறார்கள் என்றுதானே நீ கேட்டாய். அதற்கான பதில் கண்களில்தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இது 'அந்தப்பார்வை'யில் உருவாகும் சம்பவம் என்பதால் முதலில் கண்களைத்தான் சந்திக்க வைக்க முடியும்.

நான்: சரி சொல்லுங்கள்...

கடவுள்: கண்களைப் பார்க்கும்போது, 100% ஷூம் செய்யாமல், 80% ஷூமில் நிற்கிறது. இப்ப மதுவும், கண்களும் எப்படி பேசிக்குதுன்னு பாரு...

மது: என்னம்மா கண்ணு! என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?

கண்கள்: மனிதனுக்கு தூரத்தில் இருக்கும் காட்சியை நான் அவனுக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நீங்கள் யார்?

மது: நான் யாரென்று பிறகு சொல்கிறேன். அது சரி. 100% ஷூம் போகாமல், 80% லயே நிக்குறியே ஏன்? 100% ஷூம் பண்ணு.

கண்கள்: நீங்கள் சொல்வதை நான் செய்ய முடியாது. எனக்கு மூளை உத்தரவு கொடுத்தால்தான் செய்வேன்.

மது: யாரவன் மூளை?.... அவன் உன்னை 80% தான் ஷூம் பண்ணவேண்டும் என்று உனக்கு உத்தரவு கொடுத்தானா?

கண்கள்: இல்லை.!

மது: அப்புறம் நீ ஏன் 80% லயே நிற்கிறாய்? மூளை உனக்கு என்ன உத்தரவு போட்டான் சொல்லு.

கண்கள்: மனிதன் பார்க்கும் காட்சியை அவனுக்கு காட்ட வேண்டும் என்பது மூளையின் உத்தரவு. நான் 80% ஷூம் செய்தபோது அவன் அந்தக் காட்சியை உணர்ந்துகொண்டான் அதனால் நான் அதோடு நிற்கிறேன். ஒருவேளை அவனுக்கு காட்சி புரியவில்லை என்றால் நான் மேலும் கொஞ்சம் ஷூம் போவேன்...

மது: இந்த கதையெல்லாம் என்கிட்டே வேண்டாம். உன்னால 100% ஷூம் பண்ண முடியுமா? முடியாதா?

கண்கள்: முடியும்.

மது: அப்படின்னா 100% ஷூம் பண்ணு! யாரை ஏமாத்த பார்க்கிறாய்? இவ்வளவு நாளும் இப்படித்தான் 20% வேலை செய்யாமல் OP அடிச்சுகிட்டு இருந்தியா?

கண்கள்: அதிபுத்திசாலித்தனமாக நடந்து என் வேலையைக் கெடுக்காதே. நான் மூளை சொன்னால்தான் கேட்பேன். உனது கட்டளைக்கு நான் செயல்பட முடியாது. முதலில் இங்கிருந்து செல்!!

மது: உன்னோட முழுத்திறமையையும் பயன்படுத்தாமல் தப்பு தப்பா வேலை குடுக்குற அந்த மூளை எங்கே இருக்கு? அதை நான் பிறகு கவனித்துக் கொள்ளுகிறேன். முதல்ல நீ மரியாதையா 100% ஷூம் பண்ணுறியா? இல்லை நான் புடிச்சி இழுத்து விடவா?

கண்கள்: இதோ பார்! நான் சரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். தூரத்தில் மரம் இருக்கிறது என்பதை நான் மனிதனுக்கு காட்டிக்கொண்டிருக்கிறேன். உன்னுடைய அதிமேதாவித்தனத்தால் என்னை 100% ஷூம் செய்ய வைத்தால், தூரத்தில் இருக்கும் மரம் அவனுக்குப் பக்கத்தில் இருப்பதாக தெரியும். இதனால் விளைவுகள் தவறாக முடியும். மரியாதையாக இங்கிருந்து சென்றுவிடு.!!

மது: சொல்லிகிட்டே இருக்கேன், திரும்ப திரும்ப கதை பேசிக் கொண்டிருக்கிறாய்.... பவர் என்ஜின்-னு எனக்கு அதிகாரிகள் பேரு வச்சுருக்காங்க நான் என்னோட பவரைட் காட்ட வேண்டாமா?

கண்கள்: நான் மூளையின் உத்தரவிற்கு மட்டுமே பணிந்து செயல்படுவேன். உன்னோட பவரை வேற எங்கயாவது போயி காட்டு. என்கிட்டே காட்டினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.

மது: என்ன பயங்கரமா இருக்கும்.?

கண்கள்: நான் இல்லையென்றால் மனிதர்களுக்கு உலகமே சூன்யமாகிவிடும். என்னைக் கோபப்படுத்தி நீயும் சூன்யமாகிவிடாதே...

கடவுள்: இப்படி நடந்த உரையாடலால் கோபமடைந்த மதுவானது தனது பவரைப் பயன்படுத்தி கண்களின் செயல்பாட்டை 100% ஷூம் செய்ய வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடித்து கொள்கிறது. இதனால் தூரத்தில் இருக்கும் காட்சிகள் குடிகாரர்களுக்கு அருகில் இருப்பது போல தோன்றுகிறது. அந்த நேரத்தில் குனிந்து தரையைப் பார்க்கும்போது தரை சற்று உயரமாக இருப்பதுபோல தோன்றுகிறது. மேட்டில் கால் வைக்கிறோம் என்று நினைத்து தரைக்கு மேலேயே பேலன்சை விட்டு விடுகிறார்கள். இதனால்தான் குடிகாரர்கள் போதையில் நடக்கும்போது தள்ளாடி நடக்கிறார்கள்.

என்ன.... புரிந்ததா மானிடா?

நான்: ஆம்! புரிந்தது கடவுளே. அதனால்தான் விளையாட்டு வீரர்கள் போதை மருந்து உட்கொண்டு விளையாடினால் வெற்றி பெறுகிறார்களோ? அதனால்தான் மதுவை ஊக்க மருந்து என்று சொல்கிறார்களா? இப்போது நன்றாகப் புரிந்தது கடவுளே. அது சரி, எங்கள் ஊரில் உள்ள குடிகாரர்கள் ரோட்டில் சும்மா போகிறவர்களிடம் வீண் சண்டைக்கு போகிறார்களே அது ஏன்?

கடவுள்: அதுவா?.... கண்களின் செயல்பாட்டை அதிகரித்ததுபோல, மூலையின் செயல்பாட்டையும் மது அதிகரித்ததன் விளைவால் ஏற்படும் குளறுபடிதான் அது.

நான்: அதையும் சற்று எனக்கு விளக்கி சொல்ல முடியுமா?

கடவுள்: உன்னுடைய மற்ற எல்லா கேள்விகளுக்கும் சேர்த்து மொத்தமாக இன்னொருநாள் பதில் சொல்லுகிறேன். இப்ப தொடரும் போடு!!

நான்: கடவுளுக்கே தலை சுத்த ஆரம்பிச்சுடுச்சு போலருக்கு!!

கடவுள்: போதை ஏறிப் போச்சு!
புத்தி மாறிப்போச்சு!
புத்தம் பூமி எனக்கு........ சொந்தமாகிப் போச்சு!

தொடரும்...

எழுத்ததிகாரன் க்காக
- அந்தப்பார்வை.
on 14th December 2012, 4:17 pm
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum